< யோவான் 4 >

1 யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.
యీశుః స్వయం నామజ్జయత్ కేవలం తస్య శిష్యా అమజ్జయత్ కిన్తు యోహనోఽధికశిష్యాన్ స కరోతి మజ్జయతి చ,
2 ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள்.
ఫిరూశిన ఇమాం వార్త్తామశృణ్వన్ ఇతి ప్రభురవగత్య
3 பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
యిహూదీయదేశం విహాయ పున ర్గాలీలమ్ ఆగత్|
4 இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது.
తతః శోమిరోణప్రదేశస్య మద్యేన తేన గన్తవ్యే సతి
5 எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது.
యాకూబ్ నిజపుత్రాయ యూషఫే యాం భూమిమ్ అదదాత్ తత్సమీపస్థాయి శోమిరోణప్రదేశస్య సుఖార్ నామ్నా విఖ్యాతస్య నగరస్య సన్నిధావుపాస్థాత్|
6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
తత్ర యాకూబః ప్రహిరాసీత్; తదా ద్వితీయయామవేలాయాం జాతాయాం స మార్గే శ్రమాపన్నస్తస్య ప్రహేః పార్శ్వే ఉపావిశత్|
7 அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார்.
ఏతర్హి కాచిత్ శోమిరోణీయా యోషిత్ తోయోత్తోలనార్థమ్ తత్రాగమత్
8 அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள்.
తదా శిష్యాః ఖాద్యద్రవ్యాణి క్రేతుం నగరమ్ అగచ్ఛన్|
9 அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை.
యీశుః శోమిరోణీయాం తాం యోషితమ్ వ్యాహార్షీత్ మహ్యం కిఞ్చిత్ పానీయం పాతుం దేహి| కిన్తు శోమిరోణీయైః సాకం యిహూదీయలోకా న వ్యవాహరన్ తస్మాద్ధేతోః సాకథయత్ శోమిరోణీయా యోషితదహం త్వం యిహూదీయోసి కథం మత్తః పానీయం పాతుమ్ ఇచ్ఛసి?
10 இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார்.
తతో యీశురవదద్ ఈశ్వరస్య యద్దానం తత్కీదృక్ పానీయం పాతుం మహ్యం దేహి య ఇత్థం త్వాం యాచతే స వా క ఇతి చేదజ్ఞాస్యథాస్తర్హి తమయాచిష్యథాః స చ తుభ్యమమృతం తోయమదాస్యత్|
11 அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்?
తదా సా సీమన్తినీ భాషితవతి, హే మహేచ్ఛ ప్రహిర్గమ్భీరో భవతో నీరోత్తోలనపాత్రం నాస్తీ చ తస్మాత్ తదమృతం కీలాలం కుతః ప్రాప్స్యసి?
12 நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
యోస్మభ్యమ్ ఇమమన్ధూం దదౌ, యస్య చ పరిజనా గోమేషాదయశ్చ సర్వ్వేఽస్య ప్రహేః పానీయం పపురేతాదృశో యోస్మాకం పూర్వ్వపురుషో యాకూబ్ తస్మాదపి భవాన్ మహాన్ కిం?
13 இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள்.
తతో యీశురకథయద్ ఇదం పానీయం సః పివతి స పునస్తృషార్త్తో భవిష్యతి,
14 ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn g165, aiōnios g166)
కిన్తు మయా దత్తం పానీయం యః పివతి స పునః కదాపి తృషార్త్తో న భవిష్యతి| మయా దత్తమ్ ఇదం తోయం తస్యాన్తః ప్రస్రవణరూపం భూత్వా అనన్తాయుర్యావత్ స్రోష్యతి| (aiōn g165, aiōnios g166)
15 அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள்.
తదా సా వనితాకథయత్ హే మహేచ్ఛ తర్హి మమ పునః పీపాసా యథా న జాయతే తోయోత్తోలనాయ యథాత్రాగమనం న భవతి చ తదర్థం మహ్యం తత్తోయం దేహీ|
16 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார்.
తతో యీశూరవదద్యాహి తవ పతిమాహూయ స్థానేఽత్రాగచ్ఛ|
17 “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள். இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
సా వామావదత్ మమ పతిర్నాస్తి| యీశురవదత్ మమ పతిర్నాస్తీతి వాక్యం భద్రమవోచః|
18 ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
యతస్తవ పఞ్చ పతయోభవన్ అధునా తు త్వయా సార్ద్ధం యస్తిష్ఠతి స తవ భర్త్తా న వాక్యమిదం సత్యమవాదిః|
19 அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன்.
తదా సా మహిలా గదితవతి హే మహేచ్ఛ భవాన్ ఏకో భవిష్యద్వాదీతి బుద్ధం మయా|
20 எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள்.
అస్మాకం పితృలోకా ఏతస్మిన్ శిలోచ్చయేఽభజన్త, కిన్తు భవద్భిరుచ్యతే యిరూశాలమ్ నగరే భజనయోగ్యం స్థానమాస్తే|
21 அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது.
యీశురవోచత్ హే యోషిత్ మమ వాక్యే విశ్వసిహి యదా యూయం కేవలశైలేఽస్మిన్ వా యిరూశాలమ్ నగరే పితుర్భజనం న కరిష్యధ్వే కాల ఏతాదృశ ఆయాతి|
22 சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
యూయం యం భజధ్వే తం న జానీథ, కిన్తు వయం యం భజామహే తం జానీమహే, యతో యిహూదీయలోకానాం మధ్యాత్ పరిత్రాణం జాయతే|
23 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார்.
కిన్తు యదా సత్యభక్తా ఆత్మనా సత్యరూపేణ చ పితుర్భజనం కరిష్యన్తే సమయ ఏతాదృశ ఆయాతి, వరమ్ ఇదానీమపి విద్యతే; యత ఏతాదృశో భత్కాన్ పితా చేష్టతే|
24 இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார்.
ఈశ్వర ఆత్మా; తతస్తస్య యే భక్తాస్తైః స ఆత్మనా సత్యరూపేణ చ భజనీయః|
25 அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
తదా సా మహిలావాదీత్ ఖ్రీష్టనామ్నా విఖ్యాతోఽభిషిక్తః పురుష ఆగమిష్యతీతి జానామి స చ సర్వ్వాః కథా అస్మాన్ జ్ఞాపయిష్యతి|
26 அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார்.
తతో యీశురవదత్ త్వయా సార్ద్ధం కథనం కరోమి యోఽహమ్ అహమేవ స పురుషః|
27 அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?” என்று கேட்கவில்லை.
ఏతస్మిన్ సమయే శిష్యా ఆగత్య తథా స్త్రియా సార్ద్ధం తస్య కథోపకథనే మహాశ్చర్య్యమ్ అమన్యన్త తథాపి భవాన్ కిమిచ్ఛతి? యద్వా కిమర్థమ్ ఏతయా సార్ద్ధం కథాం కథయతి? ఇతి కోపి నాపృచ్ఛత్|
28 அப்பொழுது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம்,
తతః పరం సా నారీ కలశం స్థాపయిత్వా నగరమధ్యం గత్వా లోకేభ్యోకథాయద్
29 “வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் கிறிஸ்துவோ?” என்றாள்.
అహం యద్యత్ కర్మ్మాకరవం తత్సర్వ్వం మహ్యమకథయద్ ఏతాదృశం మానవమేకమ్ ఆగత్య పశ్యత రు కిమ్ అభిషిక్తో న భవతి?
30 அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி இயேசு இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
తతస్తే నగరాద్ బహిరాగత్య తాతస్య సమీపమ్ ఆయన్|
31 இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
ఏతర్హి శిష్యాః సాధయిత్వా తం వ్యాహార్షుః హే గురో భవాన్ కిఞ్చిద్ భూక్తాం|
32 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார்.
తతః సోవదద్ యుష్మాభిర్యన్న జ్ఞాయతే తాదృశం భక్ష్యం మమాస్తే|
33 அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
తదా శిష్యాః పరస్పరం ప్రష్టుమ్ ఆరమ్భన్త, కిమస్మై కోపి కిమపి భక్ష్యమానీయ దత్తవాన్?
34 இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு.
యీశురవోచత్ మత్ప్రేరకస్యాభిమతానురూపకరణం తస్యైవ కర్మ్మసిద్ధికారణఞ్చ మమ భక్ష్యం|
35 ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன.
మాసచతుష్టయే జాతే శస్యకర్త్తనసమయో భవిష్యతీతి వాక్యం యుష్మాభిః కిం నోద్యతే? కిన్త్వహం వదామి, శిర ఉత్తోల్య క్షేత్రాణి ప్రతి నిరీక్ష్య పశ్యత, ఇదానీం కర్త్తనయోగ్యాని శుక్లవర్ణాన్యభవన్|
36 இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios g166)
యశ్ఛినత్తి స వేతనం లభతే అనన్తాయుఃస్వరూపం శస్యం స గృహ్లాతి చ, తేనైవ వప్తా ఛేత్తా చ యుగపద్ ఆనన్దతః| (aiōnios g166)
37 இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது.
ఇత్థం సతి వపత్యేకశ్ఛినత్యన్య ఇతి వచనం సిద్ధ్యతి|
38 நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.
యత్ర యూయం న పర్య్యశ్రామ్యత తాదృశం శస్యం ఛేత్తుం యుష్మాన్ ప్రైరయమ్ అన్యే జనాఃపర్య్యశ్రామ్యన్ యూయం తేషాం శ్రగస్య ఫలమ్ అలభధ్వమ్|
39 அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள்.
యస్మిన్ కాలే యద్యత్ కర్మ్మాకార్షం తత్సర్వ్వం స మహ్యమ్ అకథయత్ తస్యా వనితాయా ఇదం సాక్ష్యవాక్యం శ్రుత్వా తన్నగరనివాసినో బహవః శోమిరోణీయలోకా వ్యశ్వసన్|
40 எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார்.
తథా చ తస్యాన్తికే సముపస్థాయ స్వేషాం సన్నిధౌ కతిచిద్ దినాని స్థాతుం తస్మిన్ వినయమ్ అకుర్వ్వాన తస్మాత్ స దినద్వయం తత్స్థానే న్యవష్టత్
41 அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.
తతస్తస్యోపదేశేన బహవోఽపరే విశ్వస్య
42 அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
తాం యోషామవదన్ కేవలం తవ వాక్యేన ప్రతీమ ఇతి న, కిన్తు స జగతోఽభిషిక్తస్త్రాతేతి తస్య కథాం శ్రుత్వా వయం స్వయమేవాజ్ఞాసమహి|
43 இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
స్వదేశే భవిష్యద్వక్తుః సత్కారో నాస్తీతి యద్యపి యీశుః ప్రమాణం దత్వాకథయత్
44 ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த நாட்டிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.
తథాపి దివసద్వయాత్ పరం స తస్మాత్ స్థానాద్ గాలీలం గతవాన్|
45 இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா என்ற பண்டிகையின்போது அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள்.
అనన్తరం యే గాలీలీ లియలోకా ఉత్సవే గతా ఉత్సవసమయే యిరూశలమ్ నగరే తస్య సర్వ్వాః క్రియా అపశ్యన్ తే గాలీలమ్ ఆగతం తమ్ ఆగృహ్లన్|
46 இயேசு மீண்டும் ஒருமுறை கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்குதான் அவர் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அங்கே கப்பர்நகூமிலே இருந்த ஒரு அரச அதிகாரியின் மகன் நோயுற்றுப் படுத்திருந்தான்.
తతః పరమ్ యీశు ర్యస్మిన్ కాన్నానగరే జలం ద్రాక్షారసమ్ ఆకరోత్ తత్ స్థానం పునరగాత్| తస్మిన్నేవ సమయే కస్యచిద్ రాజసభాస్తారస్య పుత్రః కఫర్నాహూమపురీ రోగగ్రస్త ఆసీత్|
47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவரிடத்திற்குப் போய், மரணத் தருவாயில் இருக்கும் தனது மகனை இயேசு, வந்து குணமாக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சினான்.
స యేహూదీయదేశాద్ యీశో ర్గాలీలాగమనవార్త్తాం నిశమ్య తస్య సమీపం గత్వా ప్రార్థ్య వ్యాహృతవాన్ మమ పుత్రస్య ప్రాయేణ కాల ఆసన్నః భవాన్ ఆగత్య తం స్వస్థం కరోతు|
48 இயேசு அவனிடம், “நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள்” என்றார்.
తదా యీశురకథయద్ ఆశ్చర్య్యం కర్మ్మ చిత్రం చిహ్నం చ న దృష్టా యూయం న ప్రత్యేష్యథ|
49 அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை சாகுமுன்னே வாரும்” என்றான்.
తతః స సభాసదవదత్ హే మహేచ్ఛ మమ పుత్రే న మృతే భవానాగచ్ఛతు|
50 இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப்போ. உன் மகன் உயிர்வாழ்வான்” என்றார். அவன் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டுப் போனான்.
యీశుస్తమవదద్ గచ్ఛ తవ పుత్రోఽజీవీత్ తదా యీశునోక్తవాక్యే స విశ్వస్య గతవాన్|
51 அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள்.
గమనకాలే మార్గమధ్యే దాసాస్తం సాక్షాత్ప్రాప్యావదన్ భవతః పుత్రోఽజీవీత్|
52 தனது மகன் சுகமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள்.
తతః కం కాలమారభ్య రోగప్రతీకారారమ్భో జాతా ఇతి పృష్టే తైరుక్తం హ్యః సార్ద్ధదణ్డద్వయాధికద్వితీయయామే తస్య జ్వరత్యాగోఽభవత్|
53 இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர்வாழ்வான்” என்று தனக்குச் சொன்ன நேரம், சரியாக அதே நேரம்தான் என்று தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும், அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள்.
తదా యీశుస్తస్మిన్ క్షణే ప్రోక్తవాన్ తవ పుత్రోఽజీవీత్ పితా తద్బుద్ధ్వా సపరివారో వ్యశ్వసీత్|
54 இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அடையாளம் ஆகும்.
యిహూదీయదేశాద్ ఆగత్య గాలీలి యీశురేతద్ ద్వితీయమ్ ఆశ్చర్య్యకర్మ్మాకరోత్|

< யோவான் 4 >