< யோவான் 4 >
1 யோவானைவிட இயேசு அநேகம் பேரைச் சீடராக்கி, அவர்களுக்கு திருமுழுக்கு கொடுக்கிறார் எனப் பரிசேயர் கேள்விப்பட்டார்கள்.
১যীশুঃ স্ৱযং নামজ্জযৎ কেৱলং তস্য শিষ্যা অমজ্জযৎ কিন্তু যোহনোঽধিকশিষ্যান্ স কৰোতি মজ্জযতি চ,
2 ஆனால் திருமுழுக்கு கொடுத்தது இயேசு அல்ல, அவருடைய சீடரே அதைச் செய்தார்கள்.
২ফিৰূশিন ইমাং ৱাৰ্ত্তামশৃণ্ৱন্ ইতি প্ৰভুৰৱগত্য
3 பரிசேயர் கேள்விப்பட்டதைக் கர்த்தர் அறிந்தபோது, அவர் யூதேயாவைவிட்டுப் புறப்பட்டுத் திரும்பவும் கலிலேயாவுக்குச் சென்றார்.
৩যিহূদীযদেশং ৱিহায পুন ৰ্গালীলম্ আগৎ|
4 இயேசு சமாரியா வழியாகப் போகவேண்டியிருந்தது.
৪ততঃ শোমিৰোণপ্ৰদেশস্য মদ্যেন তেন গন্তৱ্যে সতি
5 எனவே அவர் சமாரியாவிலுள்ள சீகார் என்னும் பட்டணத்திற்கு வந்தார். அது யாக்கோபு தன் மகன் யோசேப்புக்குக் கொடுத்த நிலத்தின் அருகேயிருந்தது.
৫যাকূব্ নিজপুত্ৰায যূষফে যাং ভূমিম্ অদদাৎ তৎসমীপস্থাযি শোমিৰোণপ্ৰদেশস্য সুখাৰ্ নাম্না ৱিখ্যাতস্য নগৰস্য সন্নিধাৱুপাস্থাৎ|
6 அங்கே யாக்கோபின் கிணறு இருந்தது. இயேசு பிரயாணத்தினால் களைப்படைந்தவராய், கிணற்றின் அருகே உட்கார்ந்தார். அப்பொழுது நேரம் நண்பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது.
৬তত্ৰ যাকূবঃ প্ৰহিৰাসীৎ; তদা দ্ৱিতীযযামৱেলাযাং জাতাযাং স মাৰ্গে শ্ৰমাপন্নস্তস্য প্ৰহেঃ পাৰ্শ্ৱে উপাৱিশৎ|
7 அவ்வேளையில் சமாரிய பெண் ஒருத்தி தண்ணீர் மொள்ளுவதற்கு வந்தாள். இயேசு அவளிடம், “நீ எனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருவாயா?” என்று கேட்டார்.
৭এতৰ্হি কাচিৎ শোমিৰোণীযা যোষিৎ তোযোত্তোলনাৰ্থম্ তত্ৰাগমৎ
8 அப்பொழுது அவருடைய சீடர்கள் உணவு வாங்கும்படி பட்டணத்திற்கு போயிருந்தார்கள்.
৮তদা শিষ্যাঃ খাদ্যদ্ৰৱ্যাণি ক্ৰেতুং নগৰম্ অগচ্ছন্|
9 அந்தச் சமாரியப் பெண் இயேசுவிடம், “நீர் ஒரு யூதன், நானோ ஒரு சமாரியப் பெண். என்னிடம் நீர் எப்படித் தண்ணீர் கேட்கலாம்?” என்று கேட்டாள். ஏனெனில் யூதர் சமாரியருடன் பழகுவதில்லை.
৯যীশুঃ শোমিৰোণীযাং তাং যোষিতম্ ৱ্যাহাৰ্ষীৎ মহ্যং কিঞ্চিৎ পানীযং পাতুং দেহি| কিন্তু শোমিৰোণীযৈঃ সাকং যিহূদীযলোকা ন ৱ্যৱাহৰন্ তস্মাদ্ধেতোঃ সাকথযৎ শোমিৰোণীযা যোষিতদহং ৎৱং যিহূদীযোসি কথং মত্তঃ পানীযং পাতুম্ ইচ্ছসি?
10 இயேசு அவளுக்குப் பதிலாக, “நீ இறைவனுடைய வரத்தையும், உன்னிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கிற நான் யார் என்பதையும் அறிந்திருந்தால், நீயே என்னிடத்தில் தண்ணீர் கேட்டிருப்பாய். நான் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பேன்” என்றார்.
১০ততো যীশুৰৱদদ্ ঈশ্ৱৰস্য যদ্দানং তৎকীদৃক্ পানীযং পাতুং মহ্যং দেহি য ইত্থং ৎৱাং যাচতে স ৱা ক ইতি চেদজ্ঞাস্যথাস্তৰ্হি তমযাচিষ্যথাঃ স চ তুভ্যমমৃতং তোযমদাস্যৎ|
11 அதற்கு அந்தப் பெண், “ஐயா, தண்ணீர் மொள்ளுவதற்கு உம்மிடம் ஒன்றும் இல்லை; கிணறும் ஆழமாய் இருக்கிறது. எங்கிருந்து இந்த ஜீவத்தண்ணீர் கிடைக்கும்?
১১তদা সা সীমন্তিনী ভাষিতৱতি, হে মহেচ্ছ প্ৰহিৰ্গম্ভীৰো ভৱতো নীৰোত্তোলনপাত্ৰং নাস্তী চ তস্মাৎ তদমৃতং কীলালং কুতঃ প্ৰাপ্স্যসি?
12 நம்முடையத் தந்தை யாக்கோபு எங்களுக்கு இந்தக் கிணற்றைக் கொடுத்தாரே; இந்த கிணற்றிலிருந்து அவரும் அவருடைய பிள்ளைகளும் தண்ணீர் குடித்து, தங்கள் ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் கொடுத்தார்களே. எங்கள் தந்தை யாக்கோபைப் பார்க்கிலும் நீர் பெரியவரோ?” என்று கேட்டாள்.
১২যোস্মভ্যম্ ইমমন্ধূং দদৌ, যস্য চ পৰিজনা গোমেষাদযশ্চ সৰ্ৱ্ৱেঽস্য প্ৰহেঃ পানীযং পপুৰেতাদৃশো যোস্মাকং পূৰ্ৱ্ৱপুৰুষো যাকূব্ তস্মাদপি ভৱান্ মহান্ কিং?
13 இயேசு அதற்குப் பதிலாக, “இந்தத் தண்ணீரைக் குடிக்கிற ஒவ்வொருவரும் மீண்டும் தாகமடைவார்கள்.
১৩ততো যীশুৰকথযদ্ ইদং পানীযং সঃ পিৱতি স পুনস্তৃষাৰ্ত্তো ভৱিষ্যতি,
14 ஆனால் நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவர்களோ, ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். உண்மையாகவே, நான் அவர்களுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவர்களுக்குள்ளே ஒரு நீரூற்றாக நித்திய ஜீவனாய் பொங்கி வழியும்” என்றார். (aiōn , aiōnios )
১৪কিন্তু মযা দত্তং পানীযং যঃ পিৱতি স পুনঃ কদাপি তৃষাৰ্ত্তো ন ভৱিষ্যতি| মযা দত্তম্ ইদং তোযং তস্যান্তঃ প্ৰস্ৰৱণৰূপং ভূৎৱা অনন্তাযুৰ্যাৱৎ স্ৰোষ্যতি| (aiōn , aiōnios )
15 அந்தப் பெண் அவரிடம், “ஐயா, அந்தத் தண்ணீரை எனக்குத் தாரும்; அப்பொழுது நான் இனிமேல் தாகமடைய மாட்டேன். தண்ணீர் மொள்ளுவதற்கு இங்கே வரவேண்டிய அவசியமும் எனக்கு இராது” என்றாள்.
১৫তদা সা ৱনিতাকথযৎ হে মহেচ্ছ তৰ্হি মম পুনঃ পীপাসা যথা ন জাযতে তোযোত্তোলনায যথাত্ৰাগমনং ন ভৱতি চ তদৰ্থং মহ্যং তত্তোযং দেহী|
16 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ போய் உன் கணவனை கூட்டிக்கொண்டு வா” என்றார்.
১৬ততো যীশূৰৱদদ্যাহি তৱ পতিমাহূয স্থানেঽত্ৰাগচ্ছ|
17 “அதற்கு அவள், எனக்கு கணவன் இல்லை,” என்றாள். இயேசு அவளிடம், “எனக்குக் கணவன் இல்லை என்று நீ சொன்னது சரிதான்.
১৭সা ৱামাৱদৎ মম পতিৰ্নাস্তি| যীশুৰৱদৎ মম পতিৰ্নাস্তীতি ৱাক্যং ভদ্ৰমৱোচঃ|
18 ஐந்து கணவன்மார் உனக்கு இருந்தார்களே, இப்பொழுது உன்னுடன் இருக்கிறவன் உன்னுடைய கணவன் அல்ல. நீ சொன்னது உண்மைதான்” என்றார்.
১৮যতস্তৱ পঞ্চ পতযোভৱন্ অধুনা তু ৎৱযা সাৰ্দ্ধং যস্তিষ্ঠতি স তৱ ভৰ্ত্তা ন ৱাক্যমিদং সত্যমৱাদিঃ|
19 அப்பொழுது அந்தப் பெண், “ஐயா, நீர் ஒரு இறைவாக்கினர் என்று நான் கண்டுகொண்டேன்.
১৯তদা সা মহিলা গদিতৱতি হে মহেচ্ছ ভৱান্ একো ভৱিষ্যদ্ৱাদীতি বুদ্ধং মযা|
20 எங்கள் தந்தையர் இங்கிருக்கும் மலையிலே இறைவனை வழிபட்டார்கள். ஆனால் யூதர்களான நீங்களோ, வழிபட வேண்டிய இடம் எருசலேமிலேயே இருக்கிறது என்று சொல்கிறீர்கள்” என்றாள்.
২০অস্মাকং পিতৃলোকা এতস্মিন্ শিলোচ্চযেঽভজন্ত, কিন্তু ভৱদ্ভিৰুচ্যতে যিৰূশালম্ নগৰে ভজনযোগ্যং স্থানমাস্তে|
21 அதற்கு இயேசு: “அம்மா, நீ என்னை நம்பு; நீங்கள் பிதாவை இந்த மலையிலும், எருசலேமிலும் வழிபடாத காலம் வருகிறது.
২১যীশুৰৱোচৎ হে যোষিৎ মম ৱাক্যে ৱিশ্ৱসিহি যদা যূযং কেৱলশৈলেঽস্মিন্ ৱা যিৰূশালম্ নগৰে পিতুৰ্ভজনং ন কৰিষ্যধ্ৱে কাল এতাদৃশ আযাতি|
22 சமாரியராகிய நீங்களோ அறியாததையே ஆராதிக்கிறீர்கள்; யூதர்களாகிய நாங்களோ அறிந்திருப்பவரையே ஆராதிக்கிறோம். ஏனெனில் யூதரிடமிருந்தே இரட்சிப்பு வருகிறது.
২২যূযং যং ভজধ্ৱে তং ন জানীথ, কিন্তু ৱযং যং ভজামহে তং জানীমহে, যতো যিহূদীযলোকানাং মধ্যাৎ পৰিত্ৰাণং জাযতে|
23 ஆனால் ஒரு காலம் வருகிறது, அது இப்பொழுதே வந்துவிட்டது. உண்மையாய் ஆராதிக்கிறவர்கள், அப்பொழுது பிதாவை ஆவியிலும் உண்மையிலும் ஆராதிப்பார்கள். ஏனெனில் அவ்விதம் தன்னை ஆராதிக்கிறவர்களையே பிதா தேடுகிறார்.
২৩কিন্তু যদা সত্যভক্তা আত্মনা সত্যৰূপেণ চ পিতুৰ্ভজনং কৰিষ্যন্তে সময এতাদৃশ আযাতি, ৱৰম্ ইদানীমপি ৱিদ্যতে; যত এতাদৃশো ভৎকান্ পিতা চেষ্টতে|
24 இறைவன் ஆவியாயிருக்கிறார். அவரை ஆராதிக்கிறவர்கள் ஆவியிலும் உண்மையிலும் அவரை ஆராதிக்க வேண்டும்” என்றார்.
২৪ঈশ্ৱৰ আত্মা; ততস্তস্য যে ভক্তাস্তৈঃ স আত্মনা সত্যৰূপেণ চ ভজনীযঃ|
25 அந்தப் பெண் அவரிடம், “கிறிஸ்து எனப்பட்ட மேசியா வருகிறார். அவர் வரும்போது எல்லாவற்றையும் அவர் எங்களுக்கு விளக்கிக் கூறுவார் என்று எனக்குத் தெரியும்” என்றாள்.
২৫তদা সা মহিলাৱাদীৎ খ্ৰীষ্টনাম্না ৱিখ্যাতোঽভিষিক্তঃ পুৰুষ আগমিষ্যতীতি জানামি স চ সৰ্ৱ্ৱাঃ কথা অস্মান্ জ্ঞাপযিষ্যতি|
26 அதற்கு இயேசு அவளிடம், “உன்னுடன் பேசுகிற நானே அவர்” என்று அறிவித்தார்.
২৬ততো যীশুৰৱদৎ ৎৱযা সাৰ্দ্ধং কথনং কৰোমি যোঽহম্ অহমেৱ স পুৰুষঃ|
27 அப்பொழுது இயேசுவின் சீடர்கள் திரும்பிவந்து, அவர் ஒரு பெண்ணுடன் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தார்கள். ஆனால் யாரும் அவரிடம், “உமக்கு என்ன தேவைப்படுகிறது? நீர் ஏன் அவளுடன் பேசுகிறீர்?” என்று கேட்கவில்லை.
২৭এতস্মিন্ সমযে শিষ্যা আগত্য তথা স্ত্ৰিযা সাৰ্দ্ধং তস্য কথোপকথনে মহাশ্চৰ্য্যম্ অমন্যন্ত তথাপি ভৱান্ কিমিচ্ছতি? যদ্ৱা কিমৰ্থম্ এতযা সাৰ্দ্ধং কথাং কথযতি? ইতি কোপি নাপৃচ্ছৎ|
28 அப்பொழுது அந்தப் பெண் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு, பட்டணத்திற்குள்ளே போய் அங்குள்ள மக்களிடம்,
২৮ততঃ পৰং সা নাৰী কলশং স্থাপযিৎৱা নগৰমধ্যং গৎৱা লোকেভ্যোকথাযদ্
29 “வாருங்கள், நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்ன ஒருவரை வந்து பாருங்கள். ஒருவேளை அவர்தான் கிறிஸ்துவோ?” என்றாள்.
২৯অহং যদ্যৎ কৰ্ম্মাকৰৱং তৎসৰ্ৱ্ৱং মহ্যমকথযদ্ এতাদৃশং মানৱমেকম্ আগত্য পশ্যত ৰু কিম্ অভিষিক্তো ন ভৱতি?
30 அவர்கள் பட்டணத்தைவிட்டு வெளியேறி இயேசு இருந்த இடத்திற்கு வந்தார்கள்.
৩০ততস্তে নগৰাদ্ বহিৰাগত্য তাতস্য সমীপম্ আযন্|
31 இதற்கிடையில் அவருடைய சீடர்கள், “போதகரே, சாப்பிடுங்கள்” என்று அவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
৩১এতৰ্হি শিষ্যাঃ সাধযিৎৱা তং ৱ্যাহাৰ্ষুঃ হে গুৰো ভৱান্ কিঞ্চিদ্ ভূক্তাং|
32 அதற்கு இயேசு அவர்களிடம், “நான் சாப்பிடுவதற்கு நீங்கள் அறியாத உணவு எனக்கு இருக்கிறது” என்றார்.
৩২ততঃ সোৱদদ্ যুষ্মাভিৰ্যন্ন জ্ঞাযতে তাদৃশং ভক্ষ্যং মমাস্তে|
33 அப்பொழுது அவருடைய சீடர்கள், “யாராவது அவருக்கு உணவு கொடுத்திருப்பார்களோ?” என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டார்கள்.
৩৩তদা শিষ্যাঃ পৰস্পৰং প্ৰষ্টুম্ আৰম্ভন্ত, কিমস্মৈ কোপি কিমপি ভক্ষ্যমানীয দত্তৱান্?
34 இயேசு அவர்களிடம், “என்னை அனுப்பினவருடைய சித்தத்தைச் செய்து, அவருடைய வேலையை முடிப்பதே எனது உணவு.
৩৪যীশুৰৱোচৎ মৎপ্ৰেৰকস্যাভিমতানুৰূপকৰণং তস্যৈৱ কৰ্ম্মসিদ্ধিকাৰণঞ্চ মম ভক্ষ্যং|
35 ‘இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. அதற்குப் பின்பு அறுவடை வந்துவிடும்’ என்று நீங்கள் சொல்வதில்லையா? நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் கண்களைத் திறந்து வயல்களை நோக்கிப்பாருங்கள்! அவை விளைந்து அறுவடைக்கு ஆயத்தமாக இருக்கின்றன.
৩৫মাসচতুষ্টযে জাতে শস্যকৰ্ত্তনসমযো ভৱিষ্যতীতি ৱাক্যং যুষ্মাভিঃ কিং নোদ্যতে? কিন্ত্ৱহং ৱদামি, শিৰ উত্তোল্য ক্ষেত্ৰাণি প্ৰতি নিৰীক্ষ্য পশ্যত, ইদানীং কৰ্ত্তনযোগ্যানি শুক্লৱৰ্ণান্যভৱন্|
36 இப்பொழுதும்கூட அறுவடை செய்பவன் கூலியைப் பெறுகிறான். இப்பொழுதே அவன் நித்திய ஜீவனுக்கான விளைச்சலை அறுவடை செய்கிறான்; இதனால் விதைக்கிறவனும் அறுவடை செய்கிறவனும் ஒன்றாய் மகிழ்ச்சியடைகிறார்கள். (aiōnios )
৩৬যশ্ছিনত্তি স ৱেতনং লভতে অনন্তাযুঃস্ৱৰূপং শস্যং স গৃহ্লাতি চ, তেনৈৱ ৱপ্তা ছেত্তা চ যুগপদ্ আনন্দতঃ| (aiōnios )
37 இவ்விதம், ‘ஒருவன் விதைக்கிறான், இன்னொருவன் அறுவடை செய்கிறான்’ என்ற பழமொழியும் உண்மையாகிறது.
৩৭ইত্থং সতি ৱপত্যেকশ্ছিনত্যন্য ইতি ৱচনং সিদ্ধ্যতি|
38 நீங்கள் வேலைசெய்து விளைவிக்காததை அறுவடை செய்ய நான் உங்களை அனுப்பினேன். மற்றவர்கள் கடுமையாய் உழைத்தார்கள். அவர்களுடைய உழைப்பின் பலனை நீங்கள் அறுவடை செய்தீர்கள்” என்றார்.
৩৮যত্ৰ যূযং ন পৰ্য্যশ্ৰাম্যত তাদৃশং শস্যং ছেত্তুং যুষ্মান্ প্ৰৈৰযম্ অন্যে জনাঃপৰ্য্যশ্ৰাম্যন্ যূযং তেষাং শ্ৰগস্য ফলম্ অলভধ্ৱম্|
39 அந்தப் பட்டணத்திலிருந்த சமாரியர் அநேகர் இயேசுவை விசுவாசித்தார்கள். ஏனெனில், “நான் செய்த எல்லாவற்றையும் எனக்குச் சொன்னார்” என்று இயேசுவைக்குறித்து அந்தச் சமாரியப் பெண் சாட்சி கூறியிருந்தாள்.
৩৯যস্মিন্ কালে যদ্যৎ কৰ্ম্মাকাৰ্ষং তৎসৰ্ৱ্ৱং স মহ্যম্ অকথযৎ তস্যা ৱনিতাযা ইদং সাক্ষ্যৱাক্যং শ্ৰুৎৱা তন্নগৰনিৱাসিনো বহৱঃ শোমিৰোণীযলোকা ৱ্যশ্ৱসন্|
40 எனவே அந்தச் சமாரியர் அவரிடம், தங்களுடன் வந்து தங்கும்படி அவரைக் கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களுடன் இரண்டு நாட்கள் தங்கினார்.
৪০তথা চ তস্যান্তিকে সমুপস্থায স্ৱেষাং সন্নিধৌ কতিচিদ্ দিনানি স্থাতুং তস্মিন্ ৱিনযম্ অকুৰ্ৱ্ৱান তস্মাৎ স দিনদ্ৱযং তৎস্থানে ন্যৱষ্টৎ
41 அவருடைய வார்த்தைகளைக் கேட்டு இன்னும் அதிகமானோர் விசுவாசிகளானார்கள்.
৪১ততস্তস্যোপদেশেন বহৱোঽপৰে ৱিশ্ৱস্য
42 அவர்கள் அந்தப் பெண்ணிடம், “நாங்கள் அவரை நம்புவது நீ சொன்னதைக் கேட்டுமட்டுமல்ல; இப்பொழுது நாங்களே அவர் சொன்னவற்றைக் கேட்டோம். இவர் உண்மையிலேயே உலகத்தின் இரட்சகர் என்பதை அறிந்துகொண்டோம்” என்றார்கள்.
৪২তাং যোষামৱদন্ কেৱলং তৱ ৱাক্যেন প্ৰতীম ইতি ন, কিন্তু স জগতোঽভিষিক্তস্ত্ৰাতেতি তস্য কথাং শ্ৰুৎৱা ৱযং স্ৱযমেৱাজ্ঞাসমহি|
43 இரண்டு நாட்களுக்குப்பின் இயேசு கலிலேயாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
৪৩স্ৱদেশে ভৱিষ্যদ্ৱক্তুঃ সৎকাৰো নাস্তীতি যদ্যপি যীশুঃ প্ৰমাণং দৎৱাকথযৎ
44 ஒரு இறைவாக்கினனுக்கு தனது சொந்த நாட்டிலே மதிப்பு இல்லை என்று இயேசு தாமே குறிப்பிட்டுச் சொல்லியிருந்தார்.
৪৪তথাপি দিৱসদ্ৱযাৎ পৰং স তস্মাৎ স্থানাদ্ গালীলং গতৱান্|
45 இயேசு கலிலேயாவுக்கு வந்தபோது, கலிலேயர்கள் அவரை வரவேற்றார்கள். பஸ்கா என்ற பண்டிகையின்போது அவர் எருசலேமில் செய்ததையெல்லாம் கலிலேயர் கண்டிருந்தார்கள். ஏனெனில் பண்டிகையின்போது அவர்களும் அங்கே இருந்தார்கள்.
৪৫অনন্তৰং যে গালীলী লিযলোকা উৎসৱে গতা উৎসৱসমযে যিৰূশলম্ নগৰে তস্য সৰ্ৱ্ৱাঃ ক্ৰিযা অপশ্যন্ তে গালীলম্ আগতং তম্ আগৃহ্লন্|
46 இயேசு மீண்டும் ஒருமுறை கலிலேயாவிலுள்ள கானாவூருக்குச் சென்றார். அங்குதான் அவர் தண்ணீரைத் திராட்சைரசமாக மாற்றினார். அங்கே கப்பர்நகூமிலே இருந்த ஒரு அரச அதிகாரியின் மகன் நோயுற்றுப் படுத்திருந்தான்.
৪৬ততঃ পৰম্ যীশু ৰ্যস্মিন্ কান্নানগৰে জলং দ্ৰাক্ষাৰসম্ আকৰোৎ তৎ স্থানং পুনৰগাৎ| তস্মিন্নেৱ সমযে কস্যচিদ্ ৰাজসভাস্তাৰস্য পুত্ৰঃ কফৰ্নাহূমপুৰী ৰোগগ্ৰস্ত আসীৎ|
47 இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று இந்த அதிகாரி கேள்விப்பட்டதும், அவரிடத்திற்குப் போய், மரணத் தருவாயில் இருக்கும் தனது மகனை இயேசு, வந்து குணமாக்க வேண்டுமென்று அவரைக் கெஞ்சினான்.
৪৭স যেহূদীযদেশাদ্ যীশো ৰ্গালীলাগমনৱাৰ্ত্তাং নিশম্য তস্য সমীপং গৎৱা প্ৰাৰ্থ্য ৱ্যাহৃতৱান্ মম পুত্ৰস্য প্ৰাযেণ কাল আসন্নঃ ভৱান্ আগত্য তং স্ৱস্থং কৰোতু|
48 இயேசு அவனிடம், “நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் கண்டாலொழிய, ஒருபோதும் விசுவாசிக்கமாட்டீர்கள்” என்றார்.
৪৮তদা যীশুৰকথযদ্ আশ্চৰ্য্যং কৰ্ম্ম চিত্ৰং চিহ্নং চ ন দৃষ্টা যূযং ন প্ৰত্যেষ্যথ|
49 அதற்கு அந்த அரச அதிகாரி, “ஐயா, எனது பிள்ளை சாகுமுன்னே வாரும்” என்றான்.
৪৯ততঃ স সভাসদৱদৎ হে মহেচ্ছ মম পুত্ৰে ন মৃতে ভৱানাগচ্ছতু|
50 இயேசு அதற்குப் பதிலாக, “நீ திரும்பிப்போ. உன் மகன் உயிர்வாழ்வான்” என்றார். அவன் இயேசுவின் வார்த்தையை விசுவாசித்து புறப்பட்டுப் போனான்.
৫০যীশুস্তমৱদদ্ গচ্ছ তৱ পুত্ৰোঽজীৱীৎ তদা যীশুনোক্তৱাক্যে স ৱিশ্ৱস্য গতৱান্|
51 அவன் வழியில் போய்க் கொண்டிருக்கும்போதே, அவனுடைய வேலைக்காரர் அவனுக்கு எதிர்ப்பட்டு அவனுடைய மகன் பிழைத்திருக்கிறான் என்ற செய்தியை அறிவித்தார்கள்.
৫১গমনকালে মাৰ্গমধ্যে দাসাস্তং সাক্ষাৎপ্ৰাপ্যাৱদন্ ভৱতঃ পুত্ৰোঽজীৱীৎ|
52 தனது மகன் சுகமடைந்த நேரத்தைப்பற்றி அவன் விசாரித்தபோது, அவர்கள் அவனிடம், “நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு அவனுக்கிருந்த காய்ச்சல் நீங்கியது” என்றார்கள்.
৫২ততঃ কং কালমাৰভ্য ৰোগপ্ৰতীকাৰাৰম্ভো জাতা ইতি পৃষ্টে তৈৰুক্তং হ্যঃ সাৰ্দ্ধদণ্ডদ্ৱযাধিকদ্ৱিতীযযামে তস্য জ্ৱৰত্যাগোঽভৱৎ|
53 இயேசு தன்னிடம், “உனது மகன் உயிர்வாழ்வான்” என்று தனக்குச் சொன்ன நேரம், சரியாக அதே நேரம்தான் என்று தகப்பன் புரிந்து கொண்டான். எனவே அவனும், அவனுடைய குடும்பத்தாரும் இயேசுவை விசுவாசித்தார்கள்.
৫৩তদা যীশুস্তস্মিন্ ক্ষণে প্ৰোক্তৱান্ তৱ পুত্ৰোঽজীৱীৎ পিতা তদ্বুদ্ধ্ৱা সপৰিৱাৰো ৱ্যশ্ৱসীৎ|
54 இது இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபின் செய்த இரண்டாவது அடையாளம் ஆகும்.
৫৪যিহূদীযদেশাদ্ আগত্য গালীলি যীশুৰেতদ্ দ্ৱিতীযম্ আশ্চৰ্য্যকৰ্ম্মাকৰোৎ|