< யோவான் 20 >

1 வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
ଅନନ୍ତରଂ ସପ୍ତାହସ୍ୟ ପ୍ରଥମଦିନେ ଽତିପ୍ରତ୍ୟୂଷେ ଽନ୍ଧକାରେ ତିଷ୍ଠତି ମଗ୍ଦଲୀନୀ ମରିଯମ୍ ତସ୍ୟ ଶ୍ମଶାନସ୍ୟ ନିକଟଂ ଗତ୍ୱା ଶ୍ମଶାନସ୍ୟ ମୁଖାତ୍ ପ୍ରସ୍ତରମପସାରିତମ୍ ଅପଶ୍ୟତ୍|
2 எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
ପଶ୍ଚାଦ୍ ଧାୱିତ୍ୱା ଶିମୋନ୍ପିତରାଯ ଯୀଶୋଃ ପ୍ରିଯତମଶିଷ୍ୟାଯ ଚେଦମ୍ ଅକଥଯତ୍, ଲୋକାଃ ଶ୍ମଶାନାତ୍ ପ୍ରଭୁଂ ନୀତ୍ୱା କୁତ୍ରାସ୍ଥାପଯନ୍ ତଦ୍ ୱକ୍ତୁଂ ନ ଶକ୍ନୋମି|
3 எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
ଅତଃ ପିତରଃ ସୋନ୍ୟଶିଷ୍ୟଶ୍ଚ ବର୍ହି ର୍ଭୁତ୍ୱା ଶ୍ମଶାନସ୍ଥାନଂ ଗନ୍ତୁମ୍ ଆରଭେତାଂ|
4 அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
ଉଭଯୋର୍ଧାୱତୋଃ ସୋନ୍ୟଶିଷ୍ୟଃ ପିତରଂ ପଶ୍ଚାତ୍ ତ୍ୟକ୍ତ୍ୱା ପୂର୍ୱ୍ୱଂ ଶ୍ମଶାନସ୍ଥାନ ଉପସ୍ଥିତୱାନ୍|
5 அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
ତଦା ପ୍ରହ୍ୱୀଭୂଯ ସ୍ଥାପିତୱସ୍ତ୍ରାଣି ଦୃଷ୍ଟୱାନ୍ କିନ୍ତୁ ନ ପ୍ରାୱିଶତ୍|
6 பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
ଅପରଂ ଶିମୋନ୍ପିତର ଆଗତ୍ୟ ଶ୍ମଶାନସ୍ଥାନଂ ପ୍ରୱିଶ୍ୟ
7 இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
ସ୍ଥାପିତୱସ୍ତ୍ରାଣି ମସ୍ତକସ୍ୟ ୱସ୍ତ୍ରଞ୍ଚ ପୃଥକ୍ ସ୍ଥାନାନ୍ତରେ ସ୍ଥାପିତଂ ଦୃଷ୍ଟୱାନ୍|
8 பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
ତତଃ ଶ୍ମଶାନସ୍ଥାନଂ ପୂର୍ୱ୍ୱମ୍ ଆଗତୋ ଯୋନ୍ୟଶିଷ୍ୟଃ ସୋପି ପ୍ରୱିଶ୍ୟ ତାଦୃଶଂ ଦୃଷ୍ଟା ୱ୍ୟଶ୍ୱସୀତ୍|
9 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
ଯତଃ ଶ୍ମଶାନାତ୍ ସ ଉତ୍ଥାପଯିତୱ୍ୟ ଏତସ୍ୟ ଧର୍ମ୍ମପୁସ୍ତକୱଚନସ୍ୟ ଭାୱଂ ତେ ତଦା ୱୋଦ୍ଧୁଂ ନାଶନ୍କୁୱନ୍|
10 பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
ଅନନ୍ତରଂ ତୌ ଦ୍ୱୌ ଶିଷ୍ୟୌ ସ୍ୱଂ ସ୍ୱଂ ଗୃହଂ ପରାୱୃତ୍ୟାଗଚ୍ଛତାମ୍|
11 ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
ତତଃ ପରଂ ମରିଯମ୍ ଶ୍ମଶାନଦ୍ୱାରସ୍ୟ ବହିଃ ସ୍ଥିତ୍ୱା ରୋଦିତୁମ୍ ଆରଭତ ତତୋ ରୁଦତୀ ପ୍ରହ୍ୱୀଭୂଯ ଶ୍ମଶାନଂ ୱିଲୋକ୍ୟ
12 அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
ଯୀଶୋଃ ଶଯନସ୍ଥାନସ୍ୟ ଶିରଃସ୍ଥାନେ ପଦତଲେ ଚ ଦ୍ୱଯୋ ର୍ଦିଶୋ ଦ୍ୱୌ ସ୍ୱର୍ଗୀଯଦୂତାୱୁପୱିଷ୍ଟୌ ସମପଶ୍ୟତ୍|
13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
ତୌ ପୃଷ୍ଟୱନ୍ତୌ ହେ ନାରି କୁତୋ ରୋଦିଷି? ସାୱଦତ୍ ଲୋକା ମମ ପ୍ରଭୁଂ ନୀତ୍ୱା କୁତ୍ରାସ୍ଥାପଯନ୍ ଇତି ନ ଜାନାମି|
14 இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ମୁଖଂ ପରାୱୃତ୍ୟ ଯୀଶୁଂ ଦଣ୍ଡାଯମାନମ୍ ଅପଶ୍ୟତ୍ କିନ୍ତୁ ସ ଯୀଶୁରିତି ସା ଜ୍ଞାତୁଂ ନାଶକ୍ନୋତ୍|
15 அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
ତଦା ଯୀଶୁସ୍ତାମ୍ ଅପୃଚ୍ଛତ୍ ହେ ନାରି କୁତୋ ରୋଦିଷି? କଂ ୱା ମୃଗଯସେ? ତତଃ ସା ତମ୍ ଉଦ୍ୟାନସେୱକଂ ଜ୍ଞାତ୍ୱା ୱ୍ୟାହରତ୍, ହେ ମହେଚ୍ଛ ତ୍ୱଂ ଯଦୀତଃ ସ୍ଥାନାତ୍ ତଂ ନୀତୱାନ୍ ତର୍ହି କୁତ୍ରାସ୍ଥାପଯସ୍ତଦ୍ ୱଦ ତତ୍ସ୍ଥାନାତ୍ ତମ୍ ଆନଯାମି|
16 அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
ତଦା ଯୀଶୁସ୍ତାମ୍ ଅୱଦତ୍ ହେ ମରିଯମ୍| ତତଃ ସା ପରାୱୃତ୍ୟ ପ୍ରତ୍ୟୱଦତ୍ ହେ ରବ୍ବୂନୀ ଅର୍ଥାତ୍ ହେ ଗୁରୋ|
17 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
ତଦା ଯୀଶୁରୱଦତ୍ ମାଂ ମା ଧର, ଇଦାନୀଂ ପିତୁଃ ସମୀପେ ଊର୍ଦ୍ଧ୍ୱଗମନଂ ନ କରୋମି କିନ୍ତୁ ଯୋ ମମ ଯୁଷ୍ମାକଞ୍ଚ ପିତା ମମ ଯୁଷ୍ମାକଞ୍ଚେଶ୍ୱରସ୍ତସ୍ୟ ନିକଟ ଊର୍ଦ୍ଧ୍ୱଗମନଂ କର୍ତ୍ତୁମ୍ ଉଦ୍ୟତୋସ୍ମି, ଇମାଂ କଥାଂ ତ୍ୱଂ ଗତ୍ୱା ମମ ଭ୍ରାତୃଗଣଂ ଜ୍ଞାପଯ|
18 மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
ତତୋ ମଗ୍ଦଲୀନୀମରିଯମ୍ ତତ୍କ୍ଷଣାଦ୍ ଗତ୍ୱା ପ୍ରଭୁସ୍ତସ୍ୟୈ ଦର୍ଶନଂ ଦତ୍ତ୍ୱା କଥା ଏତା ଅକଥଯଦ୍ ଇତି ୱାର୍ତ୍ତାଂ ଶିଷ୍ୟେଭ୍ୟୋଽକଥଯତ୍|
19 வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
ତତଃ ପରଂ ସପ୍ତାହସ୍ୟ ପ୍ରଥମଦିନସ୍ୟ ସନ୍ଧ୍ୟାସମଯେ ଶିଷ୍ୟା ଏକତ୍ର ମିଲିତ୍ୱା ଯିହୂଦୀଯେଭ୍ୟୋ ଭିଯା ଦ୍ୱାରରୁଦ୍ଧମ୍ ଅକୁର୍ୱ୍ୱନ୍, ଏତସ୍ମିନ୍ କାଲେ ଯୀଶୁସ୍ତେଷାଂ ମଧ୍ୟସ୍ଥାନେ ତିଷ୍ଠନ୍ ଅକଥଯଦ୍ ଯୁଷ୍ମାକଂ କଲ୍ୟାଣଂ ଭୂଯାତ୍|
20 அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ନିଜହସ୍ତଂ କୁକ୍ଷିଞ୍ଚ ଦର୍ଶିତୱାନ୍, ତତଃ ଶିଷ୍ୟାଃ ପ୍ରଭୁଂ ଦୃଷ୍ଟ୍ୱା ହୃଷ୍ଟା ଅଭୱନ୍|
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
ଯୀଶୁଃ ପୁନରୱଦଦ୍ ଯୁଷ୍ମାକଂ କଲ୍ୟାଣଂ ଭୂଯାତ୍ ପିତା ଯଥା ମାଂ ପ୍ରୈଷଯତ୍ ତଥାହମପି ଯୁଷ୍ମାନ୍ ପ୍ରେଷଯାମି|
22 இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
ଇତ୍ୟୁକ୍ତ୍ୱା ସ ତେଷାମୁପରି ଦୀର୍ଘପ୍ରଶ୍ୱାସଂ ଦତ୍ତ୍ୱା କଥିତୱାନ୍ ପୱିତ୍ରମ୍ ଆତ୍ମାନଂ ଗୃହ୍ଲୀତ|
23 நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
ଯୂଯଂ ଯେଷାଂ ପାପାନି ମୋଚଯିଷ୍ୟଥ ତେ ମୋଚଯିଷ୍ୟନ୍ତେ ଯେଷାଞ୍ଚ ପାପାତି ନ ମୋଚଯିଷ୍ୟଥ ତେ ନ ମୋଚଯିଷ୍ୟନ୍ତେ|
24 இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
ଦ୍ୱାଦଶମଧ୍ୟେ ଗଣିତୋ ଯମଜୋ ଥୋମାନାମା ଶିଷ୍ୟୋ ଯୀଶୋରାଗମନକାଲୈ ତୈଃ ସାର୍ଦ୍ଧଂ ନାସୀତ୍|
25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
ଅତୋ ୱଯଂ ପ୍ରଭୂମ୍ ଅପଶ୍ୟାମେତି ୱାକ୍ୟେଽନ୍ୟଶିଷ୍ୟୈରୁକ୍ତେ ସୋୱଦତ୍, ତସ୍ୟ ହସ୍ତଯୋ ର୍ଲୌହକୀଲକାନାଂ ଚିହ୍ନଂ ନ ୱିଲୋକ୍ୟ ତଚ୍ଚିହ୍ନମ୍ ଅଙ୍ଗୁଲ୍ୟା ନ ସ୍ପୃଷ୍ଟ୍ୱା ତସ୍ୟ କୁକ୍ଷୌ ହସ୍ତଂ ନାରୋପ୍ୟ ଚାହଂ ନ ୱିଶ୍ୱସିଷ୍ୟାମି|
26 இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
ଅପରମ୍ ଅଷ୍ଟମେଽହ୍ନି ଗତେ ସତି ଥୋମାସହିତଃ ଶିଷ୍ୟଗଣ ଏକତ୍ର ମିଲିତ୍ୱା ଦ୍ୱାରଂ ରୁଦ୍ଧ୍ୱାଭ୍ୟନ୍ତର ଆସୀତ୍, ଏତର୍ହି ଯୀଶୁସ୍ତେଷାଂ ମଧ୍ୟସ୍ଥାନେ ତିଷ୍ଠନ୍ ଅକଥଯତ୍, ଯୁଷ୍ମାକଂ କୁଶଲଂ ଭୂଯାତ୍|
27 பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
ପଶ୍ଚାତ୍ ଥାମୈ କଥିତୱାନ୍ ତ୍ୱମ୍ ଅଙ୍ଗୁଲୀମ୍ ଅତ୍ରାର୍ପଯିତ୍ୱା ମମ କରୌ ପଶ୍ୟ କରଂ ପ୍ରସାର୍ୟ୍ୟ ମମ କୁକ୍ଷାୱର୍ପଯ ନାୱିଶ୍ୱସ୍ୟ|
28 அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
ତଦା ଥୋମା ଅୱଦତ୍, ହେ ମମ ପ୍ରଭୋ ହେ ମଦୀଶ୍ୱର|
29 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
ଯୀଶୁରକଥଯତ୍, ହେ ଥୋମା ମାଂ ନିରୀକ୍ଷ୍ୟ ୱିଶ୍ୱସିଷି ଯେ ନ ଦୃଷ୍ଟ୍ୱା ୱିଶ୍ୱସନ୍ତି ତଏୱ ଧନ୍ୟାଃ|
30 இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
ଏତଦନ୍ୟାନି ପୁସ୍ତକେଽସ୍ମିନ୍ ଅଲିଖିତାନି ବହୂନ୍ୟାଶ୍ଚର୍ୟ୍ୟକର୍ମ୍ମାଣି ଯୀଶୁଃ ଶିଷ୍ୟାଣାଂ ପୁରସ୍ତାଦ୍ ଅକରୋତ୍|
31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
କିନ୍ତୁ ଯୀଶୁରୀଶ୍ୱରସ୍ୟାଭିଷିକ୍ତଃ ସୁତ ଏୱେତି ଯଥା ଯୂଯଂ ୱିଶ୍ୱସିଥ ୱିଶ୍ୱସ୍ୟ ଚ ତସ୍ୟ ନାମ୍ନା ପରମାଯୁଃ ପ୍ରାପ୍ନୁଥ ତଦର୍ଥମ୍ ଏତାନି ସର୍ୱ୍ୱାଣ୍ୟଲିଖ୍ୟନ୍ତ|

< யோவான் 20 >