< யோவான் 20 >

1 வாரத்தின் முதலாவது நாள் அதிகாலையிலே, இன்னும் இருட்டாயிருக்கையிலே மகதலேனா மரியாள் கல்லறைக்குப் போனாள். அங்கே கல்லறையின் வாசலில் இருந்த கல் புரட்டப்பட்டிருப்பதை அவள் கண்டாள்.
हफतेरी पेइली दिहैड़ी झ़ेझ़ां हेजू आंधरू थियूं मगदलीन ड्लंव्वेरी मरियम कब्री पुड़ आई, तैसां हेरू कि कब्री करां घोड़ भी खड़ो कियोरोए।
2 எனவே அவள் சீமோன் பேதுருவிடமும், இயேசு அன்பு செலுத்திய மற்றச் சீடர்களிடமும் ஓடிவந்து, “கல்லறையிலிருந்து கர்த்தரின் உடலை அவர்கள் எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்திருக்கிறார்களோ எங்களுக்குத் தெரியாது!” என்றாள்.
ते दौवड़ती शमौन पतरस ते होरि चेले कां पुज़ी ज़ै यीशु सेइं प्यार केरतो थियो, ज़ोने लगी, “तैनेईं प्रभुएरी लाश कब्री मरां केढतां नीयोरो, ते असन नईं पतो तै कोड़ि रख्खोरोए।”
3 எனவே பேதுருவும், மற்றச் சீடனும் கல்லறையை நோக்கிச் சென்றார்கள்.
एना शुन्तां पतरस त अक होरो चेलो कब्रारे पासे च़ले।
4 அவர்கள் இருவரும் ஒருமித்து ஓடினார்கள். ஆனால் மற்றச் சீடனோ பேதுருவை முந்திக் கொண்டு கல்லறைக்கு முதலில் போய்ச் சேர்ந்தான்.
ते दुइये साथी-साथी दौवड़तां च़लोरे थिये, पन तै होरो दुइयोवं चेलो पतरस करां अग्रोवं निस्सी जेव, ते तैस करां पेइलो कब्री पुड़ पुज़ो।
5 அவன் குனிந்து பார்த்தபோது, மென்பட்டுத் துணிகள் அங்கே கிடப்பதைக் கண்டான். அவனோ உள்ளே போகவில்லை.
तैनी लिकतां तक्कू ते कफन लाव ते अन्तर न जेव।
6 பின்பு அவனுக்குப்பின்னாக வந்த சீமோன் பேதுருவோ, வந்து சேர்ந்தவுடன் கல்லறைக்கு உள்ளே போனான். அங்கே மென்பட்டுத் துணிகள் கிடப்பதைக் கண்டான்.
तैखन शमौन पतरस भी पत्ती-पत्ती तैड़ी पुज़ो ते सिधो कब्री मां जेव तैनी हेरू कि तैड़ी लिगड़ां थियां।
7 இயேசுவின் தலையைச் சுற்றிக் கட்டியிருந்த துணியும் அங்கே கிடந்தது. அது மென்பட்டுத் துணியோடு அல்லாமல், தனியாக மடித்து வைக்கப்பட்டிருந்தது.
ते कफनेरो तै रुमाल भी ज़ै यीशुएरे दोग्गे सेइं पलेटोरो थियो, लिगड़न मां नईं पन अलग ठैरी थियो।
8 பின்பு முதலாவதாகக் கல்லறைக்கு வந்திருந்த மற்றச் சீடனும் உள்ளே போனான். அவனும் கண்டு விசுவாசித்தான்.
तैखन तै होरो चेलो भी ज़ै कब्री पुड़ पेइलो पुज़ोरो थियूं अन्तर जेव तैस भी लेइतां याकीन भोवं।
9 ஆனால் இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்திருக்க வேண்டும் என்ற வேதவசனத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
किजोकि तैनेईं पवित्रशास्त्रेरी ए गल न थी समझ़ोरी ज़ेसेरे बारे मां यीशुएरू मुड़दन मरां ज़ींतू भोनू ज़रूरी थियूं।
10 பின்பு சீடர்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்றார்கள்.
तैखन एना चेले वापस घरजो च़ले जे।
11 ஆனால் மரியாளோ கல்லறைக்கு வெளியே அழுதுகொண்டு நின்றாள். அவள் அழுதுகொண்டு குனிந்து கல்லறையினுள்ளே பார்த்தாள்.
पन मरियम कब्री करां बेइर लेरां देंती थी। लेरां देंती-देंती तैसां लिकतां कब्री मांजो तक्कू।
12 அங்கே வெள்ளையுடை அணிந்த இரண்டு இறைத்தூதர்கள், இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு தூதன் தலைமாட்டிலும் இன்னொரு தூதன் கால்மாட்டிலும் இருந்தார்கள்.
त तैड़ी तैसां दूई स्वर्गदूत लाए ज़ैन छ़ित्तां लिगड़ां लग्गोरां थियां, ज़ैड़ी यीशुएरी लाश रखोरि थी तैड़ी अक शरेइंते ते होरो परेइंते बिश्शोरे लाए।
13 அவர்கள் அவளிடம், “பெண்ணே, ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவளோ, “அவர்கள் என் கர்த்தரை எடுத்துக்கொண்டுபோய் விட்டார்கள். அவர்கள் அவரை எங்கே வைத்தார்களோ எனக்குத் தெரியவில்லை” என்றாள்.
तैनेईं तैस पुच़्छ़ू, “हे कुआन्शे तू किजो लोरिस लेरां देने?” मरियमा ज़ोवं, “तैनेईं मेरे प्रभुएरी लाश नेवरीए ते पतो नईं कोड़ि रख्खोरोए।”
14 இதைச் சொல்லிவிட்டு, அவள் திரும்பியபோது இயேசு அங்கே நிற்பதைக் கண்டாள். ஆனால் அவர் இயேசுவே என்று அவள் அறிந்துகொள்ளவில்லை.
एना ज़ोंते तै पत्रोवं बेदलोई त तैड़ी यीशु खड़खड़ो लाव, पन तैस पिशान न आई कि ए यीशुए।
15 அப்பொழுது இயேசு, “பெண்ணே, நீ ஏன் அழுகிறாய்? நீ யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்டார். அவள் அவரைத் தோட்டக்காரன் என நினைத்து அவரிடம், “ஐயா, நீர் அவரைக் கொண்டு போயிருந்தால், அவரை எங்கே வைத்தீர் என்று எனக்குச் சொல்லும். நான் அவரை எடுத்துச் செல்வேன்” என்றாள்.
यीशुए ज़ोवं, “हे कुआन्शे तू किजो लेरां देने लोरिस? तू केस तोपने लोरिस?” तैसां समझ़ू कि कोई बागबाने, तैसां ज़ोवं, “हे जनाब अगर तीं तै नीयोरोए त ज़ो कि तीं कोड़ि रख्खोरोए ते अवं तैस नेइ।”
16 அப்பொழுது இயேசு அவளிடம், “மரியாளே!” என்றார். அவள் அவர் நின்ற பக்கமாய்த் திரும்பி, “ரபூனி!” என்று எபிரெய மொழியில் சத்தமாய் சொன்னாள். ரபூனி என்றால், “போதகரே” என்று அர்த்தம்.
यीशुए तैस सेइं ज़ोवं, “मरियम!” तैसां तैसेरे पासे फिरतां इब्रानी मां ज़ोवं, “रब्बूनी!” ज़ेसेरो मतलबे हे गुरू।
17 அப்பொழுது இயேசு அவளிடம், “நீ என்னைப் பற்றிக்கொள்ளாதே. ஏனெனில் நான் இன்னும் என் பிதாவினிடத்திற்குத் திரும்பிப் போகவில்லை. நீயோ என் சகோதரரிடம் போய் அவர்களிடம், ‘நான் என் பிதாவினிடத்திற்கும், உங்கள் பிதாவினிடத்திற்கும், என் இறைவனிடத்திற்கும், உங்கள் இறைவனிடத்திற்கும் திரும்பிப் போகிறேன்’ என்று சொல்” என்றார்.
यीशुए ज़ोवं, “मीं सेइं न हुरा किजोकि अवं बाजी कां बाह हेजू नईं जोरो, पन मेरे ढ्लान गेइतां ज़ो कि अवं अपने बाजी ते तुश्शे बाजी ते अपने परमेशर ते तुश्शे परमेशरे कां बा च़लोरोईं।”
18 மகதலேனா மரியாள் சீடர்களிடம் போய், “நான் கர்த்தரைக் கண்டேன்!” என்று அறிவித்தாள், அவள், கர்த்தர் தனக்குக் கூறிய காரியங்களையும் அவர்களுக்குச் சொன்னாள்.
मरियम मगदलीनी तैट्ठां च़ली जेई ते चेलन कां गेइतां तैन पतो दित्तो, “मीं प्रभु लाहोरोए ते तैनी मीं सेइं एना गल्लां की।”
19 வாரத்தின் முதலாவது நாளாகிய அன்றே மாலைவேளையில், சீடர்கள் ஒன்றாய் கூடியிருக்கையில், யூதருக்குப் பயந்ததினால் கதவுகளைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்தார்கள். இயேசு அங்கே வந்து, அவர்கள் நடுவே நின்று, “உங்களுக்குச் சமாதானம்” என்றார்.
तैस्से दिहैड़ी ज़ै हफतेरी पेइली दिहाड़ी थी ड्लोझ़रे मौके सारे चेले एक्की ठैरी थिये, ते यहूदी लोकां केरे प्रधानां केरे डरे सेइं दार बन्द केरतां बिश्शोरे थिये, तैखन यीशु अव ते मझ़ाटे खड़ो भोइतां ज़ोने लगो, “तुसन शान्ति मैलती राए।”
20 அவர் இதைச் சொன்னபின்பு, தமது கைகளையும் விலாவையும் அவர்களுக்குக் காண்பித்தார். சீடர்கள் கர்த்தரைக் கண்டபோது பெருமகிழ்ச்சி அடைந்தார்கள்.
एन ज़ोइतां तैनी अपने हथ ते अपनि देल्लोड़ी तैन हिराई, चेले तैस हेरतां खुशी भोए।
21 மீண்டும் இயேசு அவர்களிடம், “உங்களுக்கு சமாதானம் உண்டாயிருக்கட்டும்! பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார்.
यीशुए फिरी ज़ोवं, “तुसन शान्ति मैलती राए, ज़ेन्च़रे बाजी अवं भेज़ोरोईं, तेन्च़रे अवं भी तुसन भी इस दुनियाई मां भेज़ताईं।”
22 இதைச் சொல்லி, இயேசு அவர்கள்மேல் ஊதி, “பரிசுத்த ஆவியானவரை பெற்றுக்கொள்ளுங்கள்.
एन ज़ोइतां तैनी तैन जो फुक दित्ती ते ज़ोवं, “पवित्र आत्मा नेथ।
23 நீங்கள் யாருடைய பாவங்களையாவது மன்னித்தால், அவை மன்னிக்கப்படும்; நீங்கள் அவர்களுக்கு மன்னிக்காவிட்டால், அவை மன்னிக்கப்பட மாட்டாது” என்றார்.
ज़ैन केरे पाप तुस माफ़ केरेले त तैन केरे पाप माफ़ भोले, ज़ैन केरे तुस रखेले तैना राले।”
24 இயேசு அங்கே வந்தபோது, பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான திதிமு என்றழைக்கப்பட்ட தோமா சீடர்களுடன் இருக்கவில்லை.
पन बादे मां 12 चेलन मरां अक मैन्हु मतलब थोमा ज़ैस दिदुमुस ज़ोतन, ज़ैखन यीशु अव त तै तैन साथी न थियो।
25 எனவே மற்றச் சீடர்கள் அவனிடம், “நாங்கள் கர்த்தரைக் கண்டோம்!” என்றார்கள். ஆனால், தோமா அவர்களிடம், “அவருடைய கைகளில் ஆணிகள் அடிக்கப்பட்டக் காயத்தை நான் கண்டு, எனது விரலை ஆணி பாய்ந்த காயத்திலும், அவருடைய விலாவிலும் வைத்து பார்த்தாலொழிய நான் அதை விசுவாசிக்கமாட்டேன்” என்றான்.
ज़ैखन होरि चेले तैस सेइं ज़ोवं, “कि असेईं प्रभु लाव,” तैखन तैनेईं ज़ोवं, “ज़ां तगर अवं तैसेरे हथ्थन मां कीलां करां गत्तन मां एंगलोई न छ़ेड्डी, तांतगर विश्वास न केरि।”
26 இது நடந்து எட்டு நாட்களுக்குப்பின் இயேசுவின் சீடர்கள் அந்த வீட்டில் மீண்டும் கூடியிருந்தார்கள். தோமாவும் அவர்களுடனே இருந்தான். கதவுகள் பூட்டப்பட்டிருந்த போதுங்கூட, இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்குச் சமாதானம் உண்டாகட்டும்” என்றார்.
अठ दिहैड़ना बाद यीशुएरे चेले एक्की बार फिरी तैस्से ठैरी बिश्शोरे थिये, ते थोमा भी तैड़ी थियो ते दार भी बंद थियूं, ते यीशु एइतां तैन मझ़ाटे खड़ो भोव, ते तैन जो ज़ोने लगो, “तुसन शान्ति मैल्ले।”
27 பின்பு அவர் தோமாவிடம், “இங்கே உனது விரலைப் போட்டு எனது கைகளைப் பார். உனது கையை நீட்டி என் விலாவைத் தொட்டுப்பார். அவிசுவாசியாயிராமல், விசுவாசியாயிரு” என்றார்.
फिरी तैनी थोमा जो ज़ोवं, “अपनि अंग्लोई आन ते मेरो हथ हेर ते अपने हथ्थे सेइं मेरी दल्लोड़ी हेर, शक न केर बल्के मीं पुड़ विश्वास केर।”
28 அப்பொழுது தோமா, “என் ஆண்டவரே, என் இறைவனே!” என்றான்.
थोमा तैस जो ज़ोवं, “हे मेरे प्रभु हे मेरे परमेशर!”
29 அதற்கு இயேசு அவனிடம், “நீ என்னைக் கண்டதினால் விசுவாசிக்கிறாய்; என்னைக் காணாதிருந்தும் விசுவாசிக்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்” என்றார்.
यीशुए तैस जो ज़ोवं, “तीं लेइतां तीं मीं पुड़ विश्वास कियो, धन तैना ज़ैना बगैर लाहने मीं पुड़ विश्वास केरन।”
30 இயேசு தமது சீடருக்கு முன்பாகப் பல அடையாளங்களைச் செய்தார். அவை இந்தப் புத்தகத்தில் எழுதப்படவில்லை.
यीशुए अपने चेलां केरे सामने होरे भी बड़े चमत्कार कियोरे थिये, ज़ैना इस किताबी मां नईं लिखोरे।
31 ஆனால் இயேசுவே கிறிஸ்து என்றும், இறைவனின் மகன் என்றும் நீங்கள் விசுவாசிக்கும்படியும், விசுவாசிப்பதால் அவருடைய பெயரில் நீங்கள் வாழ்வைப் பெறும்படியும் இவை எழுதப்பட்டிருக்கின்றன.
पन ज़ैना लिखोरन, एल्हेरेलेइ लिखोरेन, कि तुस विश्वास केरथ, कि यीशु परमेशरेरू मट्ठू, मसीहे आए, ते विश्वास केरतां तैसेरे नंव्वे सेइं हमेशारी ज़िन्दगी हासिल केरथ।

< யோவான் 20 >