< யோவான் 19 >

1 பின்பு பிலாத்து இயேசுவைக் கொண்டுபோய் சவுக்கால் அடிக்கக் கட்டளையிட்டான்.
ထိုအခါ ပိလတ် မင်းသည် ယေရှု ကိုယူ ၍ ရိုက် ပြီးမှ၊
2 படைவீரர்கள் முட்களினால் ஒரு கிரீடத்தை செய்து, அதை அவர் தலையில் வைத்தார்கள். அவர்கள் அவருக்கு ஒரு கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்தி,
စစ်သူရဲ တို့သည် ဆူးပင် နှင့် ရက် သော ဦးရစ် ကိုခေါင်း တော်၌တင် ၍၊ နီမောင်း သောဝတ်လုံ နှင့် ခြုံ စေ ပြီးလျှင် ၊
3 “யூதரின் அரசனே வாழ்க!” என்று சொல்லி அவருடைய முகத்தில் அறைந்தார்கள்.
ယုဒ ရှင်ဘုရင် ၊ ကိုယ်တော်သည် မင်္ဂလာ ရှိစေသတည်းဟုဆို ၍ ရိုက်ပုတ် ကြ၏။
4 மீண்டும் ஒருமுறை பிலாத்து வெளியே வந்து யூதரிடம், “பாருங்கள், அவனுக்கு விரோதமாகக் குற்றம் சாட்டுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நீங்கள் அறியும்படி, நான் அவனை வெளியே உங்களிடம் கொண்டுவருகிறேன்” என்றான்.
ပိလတ် မင်းကလည်း ၊ ဤသူ ၌ အဘယ် အပြစ် ကိုမျှ ငါမတွေ့ ကြောင်း ကို သင်တို့သိ စေခြင်းငှာ ၊ သူ့ ကို သင် တို့ရှိရာသို့ ငါထုတ်ပြ သည်ဟုဆို ၏။
5 இயேசு முட்களால் செய்யப்பட்ட கிரீடத்தைத் தரித்துக்கொண்டும், கருஞ்சிவப்புநிற மேலுடையை உடுத்திக்கொண்டும் வெளியே வந்தபோது, பிலாத்து அவர்களிடம், “இதோ அந்த மனிதன்!” என்றான்.
ထိုအခါ ယေရှု သည် ဆူး ပင်ဦးရစ် နှင့် နီမောင်း သောဝတ်လုံ တို့ကိုဝတ် လျက် အပြင် သို့ထွက်ကြွ တော်မူ၏။ ပိလတ်မင်းကလည်း သူ့ ကိုကြည့် ကြလော့ဟုဆို ၏။
6 தலைமை ஆசாரியர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் அவரைக் கண்டபோது, “சிலுவையில் அறையும்! சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். அப்பொழுது பிலாத்து அவர்களிடம், “இவனை நீங்களே கொண்டுபோய் சிலுவையில் அறையுங்கள். ஆனால் நானோ இவனுக்கெதிராய் குற்றம் சாட்டுவதற்கான ஆதாரம் ஒன்றையும் காணவில்லை” என்றான்.
ယဇ်ပုရောဟိတ် အကြီးတို့နှင့် လုလင် များတို့က၊ ထိုသူကိုလက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားပါ၊ ရိုက် ထားပါ ဟု ဟစ်ကြော် ကြ၏။ ပိလတ် မင်းကလည်း၊ သင် တို့သည် သူ့ ကိုယူ ၍ လက်ဝါးကပ်တိုင် မှာရိုက်ထားကြ။ ငါ သည် သူ ၌ အပြစ် ကို မ တွေ့ ဟုဆို လျှင်၊
7 அதற்கு யூதத்தலைவர்கள், “எங்களுக்கு ஒரு சட்டம் இருக்கிறது. அதன்படி இவன் சாகவேண்டும். ஏனெனில் இவன் தன்னை இறைவனின் மகன் என்று சொல்கிறான்” என்றார்கள்.
ယုဒ လူတို့က၊ ဤသူသည်ဘုရားသခင် ၏သား တော်ဖြစ်ယောင်ဆောင်သောကြောင့် အကျွန်ုပ် တို့၌ ရှိ သောဓမ္မသတ် အတိုင်း သေ ထိုက် ပါသည်ဟုလျှောက် ကြ၏။
8 பிலாத்து இதைக் கேட்டபோது, இன்னும் அதிகமாக பயந்தான்.
ထို စကား ကိုကြား လျှင် ပိလတ် မင်းသည်သာ၍ ကြောက် သဖြင့် ၊ အိမ်တော်ဦး ထဲသို့ ဝင် ပြန် ၍ ၊
9 அவன் மீண்டும் அரண்மனைக்குள் போய் இயேசுவிடம், “நீ எங்கிருந்து வந்தவன்?” என்று கேட்டான். ஆனால் இயேசுவோ பதில் ஏதும் சொல்லவில்லை.
ယေရှု အား၊ သင် သည် အဘယ် ကဖြစ် သနည်းဟုမေး လျှင်၊ တစ်ခွန်းကိုမျှပြန် တော်မ မူ၊
10 அதற்கு பிலாத்து, “நீ என்னுடன் பேசமறுக்கிறாயோ? உன்னை விடுவிக்கவும், உன்னைச் சிலுவையில் அறையவும் எனக்கு அதிகாரம் உண்டு என்று நீ அறியாதிருக்கிறாயோ?” என்றான்.
၁၀ပိလတ် မင်းကလည်း၊ ငါ နှင့်စကား မ ပြောသလော။ ငါ သည် သင့် ကိုလက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားပိုင် သည်ကို၎င်း ၊ လွှတ် ပိုင်သည်ကို၎င်း၊ သင်မ သိ လောဟုဆို သော်၊
11 அதற்கு இயேசு, “பரத்திலிருந்து உமக்குக் கொடுக்கப்பட்டாலொழிய, என்மேல் உமக்கு எந்த அதிகாரமும் இராது. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைத்தவனுக்கு அதிக பாவமுண்டு” என்றார்.
၁၁အထက် အရပ်မှအခွင့် ကို မ ရ လျှင် မင်းကြီး သည် ငါ့ ကို အဘယ်သို့မျှ မပြုပိုင်။ ထိုကြောင့် ငါ့ ကို မင်းကြီး လက်သို့ အပ်နှံ သောသူ သည်သာ၍ကြီး သောအပြစ် ရှိ သည် ဟု မိန့် တော်မူ ၏။
12 அப்பொழுதிலிருந்தே, பிலாத்து இயேசுவை விடுதலை செய்வதற்கு முயன்றான். ஆனால் யூதர்களோ, “நீர் இந்த மனிதனை விடுதலை செய்தால், நீர் ரோமப் பேரரசன் சீசருக்கு நண்பனல்ல. தன்னை ஒரு அரசன் என்று சொல்கிறவன், ரோமப் பேரரசனுக்கு எதிராய் எழும்புகிறான்” என்று சத்தமிட்டார்கள்.
၁၂ထိုအခါ မှစ၍ ပိလတ် မင်းသည် ကိုယ်တော် ကိုလွှတ် ခြင်းငှာရှာကြံ လေ၏။ ယုဒ လူတို့ကလည်း ၊ ထို သူကို လွှတ် လျှင် ကိုယ်တော်သည် ကဲသာ ဘုရင်၏အဆွေ မ ဟုတ် ပါ။ ရှင်ဘုရင် လုပ် သောသူ မည်သည်ကား ၊ ကဲသာ ဘုရင်၏ရန်သူ ဖြစ်ပါသည်ဟု လျှောက် ကြ၏။
13 பிலாத்து இதைக் கேட்டபோது, அவன் இயேசுவை வெளியே கொண்டுவந்து, தனது நீதிபதியின் இருக்கையில் உட்கார்ந்தான். அது கற்களால் செய்யப்பட்ட ஒரு தளமேடையில் இருந்தது. அந்த மேடை எபிரெய மொழியிலே கபத்தா என அழைக்கப்பட்டது.
၁၃ထို စကား ကိုကြား လျှင် ပိလတ် မင်းသည် ယေရှု ကိုပြင် သို့ထုတ် ပြီးမှ၊ ဟေဗြဲ စကားအားဖြင့်ဂဗ္ဗသ အမည်ရှိ၍ ကျောက် ခင်းဟုခေါ်ဝေါ်သောအရပ် ၌ တရားပလ္လင် ပေါ်မှာ ထိုင် လေ၏။
14 அன்று அது பஸ்கா என்ற பண்டிகை வாரத்தின் ஆயத்த நாளாயிருந்தது. நேரமோ பகல் பன்னிரண்டு மணியாயிருந்தது. பிலாத்து யூதர்களிடம், “இதோ உங்கள் அரசன்” என்றான்.
၁၄ထိုနေ့အချိန်ကား၊ ပသခါ အဘိတ်နေ့ တစ် ချက်တီးအချိန် လောက် ရှိ ၏။ ပိလတ်မင်းကလည်းသင် တို့၏ ရှင်ဘုရင် ကို ကြည့် ကြလော့ဟု ယုဒ လူတို့အား ပြောဆို လျှင် ၊
15 ஆனால் அவர்களோ, “இவனை அகற்றும்! இவனை அகற்றும்! இவனைச் சிலுவையில் அறையும்!” என்று சத்தமிட்டார்கள். “உங்கள் அரசனை நான் சிலுவையில் அறைய வேண்டுமென்றா சொல்கிறீர்கள்?” என்று பிலாத்து கேட்டான். அதற்கு தலைமை ஆசாரியர்கள், “ரோமப் பேரரசன் சீசரைத் தவிர வேறு அரசன் எங்களுக்கு இல்லை” என்றார்கள்.
၁၅ထို သူ ကိုထုတ် ပါ။ ထုတ် ပါ။ လက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားပါဟု လူအများဟစ်ကြော် ကြ၏။ ပိလတ် မင်းကလည်း၊ သင် တို့၏ရှင်ဘုရင် ကို လက်ဝါးကပ်တိုင် မှာရိုက်ထားရမည်လောဟု မေး ပြန်လျှင်၊ ယဇ်ပုရောဟိတ် အကြီးတို့က၊ အကျွန်ုပ်တို့၌ ကဲသာ ဘုရင်မှတစ်ပါး အဘယ် ရှင်ဘုရင် မျှမရှိ ဟု ပြန်ပြော ကြ၏။
16 கடைசியாக, பிலாத்து இயேசுவை சிலுவையில் அறையும்படி அவர்களிடம் ஒப்படைத்தான். எனவே படைவீரர்கள் இயேசுவைத் தம் பொறுப்பில் ஏற்றுக்கொண்டார்கள்.
၁၆ထိုအခါ ပိလတ်မင်းသည် ယေရှု ကိုလက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားစေခြင်းငှာ ထိုသူ တို့လက်သို့ အပ် သဖြင့်၊ သူတို့သည် ကိုယ်တော် ကိုယူ၍ထုတ်သွား ကြ၏။
17 இயேசு தம்முடைய சிலுவையைத் தாமே சுமந்துகொண்டு, மண்டையோடு என்ற இடத்திற்குச் சென்றார். அந்த இடம் எபிரெய மொழியில், கொல்கொதா என அழைக்கப்பட்டது.
၁၇ကိုယ်တော်သည် မိမိ လက်ဝါးကပ်တိုင် ကိုထမ်း လျှက် ဦးခေါင်းခွံ အရပ်ဟူ၍တွင် သောအရပ် သို့ ထွက် တော်မူ၏။ ထို အရပ် ကား၊ ဟေဗြဲ စကားအားဖြင့်ဂေါလဂေါသ အမည် ရှိ၏။
18 அங்கே அவர்கள் இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். அவருடனேகூட வேறு இருவரை, அவருடைய இரு பக்கங்களிலும் அறைந்தார்கள். இயேசுவோ அவர்களுக்கு நடுவில் அறையப்பட்டார்.
၁၈ထိုအရပ် ၌ ကိုယ်တော် ကို အခြား သောသူနှစ် ယောက်နှင့်တကွ လက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားကြ၏။ ထိုသူနှစ်ယောက်အလယ် မှာ ယေရှု သည် နေရာကျသတည်း။
19 பிலாத்து ஒரு அறிவிப்புப் பலகையைச் செய்து, அதைச் சிலுவையில் மாட்டினான். அதிலே, இப்படி எழுதப்பட்டிருந்தது: நாசரேத்தைச் சேர்ந்த இயேசு, யூதரின் அரசன்.
၁၉ပိလတ် မင်းသည်လည်း ကမ္ဗည်း လိပ်စာကိုရေး ၍ လက်ဝါးကပ်တိုင် တော်၌ တပ် လေ၏။ လိပ်စာချက်ဟူမူကား၊ ယုဒ ရှင်ဘုရင် ၊ နာဇရက် မြို့သားယေရှု ဟု ရေး ထားသတည်း။
20 யூதரில் அநேகர் இந்த அறிவிப்பை வாசித்தார்கள். ஏனெனில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடம் நகரத்திற்கு அருகே இருந்தது. அந்த அறிவிப்பு எபிரெய, லத்தீன், கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருந்தது.
၂၀ယေရှု ကိုလက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားသောအရပ် သည် မြို့ နှင့်နီး သည်ဖြစ်၍ ၊ ထိုလိပ်စာကို ဟေဗြဲ ဘာသာ၊ ဟေလသ ဘာသာ၊ ရောမ ဘာသာအားဖြင့်ရေး ထားသောကြောင့် ယုဒ လူများ တို့သည် ဖတ် ကြ၏။
21 யூதரின் தலைமை ஆசாரியர்கள் பிலாத்துவிடம் போய், “யூதரின் அரசன் என்று எழுதவேண்டாம். இவன் தன்னை யூதரின் அரசன் என்று சொல்லிக்கொண்டான் என்று எழுதும்” என்றார்கள்.
၂၁ထိုကြောင့် ယုဒ ယဇ်ပုရောဟိတ် အကြီးတို့သည် ပိလတ် မင်းထံသို့ဝင်၍၊ ယုဒ ရှင်ဘုရင် ဟု မ ရေး ပါနှင့်။ ငါသည်ယုဒ ရှင်ဘုရင် ဖြစ် သည်ဟု သူ ဆို ကြောင်း ကို ရေးတော်မူပါဟုလျှောက် ကြလျှင်၊
22 அதற்கு பிலாத்து, “நான் எழுதியது எழுதியதே” என்றான்.
၂၂ပိလတ် မင်းက၊ ငါရေး ပြီးသောအရာ ကို ငါရေး ပြီဟုပြန်ဆို ၏။
23 படைவீரர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்த பின்பு, அவர்கள் அவருடைய உடைகளை எடுத்து, ஒவ்வொரு வீரனுக்கும் ஒவ்வொரு பங்காக, அதை நான்காகத் தங்களுக்குள்ளே பிரித்தெடுத்தார்கள். ஆனால் அவருடைய உள் உடை தைக்கப்படாமல் மேலிருந்து கீழ்வரை நெய்யப்பட்டதாயிருந்தது.
၂၃စစ်သူရဲ တို့သည် ယေရှု ကိုလက်ဝါးကပ်တိုင် ၌ ရိုက်ထားပြီးမှ၊ အဝတ် တော်တို့ကို လေး ပိုင်း ပိုင်း၍ တစ်ယောက်တစ်ပိုင်း စီ ယူကြလေ၏။ အတွင်းအင်္ကျီ တော်ကား၊ မ ချုပ်ဘဲလျက် အထက် စွန်းမှသည်အောက်စွန်းတိုင်အောင် ရက် သောအင်္ကျီ ဖြစ်သောကြောင့် ၊
24 எனவே அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “நாம் இதைக் கிழிக்கக் கூடாது. இது யாருக்குக் கிடைக்கும் என்று பார்ப்பதற்குச் சீட்டுப் போடுவோம்” என்றார்கள். “அவர்கள் என் உடைகளைத் தங்களுக்குள் பிரித்தெடுத்துக் கொண்டார்கள், எனது உடைக்காக சீட்டுப்போட்டார்கள்.” என்ற வேதவசனம் நிறைவேறும்படி இது நடந்தது. இதையே அந்த படைவீரர்கள் செய்தார்கள்.
၂၄ထိုသူတို့က၊ အင်္ကျီ ကိုမ ဆုတ် ကြနှင့်။ အဘယ်သူ ယူ ရမည်ကို စာရေးတံ ချကြကုန်အံ့ဟု အချင်းချင်း ဆို ကြ၏။ ကျမ်းစာ လာသည်ကား ၊ သူတို့သည် အကျွန်ုပ် အဝတ် ကို အချင်းချင်း ဝေဖန် ၍ အကျွန်ုပ် အင်္ကျီ ကိုစာရေးတံ ချကြပါ၏ဟူသော အချက်စကား ကိုပြည့်စုံ စေ၍၊ စစ်သူရဲ တို့သည် ထိုသို့ ပြု ကြ၏။
25 இயேசுவின் சிலுவை அருகே அவருடைய தாயும், தாயின் சகோதரியும், கிலேயோப்பாவின் மனைவி மரியாளும், மகதலேனா மரியாளும் நின்றார்கள்.
၂၅ယေရှု ၏ လက်ဝါးကပ်တိုင် တော်နား မှာ မယ်တော် နှင့် မယ်တော် ၏ညီမ ဖြစ်သော ကလောဖ ၏မယား မာရိ နှင့် မာဂဒလ မာရိ တို့သည် ရပ် နေကြ၏။
26 தமது தாயும், தான் நேசித்த சீடனும் அருகே நிற்பதை இயேசு கண்டபோது, அங்கே அவர் தமது தாயிடம், “அம்மா, இதோ, உன் மகன்” என்றார்.
၂၆ထိုအခါမယ်တော် နှင့် ချစ် တော်မူသောတပည့် တော်သည် အနားမှာရပ် နေသည်ကို ယေရှု သည် မြင် တော်မူလျှင်၊ မယ်တော် အား၊ အချင်းမိန်းမ ၊ သင် ၏သား ကို ကြည့် ပါ ဟူ၍၎င်း ၊
27 அந்தச் சீடனிடம், “இதோ உன் தாய்” என்றார். அந்த நேரத்திலிருந்து இந்தச் சீடன் மரியாளைத் தன் வீட்டிலே ஏற்றுக்கொண்டான்.
၂၇တပည့် တော်အားလည်း၊ သင် ၏အမိ ကိုကြည့် ပါ ဟူ၍၎င်း မိန့် တော်မူ၏။ ထို အခါ မှစ၍ ထိုတပည့် တော်သည် မယ်တော် ကိုမိမိ အိမ်၌ သိမ်းထား ၏။
28 பின்பு, எல்லாம் முழுமையாக முடிந்துவிட்டதென்று இயேசு அறிந்து, வேதவசனம் நிறைவேறும்படி அவர், “நான் தாகமாய் இருக்கிறேன்” என்றார்.
၂၈ထိုနောက်မှ ကျမ်းစာ ပြည့်စုံ စေခြင်းငှာ အမှုရှိသမျှ ကုန်စင် ပြီး သည်ကို သိ တော်မူလျှင်၊ ရေငတ် သည်ဟု မိန့် တော်မူ၏။
29 அங்கே ஒரு சாடியில் புளித்த திராட்சை இரசம் இருந்தது. எனவே அவர்கள் ஒரு கடற்காளானை அதிலே தோய்த்து, ஒரு ஈசோப்புச் செடியின் தண்டிலே வைத்துக் கட்டி, இயேசுவின் உதடுகளில் படும்படி அதை உயர்த்தினார்கள்.
၂၉ထိုအရပ်၌ပုံးရည် နှင့်ပြည့် သော အိုး တစ်လုံးရှိ သည်ဖြစ်၍၊ ထိုသူတို့သည် ရေမှို တထွေးကိုပုံးရည် နှင့် ပြည့် စေပြီးလျှင်၊ ဟုဿုပ် ပင် အကိုင်းဖျား၌တပ် ၍ ခံတွင်း တော်သို့ကပ် ထားကြ၏။
30 இயேசு அந்த பானத்தை ஏற்றுக்கொண்ட பின்பு, “முடிந்தது” என்று சொன்னார். இதைச் சொன்னதும் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
၃၀ယေရှု သည် ပုံးရည် ကိုခံ ပြီးမှ၊ အမှုပြီး ပြီဟုမိန့် တော်မူလျက်၊ ခေါင်း တော်ကို ငိုက် ဆိုက်ညွှတ်၍ အသက် တော်ကို စွန့် တော်မူ၏။
31 அது பஸ்கா என்ற பண்டிகைக்கான ஆயத்த நாளாயிருந்தது. அதற்கு மறுநாள் ஒரு பெரிய ஓய்வுநாள். அந்த நாளிலே உடல்கள் சிலுவையில் இருப்பதை யூதர்கள் விரும்பாததனால், சிலுவையில் தொங்கியவர்களின் கால்களை முறித்து அவர்களைக் கீழே இறக்கும்படி அவர்கள் பிலாத்துவிடம் கேட்டார்கள்.
၃၁ထို နေ့သည် အဘိတ်နေ့ ဖြစ် ၍၊ နက်ဖြန်နေ့လည်း ကြီးမြတ် သောဥပုသ်နေ့ ဖြစ် သည်ကို ယုဒ လူတို့သည် ထောက်၍၊ အလောင်း ကောင်တို့ကို ဥပုသ်နေ့ ၌ လက်ဝါးကပ်တိုင် ပေါ်မှာ မ ရှိစေခြင်းငှာ ပိလတ် မင်းထံသို့ဝင် ပြီးလျှင်၊ ခြေ ကိုချိုး ၍ ထိုအလောင်းကောင်တို့ကို ယူသွား ရမည်အကြောင်း အခွင့်တောင်း ကြ၏။
32 எனவே படைவீரர் வந்து, இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட முதலாவது மனிதனின் கால்களை முறித்தார்கள். பின்பு மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள்.
၃၂ထိုအခါ စစ်သူရဲ တို့သည် သွား ၍ကိုယ်တော် နှင့်အတူလက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားသောသူနှစ် ယောက်တို့၏ ခြေ ကိုချိုး လေ၏။
33 ஆனால் அவர்கள் இயேசுவிடம் வந்தபோது, அவர் ஏற்கெனவே மரித்திருப்பதைக் கண்டார்கள். அதனால் அவர்கள் அவருடைய கால்களை முறிக்கவில்லை.
၃၃ယေရှု ထံသို့ ရောက် ၍ အသက် မရှိကြောင်းကို မြင် လျှင်ခြေ ကို မ ချိုး ဘဲ၊
34 ஆனால் அந்த படைவீரரில் ஒருவன் இயேசுவின் விலாவை ஈட்டியினால் குத்தினான். அப்பொழுது இரத்தமும் தண்ணீரும் பீறிட்டுப் பாய்ந்தது.
၃၄စစ်သူရဲ တစ် ယောက်သည် နံဖေး တော်ကို လှံ နှင့်ထိုးဖောက် ၍ သွေး နှင့် ရေ သည်ချက်ခြင်း ထွက်လာ ၏။
35 அதைக்கண்ட மனிதன் சாட்சி கொடுத்தான். அவனுடைய சாட்சி உண்மையாயிருக்கிறது. தான் சொல்வது உண்மை என்று அவன் அறிவான். நீங்களும்கூட விசுவாசிக்கும்படியாகவே அவன் இதைச் சாட்சியாய்ச் சொல்கிறான்.
၃၅ထိုအကြောင်းအရာကိုမြင် သောသူ သည် သက်သေခံ ၏။ သူ ၏သက်သေခံ ချက်သည်လည်း မှန် ပေ၏။ သင် တို့သည်ယုံကြည် မည်အကြောင်း ၊ သူပြော သောစကားမှန် သည် ကို သူ သိ ၏။
36 “அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிற வேதவசனம் நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தன.
၃၆ထို အကြောင်းအရာကား၊ သူ ၏အရိုး ကို မ ချိုး ရဟု ကျမ်းစာ လာချက်ပြည့်စုံ မည်အကြောင်း တည်း။
37 “தாங்கள் ஈட்டியினால் குத்தியவரை அவர்கள் நோக்கிப் பார்ப்பார்கள்” என்று இன்னொரு வேதவசனமும் சொல்லுகிறது.
၃၇တစ်ဖန် ကျမ်းစာ လာသည်ကား၊ ထိုသူတို့သည် မိမိတို့ ထိုးဖောက် သောသူ ကို ရှုမြင် ရကြလိမ့်မည်ဟု လာ၏။
38 பின்பு அரிமத்தியா பட்டணத்தைச் சேர்ந்த யோசேப்பு, இயேசுவின் உடலைத் தரும்படி பிலாத்துவிடம் கேட்டான். இந்த யோசேப்பு இயேசுவின் சீடனாயிருந்தான். ஆனால் அவன் யூதருக்குப் பயந்ததினால் இரகசியமாகவே அவருக்கு சீடனாயிருந்தான். அவன் பிலாத்துவின் அனுமதியுடன் வந்து இயேசுவின் உடலை எடுத்துச் சென்றான்.
၃၈ထိုနောက်မှ အရိမသဲ မြို့သားယောသပ် သည် ယုဒ လူတို့ကိုကြောက် ၍ မထင်မရှား တပည့် တော်ဖြစ် သည်နှင့်၊ ပိလတ် မင်းထံသို့ဝင်၍ ယေရှု ၏အလောင်း တော်ကို ယူသွား မည်အကြောင်း အခွင့်တောင်း ၏။ ပိလတ် မင်းအခွင့် ပေးလျှင်၊ ထိုသူသည်သွား ၍ ယေရှု ၏အလောင်း တော်ကို ယူ လေ၏။
39 அவனுடன் நிக்கொதேமுவும் கூடப்போனான். இவனே முன்னொரு முறை இரவிலே இயேசுவைச் சந்திக்க வந்தவன். நிக்கொதேமு வரும்போது வெள்ளைப்போளமும், சந்தனமும் கலந்த ஒரு கலவையைக் கொண்டுவந்தான். அது கிட்டத்தட்ட முப்பது கிலோ எடை இருந்தது.
၃၉အထက် ကညဉ့် အခါယေရှု ထံသို့ လာ သော နိကောဒင် သည်လည်း ၊ အခွက်သုံးဆယ်မျှလောက် အချိန် ရှိသောမုရန် နှင့် အကျော် ကို ရောနှော သော နံ့သာပျောင်းကို ဆောင် လျက်လာ ၏။
40 அவர்கள் இருவரும் இயேசுவின் உடலை இறக்கி, அந்த நறுமணப் பொருளை மென்பட்டுத் துணிகளில் வைத்து உடலைச் சுற்றிக் கட்டினார்கள். இது யூதரின் அடக்க முறைப்படி செய்யப்பட்டது.
၄၀ထိုသူတို့သည် ယေရှု ၏အလောင်း တော်ကိုယူ ၍ ၊ ယုဒ လူတို့၏ သင်္ဂြိုဟ် ခြင်းနှင့်ဆိုင်သောပြင်ဆင်ခြင်း ထုံးစံ ရှိ သည်အတိုင်း နံ့သာမျိုး နှင့်တကွ ပိတ် ပုဆိုးဖြင့် အလောင်း တော်ကို ပတ်ရစ် ကြ၏။
41 இயேசு சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் அதுவரை யாரும் அடக்கம் செய்யப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.
၄၁လက်ဝါးကပ်တိုင် မှာ ရိုက်ထားသောအရပ် တွင်ဥယျာဉ် ရှိ ၏။ ထိုဥယျာဉ် တွင် တစ်ယောက် ကိုမျှမ သင်္ဂြိုဟ်ဘူးသော သင်္ချိုင်း တွင်းသစ် ရှိ၏။
42 அது யூதருடைய பண்டிகைக்குரிய ஆயத்த நாளாய் இருந்ததாலும், அக்கல்லறை அருகே இருந்ததாலும் அவர்கள் இயேசுவின் உடலை அந்தக் கல்லறையில் வைத்தார்கள்.
၄၂ယုဒ လူတို့၏ အဘိတ်နေ့ ဖြစ်သောကြောင့် ၊ အနီးအပါး တွင်ရှိ သော ထိုသင်္ချိုင်း အတွင်း၌ အလောင်း တော်ကိုထား ကြ၏။

< யோவான் 19 >