< யோவான் 18 >

1 இயேசு மன்றாடி முடித்தபின்பு, அவர் அங்கிருந்து தமது சீடர்களுடன் கெதரோன் பள்ளத்தாக்கைக் கடந்து சென்றார். அதன் மறுபக்கத்தில் ஒரு தோட்டம் இருந்தது. இயேசுவும், அவருடைய சீடர்களும் அங்கே சென்றார்கள்.
जिब यीशु नै प्रार्थना खतम कर ली, तो वो अपणे चेल्यां कै गेल्या किद्रोन नाळे कि परली ओड़ गया। उड़ै एक फूल्लां का बाग था, जिस म्ह वो अर उसके चेल्लें गए।
2 அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ் அந்த இடத்தை அறிந்திருந்தான். ஏனெனில் இயேசுவும் அவருடைய சீடர்களும் அடிக்கடி அங்கே கூடிவருவார்கள்.
यीशु का पकड़ाण आळा यहूदा भी उस जगहां नै जाणै था, क्यूँके यीशु अपणे चेल्यां कै गैल उड़ै जाया करै था।
3 எனவே யூதாஸ் படைவீரரில் ஒரு பிரிவினரையும், தலைமை ஆசாரியர்கள் மற்றும் பரிசேயர் ஆகியோருடைய சேவகர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு அந்த தோட்டத்திற்கு வந்தான். அவர்கள் தீப்பந்தங்களையும், விளக்குகளையும், ஆயுதங்களையும் கொண்டுவந்தார்கள்.
फेर यहूदा, सिपाहियाँ कै एक टोळ नै अर प्रधान याजकां अर फरीसियाँ की ओड़ तै मन्दर के पैहरेदारां नै लेकै, दीवे अर मशाल अर हथियारां नै लेकै उड़ै आया।
4 இயேசு தமக்கு நடக்கப்போவதையெல்லாம் அறிந்து, அவர்களுக்கு முன்பாக வந்து, “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார்.
फेर यीशु, उन सारी बात्तां नै जो उसपै बीत्तण आळी थी जाणकै, लिकड़कै उन ताहीं पूछा, “किसनै टोह्वो सो?”
5 அதற்கு அவர்கள், “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள். இயேசு அவர்களிடம், “நானே அவர்” என்றார். துரோகியான யூதாஸ் அவர்களுடன் நின்றுகொண்டிருந்தான்.
उननै उस ताहीं जवाब दिया, “यीशु नासरी नै।” यीशु नै उन ताहीं कह्या, “मैए सूं।” यीशु नै पकड़वाण आळा यहूदा भी उनकै गेल्या खड्या था।
6 “நானே அவர்” என்று இயேசு சொன்னபோது, அவர்கள் பின்னடைந்து தரையிலே விழுந்தார்கள்.
जिब यीशु नै उनतै कह्या, “मै सूं,” वे पाच्छै हटकै धरती पै पड़गे।
7 அவர் மறுபடியும் அவர்களிடம், “உங்களுக்கு யார் வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள் மறுபடியும்: “நாசரேத்தைச் சேர்ந்த இயேசு” என்றார்கள்.
फेर उसनै दुबारै उन ताहीं बुझ्झया, “थम किसनै टोह्वो सो?” वे बोल्ले, “यीशु नासरी नै।”
8 அதற்கு இயேசு, “நானே அவர் என்று உங்களுக்குச் சொன்னேனே. நீங்கள் என்னைத்தான் தேடுகிறீர்கள் என்றால், இவர்களைப் போகவிடுங்கள்” என்றார்.
यीशु नै जवाब दिया, “मन्नै तो थारे ताहीं कह दिया सै के वो मै सूं, जै थम मन्नै टोह्वो सो तो इन माणसां नै जाण दो।”
9 “நீர் எனக்குக் கொடுத்தவர்களில் நான் ஒருவரையும் இழந்துவிடவில்லை” என்று அவர் சொல்லியிருந்த வார்த்தைகள் நிறைவேறும்படி இது நடந்தது.
यो इस करकै के खुद उसके जरिये कह्या गया यो वचन पूरा हो, “मन्नै उन म्ह तै एक भी न्ही खोया, जिन ताहीं तन्नै मेरतै सौप्या था।”
10 அப்பொழுது வாள் வைத்துக்கொண்டிருந்த சீமோன் பேதுரு அதை உருவி எடுத்து, பிரதான ஆசாரியரின் வேலைக்காரனைத் தாக்கினான். அவனது வலது காது வெட்டுண்டது. அந்த வேலைக்காரனின் பெயர் மல்குஸ்.
फेर शमौन पतरस नै तलवार, जो उसकै धोरै थी, खींच्ची अर महायाजक के नौक्कर पै चलाकै उसका सोळा कान उड़ा दिया, उस नौक्कर का नाम मलखुस था।
11 அப்பொழுது இயேசு பேதுருவிடம், “உனது வாளை உறையிலே போடு!” என்று கட்டளையிட்டு, “பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்திலிந்து நான் குடியாதிருப்பேனோ” என்றார்.
फेर यीशु नै पतरस तै कह्या, “अपणी तलवार म्यान म्ह धर। जो दुख का कटोरा पिता नै मेरै ताहीं दिया सै, के मै उसनै न्ही पीऊँ?”
12 அப்பொழுது படைவீரரும், அவர்களுடைய படைத்தளபதியும், யூத அதிகாரிகளும் இயேசுவைக் கைது செய்தார்கள். அவர்கள் அவரைக் கட்டி,
फेर रोमी सिपाहियाँ अर उनकै सूबेदार अर यहूदिया परदेस के मन्दर के पैहरेदारां नै यीशु ताहीं पकड़कै बाँध लिया,
13 முதலில் அவரை அன்னாவினிடம் கொண்டுசென்றார்கள். இந்த அன்னா அந்த வருடத்துக்குரிய பிரதான ஆசாரியன் காய்பாவின் மாமன்.
अर पैहल्या उस ताहीं हन्ना कै धोरै ले गए, क्यूँके वो उस साल के महायाजक काइफा का सुसरा था।
14 ஒரு மனிதன் எல்லா மக்களுக்காவும் மரிப்பது நல்லது என்று யூதருக்கு ஆலோசனை சொன்னவன் இந்தக் காய்பாவே.
यो वोए काइफा था, जिसनै यहूदियाँ ताहीं सलाह दी थी के म्हारे माणसां खात्तर एक आदमी का मरणा ठीक सै।
15 சீமோன் பேதுருவும் இன்னொரு சீடனும் இயேசுவுக்குப் பின்னால் போய்க்கொண்டிருந்தார்கள். அந்தச் சீடன் பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமானபடியால், அவன் இயேசுவுடனே பிரதான ஆசாரியரின் மாளிகை முற்றத்திற்குள் போனான்.
शमौन पतरस अर एक और दुसरा चेल्ला भी यीशु कै पाच्छै हो लिए। यो चेल्ला महायाजक का जाण-पिच्छाण का था, ज्यांतै वो यीशु कै गेल्या महायाजक कै आँगण म्ह गया,
16 ஆனால் பேதுருவோ வெளியே வாசல் அருகே நிற்க வேண்டியதாயிருந்தது. பிரதான ஆசாரியனுக்கு அறிமுகமான அந்த இன்னொரு சீடன் திரும்பிவந்து, வாசல் காக்கும் பெண்ணுடனே பேசி, பேதுருவை உள்ளே கூட்டிக்கொண்டு போனான்.
पर पतरस बाहरणै दरबाजे पै खड्या रह्या। फेर दुसरा चेल्ला जो महायाजक की जाण-पिच्छाण का था, वो बाहरणै लिकड़या अर पहरेदारणी तै कहकै पतरस ताहीं भीत्त्तर लियाया।
17 வாசலில் இருந்த அந்த பெண் பேதுருவிடம், “நீயும் அந்த மனிதனின் சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்றாள். அதற்கு அவன், “நான் அல்ல” என்றான்.
उस नौकराणी नै, जो पहरेदारणी भी थी, पतरस तै कह्या, “कदे तू भी इस माणस के चेल्यां म्ह तै तो न्ही सै?” उसनै कह्या, “मै कोनी।”
18 அங்கே மிகவும் குளிராய் இருந்தது. அங்கேயிருந்த வேலைக்காரரும் சேவகர்களும் குளிர்காயும்படி, நெருப்புமூட்டி அதைச் சுற்றி நின்றார்கள். பேதுருவும் அங்கே அவர்களுடன் நின்று குளிர்காய்ந்து கொண்டிருந்தான்.
नौक्कर अर मन्दर के पहरेदारां नै जाड्डे कै कारण आग जळा राक्खी थी, अर खड़े होकै सेक्कै थे, अर पतरस भी उनकै गेल्या खड्या आग सेक्कै था।
19 அவ்வேளையில் பிரதான ஆசாரியன், இயேசுவின் சீடரைக் குறித்தும், அவருடைய போதனையைக் குறித்தும் விசாரித்தான்.
फेर महायाजक नै यीशु तै उसकै चेल्यां कै बाबत अर उसकै उपदेशां कै बाबत जाँच-पड़ताळ करी।
20 இயேசு அவனுக்கு சொன்னதாவது: “நான் உலகத்துடன் பகிரங்கமாகப் பேசினேன். யூதரெல்லோரும் கூடிவருகின்ற ஜெப ஆலயங்களிலும், எருசலேம் ஆலயத்திலும் எப்பொழுதும் போதித்தேன். நான் இரகசியமாக எதுவுமே சொல்லவில்லை.
यीशु नै उस ताहीं जवाब दिया, “मन्नै हरेक माणस तै खुलकै बात करी, मन्नै सभायां अर आराधनालयाँ म्ह, जड़ै सारे यहूदी कठ्ठे होया करै सै, सारी हाण उपदेश दिया अर लुह्क कै कुछ कोनी कह्या।
21 நீங்கள் ஏன் என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள்? நான் சொன்னவற்றைக் கேட்டவர்களிடம் விசாரியுங்கள். நான் என்ன சொன்னேன் என்பது நிச்சயமாக அவர்களுக்குத் தெரியும்.”
तू क्यूँ मेरे तै सवाल बुझ्झै सै? सवाल उनतै कर जिननै मेरे वचन सुणे सै, वे जाणे सै, के मन्नै उन ताहीं के-के कह्या।”
22 இயேசு இப்படியாக சொன்னபோது, அருகே நின்ற காவலரில் ஒருவன் அவருடைய முகத்திலே அறைந்தான். அவன், “பிரதான ஆசாரியனுக்கு இவ்விதமாகவா பதில் சொல்வது?” என்றான்.
जिब उसनै न्यू कह्या, तो मन्दर के पैहरेदारां म्ह तै एक नै जो धोरै खड्या था, यीशु कै थप्पड़ मारकै कह्या, “के तन्नै महायाजक ताहीं इस तरियां जवाब देण की हिम्मत किसी करी?”
23 அதற்கு இயேசு, “நான் எதையாவது தவறாகச் சொல்லியிருந்தால், தவறு என்னவென்று சொல். நான் பேசியது உண்மையானால், நீ ஏன் என்னை அடித்தாய்?” என்றார்.
यीशु नै उसतै जवाब दिया, “जै मेरा कहणा गलत सै तो साबित करो पर मन्नै जो कह्या सै वो सही सै तो फेर थम मेरै क्यूँ मारण लागरे सों?”
24 அப்பொழுது அன்னா இயேசுவைக் கட்டப்பட்டவராகவே பிரதான ஆசாரியன் காய்பாவிடம் அனுப்பினான்.
इस खात्तर यीशु ताहीं जो इब भी बाँधे होए थे, हन्ना नै काइफा महायाजक कै धोरै भेज दिया।
25 சீமோன் பேதுரு குளிர்காய்ந்து கொண்டிருக்கையில், ஒருவன் அவனிடம், “நீ அவனுடைய சீடர்களில் ஒருவன் அல்லவா?” என்று கேட்டான். “நான் அவருடைய சீடன் அல்ல” என்று பேதுரு மறுதலித்தான்.
शमौन पतरस खड्या होया आग सेक्कै था, फेर उननै उसतै कह्या, “कदे तू भी उसकै चेल्यां म्ह तै तो न्ही सै?” उसनै नाट-कै कह्या, “मै कोनी।”
26 பேதுருவினால் காது வெட்டப்பட்டவனின் உறவினராகிய ஒருவன், பிரதான ஆசாரியனின் வேலைக்காரனாயிருந்தான். அவன் பேதுருவிடம், “நீ இயேசுவுடனே அந்த ஒலிவ தோட்டத்தில் இருந்ததை நான் கண்டேனே” என்றான்.
महायाजक के नौकरां म्ह तै एक, जो उसकै कुण्बे म्ह तै था, जिसका कान पतरस नै काट दिया था, बोल्या, “के मन्नै तेरे ताहीं यीशु कै गेल्या फूल्लां के बाग म्ह कोनी देख्या था?”
27 அப்பொழுது பேதுரு மீண்டும் மறுதலித்தான். உடனே சேவல் கூவிற்று.
पतरस फेर नाटग्या, अर जिब्बे मुर्गे नै बाँग देई।
28 பின்பு இயேசுவைக் காய்பாவிடம் இருந்து ரோம ஆளுநனரின் அரண்மனைக்குக் கொண்டுசென்றார்கள். இதற்குள்ளாகப் பொழுது விடிந்து விட்டது. பஸ்காவைச் சாப்பிடத்தக்க நிலையில் தங்களை வைத்துக்கொள்ள அவர்கள் விரும்பி, அசுத்தப்படாமல் காத்துக்கொள்ளும்படி யூதர்கள் அந்த அரண்மனைக்குள் போகவில்லை.
फेर वे यीशु ताहीं काइफा कै धोरै तै किले म्ह लेगे, अर तड़कैए का बखत था, पर वे खुद किले कै भीत्त्तर कोनी गए ताके वे फसह का भोज खाण तै पैहल्या अशुद्ध ना हों जावै।
29 எனவே பிலாத்து வெளியே யூதத்தலைவர்களிடம் வந்து, “இந்த மனிதனுக்கு விரோதமாய் என்ன குற்றச்சாட்டுகளைக் கொண்டுவந்திருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
फेर राज्यपाल पिलातुस उनकै धोरै बाहरणै लिकड़कै आया अर कह्या, “थम इस माणस पै किस बात का दोष लाओ सो?”
30 அதற்கு அவர்கள், “இவன் குற்றவாளியாய் இல்லாதிருந்தால், நாங்கள் இவனை உம்மிடம் ஒப்படைத்திருக்க மாட்டோம்” என்றார்கள்.
उननै उस ताहीं जवाब दिया, “जै वो बुरे काम करणीया न्ही होंदा तो हम इसनै तेरे धोरै कोनी ल्यान्दे।”
31 அப்பொழுது பிலாத்து, “நீங்களே இவனைக் கொண்டுபோய் உங்கள் மோசேயின் சட்டத்தின்படி இவனுக்கு நியாயத்தீர்ப்பு வழங்குங்கள்” என்றான். அதற்கு அவர்கள், “யாருக்கும் மரண தண்டனை வழங்க எங்களுக்கு அதிகாரம் இல்லை” என்றார்கள்.
पिलातुस नै उनतै कह्या, “थमे इसनै ले जाकै अपणे नियम-कायदा कै मुताबिक इसका न्याय करो।” यहूदी अगुवां नै उसतै कह्या, “हमनै हक कोनी के किसे की जानलेवां।”
32 தமக்கு எவ்விதமான மரணம் ஏற்படப்போகிறது என்று இயேசு ஏற்கெனவே சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறும்படியே இவையெல்லாம் நடந்தது.
“यो इस करकै होया, ताके यीशु की वा बात पूरी हो जो उसनै यो इशारा देंदे होड़ कही थी के उसकी मौत किस ढाळ होगी।”
33 பின்பு பிலாத்து அரண்மனைக்குள்ளே போய், இயேசுவைத் தன்னிடம் கொண்டுவரும்படிச்செய்து அவரிடம், “நீ யூதருடைய அரசனா?” என்று கேட்டான்.
फेर पिलातुस दुबारै किले कै भीत्त्तर गया, यीशु ताहीं बुलाकै उसनै बुझ्झया, “के तू यहूदियाँ का राजा सै?”
34 அதற்கு இயேசு, “இதை நீராகவே கேட்கிறீரா? அல்லது மற்றவர்கள் உம்மிடம் என்னைக்குறித்து இப்படிச் சொன்னார்களா?” என்று கேட்டார்.
यीशु नै जवाब दिया, “के तू या बात अपणी ओड़ तै कहवै सै या दुसरयां नै मेरै बाबत तेरे तै न्यू कह्या सै?”
35 அப்பொழுது பிலாத்து, “நான் என்ன ஒரு யூதனா? உனது மக்களும் உனது தலைமை ஆசாரியர்களுமே உன்னை என்னிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். நீ செய்தது என்ன?” என்று கேட்டான்.
पिलातुस नै जवाब दिया, “के मै यहूदी न्ही सूं, तेरी-ए कोम अर प्रधान याजकां नै तेरे ताहीं मेरै हाथ म्ह सौंप्या सै। तन्नै के करया सै?”
36 அதற்கு இயேசு, “நான் இந்த உலகத்துக்குரிய அரசன் அல்ல. அப்படியிருந்தால், யூதர்களிடம் நான் ஒப்புக்கொடுக்கப்படுவதைத் தடுக்கும்படி எனது ஊழியக்காரர்களே போராடியிருப்பார்கள். எனது அரசோ வேறு இடத்தைச் சேர்ந்தது” என்றார்.
यीशु नै जवाब दिया, “मेरा राज्य इस दुनिया का कोनी, जै मेरा राज्य इस दुनिया का होंदा, तो मेरे सेवादार लड़दे के मै यहूदी अगुवां कै हाथ्थां सौंप्या कोनी जान्दा पर सच्चाई तो या सै के मेरा राज्य आड़ै का सै ए कोनी।”
37 அதற்கு பிலாத்து, “அப்படியானால், நீ ஒரு அரசன்தானே!” என்று கேட்டான். அதற்கு இயேசு, “நான் ஒரு அரசன் என்று நீர் சொல்வது சரிதான். ஏனெனில் சத்தியத்திற்கு சாட்சி கொடுக்கும்படியே நான் பிறந்தேன். அதற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். சத்தியத்திற்கு உரியவர்கள் ஒவ்வொருவரும் எனக்குச் செவிகொடுக்கிறார்கள்” என்றார்.
पिलातुस नै उसतै कह्या, “के तू राजा सै?” यीशु नै जवाब दिया, “तू कहवै सै के मै राजा सूं। मन्नै ज्यांतै जन्म लिया अर ज्यांतै दुनिया म्ह आया सूं, के सच की गवाही दियुँ। जो कोए सच का सै, वो मेरा वचन सुणै सै।”
38 அதற்கு பிலாத்து, “சத்தியம் என்றால் என்ன?” என்று கேட்டான். அப்படிக் கேட்ட அவன் மீண்டும் வெளியே போய் யூதரிடம், “நான் இவனுக்கு எதிராய் குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரத்தையும் காணவில்லை.
पिलातुस नै उसतै कह्या, “सच के सै?” न्यू कहकै वो फेर यहूदी अगुवां कै धोरै लिकड़ आया अर उन ताहीं कह्या, “मै तो उस म्ह कुछ खोट कोनी पांदा।”
39 ஆகவே பஸ்கா என்ற பண்டிகை காலத்தில் ஒரு கைதியை நான் உங்களுக்காக விடுதலை செய்வது வழக்கமல்லவா? எனவே ‘யூதரின் அரசனை’ நான் விடுதலைசெய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.
पर थारे यो रिवाज सै के मै फसह पै थारे खात्तर एक माणस नै छोड़ दियुँ। आखर के थम चाह्वो सो, “के मै थारे खात्तर यहूदियाँ के राजा नै छोड़ दियुँ?”
40 அதற்கு அவர்களோ, “இல்லை, அவனை அல்ல! பரபாஸை எங்களுக்கு விடுதலையாக்கும்” என்று சத்தமிட்டார்கள். அந்த பரபாஸ் என்பவனோ ஒரு கலவரத்தில் ஈடுபட்டவனாய் இருந்தான்.
फेर उननै रुक्के मारकै कह्या, “इसनै न्ही, पर म्हारै खात्तर बरअब्बा नै छोड़दे।” जिब के बरअब्बा बिद्रोही था।

< யோவான் 18 >