< யோவான் 17 >
1 இயேசு இதைச் சொன்னபின்பு அவர் பரலோகத்தை நோக்கிப்பார்த்து மன்றாடினார், “பிதாவே, எனது வேளை வந்துவிட்டது. உமது மகனாகிய நான் உம்மை மகிமைப்படுத்தும்படி, நீர் உம்முடைய மகனாகிய என்னை மகிமைப்படுத்தும்.
୧ୟୀଶୁ ନେଆଁଁ କାଜିକେଦ୍ଚି ସିର୍ମାସାଃ ସାଙ୍ଗିଲ୍ ରାକାବ୍କେଦ୍ତେ କାଜିକେଦାଃଏ, ହେ ଆବା ନେଡା ସେଟେରାକାନା, ହନ୍ ଆମ୍କେ ମାଇନାନ୍ମେ ନାଗେନ୍ତେ ହନ୍ତାମାଃକେ ମାଇନିମେ ।
2 நீர் எல்லா மக்கள்மேலும் அவருக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறீர். அவரிடம் நீர் ஒப்புக்கொடுத்த அனைவருக்கும் அவர் நித்திய ஜீவனைக் கொடுக்கும்படியே நீர் அதிகாரம் கொடுத்தீர். (aiōnios )
୨ଆମ୍ ଇନିଃକେ ସବେନ୍ ହଡ଼କଆଃରେ ଆକ୍ତେୟାର୍ରେ ନାଙ୍ଗ୍ ଏମାକାଇୟାମ୍, ଜେ'ଲେକା ଆମ୍ ଇନିଃକେ ଏମାକାଇ ସବେନ୍ ହଡ଼କକେ ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ଏମ୍ଦାଡ଼ିୟାଃଏ । (aiōnios )
3 ஒன்றான சத்திய இறைவனாகிய உம்மையும், நீர் அனுப்பிய இயேசுகிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்வதே நித்தியவாழ்வு. (aiōnios )
୩ଆଡଃ ମିଆଁଦ୍ଗି ସାର୍ତି ପାର୍ମେଶ୍ୱାର୍ ଆମ୍ ତାନ୍ମେ, ଆମ୍କେ ଆଡଃ ଆମ୍ କୁଲାକାଇ ୟୀଶୁ ଖ୍ରୀଷ୍ଟ୍କେ ସାରିତେୟାଃଗି ଜାନାଅ ଜାନାଅରେୟାଃ ଜୀଦାନ୍ ତାନାଃ । (aiōnios )
4 நீர் செய்யும்படி எனக்குக் கொடுத்த வேலையை நிறைவேற்றி முடித்ததன் மூலம், பூமியிலே உம்மை மகிமைப்படுத்தினேன்.
୪ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଅକନ୍ କାମି ଏମାକାଇଙ୍ଗ୍ ତାଇନାମ୍ ଏନ୍ କାମି ଆଇଙ୍ଗ୍ ଟୁଣ୍ଡୁକେଦ୍ତେ ଅତେଦିଶୁମ୍ରେ ଆମ୍କେ ମାଇନାନ୍ କାଦ୍ମେଁୟାଇଙ୍ଗ୍ ।
5 பிதாவே, உலகம் உண்டாகும் முன்பே எனக்கு உம்மிடம் இருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மில் மகிமைப்படுத்தும்.
୫ନାହାଁଃ, ହେ ଆବା, ଅତେଦିଶୁମ୍ ବାଇୟାନ୍ ସିଦାରେ ଆମାଃଲଃ ତାଇକେନ୍ ଇମ୍ତା ଆଇଁୟାଃ ଅକନ୍ ମାନାରାଙ୍ଗ୍ ତାଇକେନା ଏନ୍ ମାନାରାଙ୍ଗ୍ତେ ଆଇଙ୍ଗ୍କେ ଆମାଃଲଃ ମାନାରାଙ୍ଗ୍ ରିକାଇଙ୍ଗ୍ମେଁ ।
6 “உலகத்திலிருந்து நீர் எனக்கு ஒப்புக்கொடுத்த இவர்களுக்கு உம்முடைய பெயரை வெளிப்படுத்தினேன். உம்முடையவர்களாய் இருந்த இவர்களை நீர் எனக்குக் கொடுத்தீர். இவர்களும் நீர் கொடுத்த வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
୬“ଅତେଦିଶୁମ୍ରେନ୍କଏତେ ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଏମାକାଦିଙ୍ଗ୍ ହଡ଼କକେ, ଆମାଃ ନୁତୁମ୍ ଉଦୁବାକାଦ୍କଆଇଙ୍ଗ୍, ଇନ୍କୁ ଆମାଃକ ତାଇକେନା ଆଡଃ ଆମ୍ ଇନ୍କୁକେ ଏମାକାଦିୟାଁମ୍ ଆଡଃ ଇନ୍କୁ ଆମାଃ କାଜିକ ମାନାତିଙ୍ଗାଁକାଦାଃ ।
7 நீர் எனக்குத் தந்த எல்லாம் உம்மிடத்திலிருந்தே வருகிறது என்று இவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
୭ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଅକ୍ନାଃକ ଏମାକାଦିୟାଁମ୍ ଏନ୍ ସବେନାଃ ଆମାଃ ସାଃଏତେଗି ହିଜୁଆକାନା, ଏନା ଇନ୍କୁ ନାହାଃଁକ ଆଟ୍କାର୍କାଦାଃ ।
8 ஏனெனில் நீர் எனக்குக் கொடுத்த வார்த்தைகளையே நான் இவர்களுக்குக் கொடுத்தேன். இவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். நான் உம்மிடத்திலிருந்து வந்தேன் என்று இவர்கள் நிச்சயமாய் அறிந்திருக்கிறார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்று இவர்கள் விசுவாசிக்கின்றார்கள்.
୮ଚିୟାଃଚି ଆମ୍ ଏମାକାଦିଙ୍ଗ୍ କାଜିକ ଇନ୍କୁକେ ଏମାକାଦ୍କଆଇଙ୍ଗ୍ ଆଡଃ ଇନ୍କୁ ଏନାକ ତେଲାକାଦାଃ; ଆଇଙ୍ଗ୍ ଆମାଃ ସାଃଏତେ ହିଜୁଆକାନାଇଙ୍ଗ୍ ଏନା ସାର୍ତିଗିକ ଆଟ୍କାର୍କାଦାଃ, ଆଡଃ ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ କୁଲାକାଦିୟାଁମ୍ ଏନା ବିଶ୍ୱାସ୍କାଦାଃକ ।
9 நான் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். நான் உலகத்துக்காக மன்றாடவில்லை. நீர் எனக்குக் கொடுத்திருக்கும் இவர்களுக்காகவே மன்றாடுகிறேன். ஏனெனில் இவர்கள் உம்முடையவர்கள்.
୯“ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍, ଅତେଦିଶୁମ୍ ନାଗେନ୍ତେ କାହା ମେନ୍ଦ ଆମ୍ ଏମାକାଦିଙ୍ଗ୍ ହଡ଼କଆଃ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍, ଚିୟାଃଚି ଇନ୍କୁଦ ଅାମାଃଗି ତାନ୍କୁ ।
10 என்னுடையதெல்லாம் உம்முடையதே, உம்முடையதெல்லாம் என்னுடையதே. இவர்கள் மூலமாய் நான் மகிமைப்பட்டிருக்கிறேன்.
୧୦ଆଡଃ ଆଇଁୟାଃ ସବେନାଃ ଆମାଃ ତାନାଃ, ଆଡଃ ଆମାଃ ସବେନାଃ ଆଇଁୟାଃ ତାନାଃ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁଆଃ ହରାତେ ମାଇନାନ୍ କାନାଇଙ୍ଗ୍ ।
11 நான் இனிமேலும் உலகத்தில் இருக்கமாட்டேன். நான் உம்மிடத்தில் வருகிறேன்; இவர்களோ இன்னும் இந்த உலகத்தில் இருக்கிறார்கள். ஆகவே பரிசுத்த பிதாவே, உம்முடைய பெயரின் வல்லமையினாலே இவர்களைக் காத்துக்கொள்ளும். அந்தப் பெயரையே நீர் எனக்கும் கொடுத்தீர். எனவே நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே, இவர்களும் ஒன்றாய் இருக்கட்டும்.
୧୧ଆଡଃ ନାହାଁଃ ଆଇଙ୍ଗ୍ ନେ ଅତେଦିଶୁମ୍ରେ କାଇଙ୍ଗ୍ ତାଇନାଃ, ମେନ୍ଦ ଇନ୍କୁ ଅତେଦିଶୁମ୍ରେକ ତାଇନାଃ, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଆମାଃତାଃତେ ହିଜୁଃତାନାଇଙ୍ଗ୍ । ଏ ପାବିତାର୍ ଆବା! ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଏମାକାଦିଙ୍ଗ୍ ନୁତୁମ୍ରାଃ ପେଡ଼େଃତେ ବାଞ୍ଚାଅକମେ, ଆମ୍ ଏମାକାଦିଙ୍ଗ୍ ନୁତୁମ୍ତେ, ଆମ୍ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଜେ'ଲେକା ମିଦ୍ତାନ୍ଲାଙ୍ଗ୍, ଏନ୍ଲେକା ଇନ୍କୁ ମିଦଃକାକ ।
12 நான் இவர்களோடு இருந்தபோது, நீர் எனக்குக் கொடுத்த உமது பெயராலே இவர்களைக் காப்பாற்றிப் பாதுகாத்து வைத்திருந்தேன். வேதவசனம் நிறைவேறும்படி அழிவின் மகனைத் தவிர வேறு ஒருவரையும் நான் இழந்து போகவில்லை.
୧୨ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁଲଃ ତାଇକେନ୍ ଇମ୍ତା ଆମ୍ ଏମାକାଦ୍ ଆମାଃ ନୁତୁମ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ବାଞ୍ଚାଅକେଦ୍ତେ ବୁଗିଲେକା ଯାତାନ୍କାଦ୍କଆଇଙ୍ଗ୍, ଆଡଃ ଧାରାମ୍ପୁଥିରାଃ ଅନଲ୍ ଜେ'ଲେକା ସାର୍ତିୟଆଃ, ଏନାମେନ୍ତେ ଏନ୍ ଜିୟନଃ ହନ୍କେ ବାଗିକେଦ୍ତେ ଇନ୍କୁଏତେ ଜେତାଏ କାକ ଜିୟନାକାନା ।
13 “நான் இப்போது உம்மிடத்தில் வருகிறேன். ஆனால் இவர்கள் என்னுடைய சந்தோஷத்தைத் தங்களுக்குள் முழுநிறைவாய்ப் பெற்றுக்கொள்ளும்படி, நான் உலகத்தில் இருக்கும்போதே இவைகளைச் சொல்கிறேன்.
୧୩ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ ନାହାଁଃ ଆମାଃତାଃତେଇଙ୍ଗ୍ ହିଜୁଃତାନା ଆଡଃ ଇନ୍କୁଆଃ ମନ୍ରେ ଆଇଁୟାଃ ରାସ୍କା ପେରେଜଃ ନାଗେନ୍ତେ ଅତେଦିଶୁମ୍ରେ ତାଇନ୍କେଦ୍ତେଗି ଆଇଙ୍ଗ୍ ନେ ସବେନାଃ କାଜିତାନାଇଙ୍ଗ୍ ।
14 நான் இவர்களுக்கு உம்முடைய வார்த்தையைக் கொடுத்திருக்கிறேன். உலகமோ இவர்களை வெறுத்திருக்கிறது. ஏனெனில் நான் உலகத்திற்கு உரியவனாய் இராததுபோல, இவர்களும் உலகத்திற்கு உரியவர்கள் அல்ல.
୧୪ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଆମାଃ କାଜି ଏମାକାଦ୍କଆଇଙ୍ଗ୍, ଆଡଃ ଅତେଦିଶୁମ୍ ଇନ୍କୁକେ ହିଲାଙ୍ଗ୍କାଦ୍କଆଏ, ଚିୟାଃଚି ଆଇଙ୍ଗ୍ ଜେ'ଲେକା ନେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ନାହାଁଲାଇଙ୍ଗ୍ ଏନ୍ଲେକା ଇନ୍କୁ ନେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ନାହାଁଲାକ ।
15 இந்த உலகத்தை விட்டு இவர்களை எடுத்துக்கொள்ளும் என்று நான் மன்றாடவில்லை; ஆனால் தீயவனிடமிருந்து இவர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் என்றே மன்றாடுகிறேன்.
୧୫ଆମ୍ ଇନ୍କୁକେ ଅତେଦିଶୁମ୍ଏତେ ଇଦିକୁମେ ମେନ୍ତେ କାଇଙ୍ଗ୍ ବିନ୍ତିମେତାନା, ମେନ୍ଦ ଆମ୍ ଇନ୍କୁକେ ଏତ୍କାନ୍ଏତେ ବାଞ୍ଚାଅକମେ ମେନ୍ତେ ବିନ୍ତିମେତାନାଇଙ୍ଗ୍ ।
16 நான் உலகத்திற்கு உரியவனாய் இல்லாததுபோல் இவர்களும் உலகத்துக்கு உரியவர்கள் அல்ல.
୧୬ଆଇଙ୍ଗ୍ ଜେ'ଲେକା ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ନାହାଁଲାଇଙ୍ଗ୍ ଏନ୍ଲେକା ଇନ୍କୁ ଅତେଦିଶୁମ୍ରେନ୍ ନାହାଁଲାକ ।
17 சத்தியத்தினாலே இவர்களை அர்ப்பணியும்; உம்முடைய வார்த்தையே சத்தியம்.
୧୭ସାନାର୍ତିତେ ଇନ୍କୁକେ ପାବିତାର୍ କାମି ନାଙ୍ଗ୍ ଜିମାକମେ; ଆମାଃ କାଜିଦ ସାର୍ତି ତାନାଃ ।
18 நீர் என்னை உலகத்திற்குள் அனுப்பினதுபோல நானும் இவர்களை உலகத்திற்குள் அனுப்புகிறேன்.
୧୮ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଜେ'ଲେକା ଅତେଦିଶୁମ୍ତେମ୍ କୁଲ୍କାଦିୟାଁ, ଏନ୍ଲେକା ଆଇଙ୍ଗ୍ହଁ ଇନ୍କୁକେ ଅତେଦିଶୁମ୍ତେ କୁଲାକାଦ୍କଆଇଙ୍ଗ୍ ।
19 இவர்கள் தங்களை உண்மையாக அர்ப்பணிக்கும்படி, இவர்களுக்காக நானும் என்னை அர்ப்பணிக்கிறேன்.
୧୯ଆଡଃ ଇନ୍କୁ ହଁ ସାନାର୍ତିରେକ ପାବିତାରଃକା ମେନ୍ତେ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁ ନାଗେନ୍ତେ ପାବିତାର୍ କାମି ନାଙ୍ଗ୍ ଜିମାନ୍ ତାନାଇଙ୍ଗ୍ ।
20 “நான் என் சீடர்களுக்காக மாத்திரம் மன்றாடவில்லை. இவர்கள் அறிவிக்கும் செய்தியின் மூலமாய் என்னில் விசுவாசம் வைக்கப் போகிறவர்களுக்காகவும் மன்றாடுகிறேன்.
୨୦“ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁଆଃ ନାଗେନ୍ତେ ଏସ୍କାର୍ କାହା ମେନ୍ଦ ଇନ୍କୁଆଃ କାଜିରେୟାଃ ହରାତେ ଆଇଙ୍ଗ୍ରେ ବିଶ୍ୱାସେତାନ୍ ସବେନ୍କଆଃ ନାଗେନ୍ତେ ବିନ୍ତିତାନାଇଙ୍ଗ୍ ।
21 பிதாவே நீர் என்னில் இருக்கிறது போலவும், நான் உம்மில் இருக்கிறது போலவும் அவர்கள் எல்லோரும் ஒன்றாய் இருக்கவேண்டும் என்றும் மன்றாடுகிறேன். நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்படி, அவர்களும் நம்மில் ஒன்றாய் இருக்கட்டும்.
୨୧ହେ ଆବା! ଇନ୍କୁ ଜେତେକ ଜେ'ଲେକା ମିଦଃକାକ ମେନ୍ତେ ଇନ୍କୁଆଃ ନାଙ୍ଗ୍ ବିନ୍ତିମେତାନାଇଙ୍ଗ୍, ଆଇଙ୍ଗ୍ ଆମାଃରେ ଆଡଃ ଆମ୍ ଆଇଁୟାଃରେ ମେନାମେ ଲେକା, ଇନ୍କୁହ ସବେନ୍କ ଆବୁରେ ତାଇନଃକାକ, ଜେ'ଲେକାଚି ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ କୁଲାକାଦିୟାଁମ୍ ଏନା ଅତେଦିଶୁମ୍ରେନ୍କ ବିଶ୍ୱାସେୟା ।
22 நாம் ஒன்றாய் இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி, நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.
୨୨ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଏମାକାଦିଙ୍ଗ୍ ମାନାରାଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଏମାକାଦ୍କଆଇଙ୍ଗ୍, ଆମ୍ ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ମିଦ୍କାନ୍ ଲେକା ଇନ୍କୁହ ମିଦଃକାକ ।
23 இவ்வாறு நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருப்பதனால், அவர்களும் முழுமையான ஒற்றுமைக்குள் கொண்டுவரப்படுவார்கள். அப்பொழுது நீரே என்னை அனுப்பினீர் என்றும், நீர் என்னில் அன்பாயிருந்தது போலவே, அவர்களிலும் அன்பாயிருக்கிறீர் என்றும் உலகம் அறிந்துகொள்ளும்.
୨୩ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁରେ ଆଡଃ ଆମ୍ ଆଇଁୟାଃରେ ମେନାମେୟା, ଏନାତେ ଇନ୍କୁ ମିଦ୍ ଉତାରଃକା ଆଡଃ ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ କୁଲାକାଦିୟାଁମ୍ ଆଡଃ ଦୁଲାଡ଼୍କାଦିୟାଁମ୍ ଲେକା ଇନ୍କୁକେହ ଦୁଲାଡ଼ାକାଦ୍କଆମ୍ ମେନ୍ତେ ଅତେଦିଶୁମ୍ରେନ୍କ ଆଟ୍କାରେକା ।
24 “பிதாவே நீர் எனக்குக் கொடுத்த இவர்கள் நான் இருக்கும் இடத்திலே, என்னுடன் இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். உலகம் படைக்கப்படும் முன்னே நீர் என்னில் அன்பாயிருந்ததினால், நீர் எனக்குக் கொடுத்த மகிமையை இவர்கள் காணவேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.
୨୪“ହେ ଆବା, ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଏମାକାଦିଙ୍ଗ୍ ହଡ଼କ ଆଇଙ୍ଗ୍ ତାଇନଃତାଃରେକ ତାଇନଃକା, ଏନାତେ ଇନ୍କୁ ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଏମାକାଦିଙ୍ଗ୍ ମାନାରାଙ୍ଗ୍କ ନେଲେକା ମେନ୍ତେ ସାନାଙ୍ଗ୍ତାନାଇଙ୍ଗ୍, ଚିୟାଃଚି ଆମ୍ଦ ଅତେଦିଶୁମ୍ ବାଇୟେ ସିଦାରେ ଆଇଙ୍ଗ୍କେ ଦୁଲାଡ଼୍କାଦିୟାଁମ୍ ।
25 “நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியாவிட்டாலும், நான் உம்மை அறிவேன். நான் உம்மாலேயே அனுப்பப்பட்டேன் என்று இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.
୨୫ଏ ଧାର୍ମାନ୍ ଆବା, ଅତେଦିଶୁମ୍ ଆମ୍କେ କାଏ ସାରିୟାକାଦ୍ମେୟା ମେନ୍ଦ ଆଇଙ୍ଗ୍ ସାରିୟାକାଦ୍ମେୟାଇଙ୍ଗ୍ ଆଡଃ ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ କୁଲାକାଦିୟାଁମ୍ ଏନା ନିକୁ ସାରିୟାକାଦାଃକ ।
26 நீர் என்மேல் வைத்திருக்கும் அன்பு இவர்கள்மேல் இருக்கும்படிக்கும், நான் இவர்களில் இருக்கும்படிக்கும் நான் உமது பெயரை இவர்களுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறேன். தொடர்ந்து உம்மைத் தெரியப்படுத்துவேன்” என்றார்.
୨୬ଆମ୍ ଆଇଙ୍ଗ୍କେ ଅକନ୍ ଦୁଲାଡ଼୍ରେମ୍ ଦୁଲାଡ଼୍କାଦିୟାଁ ଏନ୍ ଦୁଲାଡ଼୍ ଇନ୍କୁରେ ତାଇନଃକା, ଆଡଃ ଆଇଙ୍ଗ୍ ଇନ୍କୁରେ ତାଇନଃନାଙ୍ଗ୍ ଇନ୍କୁକେ ଆମାଃ ନୁତୁମ୍ ଉଦ୍ବାକାଦ୍କଆଇଙ୍ଗ୍ ଆଡଃ ଉଦୁବାକୁଆଇଙ୍ଗ୍ ।”