< யோவான் 13 >

1 பஸ்கா என்ற பண்டிகை தொடங்க இருந்தது. இயேசு தாம் இந்த உலகத்தை விட்டுப் புறப்பட்டு பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கி விட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களுக்கு அன்புகாட்டிய அவர், இப்பொழுது தமது அன்பின் முழுமையையும் காட்டினார்.
Xnaqajin kꞌu loq ri nimaqꞌij rech Pascua. Retaꞌm ri Jesús chi xuriq ri qꞌij kuya kanoq ri uwachulew rech katzalij rukꞌ ri uTat. Ri Jesús xuꞌloqꞌaj ri e rech ri e kꞌo choch ri uwachulew kꞌa pa ri kꞌisbꞌal qꞌij rech ri ukꞌolem choch ri uwachulew.
2 இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தை ஏற்கெனவே சாத்தான் உள்ளத்தில் ஏவிவிட்டிருந்தான்.
Are xuriq ri qꞌotaj rech ri rekeqꞌij. Ri Itzel okinaq chik pa ranimaꞌ ri Judas Iscariote, ukꞌojol ri Simón, rech kujach ri Jesús.
3 பிதா எல்லாவற்றையும் தமது வல்லமையின்கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகிறதையும் இயேசு அறிந்திருந்தார்.
Retaꞌm ri Jesús chi ronojel ri jastaq yaꞌtal xeꞌ raqan uqꞌabꞌ xuqujeꞌ retaꞌm chi che ri Dios petinaq wi xuqujeꞌ rukꞌ areꞌ katzalij wi.
4 எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து தமது மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சால்வையை எடுத்து இடுப்பிலேக் கட்டிக் கொண்டார்.
Jeriꞌ, xwaꞌjil puꞌwiꞌ ri mexa, xresaj ri umanta kꞌa te riꞌ xujatꞌij jun atzꞌyaq suꞌbꞌal, xeꞌ upam.
5 அதற்குப் பின்பு, அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். பின் தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்தச் சால்வையினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.
Kꞌa te riꞌ xuya jaꞌ pa jun kꞌolibꞌal, xuchapleꞌj uchꞌajik ri kaqan ri utijoxelabꞌ xuqujeꞌ xuchaqiꞌjarisaj rukꞌ ri atzꞌyaq ri xekel bꞌik xeꞌ upam.
6 இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான்.
Are xopan ri Jesús rukꞌ ri Simón Pedro, ri Simón Pedro xubꞌij che ri Jesús: Che ri lal Ajawxel, ¿kachꞌaj la le waqan?
7 இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
Ri Jesús xubꞌij che: At man kachꞌobꞌ ta chanim jas ri tajin kinbꞌano, jun qꞌijal kꞌu na kachꞌobꞌo.
8 அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn g165)
Ri Pedro xubꞌij: Man kachꞌaj ta wi la ri waqan in. Ri Jesús xubꞌij che: Katkwin taj katux wachiꞌl we man kinchꞌaj ri awaqan. (aiōn g165)
9 அப்பொழுது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையுங்கூட கழுவும்!” என்றான்.
Ri Pedro xubꞌij che: Ajawxel man xwi ta bꞌa kachꞌaj la ri waqan xane chꞌaja xuqujeꞌ la ri nuqꞌabꞌ rachiꞌl ri nujolom.
10 அதற்கு இயேசுவோ, “குளித்தவன் தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாயிருக்கிறான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அல்ல” என்றார்.
Ri Jesús xubꞌij che: Ri winaq ri atininaq man rajawaxik taj kuchꞌaj ribꞌ xane xwi rajawaxik kuchꞌaj ri raqan. Ixchꞌajchꞌoj chi kꞌu ix, pune man iwonojel.
11 ஏனெனில் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
Ri Jesús kꞌut retaꞌm jachin ri kakꞌayinik rumal riꞌ xubꞌij chi man konojel taj e chꞌajchꞌoj.
12 அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்தபின்பு, இயேசு தம்முடைய உடையை உடுத்தி கொண்டு, மீண்டும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா?” என்று கேட்டார்.
Are xtoꞌtaj chuchꞌajik ri kaqan, xukoj chi junmul ri umanta, xtzalij jawjeꞌ ri kꞌo wi. Kꞌa te riꞌ xubꞌij: ¿La kichꞌobꞌo jas che xinbꞌan we riꞌ iwukꞌ?
13 மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘கர்த்தர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான்.
Ix kibꞌij chi in iwajtij, xuqujeꞌ in iwajaw, utz riꞌ ri kibꞌij, jeriꞌ rumal qas jeriꞌ wi kinuxik.
14 அப்படியே கர்த்தரும் போதகருமாயிருக்கிற நானே உங்கள் கால்களைக் கழுவியிருக்கிறேன். நீங்களும்கூட ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவவேண்டும்.
We in in iwAjtij, in iwAjaw xinchꞌaj ri iwaqan, ix xuqujeꞌ kuyaꞌo kichꞌaj ri kaqan nikꞌaj chik.
15 ஏனெனில் நான் உங்களுக்குச் செய்ததுபோலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன்.
Xinkꞌut chiꞌwach rech kibꞌan kukꞌ chi nikꞌaj ri xinbꞌan in iwukꞌ.
16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல. எந்தத் தூதனும் தன்னை அனுப்பியவனைவிடப் பெரியவன் அல்ல.
Qas tzij kinbꞌij chiꞌwe chi man kꞌo ta jun patanijel ri nim ubꞌanik choch ri rajaw, je xuqujeꞌ man kꞌo ta jun qꞌaxel tzij ri nim ubꞌanik cho ri xtaqow bꞌik.
17 நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார்.
Chanim kꞌut chi iwetaꞌm chik we jastaq riꞌ, utz iwe we kichakubꞌej.
18 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கிறான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.
Man tajin taj kinbꞌij we riꞌ chiꞌwe iwonojel. Wetaꞌm in jachin ri e nuchaꞌom, kinbꞌij we riꞌ chiꞌwe rech kakꞌulmataj ri tzꞌibꞌatalik: Ri kutij rech ri kaxlan wa wukꞌ xuwaꞌjilisaj ri uqꞌabꞌ chwij chubꞌanik kꞌax chwe.
19 “அது நிகழும் முன்பதாகவே இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள்.
Kinbꞌij we riꞌ chiꞌwe, utz majaꞌ kakꞌulmatajik, rech are kakꞌulmatajik kikojo chi In riꞌ.
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
Qas tzij kinbꞌij chiꞌwe, ri kukꞌamawaꞌj ri kintaq bꞌik, in riꞌ kinukꞌamawaꞌj, xuqujeꞌ ri kukꞌamawaꞌj in, kukꞌamawaꞌj xuqujeꞌ ri xintaqow loq.
21 இயேசு இதைச் சொன்னபின்பு, அவர் உள்ளம் கலங்கியவராய், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறேன்.
Are xbꞌiꞌtaj we tzij riꞌ rumal ri Jesús, sibꞌalaj xkꞌaxir ri ranimaꞌ, kꞌa te riꞌ xubꞌij: Qas tzij kinbꞌij chiꞌwe jun chiꞌwe kinujach na.
22 அவருடைய சீடர்களோ அவர் யாரைக்குறித்துச் சொல்கிறார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
Ri tijoxelabꞌ xkikaꞌyela la taq kibꞌ jeriꞌ rumal man ketaꞌm taj jachin tajin katzijox rij chike.
23 இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான்.
Kꞌo kꞌu chuxukut ri Jesús jun chike ri tijoxelabꞌ ri sibꞌalaj kuloqꞌaj.
24 சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.
Ri Simón pa memal tzij xubꞌij che ri tijoxel riꞌ: Chata che le Jesús jachin tajin kutzijoj rij.
25 எனவே அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான்.
Ri tijoxel xqꞌaꞌiꞌk cho ukꞌuꞌx ri Jesús kꞌa te riꞌ xubꞌij che: Ajawxel, ¿jachin riꞌ ri kabꞌij la?
26 அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ, அவனே” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
Ri Jesús xubꞌij: We winaq riꞌ are ri kinya chꞌaqaꞌp kaxlan wa che ri numuꞌum pa ri palaꞌt. Are xbꞌiꞌtaj we riꞌ rumal, xumuꞌ ri chꞌaqaꞌp kaxlan wa kꞌa te riꞌ xuya che ri Judas Iscariote, ukꞌojol ri Simón.
27 யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிப் புசித்தான். பிறகு சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகிறதை விரைவாய்ச் செய்” என்றார்.
Are xkꞌamtaj ri kaxlan wa rumal ri Judas, xok ri Itzel pa ranimaꞌ. Ri Jesús xubꞌij che: Aninaq chabꞌanaꞌ ri rajawaxik kabꞌano.
28 ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னார் என்று சாப்பாட்டுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை.
Man kꞌo ta kꞌu jun chike ri e kꞌo puꞌwiꞌ ri mexa xchꞌobꞌowik jas che jeriꞌ xubꞌij ri Jesús.
29 யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கிறார் என்று சிலர் நினைத்தார்கள்.
Pa kikꞌuꞌx ri tijoxelabꞌ chi xa xbꞌix che ri Judas chi kꞌu loq ri kajawataj chike pa ri nimaqꞌij o kuya pwaq chike ri e mebꞌaibꞌ, jeriꞌ rumal are kayakow ri pwaq.
30 அப்பத்தை வாங்கிக்கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுப் போனான். அப்பொழுது இரவு நேரமாயிருந்தது.
Are xtijtaj bꞌik ri kaxlan wa rumal ri Judas, xel bꞌik chilaꞌ. Chaqꞌabꞌ chi kꞌut.
31 யூதாஸ் போனபின்பு இயேசு அவர்களிடம், “இப்பொழுது மானிடமகனாகிய நான் மகிமைப்படுகிறேன்; இறைவனும் என்னில் மகிமைப்படுகிறார்.
Are xel bꞌik ri Judas, ri Jesús xubꞌij: Chanim xopan ri qꞌotaj are kayaꞌtaj uqꞌij ri uKꞌojol ri Achi, xuqujeꞌ kayaꞌtaj uqꞌij ri Dios pa Areꞌ.
32 இறைவன் என்னில் மகிமைப்பட்டால், மானிடமகனாகிய என்னை இறைவனும் தம்மிலே மகிமைப்படுத்துவார்; சீக்கிரமாய் என்னை மகிமைப்படுத்துவார்.
Are kayaꞌtaj uqꞌij ri Dios pa Areꞌ, ri Dios xuqujeꞌ kuya na uqꞌij ri Kꞌojolaxel, kakꞌulmataj kꞌu na we jastaq riꞌ che taq we qꞌij riꞌ.
33 “பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது; இதை நான் யூதத்தலைவர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.”
Loqꞌalaj taq walkꞌwaꞌl, xa jubꞌiqꞌ chik in kꞌo iwukꞌ. Kinitzukuj kꞌu na, ri xinbꞌij kꞌu chike ri winaq aꞌj Israel, kinbꞌij chiꞌwe ix chanim: Man kixkwin taj kixeꞌ jawjeꞌ ri kineꞌ wi in.
34 நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்: “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.
We kꞌakꞌ taqanik we kinya chiꞌwe: Are chiloqꞌaj iwibꞌ chibꞌil taq iwibꞌ. Jetaq ri in ix nuloqꞌam, ri ix xuqujeꞌ rajawaxik kiloqꞌaj iwibꞌ chibꞌil taq iwibꞌ.
35 நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
We qas kiloqꞌaj iwibꞌ chibꞌil taq iwibꞌ, kiwetaꞌmaj riꞌ chi qas ix nutijoxelabꞌ.
36 அப்பொழுது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகிற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்துவர உன்னால் இப்போது முடியாது. பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.
Ri Simón Pedro xuta che ri Jesús: ¿Jawjeꞌ kꞌut keꞌ wi la, Ajawxel? Ri Jesús xubꞌij che: Man katkwin taj kinatereneꞌj jawjeꞌ ri kineꞌ wi, kꞌa te kinatereneꞌj are ikꞌowinaq chik jun janipa qꞌotaj.
37 அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வரமுடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.
Ri Pedro xubꞌij: ¿Jas che kꞌut man kinkwin taj kinteriꞌk chij la chanim? Umal e la kinya ri nukꞌaslemal.
38 அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.
Ri Jesús xubꞌij che: ¿Che ri at kaya ri akꞌaslemal rumal we? Qas tzij kinbꞌij chawe chi oxibꞌ mul chik awawam nuqꞌalajisaxik are kabꞌixon ri amaꞌ akꞌ.

< யோவான் 13 >