< யோவான் 13 >

1 பஸ்கா என்ற பண்டிகை தொடங்க இருந்தது. இயேசு தாம் இந்த உலகத்தை விட்டுப் புறப்பட்டு பிதாவினிடத்திற்கு போகும்வேளை நெருங்கி விட்டதை அறிந்திருந்தார். உலகத்திலே தமக்கு உரியவர்களுக்கு அன்புகாட்டிய அவர், இப்பொழுது தமது அன்பின் முழுமையையும் காட்டினார்.
Na rĩrĩ, gwatigĩtie o hanini Gĩathĩ kĩa Bathaka gĩkinye. Jesũ nĩamenyete atĩ ihinda rĩake rĩa kuuma gũkũ thĩ athiĩ kũrĩ Ithe nĩrĩakinyĩte. Na tondũ nĩendete arĩa maarĩ ake gũkũ thĩ, akĩmoonia ũrĩa aamendete nginya kĩrĩkĩrĩro.
2 இரவு உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி, சீமோனின் மகனாகிய யூதாஸ் ஸ்காரியோத்தை ஏற்கெனவே சாத்தான் உள்ளத்தில் ஏவிவிட்டிருந்தான்.
Na rĩrĩa maarĩĩaga irio cia hwaĩ-inĩ, Mũcukani nĩarĩkĩtie gwĩkĩra ngoro-inĩ ya Judasi Isikariota, mũrũ wa Simoni, meciiria ma gũkunyanĩra Jesũ,
3 பிதா எல்லாவற்றையும் தமது வல்லமையின்கீழ் ஒப்புக்கொடுத்திருந்ததையும், தான் இறைவனிடத்திலிருந்து வந்ததையும், இறைவனிடத்திற்கே திரும்பிப் போகிறதையும் இயேசு அறிந்திருந்தார்.
Jesũ nĩamenyete atĩ Ithe nĩamũheete ũhoti wa maũndũ mothe, na atĩ oimĩte kũrĩ Ngai, na acookaga kũrĩ o Ngai;
4 எனவே அவர் உணவுப் பந்தியிலிருந்து எழுந்து தமது மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு சால்வையை எடுத்து இடுப்பிலேக் கட்டிக் கொண்டார்.
nĩ ũndũ ũcio Jesũ agĩũkĩra, akiuma hau maarĩĩagĩra, akĩruta nguo yake ya igũrũ, akĩoya taurũ, akĩĩoha njohero.
5 அதற்குப் பின்பு, அவர் ஒரு பாத்திரத்திலே தண்ணீரை ஊற்றி, தம்முடைய சீடர்களின் கால்களைக் கழுவினார். பின் தம்முடைய இடுப்பிலே கட்டியிருந்தச் சால்வையினால் அவர்களுடைய கால்களைத் துடைக்கத் தொடங்கினார்.
Thuutha wa ũguo, agĩitĩrĩra maaĩ kĩraĩ-inĩ na akĩambĩrĩria gũthambia arutwo ake nyarĩrĩ, akĩmagiragia na taurũ ĩyo eyohete njohero.
6 இயேசு சீமோன் பேதுருவிடம் வந்தபோது, அவன் அவரிடம், “ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவப்போகிறீரா?” என்றான்.
Na aakinya harĩ Simoni Petero, Petero akĩmũũria atĩrĩ, “Hĩ, Mwathani, wee nĩwe ũgũũthambia nyarĩrĩ?”
7 இயேசு அதற்குப் பதிலாக, “நான் செய்வது இன்னதென்று உனக்கு இப்போது புரியாது, பின்பு நீ புரிந்துகொள்வாய்” என்றார்.
Jesũ akĩmũcookeria atĩrĩ, “Ndũngĩmenya ũrĩa ndĩreka rĩu, no thuutha-inĩ nĩũrĩmenya.”
8 அப்பொழுது பேதுரு அவரிடம், “இல்லை, நீர் ஒருபோதும் என் கால்களைக் கழுவக்கூடாது” என்றான். அதற்கு இயேசு, “நான் உன்னைக் கழுவாவிட்டால், என்னுடன் உனக்கு ஒரு பங்கும் இல்லை” என்றார். (aiōn g165)
Petero akĩmwĩra atĩrĩ, “Aca, wee ndũrĩ hĩndĩ ũngĩthambia nyarĩrĩ ciakwa.” Jesũ akĩmũcookeria atĩrĩ, “Itangĩgũthambia, ndũngĩgĩa ngwatanĩro na niĩ.” (aiōn g165)
9 அப்பொழுது சீமோன் பேதுரு, “ஆண்டவரே, அப்படியானால் என் கால்களை மாத்திரமல்ல, என்னுடைய கைகளையும் என்னுடைய தலையையுங்கூட கழுவும்!” என்றான்.
Simoni Petero akĩmũcookeria atĩrĩ, “Mwathani, ndũgaathambie o nyarĩrĩ ciiki, no gĩĩthambie moko o na mũtwe!”
10 அதற்கு இயேசுவோ, “குளித்தவன் தன் கால்களை மாத்திரமே கழுவ வேண்டியவனாயிருக்கிறான்; மற்றப்படி அவனுடைய முழு உடலும் சுத்தமாயிருக்கிறது. நீங்களும் சுத்தமாயிருக்கிறீர்கள். ஆனால் எல்லோரும் அல்ல” என்றார்.
Jesũ akĩmũcookeria atĩrĩ, “Mũndũ wĩthambĩte mwĩrĩ abatairio nĩ gwĩthamba o nyarĩrĩ ciiki; mwĩrĩ wake wothe nĩ mũtheru. Na inyuĩ mũrĩ atheru, o na gũtuĩka ti inyuothe.”
11 ஏனெனில் தம்மைக் காட்டிக்கொடுக்கப் போகிறவன் யார் என்று அவர் அறிந்திருந்தார். அதனாலேயே, “நீங்கள் எல்லோரும் சுத்தமானவர்கள் அல்ல” என்று சொன்னார்.
Nĩgũkorwo nĩamenyete ũrĩa ũkaamũkunyanĩra, na nĩkĩo oigire atĩ ti othe maarĩ atheru.
12 அவர்களுடைய கால்களைக் கழுவி முடித்தபின்பு, இயேசு தம்முடைய உடையை உடுத்தி கொண்டு, மீண்டும் தமக்குரிய இடத்தில் உட்கார்ந்தார். அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று உங்களுக்கு விளங்குகிறதா?” என்று கேட்டார்.
Aarĩkia kũmathambia nyarĩrĩ, akĩĩhumba nguo yake ya igũrũ, na agĩcooka harĩa aikarĩte. Akĩmooria atĩrĩ, “Nĩmwataũkĩrwo nĩ ũguo ndamwĩka?
13 மேலும் அவர், “நீங்கள் என்னைப் ‘போதகர்’ என்றும், ‘கர்த்தர்’ என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அப்படி அழைப்பது சரியே. ஏனெனில் நான் அவர்தான்.
Mũnjĩtaga ‘Mũrutani’ na ‘Mwathani’, na ũguo nĩguo kũrĩ, nĩgũkorwo ũguo nĩguo ndĩ.
14 அப்படியே கர்த்தரும் போதகருமாயிருக்கிற நானே உங்கள் கால்களைக் கழுவியிருக்கிறேன். நீங்களும்கூட ஒருவருக்கொருவர் உங்கள் கால்களைக் கழுவவேண்டும்.
Na rĩrĩ, kuona atĩ Niĩ, Mwathani na Mũrutani wanyu, nĩndamũthambia nyarĩrĩ-rĩ, o na inyuĩ nĩmwagĩrĩirwo mũthambanagie nyarĩrĩ mũndũ na ũrĩa ũngĩ.
15 ஏனெனில் நான் உங்களுக்குச் செய்ததுபோலவே, நீங்களும் ஒருவருக்கொருவர் செய்யவேண்டும் என்று நான் உங்களுக்கு ஒரு முன்மாதிரியைக் காண்பித்திருக்கிறேன்.
Nĩndamuonia kĩonereria nĩguo mwĩkage o ta ũguo ndamwĩka.
16 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், எந்த வேலையாளும் தன்னுடைய எஜமானைவிடப் பெரியவன் அல்ல. எந்தத் தூதனும் தன்னை அனுப்பியவனைவிடப் பெரியவன் அல்ல.
Ngũmwĩra atĩrĩ na ma, gũtirĩ ndungata nene gũkĩra mwathi wayo, kana mũtũmwo agakĩra ũrĩa ũmũtũmĩte.
17 நீங்கள் இப்போது இவைகளை அறிந்திருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் இவைகளைச் செய்தால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்” என்றார்.
Kuona atĩ rĩu nĩmũmenyete maũndũ maya, nĩmũrĩrathimagwo mwameka.
18 இயேசு தொடர்ந்து அவர்களிடம், “நான் உங்கள் எல்லோரைக் குறித்தும் பேசவில்லை; நான் எவர்களைத் தெரிந்துகொண்டேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் ‘என்னோடு உணவு உண்டவனே எனக்கு விரோதமாய் இருக்கிறான்’ என்ற வேதவசனம் நிறைவேற வேண்டும்.
“Ndiraaria ũhoro wanyu inyuothe; nĩnjũũĩ arĩa thuurĩte. No ũhoro ũyũ nĩ wa kũhingia maandĩko marĩa moigĩte atĩrĩ, ‘O ũrĩa tũrĩĩanagĩra irio nake nĩangarũrũkĩte.’
19 “அது நிகழும் முன்பதாகவே இப்போது நான் அதை உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அது நிகழும்போது, நானே அவர் என்று நீங்கள் விசுவாசிப்பீர்கள்.
“Ndĩramwĩra maũndũ maya rĩu matanekĩka, nĩgeetha hĩndĩ ĩrĩa marĩĩkĩka mũrĩnjĩtĩkia atĩ niĩ nĩ niĩ we.
20 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், நான் அனுப்புகிற எவனையாவது ஒருவன் ஏற்றுக்கொண்டால், அவன் என்னை ஏற்றுக்கொள்கிறான். யாராவது என்னை ஏற்றுக்கொண்டால் அவன் என்னை அனுப்பியவரை ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
Ngũmwĩra atĩrĩ na ma, ũrĩa wothe wamũkagĩra mũndũ ũrĩa ndũmĩte nĩ niĩ mwene aamũkagĩra; na ũrĩa wothe ũnyamũkagĩra, aamũkagĩra ũrĩa wandũmire.”
21 இயேசு இதைச் சொன்னபின்பு, அவர் உள்ளம் கலங்கியவராய், “மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுக்கப் போகிறான்” என்று வெளிப்படையாகச் சொல்கிறேன்.
Jesũ aarĩkia kuuga ũguo, agĩtangĩka ngoro na akiumbũra atĩrĩ, “Ngũmwĩra atĩrĩ na ma, ũmwe wanyu nĩekũngunyanĩra.”
22 அவருடைய சீடர்களோ அவர் யாரைக்குறித்துச் சொல்கிறார் என்று புரியாதவர்களாய், குழப்பத்துடன் ஒருவரையொருவர் பார்த்தார்கள்.
Nao arutwo ake makĩambĩrĩria kũrorana marigĩtwo nũũ gatagatĩ-inĩ kao aaragia ũhoro wake.
23 இயேசுவின் அன்பிற்குரிய சீடன் உணவுப் பந்தியிலே அவருக்கருகில் நெருங்கி உட்கார்ந்திருந்தான்.
Ũmwe wao, mũrutwo ũrĩa Jesũ endete, aikarĩte thĩ etiiranĩtie na Jesũ.
24 சீமோன் பேதுரு அவனுக்குச் சைகை காட்டி, இயேசு யாரைக்குறித்துப் பேசுகிறார் என்று அவரிடத்தில் கேட்கும்படி அவனுக்குச் சொன்னான்.
Nake Simoni Petero akĩheneria mũrutwo ũcio, akĩmwĩra atĩrĩ, “Ta mũũrie araaria ũhoro wa ũ.”
25 எனவே அவன் இயேசுவின் மார்பிலே சாய்ந்துகொண்டு, “ஆண்டவரே அவன் யார்?” என்று கேட்டான்.
Nake mũrutwo ũcio, agĩĩtiirania na Jesũ na akĩmũũria atĩrĩ, “Mwathani, ũcio nũũ ũraaria ũhoro wake?”
26 அதற்கு இயேசு, “நான் இந்த அப்பத் துண்டை பாத்திரத்தில் தோய்த்து யாருக்குக் கொடுக்கிறேனோ, அவனே” என்றார். பின்பு அந்த அப்பத் துண்டைத் தோய்த்து, சீமோனின் மகனான யூதாஸ் ஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
Jesũ agĩcookia atĩrĩ, “Nĩ ũrĩa ngũhe kĩenyũ gĩkĩ kĩa mũgate ndaarĩkia gũgĩtobokia thubu-inĩ.” Na aarĩkia gũtobokia kĩenyũ kĩa mũgate thubu-inĩ, agĩkĩhe Judasi Isikariota mũrũ wa Simoni.
27 யூதாஸ் அந்த அப்பத் துண்டை வாங்கிப் புசித்தான். பிறகு சாத்தான் அவனுக்குள்ளே புகுந்தான். இயேசு அவனிடம், “நீ செய்யப் போகிறதை விரைவாய்ச் செய்” என்றார்.
Judasi aarĩkia kũrĩa mũgate ũcio, Mũcukani akĩmũingĩra. Nake Jesũ akĩmwĩra atĩrĩ, “Ũrĩa ũkiriĩ gwĩka-rĩ, ĩka narua.”
28 ஆனால் இயேசு ஏன் இப்படி அவனுக்குச் சொன்னார் என்று சாப்பாட்டுப் பந்தியிலிருந்த ஒருவருக்கும் விளங்கவில்லை.
No gũtirĩ o na ũmwe warĩ metha-inĩ wataũkĩirwo nĩ gĩtũmi kĩa Jesũ kũmwĩra ũguo.
29 யூதாஸ் பணத்துக்குப் பொறுப்பாயிருந்தபடியால், பண்டிகைக்குத் தேவையானதை வாங்கும்படியோ, அல்லது ஏழைகளுக்கு எதையாவது கொடுக்கும்படியோ இயேசு அவனுக்குச் சொல்கிறார் என்று சிலர் நினைத்தார்கள்.
Na tondũ Judasi nĩwe waigaga mbeeca-rĩ, amwe magĩĩciiria Jesũ aamwĩraga agũre kĩrĩa kĩabataranĩtie nĩ ũndũ wa Gĩathĩ, kana aheane kĩndũ nĩ ũndũ wa arĩa athĩĩni.
30 அப்பத்தை வாங்கிக்கொண்டதும் யூதாஸ் புறப்பட்டுப் போனான். அப்பொழுது இரவு நேரமாயிருந்தது.
Nake Judasi aarĩkia kwamũkĩra mũgate ũcio, akiuma nja. Na kwarĩ ũtukũ.
31 யூதாஸ் போனபின்பு இயேசு அவர்களிடம், “இப்பொழுது மானிடமகனாகிய நான் மகிமைப்படுகிறேன்; இறைவனும் என்னில் மகிமைப்படுகிறார்.
Na Judasi aarĩkia gũthiĩ, Jesũ akiuga atĩrĩ, “Rĩu Mũrũ wa Mũndũ nĩagoocithĩtio, nake Ngai nĩagoocithĩtio arĩ thĩinĩ wake.
32 இறைவன் என்னில் மகிமைப்பட்டால், மானிடமகனாகிய என்னை இறைவனும் தம்மிலே மகிமைப்படுத்துவார்; சீக்கிரமாய் என்னை மகிமைப்படுத்துவார்.
Angĩkorwo Ngai nĩagoocithĩtio thĩinĩ wake, Ngai nĩekũgoocithia Mũriũ arĩ thĩinĩ wake mwene, na amũgoocithie o narua.
33 “பிள்ளைகளே, இன்னும் சிறிது காலமே நான் உங்களுடன் இருப்பேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது; இதை நான் யூதத்தலைவர்களுக்குச் சொன்னேன். இப்போது உங்களுக்கும் சொல்கிறேன்.”
“Ciana ciakwa, ngũkorwo na inyuĩ o gwa kahinda kanini. Nĩmũkanjaria, na o ta ũrĩa ndeerire Ayahudi, no taguo ngũmwĩra: Kũrĩa ndĩrathiĩ, inyuĩ mũtingĩhota gũũka.
34 நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைக் கொடுக்கிறேன்: “ஒருவரில் ஒருவர் அன்பாயிருங்கள். நான் உங்களில் அன்பாயிருந்ததுபோல, நீங்களும் ஒருவரில் ஒருவர் அன்பாயிருக்கவேண்டும்.
“Ngũmũhe rĩathani rĩerũ: Endanagai mũndũ na ũrĩa ũngĩ. O ta ũrĩa ndĩmwendete, o na inyuĩ no nginya mwendanage mũndũ na ũrĩa ũngĩ.
35 நீங்கள் இப்படி ஒருவரில் ஒருவர் அன்பாயிருந்தால், நீங்கள் என்னுடைய சீடர்கள் என்று எல்லோரும் அறிந்துகொள்வார்கள்” என்றார்.
Ũndũ ũyũ nĩguo ũrĩmenyithagia andũ othe atĩ mũrĩ arutwo akwa, mũngĩendana mũndũ na ũrĩa ũngĩ.”
36 அப்பொழுது சீமோன் பேதுரு அவரிடம், “ஆண்டவரே நீர் எங்கே போகிறீர்?” என்று கேட்டான். இயேசு அதற்கு மறுமொழியாக, “நான் போகிற இடத்துக்கு என்னைப் பின்தொடர்ந்துவர உன்னால் இப்போது முடியாது. பிறகு என்னைப் பின்தொடர்வாய்” என்றார்.
Simoni Petero akĩmũũria atĩrĩ, “Mwathani nĩ kũ ũgũthiĩ?” Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Kũrĩa ngũthiĩ, mũtingĩhota kũnũmĩrĩra rĩu, no nĩmũrĩnũmĩrĩra thuutha-inĩ.”
37 அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, ஏன் என்னால் இப்போது வரமுடியாது? நான் உமக்காக என் உயிரையும் கொடுப்பேன்” என்றான்.
Petero akĩmũũria atĩrĩ, “Mwathani nĩ kĩĩ kĩngĩgiria ngũrũmĩrĩre rĩu? Niĩ nĩngũruta muoyo wakwa nĩ ũndũ waku.”
38 அதற்கு இயேசு, “உண்மையிலேயே நீ எனக்காக உன் உயிரைக் கொடுப்பாயோ? மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய்” என்றார்.
Nake Jesũ akĩmũcookeria atĩrĩ, “Atĩ no ũrute muoyo waku nĩ ũndũ wakwa? Ngũkwĩra atĩrĩ na ma, ngũkũ ĩtanakũga, nĩũrĩngaana maita matatũ!

< யோவான் 13 >