< யோபு 36 >
1 தொடர்ந்து எலிகூ சொன்னதாவது:
Elihu toaa ne kasa so sɛ,
2 “சற்று என்னிடம் பொறுமையாயிரும், இறைவன் சார்பாய் நான் சொல்ல வேண்டியவற்றை நான் உமக்குக் காண்பிப்பேன்.
“Monto mo bo ase kakra mma me, na mɛkyerɛ mo sɛ aka bebree a ɛsɛ sɛ yɛka ma Onyankopɔn.
3 நான் அதிக தூரத்திலிருந்து என் அறிவைப் பெறுகிறேன்; என்னைப் படைத்தவருக்கே நீதி உரியது என்றும் நிரூபிப்பேன்.
Menya me nimdeɛ firi akyirikyiri; mɛka sɛ me Yɛfoɔ bu atɛntenenee.
4 என் வார்த்தைகள் பொய்யானவையல்ல என்று உறுதியாய்க் கூறுகிறேன்; பூரண அறிவுள்ள நான் உம்மோடு பேசுகிறேன்.
Monnye ntom sɛ me nsɛm yɛ nokorɛ turodoo; na meyɛ obi a ne nimdeɛ so wɔ mo mu.
5 “இறைவன் வல்லமையுள்ளவர், ஆகிலும் அவர் ஒருவரையும் தள்ளிவிடமாட்டார்; வல்லமையுள்ள அவர் தமது நோக்கத்தில் உறுதியுள்ளவர்.
“Onyankopɔn so, nanso, ɔntwiri nnipa; ɔkorɔn na ɔnhinhim ne botaeɛ mu.
6 அவர் கொடியவர்களை உயிர்வாழ விடுவதில்லை; துன்பப்படுகிறவர்களுக்கோ அவர்களுடைய உரிமைகளை வழங்குகிறார்.
Ɔmma amumuyɛfoɔ ntena nkwa mu, na ɔde amanehunufoɔ kyɛfa ma wɔn.
7 அவர் நேர்மையானவர்கள் மேலிருந்து தன் கண்களை அகற்றுவதில்லை; அவர் அவர்களை அரசர்களோடு அரியணையில் அமர்த்தி, அவர்களை என்றைக்கும் மேன்மைப்படுத்துகிறார்.
Ɔnnyi nʼani mfiri ɔteneneeni so. Ɔma wɔne ahemfo di adeɛ na ɔma wɔn so afebɔɔ.
8 ஆனால் மனிதர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, வேதனையின் கயிற்றினால் இறுக்கப்பட்டிருக்கும்போது,
Na sɛ wɔde mpokyerɛ gu nnipa na amanehunu ahoma akyekyere wɔn papee a,
9 அவர்கள் செய்தவற்றை இறைவன் அவர்களுக்குக் கூறுவார். அதாவது அவர்கள் அகந்தையாய் பாவம் செய்ததை அவர் சொல்வார்.
ɔka deɛ wɔayɛ kyerɛ wɔn sɛ wɔnam ahantan so ayɛ bɔne.
10 அவர் அவர்கள் சீர்திருந்துதலுக்குச் செவிகொடுத்து, தங்கள் தீமையிலிருந்து மனந்திரும்ப கட்டளையிடுகிறார்.
Ɔma wɔtie ntenesoɔ na ɔhyɛ wɔn sɛ wɔnnu wɔn ho wɔn bɔne ho.
11 அவர்கள் கீழ்ப்படிந்து அவருக்குப் பணிசெய்தால், அவர்கள் தங்கள் மீதியான நாட்களைச் செல்வத்திலும், மீதியான வருஷங்களை மனநிறைவிலும் கழிப்பார்கள்.
Sɛ wɔyɛ ɔsetie na wɔsom no a, wɔbɛdi yie wɔ wɔn ɛnna a aka no mu na wɔn mfeɛ nyinaa ayɛ anisɔ ama wɔn.
12 அடங்கி அவருக்குப் பணிசெய்யாவிட்டால், வாளினால் அழிந்து, அறிவில்லாமலே சாவார்கள்.
Na sɛ wɔantie no a, wɔbɛyera wɔ akofena ano, na wɔawuwu a wɔnni nimdeɛ.
13 “உள்ளத்தில் இறைவனற்றவர்கள் கோபத்தை வளர்த்துக்கொள்கிறார்கள்; அவர் அவர்களுக்கு விலங்கிடும்போதும் அவர்கள் உதவிக்காக அழுவதில்லை.
“Wɔn a wɔnnim Onyame no kora abufuo so; mpo sɛ ɔgu wɔn nkɔnsɔnkɔnsɔn a, wɔnsu mpɛ mmoa.
14 அவர்கள் கோவில்களிலிருக்கும் ஆண் விபசாரக்காரர் மத்தியில் தங்கள் இளமையிலேயே சாவார்கள்.
Wɔwuwu wɔn mmabunuberɛ mu wɔ adwaman mu, wɔ mmarima adwamanfoɔ a wɔtete abosonnan mu mu.
15 ஆனாலும் துன்பப்படுகிறவர்களை அவர் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களுடைய வேதனையில் அவர் அவர்களோடு பேசுகிறார்.
Nanso, wɔn a wɔhunu amane no, ɔgye wɔn; na ɔkasa kyerɛ wɔn wɔ wɔn haw mu.
16 “யோபுவே, இறைவன் உன்னைக் கட்டுப்பாடற்ற விசாலமான இடத்திற்கு கொண்டுவரவும், சுவையான உணவுகள் நிறைந்த பந்தியில் அமர்த்தவும், வேதனையின் பிடியிலிருந்து உன்னை விடுவிக்கவும் முயற்சிக்கிறார்.
“Ɔregye wo afiri ahohiahia mu de wo akɔ petee mu a ahokyere nnie, deɛ wowɔ asomdwoeɛ, na nnuane pa ayɛ wo ɛpono so ma.
17 கொடியவர்கள்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறக் காத்திருக்கிறீர்; நியாயத்தீர்ப்பும் நீதியுமே உம்மை ஆதரிக்கும்.
Nanso seesei, atemmuo a ɛfata amumuyɛfoɔ na aba wo so; atemmuo ne atɛntenenee asɔ wo mu.
18 செல்வங்களினால் ஒருவரும் உம்மைக் கவராதபடி எச்சரிக்கையாயிரும்; பெரிதான இலஞ்சம் உம்மை வழிவிலகிச் செல்ல இடங்கொடாதே.
Hwɛ yie na obi amfa ahonya annaadaa wo; mma adanmudeɛ kɛseɛ bi ntwe wo.
19 உமது செல்வங்களும் வல்லமையான எல்லா முயற்சிகளும் நீர் துன்பத்தில் அகப்படாதபடி உம்மைத் தாங்குமோ?
Wʼahonya anaasɛ mpo wʼahohaw bebrebe nyinaa enti, worenkɔ amanehunu mu anaa?
20 மக்களைத் தங்கள் வீடுகளிலிருந்து இழுத்துச் செல்வதற்காக நீர் இரவை வாஞ்சிக்காதிரும்.
Mpere anadwo ho, sɛ ɛmmɛpra nnipa mfiri wɔn afie mu.
21 தீமைசெய்யத் திரும்பாதபடி எச்சரிக்கையாயிரும்; ஏனெனில், நீர் துன்பத்தைவிட தீமையை தெரிந்துகொண்டீர்.
Hwɛ na woannane ankɔ bɔne ho, deɛ ayɛ sɛ wopɛ sene amanehunu.
22 “இறைவன் தமது வல்லமையில் உயர்த்தப்பட்டிருக்கிறார். அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
“Onyankopɔn yɛ kɛseɛ wɔ ne tumi mu. Hwan na ɔyɛ ɔkyerɛkyerɛfoɔ sɛ ɔno?
23 இறைவனுக்கு அவருடைய வழியைக் குறித்துக் கொடுத்தது யார்? அல்லது ‘நீர் அக்கிரமம் செய்தீர்’ என்று சொல்லியது யார்?
Hwan na wahyehyɛ nʼakwan ama no anaa waka akyerɛ no sɛ, ‘Woayɛ mfomsoɔ.’
24 மனிதர்கள் புகழ்ந்து பாடும் பாடல்களால் அவருடைய செயலை மேன்மைப்படுத்த நினைவுகூரும்.
Kae na kamfo nʼadwuma a nnipa de nnwontoɔ akamfo no.
25 அவர் செய்வதை எல்லா மனிதரும் காண்கிறார்கள்; அதைத் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறார்கள்;
Adasamma nyinaa ahunu; nnipa hwɛ haa firi akyirikyiri.
26 நமது விளங்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்ட இறைவன்! அவருடைய வருடங்களும் எண்ணிட முடியாதவை.
Onyankopɔn yɛ kɛseɛ, ɛboro yɛn nteaseɛ so! Ne mfeɛ dodoɔ mu nni hwehwɛbea.
27 “அவர் நீர்த்துளிகளை மேலே இழுத்து, அவற்றை ஆறுகளில் மழையாகப் பெய்யச் செய்கிறார்.
“Ɔtwetwe nsuo a ɛsosɔ, ma ɛdane osutɔ gu asutene mu;
28 மேகங்கள் மழையைப் பொழிகின்றன, அது மனிதர்மேல் தாரையாய்ப் பொழிகிறது.
na omununkum tɔ bosuo gu fam na osutɔ bebree gu adasamma so.
29 அவர் மேகங்களை எப்படி பரவுகிறார் என்றும், எப்படி முழங்குகிறார் என்றும் யாரால் விளங்கிக்கொள்ள முடியும்?
Hwan na ɔbɛtumi ate sɛdeɛ ɔtrɛtrɛ omununkum mu ase, sɛdeɛ ɔbobɔ mu firi nʼatenaeɛ?
30 அவர் தமது மின்னலைத் தம்மைச் சுற்றிலும் சிதறப்பண்ணி, கடலின் ஆழங்களை எப்படி மூடுகிறார் என்று பாரும்.
Hwɛ sɛdeɛ ɔhwete nʼanyinam mu wɔ ne ho ma ɛkɔ ɛpo bunu mu.
31 இவ்விதமாகவே அவர் மக்களை ஆளுகைசெய்து, ஏராளமான உணவையும் கொடுக்கிறார்.
Yei ne ɛkwan a ɔfa so di amanaman no so na ɔma aduane bu wɔn so.
32 அவர் தம் கரங்களை மின்னலினால் நிரப்பி, குறிப்பிட்ட இலக்கைத் தாக்கும்படி அதற்குக் கட்டளையிடுகிறார்.
Ɔde anyinam hyɛ ne nsam ma na ɔhyɛ no sɛ ɛnsi nʼagyiraeɛ.
33 அவருடைய இடிமுழக்கம் வரப்போகும் புயலை அறிவிக்கிறது; அதின் வருகையை மந்தைகள்கூடத் தெரிவிக்கும்.
Nʼaprannaa bɔ ahum a ɛreba no ho nkaeɛ; na anantwie mpo ma wɔhunu sɛ ɛreba.