< யோபு 24 >
1 “எல்லாம் வல்லவர் நியாயந்தீர்க்கும் காலத்தை மறைத்திருப்பது ஏன்? அவரை அறிந்தவர்கள் அந்நாட்களுக்காக வீணாய்க் காத்திருப்பதும் ஏன்?
“Adɛn nti na Onyankopɔn nhyɛ bere mma atemmu? Adɛn nti na ɛsɛ sɛ wɔn a wonim no no hwɛ saa da no anim nanso ɛmma da?
2 மனிதர் எல்லைக் கற்களைத் தள்ளிவைக்கிறார்கள்; அவர்கள் திருடிய மந்தைகளையே அவர்கள் மேய்க்கிறார்கள்.
Nnipa yiyi abo a wɔde ato ɔhye; na wɔde nguankuw a wɔawia kɔ hɔ adidi.
3 அநாதைகளின் கழுதைகளை அவர்கள் துரத்திவிடுகிறார்கள்; விதவைகளின் எருதை ஈட்டுப் பொருளாக வாங்குகிறார்கள்.
Wɔpam ayisaa mfurum na wogye akunafo anantwi sɛ awowaside.
4 அவர்கள் தேவையுள்ளவர்களை வழியிலிருந்து தள்ளிவிடுகிறார்கள்; அவர்களுடைய வன்முறையால் நாட்டிலுள்ள ஏழைகளை ஒழியப்பண்ணுகிறார்கள்.
Wosum ahiafo fi kwan so na wɔhyɛ asase no so ahiafo ma wɔkɔtetɛw.
5 காட்டுக் கழுதை பாலைவனத்தில் அலைவதுபோல், ஏழைகள் உணவு தேடி அலைகிறார்கள்; அவர்கள் பிள்ளைகளுக்குப் பாழ்நிலம் உணவளிக்கின்றது.
Sɛnea sare so mfurum yɛ no saa ara na ahiafo no yɛ wɔn adwuma de pɛ aduan; asase kesee no so na wonya aduan ma wɔn mma.
6 வயல்வெளிகளில் அவர்கள் தங்கள் உணவைச் சேர்க்கிறார்கள்; கொடியவர்களின் திராட்சைத் தோட்டத்தில் விடப்பட்டதை பொறுக்குகிறார்கள்.
Wɔboaboa mmoa aduan ano wɔ mfuw no so na wodi mpɛpɛ wɔ amumɔyɛfo bobe nturo mu.
7 அவர்கள் போர்த்துக்கொள்ள உடையில்லாமல் இரவை கழிக்கிறார்கள்; குளிரில் மூடிக்கொள்வதற்கு அவர்களிடம் ஒன்றுமே இல்லை.
Wonni ntama, na wɔda adagyaw anadwo; wonni hwee a wɔde kata wɔn ho wɔ awɔw mu.
8 மலைகளிலிருந்து வரும் மழையினால் அவர்கள் நனைகிறார்கள்; தங்குவதற்கு இடமின்றி பாறைகளில் மறைகிறார்கள்.
Mmepɔw so osu tɔ fɔw wɔn kyam na wɔtetare abotan no ho, efisɛ wonni nnae.
9 தந்தையற்ற பிள்ளை தாயின் மார்பிலிருந்து பிடுங்கப்படுகிறது; ஏழையின் குழந்தை கடனுக்காகக் கைப்பற்றப்படுகிறது.
Wɔtew ayisaa fi nufu ano; na wɔfa ohiani abotafowa de si ne ka anan mu.
10 ஏழைகள் உடையின்றி நடந்து, அரிக்கட்டுகளைச் சுமந்து, பசியாகவே இருக்கிறார்கள்.
Wɔnenam adagyaw a wonni ntama; wɔsoa awi afiafi, nanso ɔkɔm de wɔn ara.
11 அவர்கள் தாகத்தால் செக்கு ஆட்டி, ஒலிவ எண்ணெயை எடுக்கிறார்கள்; ஆலைகளில் திராட்சை இரசம் பிழிகிறார்கள்.
Wokyi ngo wɔn adan mu; wotiatia nsakyiamoa mu, nanso osukɔm de wɔn.
12 சாகிறவர்களின் அழுகை பட்டணத்திலிருந்து எழும்புகிறது, காயப்பட்டவர்கள் உதவிவேண்டி கதறி அழுகிறார்கள், ஆனாலும் இறைவன் அவர்கள் மன்றாட்டைக் கேட்கவில்லை.
Wɔn a wɔrewuwu no apinisi fi kuropɔn no mu, na apirafo kra su pɛ mmoa. Nanso Onyankopɔn mfa bɔne nto obiara so.
13 “கொடியவர்கள் ஒளியை எதிர்த்துக் கலகம் செய்கிறார்கள்; அவர்கள் ஒளியின் வழிகளை அறியாமலும், அதின் பாதைகளில் நிலைத்திராமலும் இருக்கிறார்கள்.
“Ebinom wɔ hɔ a wɔsɔre tia hann no, wɔn a wonnim nʼakwan anaasɛ wɔnnantew nʼatempɔn so no.
14 பொழுது விடிகிறபோது கொலையாளி எழுந்து, ஏழையையும் தேவை மிகுந்தவர்களையும் கொன்று, இரவில் திருடனைப்போல் திரிகிறான்.
Sɛ adekyee hann no kɔ a, owudifo no sɔre na okum ohiani ne mmɔborɔni; anadwo, mu owiawia ne ho sɛ ɔkorɔmfo.
15 விபசாரம் செய்கிறவனின் கண்கள் மாலை மங்கும்வரை காத்திருக்கின்றன; அவன், ‘என்னை ஒருவரும் பார்க்கமாட்டார்கள்’ என எண்ணி, தன் முகத்தையும் மறைத்துக்கொள்கிறான்.
Ɔwaresɛefo twɛn bere a anim rebiribiri; ɔka se, ‘obiara renhu me,’ na ɔde nʼanim hintaw.
16 பகலில் அடையாளம் பார்த்த வீடுகளை இரவில் கன்னமிடுகிறார்கள்; வெளிச்சத்தில் எதையும் செய்ய அவர்கள் விரும்புவதில்லை.
Sum mu na nnipa bubu apon wura afi mu, na adekyee, wɔtoto wɔn ho apon mu; wɔne hann nni hwee yɛ.
17 அவர்கள் எல்லோருக்கும் கடும் இருளே காலை நேரமாயிருக்கிறது; இருளின் பயங்கரங்களுடன் அவர்கள் நட்பு வைக்கிறார்கள்.
Sum kabii yɛ adekyee ma wɔn nyinaa; wɔne sum mu nneɛma a ɛyɛ hu fa nnamfo.
18 “அவர்கள் தண்ணீரின் மேலுள்ள நுரையாயிருக்கிறார்கள்; நாட்டில் அவர்களின் பங்கு சபிக்கப்பட்டிருப்பதினால், அவர்களுடைய திராட்சைத் தோட்டத்திற்கு ஒருவரும் போவதில்லை.
“Nanso wɔte sɛ ahuru a ɛte nsu ani; wɔadome wɔn kyɛfa wɔ asase no so, enti obiara nkɔ bobe nturo no mu.
19 வெப்பமும் வறட்சியும் உருகிய உறைபனியை பறித்துக்கொள்வதுபோல, பாதாளமும் பாவிகளை பறித்துக்கொள்ளும். (Sheol )
Sɛnea ɔhyew ne ɔpɛ hwim sukyerɛmma a anan kɔ no, saa ara na ɔda de wɔn a wɔayɛ bɔne kɔ ne no. (Sheol )
20 அவர்களைப் பெற்றெடுத்த கர்ப்பம் அவர்களை மறந்துவிடும், புழுக்கள் அவர்களை விருந்தாக உண்ணும். தீய மனிதர் இனி ஒருபோதும் நினைக்கப்படுவதில்லை, மரத்தைப்போல் அவர்கள் முறிக்கப்படுகிறார்கள்.
Awotwaa werɛ fi wɔn, na osunson di wɔn nam; nnipa bɔne de wɔnnkae wɔn bio na mmom wobubu te sɛ dua.
21 அவர்கள் பிள்ளையில்லாத மலடியின் சொத்தைப் பட்சிக்கிறார்கள், விதவைக்கும் இரக்கம் காட்டுவதில்லை.
Wɔde ɔbea bonin a onni ba yɛ hanam, na wonhu akunafo mmɔbɔ.
22 இறைவன் தன் வல்லமையினால் வலிமையானோரை வீழ்த்துகிறார்; அவர்கள் நிலைபெற்றிருந்தாலும், வாழ்வின் நிச்சயம் அவர்களுக்கு இல்லை.
Onyankopɔn nam ne tumi so twe atumfo kɔ; ɛwɔ mu sɛ wonya asetena pa de, nanso wonni nkwa ho bɔhyɛ.
23 இறைவன் அவர்களைப் பாதுகாப்புணர்வுடன் இருக்கவிட்ட போதிலும், அவருடைய கண்களோ அவர்களைப் பார்த்துக்கொண்டேயிருக்கின்றன.
Otumi ma wɔn tena ase asomdwoe mu, nanso nʼani wɔ wɔn akwan so.
24 சிறிது காலத்திற்கு உயர்த்தப்படுகிறார்கள், பின்பு இல்லாமல் போகிறார்கள். அவர்கள் தாழ்த்தப்பட்டு, மற்றவர்களைப் போல சேர்க்கப்படுகிறார்கள்; தானியக்கதிர்கள் வெட்டப்படுவதுபோல் வெட்டப்படுகிறார்கள்.
Wɔma wɔn so bere tiaa bi, na afei wonni hɔ bio; wɔbrɛ wɔn ase boaboa wɔn ano sɛ nnipa nyinaa; wotwitwa wɔn gu te sɛ aburow ti.
25 “இது இப்படியில்லாவிட்டால், நான் பொய்யன் என நிரூபித்து, என் வார்த்தைகளை வீண் என்று யார் சொல்லமுடியும்?”
“Sɛ eyi nte saa a, hena na obetumi agye me akyinnye na ama nea maka no ayɛ nsɛnhunu?”