< யோபு 22 >
1 அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
是においてテマン人エリパズこたへて曰く
2 “மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ? ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ?
人 神を益する事をえんや 智人も唯みづから益する而已なるぞかし
3 நீ நீதிமானாய் இருந்திருந்தாலும், எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ? உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன?
なんぢ義かるとも全能者に何の歡喜かあらん なんぢ行爲を全たふするとも彼に何の利益かあらん
4 “அவர் உன்னைக் கடிந்துகொண்டு, உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
彼汝の畏懼の故によりて汝を責め汝を鞫きたまはんや
5 உன் கொடுமை பெரிதானதல்லவோ? உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ?
なんぢの惡大なるにあらずや 汝の罪はきはまり無し
6 நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
即ち汝は故なくその兄弟の物を抑へて質となし 裸なる者の衣服を剥て取り
7 நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
渇く者に水を與へて飮しめず 饑る者に食物を施こさず
8 நீ நிலத்திற்கு உரிமையாளன். மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
力ある者土地を得 貴き者その中に住む
9 நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
なんぢは寡婦に手を空しうして去しむ 孤子の腕は折る
10 அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன; திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது.
是をもて網羅なんぢを環り 畏懼にはかに汝を擾す
11 அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; வெள்ளமும் உன்னை மூடுகிறது.
なんぢ黒暗を見ずや 洪水のなんぢを覆ふを見ずや
12 “வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
神は天の高に在すならずや 星辰の巓ああ如何に高きぞや
13 அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ?
是によりて汝は言ふ 神なにをか知しめさん 豈よく黒雲の中より審判するを得たまはんや
14 வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன; அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய்.
濃雲かれを蔽へば彼は見たまふ所なし 唯天の蒼穹を歩みたまふ
15 தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
なんぢ古昔の世の道を行なはんとするや 是あしき人の踐たりし者ならずや
16 அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
彼等は時いまだ至らざるに打絶れ その根基は大水に押流されたり
17 அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.
彼ら神に言けらく我儕を離れたまへ 全能者われらのために何を爲ことを得んと
18 இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
しかるに彼は却つて佳物を彼らの家に盈したまへり 但し惡人の計畫は我に與する所にあらず
19 அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
義しき者は之を見て喜び 無辜者は彼らを笑ふ
20 ‘பகைவர்கள் அழிய, நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
曰く我らの仇は誠に滅ぼされ 其盈餘れる物は火にて焚つくさる
21 “இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; உனக்குச் செழிப்பு உண்டாகும்.
請ふ汝神と和らぎて平安を得よ 然らば福祿なんぢに來らん
22 அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
請ふかれの口より教晦を受け その言語をなんぢの心に藏めよ
23 நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி, எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால், உன் பழைய நிலைமையை அடைவாய்.
なんぢもし全能者に歸向り且なんぢの家より惡を除き去ば汝の身再び興されん
24 நீ தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள்.
なんぢの寳を土の上に置き オフルの黄金を谿河の石の中に置け
25 அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும், உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார்.
然れば全能者なんぢの寳となり汝のために白銀となりたまふべし
26 அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
而してなんぢは又全能者を喜び且神にむかひて面をあげん
27 நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
なんぢ彼に祈らば彼なんぢに聽きたまはん 而して汝その誓願をつくのひ果さん
28 நீ தீர்மானிப்பது செய்யப்படும், உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும்.
なんぢ事を爲んと定めなばその事なんぢに成ん 汝の道には光照ん
29 மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
其卑く降る時は汝いふ昇る哉と 彼は謙遜者を拯ひたまふべし
30 அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”
かれは罪なきに非ざる者をも拯ひたまはん 汝の手の潔淨によりて斯る者も拯はるべし