< எரேமியா 27 >

1 யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது.
Tia paht tukun Zedekiah wen natul Josiah el tokosrala lun Judah, LEUM GOD El fahk nu sik
2 யெகோவா என்னிடம், “நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும், உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் போட்டுக்கொள்.
ngan orala soko mwe utuk ke sak ac kapriya ke kulun kosro ac filiya fin kwawuk.
3 பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்கள் மூலமாக, ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய நாடுகளின் அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பு.
Na LEUM GOD El fahk nu sik in supwala kas nu sin tokosra lun Edom, Moab, Ammon, Tyre, ac Sidon, sin mwet fulat aolyalos su tuku nu Jerusalem in sonol Tokosra Zedekiah.
4 அவர்களுடைய அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பவேண்டிய செய்தியாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இதை உங்களுடைய அரசர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள்.
LEUM GOD Kulana, God lun Israel, El fahk nu sik in sapkin nu selos tuh elos in fahk nu sin tokosra lalos lah LEUM GOD El fahk ouinge:
5 எனது மகா வலிமையாலும் நீட்டப்பட்ட புயத்தாலும் பூமியையும், அதிலுள்ள மனிதரையும், மிருகங்களையும் நான் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கே நான் அவைகளைக் கொடுக்கிறேன்.
“Ke ku lulap ac po kulana luk, nga orala faclu, mwet uh, ac ma orakrak nukewa su oasr faclu, na nga sang nu sin kutena mwet su nga sulela.
6 இப்பொழுது உங்கள் நாடுகள் எல்லாவற்றையும், பாபிலோன் அரசனும் எனது பணியாளனுமான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். காட்டு மிருகங்களையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துவேன்.
Nga pa sang mutunfacl inge nukewa nu ye ku lun mwet kulansap luk, Tokosra Nebuchadnezzar lun Babylonia, ac nga oru tuh finne kosro lemnak uh ac wi pac orekma nu sel.
7 அவனுடைய நாட்டிற்கான காலம் வரும்வரை எல்லா நாடுகளும் அவனுக்கும், அவன் மகனுக்கும், அவனுடைய பேரனுக்கும் பணிசெய்வார்கள். அதன்பின் அநேக நாடுகளும், பெரிய அரசர்களும், அவனை தங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்கள்.
Mutunfacl nukewa fah kulansupwal, ac elos fah oayapa kulansupu wen natul ac wen nutin natul, nwe ke sun pacl se mutunfacl sel uh ac musalla. Na mutunfacl sel ac fah kulansupu mutunfacl kulana ac tokosra fulat lalos.
8 “‘“ஆயினும், எந்த நாடாகிலும் அரசாகிலும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யாமலும், அவனுடைய நுகத்தின் கீழே தன் கழுத்தை வைக்காமலும் போனால், அந்த நாட்டை நான் தண்டிப்பேன். அந்த நாட்டை அவனுடைய கையால் நான் அழித்துத் தீர்க்கும்வரை நான் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
Tusruktu fin oasr kutena mutunfacl ku tokosrai su tia akos sap lal, na nga ac kai mutunfacl sacn ke mweun, sracl, ac mas lulap, nwe ke nga lela Nebuchadnezzar elan kunauselos nufon.
9 ஆகையால், ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும், கனவுகளுக்கு விளக்கம் கூறுவோருக்கும், செத்தவர்களின் ஆவியுடன் பேசுகிறவர்களுக்கும், சூனியக்காரருக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம்.
Nik kowos porongo mwet palu lowos, ku kutena mwet su fahk mu el ku in palye pacl fahsru uh — ke mweme, ku ke lolngok yurin mwet misa, ku ke inutnut. Elos nukewa fahk mu kowos in tia kulansupu tokosra lun Babylonia.
10 ஏனெனில் உங்கள் நாடுகளிலிருந்து உங்களைத் தூரமான இடத்திற்கு அகற்ற உதவும் பொய்களையே அவர்கள் உங்களுக்கு இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்கள் அழிவீர்கள்.
Elos kiapwekowos, ac elos ac oru in utukla kowos nu yen loesla liki acn suwos. Nga fah liskowosla, ac kowos fah kunausyukla.
11 ஆனால் எந்த நாடாவது பாபிலோன் அரசனின் நுகத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி அவனுக்குப் பணிசெய்தால், நான் அந்த நாட்டை அதன் சொந்த நாட்டிலேயே தங்கச்செய்து, நிலத்தைப் பண்படுத்தி அங்கே வாழவிடுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”’”
Tusruktu fin oasr kutena mutunfacl su akpusiselyal nu sin tokosra Babylonia ac orekma nu sel, na nga ac lela elan mutana in facl sel sifacna ac imai. Nga, LEUM GOD, pa fahk ma inge.”
12 நான் யூதாவின் அரசன் சிதேக்கியாவுக்கும் இதே செய்தியைக் கூறினேன். நான் அவனிடம், “நீங்கள் உங்களைப் பாபிலோன் அரசனின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அரசனுக்கும், அவனுடைய மக்களுக்கும் பணிசெய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் பிழைப்பீர்கள்.
Nga tuh fahk oapana nu sel Tokosra Zedekiah lun Judah: “Eiskowosyang nu sin tokosra Babylonia. Kulansupwal ac mwet lal, ac kowos fah moul.
13 நீயும் உன் மக்களும் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயாலும் ஏன் சாகவேண்டும்? பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யாத எந்த நாட்டையும் இவைகளால் அழிப்பதாக யெகோவா எச்சரித்திருக்கிறாரே.
Efu ku kom ac mwet lom in misa ke mweun, ku ke sracl, ku ke mas upa? Pa ingan ma LEUM GOD El fahk mu ac sikyak nu sin kutena mutunfacl ma tia fungyang nu sin tokosra lun Babylonia.
14 ஆகையால் ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்கிற இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள்.
Nimet porongo mwet palu su fahk mu kowos in tia filikowosyang nu sel. Elos kiapwekowos.
15 ‘நான் அவர்களை அனுப்பவில்லை’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் என் பெயரில் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். எனவே நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்களும் உங்களுக்கு இறைவாக்கு கூறுகிற இறைவாக்கினரும் அழிவீர்கள் என்று சொன்னேன்.’”
LEUM GOD sifacna El fahk mu El tiana supwalos, ac elos kikiap nu suwos Inel. Ke ma inge El fah liskowosla, ac kowos ac fah anwuki — kowos ac mwet palu su fahk kas kikiap inge nu suwos.”
16 அதன்பின் நான் ஆசாரியர்களிடமும், இந்த எல்லா மக்களிடமும் சொன்னதாவது, “யெகோவா சொல்வது இதுவே: யெகோவாவின் ஆலயத்திற்குரிய பொருட்கள் திரும்பவும் பாபிலோனிலிருந்து விரைவில் கொண்டுவரப்படும் என்று சொல்கிற உங்கள் இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். அவர்கள் உங்களுக்குப் பொய்யையே இறைவாக்காக உரைக்கிறார்கள்.
Na nga fahkang nu sin mwet tol ac mwet uh lah LEUM GOD El fahk: “Nimet porongo mwet palu su fahk mu ma saok lun Tempul fah folokinyukme liki acn Babylonia ke pacl na sa. Elos kikiap nu suwos.
17 அவர்களுக்குச் செவிகொடுக்க வேண்டாம். பாபிலோன் அரசனுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது உயிர் வாழ்வீர்கள். இந்தப் பட்டணம் ஏன் பாழடைய வேண்டும்?
Nimet porongalos! Filikowosyang nu inpoun tokosra Babylonia ac kowos fah moul! Efu ku siti se inge in sie acn oan musalla?
18 ஆனால் அந்த இறைவாக்கு உரைப்போர் உண்மையான இறைவாக்கினராய் இருந்து, யெகோவாவின் வார்த்தை அவர்களுடன் இருந்தால், அவர்கள் சேனைகளின் யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்கட்டும். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திலும், யூதா அரசர்களின் அரண்மனையிலும், எருசலேமிலும் மீதியான பணிப்பொருட்கள் பாபிலோனுக்குப் போகாமலிருக்க மன்றாடட்டும்.
Elos fin mwet palu pwaye, ac fin kas luk pa oasr selos, lela elos in siyuk sik, LEUM GOD Kulana, in tia fuhlela ma saok lula in Tempul ac inkul fulat lun tokosra, in utukla nu Babylonia.” (
19 ஏனெனில் அந்தத் தூண்கள், கடல் தொட்டி, அசையும் ஆதாரங்கள், பட்டணத்தில் விடப்பட்ட மற்ற பணிப்பொருட்கள் யாவற்றையும் குறித்துச் சேனைகளின் யெகோவா இப்படிச் சொல்கிறார்:
Tuh pa inge ma LEUM GOD Kulana El fahk ke sru, ke tacng bronze, ke mwe wiwa, ac kutu pac ma saok lula in Tempul.
20 இவற்றைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் பாபிலோனுக்குக் கொண்டுபோகவில்லை. யூதாவின் அரசன் யோயாக்கீமின் மகன் எகொனியாவுடன் யூதாவிலும், எருசலேமிலும் இருந்த உயர் அதிகாரிகளையும் பாபிலோனுக்கு நாடுகடத்தியபோது இவற்றைக் கொண்டுபோகவில்லை.
Tokosra Nebuchadnezzar lun Babylonia el tuh tia usla ma inge ke pacl se el usalla Tokosra Jehoiachin lun Judah, wen natul Jehoiakim, ac mwet leum nukewa lun Judah ac Jerusalem, liki Jerusalem nu in sruoh in acn Babylonia.)
21 ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, ஆலயத்திலும் யூதா அரசனின் அரண்மனையிலும் எருசலேமிலும் விடப்பட்ட பொருட்களைக் குறித்துச் சொல்வது இதுவே:
“Lohng ma nga LEUM GOD Kulana, God lun Israel, fahk ke ma saok lula in Tempul, oayapa in lohm sin tokosra in acn Jerusalem:
22 அவை பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். நான் அவைகளை விசாரிக்கும் நாள்வரைக்கும் அவைகள் அங்கேயே தொடர்ந்து இருக்கும்; நான் அவைகளைத் திரும்பவும் கொண்டுவந்து எருசலேமில் மீண்டும் வைப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.”
Ma inge ac fah utukla nu Babylonia, na ac fah oan we nwe ke pacl se nga sifil lohang nu kac. Toko nga fah folokonma ac filiya in acn se inge. Nga, LEUM GOD, pa fahk ma inge.”

< எரேமியா 27 >