< யாக்கோபு 5 >
1 செல்வந்தர்களே, கேளுங்கள், கவனமாய் நடவுங்கள். உங்கள்மேல் வரப்போகும் துன்பங்களுக்காக அழுது புலம்புங்கள்.
ଅଃବେ ଦଃକା, ଏ ମାଜନ୍ ଲକ୍ମଃନ୍, ତୁମିମଃନାର୍ ଉହ୍ରେ ଆସୁଲା ଦୁକ୍ ଦଃଣ୍ଡାର୍ ଗିନେ ଏତାୟ୍ ଏତାୟ୍ କଃରି କାନ୍ଦା ଆର୍ ରଃଦନ୍ କଃରା ।
2 உங்கள் செல்வம் அழிவுக்குள்ளானது. உங்கள் உடைகளையோ பூச்சிகள் அரித்துவிட்டன.
ତୁମିମଃନାର୍ ଦଃନ୍ବିତ୍ ନଃସ୍ଟ୍ ଅୟ୍ଲିନି, ତୁମିମଃନାର୍ ବଃସ୍ତର୍କେ ଅଳ୍ମା କାୟ୍ଲାୟ୍ନି,
3 உங்கள் தங்கமும் வெள்ளியும் துருப்பிடித்துவிட்டன. அவற்றில் ஏற்பட்ட துருவே, உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லும். அது உங்கள் உடலை நெருப்பைப்போல் தின்றுவிடும். இந்தக் கடைசிக் காலத்தில் செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறீர்களே.
ଆରେକ୍ ତୁମାର୍ ସନା ଆର୍ ରୁହାୟ୍ କିଲୁଆ ଲାଗ୍ଲିନି, ଆର୍ ସେ କିଲୁଆ ତୁମାର୍ ବିରଦେ ସାକି ଦଃୟ୍ଦ୍ ଆର୍ ଜୟ୍ ହର୍ ତୁମିମଃନାର୍ ଗଃଗାଳ୍କେ କାୟ୍ଦ୍ । ଇ ସେସ୍କାଳେ ତୁମିମଃନ୍ ଦଃନ୍ ଅଃର୍ଜି ଆଚାସ୍ ।
4 இதோ, உங்கள் வயல்களின் வேலையாட்களுக்கு நீங்கள் கொடுக்கத் தவறிய கூலிப்பணம் உங்களுக்கு எதிராய் கூக்குரலிடுகிறதே! அறுவடை செய்தவர்களின் அழுகைக்குரல், எல்லாம் வல்ல கர்த்தரின் காதுகளுக்கு எட்டியிருக்கிறதே!
ଦଃକା, ତୁମାର୍ ହଃଦାର୍ ତାସ୍ କାଟୁମଃନ୍କେ ଟକିକଃରି ତୁମିମଃନ୍ ଜୁୟ୍ ବୁତି ନଃଦିଆସ୍, ସେମଃନ୍ ତୁମାର୍ ବିରଦେ କାନ୍ଦୁଲାୟ୍, ଆରେକ୍ ତାସ୍ କାଟୁମଃନାର୍ କାନ୍ଦ୍ତାର୍ ସଃର୍ଗାର୍ ସଃଇନ୍ ମଃନାର୍ ମାପ୍ରୁ ସୁଣିଆଚେ ।
5 பூமியிலே நீங்கள் சொகுசாக உங்கள் சொந்த இன்பங்களுக்காகவே வாழ்ந்தீர்கள். அவ்வாறு நீங்கள், அறிவில்லாமல் உங்கள் இருதயங்களைக் கொழுக்கப் பண்ணியிருக்கிறீர்கள்!
ତୁମିମଃନ୍ ହୁର୍ତିବିଏ ସୁକ୍ ବୟଃଗ୍ କଃଲାସ୍ ଆର୍ ମଃନ୍ ସଃର୍ଦାୟ୍ ଦିନ୍ କାଟି ଆଚାସ୍, ତୁମିମଃନ୍ ମଃର୍ନ୍ ଦିନାର୍ ଗିନେ ନିଜ୍କେ ଦୁମା କଃରି ଆଚାସ୍ ।
6 உங்களை எதிர்க்காத குற்றமற்ற மனிதர்களையும்கூட குற்றவாளிகளாய்த் தீர்த்து கொலைசெய்தீர்கள்.
ତୁମିମଃନ୍ ଦଃର୍ମି ଲକ୍କେ ଦସି କଃରି ମଃର୍ନେ ମାରି ଆଚାସ୍, ସେ ତୁମିମଃନାର୍ ବିରଦ୍ ନଃକେରେ ।
7 ஆகையால் பிரியமானவர்களே, கர்த்தருடைய வருகைவரைக்கும் பொறுமையுள்ளவர்களாக இருங்கள். இதோ, நிலம் அதன் மதிப்புமிக்க விளைச்சலைக் கொடுக்கும்வரைக்கும் பயிரிடுகிறவன் எவ்வளவாய் காத்திருக்கிறான். அவன் கோடை மழைக்காகவும், மாரி மழைக்காகவும் எவ்வளவு பொறுமையாகக் காத்திருக்கிறான்.
ବଃଲେକ୍, ଏ ବାୟ୍ବେଣିମଃନ୍, ମାପ୍ରୁ ଆସ୍ତା ହଃତେକ୍ ସାସ୍ ଦଃରି ରିଆ । ଦଃକା, ତାସି ତାସ୍ ହଃଦାୟ୍ ହୁଣି ବଃଡେମଲାର୍ ହଃଳ୍ ହାଉଁକେ ସାସ୍ ଦଃରି ଆରୁମ୍ ଆର୍ ସେସ୍ ବଃର୍ସା ନଃଉତା ହଃତେକ୍ ଜାଗି ରଃୟ୍ଦ୍ ।
8 நீங்களும் பொறுமையுடையவர்களாய், உறுதியுடன் நில்லுங்கள். ஏனெனில் கர்த்தருடைய வருகை நெருங்கி இருக்கிறது.
ତୁମିମଃନ୍ ହେଁ ସଃମ୍ବାଳି କଃରି ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ମଃନ୍କେ ତିର୍ କଃରା, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ମାପ୍ରୁର୍ ଆସ୍ତା ଦିନ୍ ଚଃମେ ଅୟ୍ଲିନି ।
9 பிரியமானவர்களே, ஒருவருக்கொருவர் விரோதமாக முறுமுறுக்காதீர்கள். அப்படிச் செய்தால், நீங்கள் நியாயத்தீர்ப்புக்கு உட்படுவீர்கள். நியாயாதிபதி வாசற்படியிலே நிற்கிறாரே!
ଏ ବାୟ୍ବେଣିମଃନ୍, ତୁମିମଃନ୍ ଜଃନ୍କଃରି ଡଃଣ୍ଡ୍ ନଃହାଉଆସ୍, ଇତାର୍ ଗିନେ ଏକ୍ଆରେକାର୍ ଦଃସ୍ ଦଃରା ନାୟ୍, ଦଃକା, ବିଚାର୍କଃର୍ତା ଲକ୍ ଦୁଆର୍ଲଃଗେ ଟିଆ ଅୟ୍ଆଚେ ।
10 பிரியமானவர்களே, துன்புறுத்தலின் மத்தியிலும், பொறுமைக்கு உதாரணமாக, கர்த்தருடைய பெயரில் பேசிய இறைவாக்கினரையே எடுத்துக்கொள்ளுங்கள்.
ଏ ବାୟ୍ବେଣିମଃନ୍, ଜୁୟ୍ ବାବ୍ବାଦିମଃନ୍ ମାପ୍ରୁର୍ ନାଉଁଏ କଃତା କୟ୍ରିଲାୟ୍, ସେମଃନ୍କେ ମଃନେ ଏତାଉଆ । ସେମଃନାର୍ ଦୁକ୍ ବୟଃଗ୍ ଆର୍ ସଃମ୍ବାଳ୍ଲାର୍ ଦଃକି ତୁମିମଃନ୍ ସିକା ।
11 நீங்கள் அறிந்திருக்கிறபடி, சகிப்புடன் செயல்பட்டவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று நாங்கள் எண்ணுகிறோமே. யோபுவின் சகிப்புத் தன்மையைப்பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். இறுதியில் கர்த்தர் என்ன செய்தார் என்பதையும் கண்டுகொண்டீர்கள். கர்த்தர் மனதுருக்கமும் இரக்கமும் நிறைந்தவராய் இருக்கிறாரே.
ଦଃକା, ଜୁୟ୍ମଃନ୍ ସଃମ୍ବାଳି ରିଲାୟ୍, ଅଃମିମଃନ୍ ସେମଃନାର୍ ବାୟ୍ଗ୍ ବଃଲି କଃଉଁଲୁ । ତୁମିମଃନ୍ ଆୟୁବାର୍ ସଃମ୍ବାଳ୍ତା କଃତା ସୁଣି ଆଚାସ୍, ଆରେକ୍ ମାପ୍ରୁର୍ ସଃରାସଃରି କାମ୍ ଦଃକି ଜାଣି ଆଚାସ୍ ଜେ, ସେ ଦଃୟାୟ୍ ହୁର୍ନ୍ ।
12 எல்லாவற்றிற்கும் மேலாக, எனக்கு பிரியமானவர்களே, ஆணையிட வேண்டாம். பரலோகத்தின்மேலோ, பூமியின்மேலோ, அல்லது வேறு எதன்மேலோ ஆணையிட வேண்டாம். நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு உங்கள் பேச்சு, ஆம் என்றால் “ஆம்” என்றும்; இல்லை என்றால் “இல்லை” என்றும் இருக்கட்டும்.
ମୁଳ୍କଃରି, ଏ ବାୟ୍ବେଣିମଃନ୍, ହଃର୍ମାଣ୍ କଃରା ନାୟ୍, ସଃର୍ଗାର୍ ହଃର୍ମାଣ୍ ଅଃଉଅ କି ହୁର୍ତିବିର୍ ହଃର୍ମାଣ୍ ଅଃଉଅ କି ବିନ୍ କୁୟ୍ ହଃର୍ମାଣ୍ ଅଃଉଅ; ମଃତର୍ ତୁମାର୍ ହେଁ କଃତା ହେଁ ଅଃଉଅ, ନାୟ୍ କଃତା ନାୟ୍ ଅଃଉଅ, ତଃନ୍ଅୟ୍ଲେକ୍ ତୁମିମଃନ୍ ଇସ୍ୱରାର୍ ବିଚାର୍ ବିନ୍ ଡଃଣ୍ଡ୍ ନଃହାଉଆସ୍ ।
13 உங்களில் யாராவது துன்பப்பட்டால், அவன் மன்றாடட்டும். யாராவது மகிழ்ச்சியாக இருந்தால், அவன் துதிப் பாடல்களைப் பாடட்டும்.
ତୁମିମଃନାର୍ ବିତ୍ରେ କାୟ୍ କେ ଦୁକ୍ ବୟଃଗ୍ କଃରୁଲାସ୍? ସେ ପାର୍ତ୍ନା କଃର । କେ କାୟ୍ ସଃର୍ଦାୟ୍ ଆଚେ? ସେ ମାପ୍ରୁର୍ ଗିତ୍ କୟ୍ ଇସ୍ୱର୍କେ ଦନ୍ୟବାଦ୍ କଃର୍ ।
14 உங்களில் யாராவது வியாதிப்பட்டால், அவன் திருச்சபையின் தலைவர்களை அழைக்கட்டும், தலைவர்கள் கர்த்தருடைய பெயராலே எண்ணெய் பூசி, அவனுக்காக மன்றாடுவார்கள்.
ତୁମିମଃନାର୍ ବିତ୍ରେ କେ କାୟ୍ ମଃଳୁ ହଃଳି ଆଚେ? ସେ ମଣ୍ଡ୍ଳିର୍ ପାରାଚିନ୍ମଃନ୍କେ କୁଦାଅ ସେମଃନ୍ ମାପ୍ରୁର୍ ନାଉଁଏ ଚିକଣ୍ ଲାଗାୟ୍ ତାର୍ ଗିନେ ପାର୍ତ୍ନା କଃରତ୍ ।
15 விசுவாசத்துடன் செய்யப்படும் மன்றாட்டு நோயாளியைச் சுகமடையச் செய்யும்; கர்த்தர் அவனை எழுப்புவார். அவன் பாவம் செய்திருந்தால், அது அவனுக்கு மன்னிக்கப்படும்.
ବିସ୍ୱାସାର୍ ପାର୍ତନା ସେ ରଗିକେ ଉଜ୍ କଃରେଦ୍, ଆରେକ୍ ମାପ୍ରୁ ତାକ୍ ଉଟାୟ୍ଦ୍ ଆର୍ ଜଦି ସେ ହାହ୍ କଃରି ରଃୟ୍ଦ୍, ତଃବେ ତାକ୍ କେମା କଃରେଦ୍ ।
16 ஆகவே நீங்கள், உங்களுடைய பாவங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, நீங்கள் சுகமடைவதற்காக, ஒருவருக்காக ஒருவர் மன்றாடுங்கள். ஒரு நீதிமானின் மன்றாட்டு வல்லமையுடையதாகவும், பயனை விளைவிக்கிறதாகவும் இருக்கிறது.
ତଃବେ, ଏକ୍ ଆରେକାର୍ ଚଃମେ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ହାହ୍ ମାନିଜଃହା, ଆରେକ୍ ଉଜ୍ ଅଃଉଁକେ ଏକ୍ଆରେକାର୍ ଗିନେ ପାର୍ତନା କଃରା । ଦଃର୍ମି ଲକାର୍ ପାର୍ତ୍ନା ଗାଦେକ୍ କାମ୍ ସାଦୁନ୍ କଃରୁ ହାରେ ।
17 எலியா நம்மைப்போன்ற ஒரு மனிதனே. அவன் மழை பெய்யக்கூடாது என்று ஊக்கமாய் மன்றாடினான்; அதனால் அந்த நாட்டின்மேல் மூன்றரை வருடங்களாக மழை பெய்யவில்லை.
ଏଲିୟ ଅଃମାର୍ ହର୍ ଲକ୍ ରିଲା; ବଃର୍ସା ନଃଉତା ଗିନେ ସେ ଗଟେକ୍ ମଃନେ ପାର୍ତ୍ନା କଃଲା, ଆରେକ୍ ତିନି ବଃର୍ସ୍ ଚଅ ମାସ୍ ହଃତେକ୍ ହୁର୍ତିବିଏ ବଃର୍ସା ନଃୟ୍ଲି ।
18 எலியா மீண்டும் மன்றாடினான்; அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது. பூமியும் அதன் விளைச்சலைக் கொடுத்தது.
ସେ ଆରେକ୍ ଗଟ୍ତର୍ ପାର୍ତ୍ନା କଃଲାକ୍ ଅଃଗାସେ ହୁଣି ବଃର୍ସା ଅୟ୍ଲି, ଆରେକ୍ ବୁୟ୍ଁ ଅଃହ୍ଣାର୍ ହଃଳ୍ ହଃଳାୟ୍ଲି ।
19 எனக்கு பிரியமானவர்களே, உங்களில் யாராவது சத்தியத்தைவிட்டு வழிவிலகிப் போகும்போது, ஒருவன் அவனைத் திரும்பவும் நல்வழிக்குக் கொண்டுவந்தால்,
ଏ ମର୍ ବାୟ୍ବେଣିମଃନ୍, ତୁମାର୍ ବିତ୍ରେ ଜଦି କେ ସଃତ୍ ବାଟେ ହୁଣି ବାଣା ଅୟ୍ଦ୍, ଆରେକ୍ କେ ତାକ୍ ବାଉଳାୟ୍ ଆଣେଦ୍,
20 இதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்: ஒரு பாவியை அவனுடைய குற்றவழியிலிருந்து திரும்பச் செய்கிறவன், மரணத்திலிருந்து அவனை இரட்சித்து, அந்தப் பாவியின் ஏராளமான பாவங்கள் மன்னிக்கப்பட்டு, மூடப்படுவதற்கு வழிவகுக்கிறான்.
ତଃବେ ଜୁୟ୍ଲକ୍ ହାହିକେ ନଃସ୍ଟ୍ବାଟେ ହୁଣି ବାଉଳାୟ୍ ଆଣେଦ୍, ସେ ଜେ ତାର୍ ଆତ୍ମାକେ ମଃର୍ନେ ହୁଣି ମୁକ୍ଳାୟ୍ଦ୍ ଆର୍ ତାର୍ ନିଜାର୍ ସଃବୁ ହାହ୍ କେମା ଅୟ୍ଦ୍, ଇରି ଜାଣା ।