< யாக்கோபு 3 >
1 என் சகோதரரே, உங்களில் பலர் போதகர்கள் ஆவதற்கு விரும்பாதீர்கள். ஏனெனில் போதிக்கிற நாம் அதிக தீர்ப்பிற்கு உட்படுவோம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே.
హే మమ భ్రాతరః, శిక్షకైరస్మాభి ర్గురుతరదణ్డో లప్స్యత ఇతి జ్ఞాత్వా యూయమ్ అనేకే శిక్షకా మా భవత|
2 நாம் எல்லோரும் பலவிதங்களில் தவறு செய்கிறோம். தன் பேச்சில் ஒருபோதும் தவறாதவனாக யாராவது இருந்தால், அவனே முழுநிறைவு பெற்ற மனிதன். இப்படிப்பட்டவன், தனது முழு உடலையும் அடக்கி ஆளும் ஆற்றல் உடையவன்.
యతః సర్వ్వే వయం బహువిషయేషు స్ఖలామః, యః కశ్చిద్ వాక్యే న స్ఖలతి స సిద్ధపురుషః కృత్స్నం వశీకర్త్తుం సమర్థశ్చాస్తి|
3 குதிரைகள் நமக்குக் கீழ்ப்படியும்படி, அவைகளுடைய வாய்களில் கடிவாளங்களைப் போடும்போது, அவைகளின் முழு உடலையும் நாம் கட்டுப்படுத்துகிறோம்.
పశ్యత వయమ్ అశ్వాన్ వశీకర్త్తుం తేషాం వక్త్రేషు ఖలీనాన్ నిధాయ తేషాం కృత్స్నం శరీరమ్ అనువర్త్తయామః|
4 அல்லது கப்பல்களை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவை மிகப்பெரியவைகளாய் இருந்தும், பலத்த காற்றினாலேயே அடித்துச் செல்லப்பட்டாலும், கப்பலின் மாலுமி தான் விரும்புகின்ற திசையை நோக்கி, ஒரு சிறு சுக்கானாலே அவற்றைத் திருப்புகிறான்.
పశ్యత యే పోతా అతీవ బృహదాకారాః ప్రచణ్డవాతైశ్చ చాలితాస్తేఽపి కర్ణధారస్య మనోఽభిమతాద్ అతిక్షుద్రేణ కర్ణేన వాఞ్ఛితం స్థానం ప్రత్యనువర్త్తన్తే|
5 அதேபோலவே, நாவும் உடலின் ஒரு சிறு அங்கமாயிருக்கிறது; ஆனால் அது பெரும் அளவில் பெருமை பேசுகிறது. ஒரு சிறு நெருப்புப் பொறி எவ்வளவு பெரிய காட்டையும் எரித்துவிடுகிறது என்பதை எண்ணிப்பாருங்கள்.
తద్వద్ రసనాపి క్షుద్రతరాఙ్గం సన్తీ దర్పవాక్యాని భాషతే| పశ్య కీదృఙ్మహారణ్యం దహ్యతే ఽల్పేన వహ్నినా|
6 நாவும் நெருப்பாக இருக்கிறது. நமது உடலின் அங்கங்களுக்குள்ளே, நாவு ஒரு தீமை நிறைந்த உலகம் என்றே சொல்லலாம். அது ஒருவனை முழுவதுமாகவே சீர்கெடுத்து, அவனுடைய வாழ்க்கை முழுவதையும் எரியும் நெருப்பாக்கி விடுகிறது. அதுவும் நரகத்தின் நெருப்பினால் மூட்டப்படுகிறது. (Geenna )
రసనాపి భవేద్ వహ్నిరధర్మ్మరూపపిష్టపే| అస్మదఙ్గేషు రసనా తాదృశం సన్తిష్ఠతి సా కృత్స్నం దేహం కలఙ్కయతి సృష్టిరథస్య చక్రం ప్రజ్వలయతి నరకానలేన జ్వలతి చ| (Geenna )
7 எல்லா விதமான மிருகங்களும், பறவைகளும், ஊரும் பிராணிகளும், கடலில் வாழும் உயிரினங்களும் மனிதனால் அடக்கிக் கட்டுப்படுத்தப்படுகின்றன. அப்படிக் கட்டுப்படுத்தப்பட்டும் இருக்கின்றன.
పశుపక్ష్యురోగజలచరాణాం సర్వ్వేషాం స్వభావో దమయితుం శక్యతే మానుషికస్వభావేన దమయాఞ్చక్రే చ|
8 ஆனால் நாவையோ ஒருவனாலும் அடக்கிக் கட்டுப்படுத்த முடியாது. அது கட்டுக்கடங்காத கொடியது. மரணத்தை விளைவிக்கும் விஷம் நிறைந்ததாயிருக்கிறது.
కిన్తు మానవానాం కేనాపి జిహ్వా దమయితుం న శక్యతే సా న నివార్య్యమ్ అనిష్టం హలాహలవిషేణ పూర్ణా చ|
9 நாம் நாவினாலே நமது கர்த்தரையும், பிதாவையும் துதிக்கிறோம். அதே நாவினாலேயே இறைவனுடைய சாயலாக படைக்கப்பட்ட மனிதர்களைச் சபிக்கிறோம்.
తయా వయం పితరమ్ ఈశ్వరం ధన్యం వదామః, తయా చేశ్వరస్య సాదృశ్యే సృష్టాన్ మానవాన్ శపామః|
10 ஒரே வாயிலிருந்து துதியும், சாபமும் வருகிறது. எனக்கு பிரியமானவர்களே, இவ்விதமாய் இருக்கக்கூடாதே.
ఏకస్మాద్ వదనాద్ ధన్యవాదశాపౌ నిర్గచ్ఛతః| హే మమ భ్రాతరః, ఏతాదృశం న కర్త్తవ్యం|
11 ஒரே ஊற்றிலிருந்து நல்ல தண்ணீரும் உப்புத் தண்ணீரும் சுரக்க முடியுமா?
ప్రస్రవణః కిమ్ ఏకస్మాత్ ఛిద్రాత్ మిష్టం తిక్తఞ్చ తోయం నిర్గమయతి?
12 எனக்கு பிரியமானவர்களே, அத்திமரம் ஒலிவப்பழங்களையும், திராட்சைக்கொடி அத்திப்பழங்களையும் விளைவிக்குமா? அதேபோல், உப்புத் தண்ணீர் ஊற்றிலிருந்து நல்ல தண்ணீர் வருவதுமில்லை.
హే మమ భ్రాతరః, ఉడుమ్బరతరుః కిం జితఫలాని ద్రాక్షాలతా వా కిమ్ ఉడుమ్బరఫలాని ఫలితుం శక్నోతి? తద్వద్ ఏకః ప్రస్రవణో లవణమిష్టే తోయే నిర్గమయితుం న శక్నోతి|
13 உங்களுக்குள்ளே ஞானம் உள்ளவன் யார்? அறிவுள்ளவன் யார்? அவன் தன்னுடைய நல்ல வாழ்க்கையினாலே அதைக் காண்பிக்கட்டும். ஞானத்திலிருந்து வரும் மனத்தாழ்மையினால் செயல்களைச் செய்து காண்பிக்கட்டும்;
యుష్మాకం మధ్యే జ్ఞానీ సుబోధశ్చ క ఆస్తే? తస్య కర్మ్మాణి జ్ఞానమూలకమృదుతాయుక్తానీతి సదాచారాత్ స ప్రమాణయతు|
14 ஆனால், உங்களுடைய இருதயங்களிலே கசப்பான பொறாமையையும், சுயநல ஆசையையும் இருக்குமேயானால், அதைக்குறித்து பெருமைப்பட வேண்டாம், சத்தியத்திற்கு எதிராக பொய் பேசவேண்டாம்.
కిన్తు యుష్మదన్తఃకరణమధ్యే యది తిక్తేర్ష్యా వివాదేచ్ఛా చ విద్యతే తర్హి సత్యమతస్య విరుద్ధం న శ్లాఘధ్వం నచానృతం కథయత|
15 அப்படிப்பட்ட ஞானம் பரலோகத்திலிருந்து வரும் ஒன்றல்ல; இது உலக ஞானம். இது ஆவிக்குரிய தன்மையற்றது. இது பிசாசினிடத்திலிருந்து வருகிறது.
తాదృశం జ్ఞానమ్ ఊర్ద్ధ్వాద్ ఆగతం నహి కిన్తు పార్థివం శరీరి భౌతికఞ్చ|
16 ஏனெனில் எங்கே பொறாமையும் சுயநல ஆசையும் இருக்கின்றதோ, அங்கே ஒழுங்கீனமும் எல்லாவிதத் தீயசெயல்களும் இருக்கின்றன.
యతో హేతోరీర్ష్యా వివాదేచ్ఛా చ యత్ర వేద్యేతే తత్రైవ కలహః సర్వ్వం దుష్కృతఞ్చ విద్యతే|
17 ஆனால் பரலோகத்திலிருந்து வருகிற ஞானமோ, முதலாவது தூய்மை உடையதாய் இருக்கிறது; அது சமாதானத்தை விரும்புகிறதும், தயவுடையதும், பணிவுடையதும், இரக்கம் நிறைந்ததும், நல்ல கனியினால் நிறைந்ததுமாய் இருக்கிறது; அது பாரபட்சமும் போலித்தன்மையற்றதுமாய் இருக்கிறது.
కిన్తూర్ద్ధ్వాద్ ఆగతం యత్ జ్ఞానం తత్ ప్రథమం శుచి తతః పరం శాన్తం క్షాన్తమ్ ఆశుసన్ధేయం దయాదిసత్ఫలైః పరిపూర్ణమ్ అసన్దిగ్ధం నిష్కపటఞ్చ భవతి|
18 சமாதானத்தை உண்டுபண்ணுகிறவர்கள் சமாதானத்தின் விதையை விதைத்து, நீதியை அறுவடை செய்கிறார்கள்.
శాన్త్యాచారిభిః శాన్త్యా ధర్మ్మఫలం రోప్యతే|