< ஏசாயா 4 >
1 அந்த நாளிலே ஏழு பெண்கள் ஒரே புருஷனைப் பிடித்து இப்படிச் சொல்வார்கள்: “நாங்கள் எங்கள் சொந்த உணவைச் சாப்பிட்டு, எங்கள் சொந்த உடைகளையும் உடுத்திக்கொள்வோம்; உமது பெயரை மாத்திரம் எங்களுக்கு வழங்கி, எங்கள் அவமானத்தை நீக்கிவிடும்!”
Syv Kvinder skal paa hin Dag gribe fat i een Mand og sige: »Vi vil æde vort eget Brød og holde os selv med Klæder, blot vi maa bære dit Navn. Tag Vanæren fra os!«
2 அந்த நாளிலே யெகோவாவின் கிளை, அழகுடனும் மகிமையுடனும் விளங்கும்; இஸ்ரயேல் நாட்டில் தப்பிப் பிழைத்தவர்களுக்கு அந்த நாட்டின் கனி பெருமையும், மகிமையுமாகும்.
Paa hin Dag Bliver HERRENS Spire til Fryd og Ære og Landets Frugt til Stolthed og Smykke for de undslupne i Israel.
3 அப்பொழுது சீயோனில் விடப்பட்டவர்களாய், எருசலேம் நகரில் மீந்திருப்பவர்கள், பரிசுத்தர்கள் என அழைக்கப்படுவார்கள்; வாழ்வதற்கென்று எருசலேமில் பேரெழுதப்பட்ட எல்லோரும் அப்படியே அழைக்கப்படுவார்கள்.
Den, som er levnet i Zion og blevet tilovers i Jerusalem, skal kaldes hellig, enhver, der er indskrevet til Livet i Jerusalem,
4 யெகோவா சீயோனின் பெண்களுடைய அசுத்தத்தைக் கழுவி, அவர் எருசலேமிலிருந்து அதன் இரத்தக் கறைகளை நியாயத்தின் ஆவியாலும், நெருப்புத் தணலையொத்த ஆவியாலும் சுத்திகரிப்பார்.
naar Herren faar aftvættet Zions Døtres Smuds og bortskyllet Jerusalems Blodskyld fra dets Midte med Doms og Udrensnings Aand.
5 அதன்பின் சீயோன் மலை முழுவதற்கு மேலாகவும், அங்கு சபை கூடுகிறவர்களுக்கு மேலாகவும் பகலிலே புகை மேகத்தையும், இரவிலே நெருப்புச் சுவாலையின் பிரகாசத்தையும் யெகோவா உண்டாக்குவார்; இந்த எல்லா மகிமைக்கு மேலாகவும் ஒரு விதான மண்டபம் உண்டாயிருக்கும்.
Da skaber Herren over hvert et Sted paa Zions Bjerg og over dets Festforsamlinger en Sky om Dagen og Røg med luende Ildskær om Natten; thi over alt, hvad herligt er, skal der være et Dække
6 அது பகலின் வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்கும் கூடாரமாகவும், நிழலாகவும் இருக்கும். அது புயலிலிருந்தும், மழையிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கும் புகலிடமாயும், மறைவிடமாயும் இருக்கும்.
og Ly til Skygge mod Hede og til Skærm og Skjul mod Skybrud og Regn.