< ஓசியா 4 >
1 இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி, ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது: நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை, இறைவனை அறியும் அறிவு இல்லை.
၁အိုဣသရေလ အမျိုးသား တို့၊ ထာဝရဘုရား ၏ အမိန့် တော်ကို နားထောင် ကြလော့။ ထာဝရဘုရား သည် ပြည်သူ ပြည်သားတို့နှင့် တရား တွေ့မှုရှိတော်မူ၏။ အကြောင်း မူကား၊ သူတို့သည် သစ္စာ မ ရှိ၊ ကရုဏာ မ ရှိ၊ ဘုရား သခင်ကို မ သိ ကြ။
2 அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும், களவும், விபசாரமும் மட்டுமே உண்டு; அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர், இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது.
၂ကျိန်ဆဲ ခြင်း၊ မုသာ စကားကို ပြောခြင်း၊ လူအသက် ကို သတ် ခြင်း၊ သူ့ဥစ္စာကိုခိုး ခြင်း၊ သူ့ မယားကို ပြစ်မှားခြင်းတို့၌ အဆီး အတားမရှိ။ လူအသက်ကိုသတ် သောအပြစ် အထပ်ထပ်ရှိကြ၏။
3 இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது, அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள். வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும், கடலில் உள்ள மீன்களும் சாகின்றன.
၃ထိုကြောင့် ၊ ပြည် သည် ငြိုငြင် လိမ့်မည်။ ပြည်သား အပေါင်း တို့နှင့်တကွ ၊ တော သားရဲ ၊ မိုဃ်း ကောင်းကင်ငှက် တို့သည် အားလျော့ ကြလိမ့်မည်။ ပင်လယ် ငါး တို့ သည်လည်း ကုန် ကြလိမ့်မည်။
4 ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம். ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம். ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்; ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான்.
၄သို့ရာတွင် ၊ အဘယ် သူမျှမ ဆီးတား စေနှင့်။ အဘယ် သူမျှမ ဆုံးမ စေနှင့်။ အကြောင်း မူကား၊ သင် ၏ အမျိုးသား ချင်းတို့သည် ယဇ်ပုရောဟိတ် နှင့် ဆန့်ကျင်ဘက် ပြုသောသူကဲ့သို့ ဖြစ်ကြ၏။
5 நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்; இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள். எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன்.
၅ထိုကြောင့် ၊ နေ့ အချိန်၌ သင်သည်လဲ ရလိမ့်မည်။ ညဉ့် အချိန်၌ သင် နှင့်အတူ ပရောဖက် သည်လည်း လဲ ရ လိမ့်မည်။ သင့် အမိ ကိုလည်း ငါဖျက်ဆီး မည်။
6 எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள். “நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள், அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன். நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால், நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன்.
၆ငါ့ လူ တို့သည် ပညာ နည်း သောကြောင့် ဆုံးရှုံး ကြ၏။ သင်သည် ပညာ ကိုပယ် သောကြောင့် ၊ ငါ့ ယဇ် ပုရောဟိတ်အဖြစ်သို့ မရောက်စေခြင်းငှါ သင့် ကို ငါပယ် မည်။ သင် ၏ ဘုရား သခင့်တရား ကို သင်မေ့လျော့ သောကြောင့် ၊ သင် ၏ သားသမီး တို့ကို ငါ့မေ့လျော့ မည်။
7 ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள்.
၇သူ တို့သည် ဘုန်းတိုးပွား သည်အတိုင်း ငါ့ ကို ပြစ်မှား ကြပြီ။ သို့ဖြစ်၍ ၊ သူ တို့၏ ဘုန်း ကို ငါအရှက်ကွဲ စေမည်။
8 எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து, அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள்.
၈ငါ့ လူ တို့၏ အပြစ် ဖြေရာ ယဇ်တို့ကို စား လျက် နှင့် ပင်၊ ထို အပြစ် ကို စိတ် စွဲလမ်းတတ်ကြ၏။
9 அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன்.
၉ထိုကြောင့် ၊ လူ တို့၌ ဖြစ်သကဲ့သို့ ယဇ်ပုရောဟိတ် ၌ ဖြစ် လိမ့်မည်။ သူ တို့အကျင့် များကို ငါစစ်ကြော ၍ ၊ အသီးအသီး ပြုမူ သမျှအတိုင်းအကျိုး အပြစ်ကိုပေးမည်။
10 “அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்; அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்; ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள்.
၁၀သူတို့သည် စား ၍ မ ဝ ရကြ။ မ တရားသောမေထုန် ကိုပြု၍ သားသမီး ကို မ ဘွားမြင်ရကြ။
11 புது மற்றும் பழைய திராட்சை இரசம் எனது மக்களின் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது.
၁၁အကြောင်း မူကား စိတ် နှလုံးကို ယစ်မူး စေတတ် သော ကာမ ဂုဏ်၌ ပျော်မွေ့ခြင်း၊ စပျစ်ရည် နှင့် သေရည် သေရက်ကို သောက် ခြင်း၌ မှီဝှဲသောကြောင့် ၊ ထာဝရဘုရား ကို စွန့်ပစ် ကြပြီ။
12 எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள். வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது; அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள்.
၁၂ငါ့ လူ တို့သည် သစ်သား နှင့် တိုင်ပင် တတ်ကြ၏။ သူ တို့၏တောင်ဝေး သည် အကြံ ပေးတတ်၏။ ကိလေသာ စိတ် အားကြီးသောကြောင့် ၊ သူတို့သည် လမ်းလွှဲ ၍ မိမိ တို့ ဘုရား သခင့်ထံမှာ မနေ၊ မှားယွင်း တတ်ကြ၏။
13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள்.
၁၃တောင် ထိပ် ပေါ် ၊ ကုန်း ပေါ် မှာ၎င်း ၊ အရိပ် ကောင်း သောသပိတ် ပင်မျိုး၊ လိဗနော ပင် အောက် မှာ၎င်း ၊ ယဇ် ပူဇော်၍ နံ့သာပေါင်းကို မီးရှို့ တတ်ကြ၏။ ထိုကြောင့် ၊ သင် တို့သမီး တို့သည် ယောက်ျား နှင့် မှားယွင်း၍ ၊ ချွေးမ တို့သည် မျောက်မထား တတ်ကြ၏။
14 “உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும் நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன். ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு, கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள், அறிவில்லாத அம்மக்கள் சீரழிந்து போவார்கள்.
၁၄သင် တို့သမီး တို့သည် ယောက်ျား နှင့် မှားယွင်း၍ ၊ ချွေးမ တို့သည် မျောက်မထား သော်လည်း ငါမ စစ်ကြော ၊ အကြောင်း မူကား၊ ယောက်ျားတို့သည် ကိုယ့်မယားကို စွန့်ပစ်၍ ပြည်တန်ဆာတို့နှင့် ပေါင်းဘော်တက်ကြ၏။ မိန်းမရွှင်တို့နှင့်အတူယဇ်ပူဇော်တတ်ကြ၏။ သို့ဖြစ်၍၊ပညာမရှိသောသူတို့ သည် ဆုံးရှုံးကြလိမ့်မည်။
15 “இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். “நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். ‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம்.
၁၅အိုဣသရေလ အမျိုး၊ သင် သည် ပြည်တန်ဆာ လုပ်သော်လည်း ၊ ယုဒ အမျိုးကို မ မှားယွင်း ပါစေနှင့်။ ဂိလဂါလ မြို့သို့ မ ချဉ်းကပ် ကြနှင့်။ ဗေသဝင် မြို့သို့ မ သွား ကြနှင့်။ ထာဝရဘုရား အသက်ရှင် တော်မူသည် အတိုင်းဟူ၍မ ကျိန်ဆို ကြနှင့်။
16 இஸ்ரயேலரோ அடங்காத இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள். அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில் செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்?
၁၆ဣသရေလ အမျိုးသည် ရုန်း တတ်သော နွား မပျိုကဲ့သို့ ဆန့်ကျင် ဘက်ပြုတတ်၏။ ယခုမှာထာဝရဘုရား သည် ကျယ် သောအရပ်၌ သိုးသငယ် ကိုထိန်း သကဲ့သို့ ၊ ဣသရေလ အမျိုးကို ပြုတော်မူမည်။
17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; அவனைத் தனியே விட்டுவிடு!
၁၇ဧဖရိမ် သည်ရုပ်တု တို့၌စွဲကပ် လျက်ရှိ၏။ သူ့ ကို တတ် တိုင်းရှိစေလော့။
18 அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்; அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள்.
၁၈သူ တို့စားသောက် ပွဲခံချိန်လွန် ပြီ။ မင်း လုပ်သောသူတို့သည် အထပ်ထပ်မတရား သောမေထုန် ကိုပြုကြပြီ။ ရှက်ဘွယ် သောအမှုကိုတပ်မက် ကြပြီ။
19 சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள் அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும்.
၁၉လေ သည် မိမိ အတောင် တို့နှင့် တိုက် ၍ ပါသွားမည်။ သူ တို့သည် မိမိ တို့ ပူဇော်သောယဇ် များကြောင့် ရှက် ကြလိမ့်မည်။