< எபிரேயர் 9 >
1 முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன.
ପର୍ତମ୍ମୁ ଅନଗଡନ୍ ନିୟ୍ ସନେନ୍ପୁରନ୍ ଆସନ୍ ଏର୍ଜାଡ଼ିକାନ୍ ଅନଗଡନ୍ ଡ ଅବୟ୍ ସନେନ୍ପୁର୍ସିଙନ୍ ଡକୋଏନ୍ ।
2 அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன.
ତିଅନ୍ତମ୍ ସନେନ୍ପୁରନ୍ ଆସନ୍ ଅବୟ୍ ତମ୍ବୁନ୍ ଆତୁବ୍ତୁବ୍ ଡକୋଏନ୍, ତେତ୍ତେ ଆଡ୍ରକୋଏନ୍ ପର୍ତମ୍ମୁ ବକ୍ରାନ୍ ମଡ଼ିର୍ସିଂ ଗାମେଞ୍ଜି, ତେତ୍ତେ ପିଙ୍କନୁବନ୍, ଅବୟ୍ ମେଜନ୍ ଡ ମେଜଲୋଙନ୍ ଇସ୍ୱରନ୍ ଆଞୁମ୍ଲୋଙ୍ ଆରମଙେଞ୍ଜି ଆ ରୁଟି ଡକୋଏନ୍ ।
3 அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது.
ଡରଙ୍ନେକାବନ୍ ଆ କିଣ୍ଡୋଙ୍ଗଡ୍ ଅଙ୍ଗା ବକ୍ରା ଡକୋଏନ୍, ତିଆତେ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ସିଂ ଗାମେଞ୍ଜି ।
4 அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.
ତେତ୍ତେ ଅରୋମ୍ମାୟ୍ତୋଡନ୍ ଆ ତନମ୍ପିଲ୍, ସୁନାନ୍ ବାତ୍ତେ ଆବଲ୍ବଲନ୍ ଅନଗଡ୍ପେଲନ୍ ଡକୋଏନ୍ । ତି ଅନଗଡ୍ପେଲାଲୋଙନ୍ ଅବୟ୍ ସୁନା ସିମ୍ମାଲୋଙନ୍ ମାନ୍ନାନ୍ ଆଡକ୍କୋ, ଆରୋଣନ୍ ଆ ଡାଙ୍ଗୋ ଆର୍ଲେଡେଙେନ୍ଆତେ, ଆରି ଅନଗଡନ୍ ଆଇଡିଡନ୍ ବାଗୁ ଅରେଙ୍ ପଟାନ୍ ଡକୋଏନ୍ । ।
5 அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.
ତୋଣ୍ଡୋ ଅନଗଡ୍ପେଲାଲୋଙନ୍ ଇର୍ସେନ୍ କେମାନ୍ ଆତ୍ରିୟ୍ଲୋଙ୍ତେନ୍ ଅନବ୍ଲୁମ୍ମୁନ୍ ଆସନ୍ ଅନବ୍ଗୁଗୁଡମ୍ ଇସ୍ୱରନ୍ ଆ କିରୁବଜି ବାଗୁ ଆ କାପ୍ପାଞ୍ଜି ଉର୍ରାଡ୍ଲେ ଡକୋଲଞ୍ଜି; ବନ୍ଡ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ନମି ବର୍ରନ୍ ଏଃର୍ରପ୍ତିଆୟ୍ ।
6 இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள்.
ତେତ୍ତେ ଏନ୍ନେଲେ ବନାଁୟ୍ବରନ୍ ଡକୋ, ସେବା କାବ୍ବାଡ଼ାନ୍ ଲନୁମନ୍ ଆସନ୍ ରାଓଡ଼ାଞ୍ଜି ଡିତାନ୍ ତମ୍ବୁନ୍ ଆ ପର୍ତମ୍ମୁ ବକ୍ରାଲୋଙ୍ ଗନ୍ତଞ୍ଜି,
7 ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான்.
ବନ୍ଡ ଅନବ୍ବାଗୁ ବକ୍ରାଲୋଙନ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ତୁମ୍ ବବର୍ସେଙନ୍ ବତର ଗନ୍ତନେ; ଆନିନ୍ ଆନିନ୍ଡମ୍ ଆସନ୍ ଆରି ମନ୍ରାଞ୍ଜି ଏର୍ଜନନାନ୍ ଆର୍ଲୁମେଞ୍ଜି ଆ ଇର୍ସେ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ସନୋରୋପ୍ପାୟନ୍ ଆସନ୍ ମିଞାମନ୍ ପାଙ୍ଲେ ଗନ୍ତନେ ।
8 முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார்.
କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଆସନ୍ ମଡ଼ିର୍ ପୁରାଡ଼ାନ୍ ଞନଙନ୍ ତିୟ୍ତେ ଆରି ପର୍ତମ୍ମୁ ତମ୍ୱୁନ୍ ଆଡ୍ରକୋତନ୍ ଜାୟ୍, ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ସିଙନ୍ ଗନ୍ନେନ୍ ଆସନ୍ ତଙରନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗିୟ୍ତାଏ ।
9 இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன.
କେନ୍ଆତେ ନମି ଆ ଜୁଗ ଆସନ୍ ଅବୟ୍ ଅରବ୍ଜଙନ୍ ଅନ୍ତମ୍, ଆରି ତିଅନ୍ତମ୍ ଇସ୍ୱରନ୍ ଆଞୁମ୍ଲୋଙ୍ ତନମ୍ପିଲ୍ଲୋଙନ୍ ତନିୟ୍ତିୟନ୍ ଡ ଅନମଙନ୍ ସନୋରୋପ୍ପାୟନ୍ ଡେତେ, ବନ୍ଡ ତିଆତେ ବାତ୍ତେ ମନ୍ରାନ୍ ଆ ବିବେକ ସତଙ୍ଲେ ଅଃର୍ରପ୍ତିଏ ।
10 இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତି ଅଡ଼୍କୋନ୍ ଗାଗାନେନ୍, ଜୋମ୍ଜୋମନ୍ ଡ ମନଡ଼ିରନ୍ ଆସନ୍ ସତ୍ତର୍ ଡଅଙ୍ଡାଗୋ ଆ କାବ୍ବାଡ଼ା ତୁମ୍; ଇସ୍ୱରନ୍ ରଙ୍ ଅନଗଡନ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଗବ୍ଡେଲେନ୍ ଜାୟ୍ କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଞନଣ୍ଡ୍ରମନ୍ ଡେଏନ୍ ।
11 நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார்.
ବନ୍ଡ ନମି କ୍ରିସ୍ଟନ୍ ମନଙ୍ ମୁଡ଼ ରାଓଡ଼ାନ୍ ଅନ୍ତମ୍ ତନଙେନ୍ କି ଇନ୍ଲେଞ୍ଜି ମନଙନ୍ଆତେ ଞାଙ୍ଲବୋ; ଆନିନ୍ ଅଙ୍ଗା ତମ୍ବୁସିଂଲୋଙ୍ ଲନୁମ୍ତନେ ତିଆତେ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ଆରି ଆଜାଡ଼ିଡମ୍, କେନ୍ଆତେ ମନ୍ରାନ୍ ଆତନ୍ଡ୍ରୁବ୍ ତଡ୍, କେନ୍ ଆଗ୍ରାମ୍ଗାମନ୍ ପୁର୍ତିନ୍ ଆତନ୍ଡ୍ରୁବ୍ ତଡ୍ ।
12 அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார். (aiōnios )
କ୍ରିସ୍ଟନ୍ ତି ଆ ତମ୍ବୁଗଡ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ସିଙନ୍ ମିଞାମନ୍ ପାଙ୍ଲେ ଅନମଙନ୍ ସନୋରୋପ୍ପାୟନ୍ ଆସନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଅନୁରନ୍ ଆ କାବ୍ବାଡ଼ା ଲୁମେନ୍ । (aiōnios )
13 வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ କିମ୍ମେଡନ୍ ଇଜ୍ଜାନ୍ଡେନ୍ ଜେଲ୍ଜେଲ୍ ଜନ୍ତୁନ୍ ଆ ମିଞାମ୍ ଆରି ଜନ୍ତୁଞ୍ଜି ଆ କୋମାବ୍ ସିନ୍ସିରାଡାଲେ ଏର୍ମଡ଼ିର୍ ଡଅଙନ୍ ମଡ଼ିର୍ ଡେଏନ୍ ନଙ୍,
14 அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும். (aiōnios )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ମିଞାମ୍ ଡିଅଙ୍ଗା ଆ ଗୋଗୋୟ୍ ଅରଃ ମବ୍ଡ଼ିର୍ଲଙ୍ନେ! ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆ ପୁରାଡ଼ା ବାତ୍ତେ ଆନିନ୍ଡମ୍ ଇସ୍ୱରନ୍ ଆମଙ୍ ଅବୟ୍ ଏର୍ଡୋସା ଅନମଙନ୍ ଅନ୍ତମ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଡମ୍ଲନ୍; ଆ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ଇର୍ସେ କାବ୍ବାଡ଼ାନ୍ ସିଲଡ୍ ସଙାୟ୍ଲଙ୍ଲନ୍ ଆରି ଇନ୍ଲେନ୍ ମଡ଼ିର୍ ଡେଡେଲଙ୍ଲନ୍, ଆରି ଇନ୍ଲେଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ଆଡଙ୍ ସନେବାନ୍ ଆସନ୍ ରୟଙନ୍ ଞାଙ୍ତବୋ । (aiōnios )
15 ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார். (aiōnios )
କେନ୍ ଆସନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ରଙ୍ ଅନଗଡନ୍ ଗବ୍ଡେଲେନ୍, ଆନାଜିଆଡଙ୍ ଇସ୍ୱରନ୍ ଓଡ୍ଡେଏଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଇସ୍ୱରନ୍ ଆ ସନିବ୍ଡେୟ୍ବରନ୍ ଅଃନ୍ନଞିଡେନ୍ ଆସିର୍ବାଦନ୍ ଞାଙ୍ତଜି; ପର୍ତମ୍ମୁ ଅନଗଡନ୍ ଆଡ୍ରକୋଲନ୍ ଆଡିଡ୍, ମନ୍ରାଞ୍ଜି ଅଙ୍ଗା ଇର୍ସେ ଡୋସା ଅଡ଼୍କୋନ୍ ଲୁମେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍ ଆ ରନବୁ ବାତ୍ତେ ଆନିଞ୍ଜି ତେତ୍ତେ ସିଲଡ୍ ଅନୁରନ୍ ଞାଙ୍ତଜି । (aiōnios )
16 ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.
ଅବୟ୍ ସିବ୍ଡେୟ୍ବରନ୍ ଆ ଅଲା ଅନ୍ତମ୍, କେନ୍ଆତେ ଗନବ୍ଡେଲନ୍ ଆସନ୍ ଡେନ୍ ଆବ୍ରାସାଲନ୍ ଆ ମନ୍ରା ଆ ରନବୁ ଆଜାଡ଼ିନ୍ ଗାମ୍ଲେ ଅନବ୍ତୁଜନ୍ ଡେତେ ।
17 அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଆବ୍ରାସାଲନ୍ ଆ ମନ୍ରା ଆମେଙ୍ମତ୍ତାନ୍ ଜାୟ୍, ତିଆତେ ଇନ୍ନିଙ୍ ଲନୁମନ୍ ଅଃଡ୍ଡେଏ ।
18 இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை.
ତିଆସନ୍ ପର୍ତମ୍ମୁ ଅନଗଡନ୍ ନିୟ୍ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ଗନବ୍ରିନ୍ ଡେଏନ୍ ।
19 சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ମୋସାନ୍ ବନାଁୟ୍ବରନ୍ ଆ ବର୍ନେଜି ମନ୍ରାଞ୍ଜି ଆମନ୍ ଇୟ୍ଲେ ବର୍ନେ, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ଆନିନ୍ ଆଅନ୍ତାଙନ୍ ଡ କିମ୍ମେଡନ୍ ଆ ମିଞାମ୍, ଡାଆନ୍ ମାୟ୍ଲେ, ଏସୋବନ୍ ଡ ଅସୋୟ୍ ଲୁଲୁ ମେଣ୍ଡାନ୍ ଆ ଉପ୍ପୁର୍ ବାତ୍ତେ ବନାଁୟ୍ବରନ୍ ଆ ବଇଲୋଙ୍ ଡ ମନ୍ରାଞ୍ଜିଆଡଙ୍ ଇରାଡାଲେ ବର୍ରନେ,
20 தெளிக்கையில் அவன், “நீங்கள் கைக்கொள்ளும்படி, இறைவன் கட்டளையிட்டுக் கொடுத்த உடன்படிக்கையின் இரத்தம் இதுவே” என்று சொன்னான்.
“ଇସ୍ୱରନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍ ଅଙ୍ଗା ଅନଗଡନ୍ ମନାନ୍ନେନ୍ ଆସନ୍ ବାଁୟ୍ଲବେନ୍, ତି ଅନଗଡନ୍ ଆ ମିଞାମ୍ କେନ୍ଆତେ ।”
21 அவ்விதமாகவே, மோசே அந்த இரத்தத்தை இறைசமுகக் கூடாரத்தின்மேலும், அதன் வழிபாட்டில் உபயோகிக்கப்பட்ட எல்லாவற்றின்மேலும் தெளித்தான்.
ଆରି ମୋସାନ୍ ଏତ୍ତଲେମା ମିଞାମନ୍ ପାଙ୍ଲେ ତମ୍ବୁସିଙନ୍ ଡ ରାଓଡ଼ାନ୍ ଆ ଞନଣ୍ଡ୍ରମ୍ ଅଡ଼୍କୋନ୍ ଇରାଏନ୍ ।
22 உண்மையாகவே, மோசேயின் சட்டத்தின்படி எல்லாமே இரத்தத்தினால் சுத்திகரிக்கப்பட வேண்டும். இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவங்களுக்கு மன்னிப்பே இல்லை.
ଆରି, ମୋସାନ୍ ଆ ବନାଁୟ୍ବର୍ ଅନ୍ତମ୍ ଅଡ଼୍କୋନ୍ଆତେ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ମଡ଼ିର୍ ଡେତେ, ଆରି ମିଞାମନ୍ ବାତ୍ତେ ମା ଇର୍ସେନ୍ କେମାନ୍ ଞାଙ୍ତବୋ ।
23 இவ்விதமாய் பரலோகக் காரியங்களின் சாயல்கள், இப்படிப்பட்ட பலிகளினால் சுத்திகரிக்கப்படுவது அவசியமாயிருந்தது. அப்படியானால் பரலோகத்தின் நிஜமான காரியங்களோ, அவற்றைப் பார்க்கிலும் மேன்மையான பலிகளினாலேயே சுத்திகரிக்கப்பட வேண்டும் அல்லவா?
ତିଆସନ୍ ରୁଆଙନ୍ ଆ ବର୍ନେଜି ଆନବ୍ଜଙ୍ବର୍ ଅଡ଼୍କୋନ୍ ମିଞାମନ୍ ବାତ୍ତେ ମଡ଼ିର୍ ଡେତାୟ୍ ବନ୍, ବନ୍ଡ ରୁଆଙନ୍ ଆ ବର୍ନେଜି କେନ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମନଙ୍ ଅନମଙନ୍ ବାତ୍ତେ ମଡ଼ିର୍ ଡେତାୟ୍ ।
24 கிறிஸ்து மனித கையினால் உண்டாக்கப்பட்ட உண்மையான பரிசுத்த இடத்தின் அடையாளமான இடத்துக்குள் செல்லவில்லை; பரலோகத்திற்கு உள்ளேயே சென்று, அங்கே இறைவனின் முன்னிலையில் நமக்காக விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறார்.
ଅଙ୍ଗାତେ ମନ୍ରାନ୍ ଆତ୍ରୁବେନ୍ ମଡ଼ିର୍ସିଂଲୋଙନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଅଃଗନ୍ଲୋ, ଆର୍ପାୟ୍ ଇନ୍ଲେଞ୍ଜି ଆସନ୍ ନମି ଇସ୍ୱରନ୍ ଆମୁକ୍କାବା ଅବ୍ରାଙ୍ଡାନେନ୍ ଆସନ୍ ଆନିନ୍ ରୁଆଙନ୍ ଜିରେନ୍ ।
25 பிரதான ஆசாரியன், ஒவ்வொரு வருடமும் மிருகங்களின் இரத்தத்தோடு மகா பரிசுத்த இடத்திற்குள் செல்கிறதுபோல கிறிஸ்துவுக்கோ திரும்பத்திரும்ப தம்மை பலியாகச் செலுத்தும்படி பரலோகத்திற்குள் செல்லவேண்டிய அவசியமில்லை.
ସୋଡ଼ା ରାଓଡ଼ାନ୍ ଏଙ୍ଗାଲେ ବବର୍ସେଙନ୍ ବତର ଜନ୍ତୁନ୍ ଆ ମିଞାମ୍ ଞମ୍ଲେ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ମଡ଼ିର୍ସିଙନ୍ ଗନେନ୍, ବନ୍ଡ କ୍ରିସ୍ଟନ୍ ଆନିନ୍ଡମ୍ ନମିନ୍ ନମିନ୍ ସୋରୋପ୍ପାୟ୍ନେନ୍ ଆସନ୍ ତେତ୍ତେ ଅଃନ୍ନିୟ୍ଲୋ;
26 அப்படியிருக்குமானால், உலகம் படைக்கப்பட்டதிலிருந்து கிறிஸ்து அநேகமுறை இப்படி பாடு அனுபவிக்க வேண்டியிருந்திருக்கும். ஆனால் அவரோ, இப்பொழுது எல்லா யுகங்களும் முடிவுறும் காலத்தில், தம்மைத்தாமே பலியாகச் செலுத்துவதன் மூலமாய், பாவத்தை நீக்கும்படி, ஒரே முறையாகத் தோன்றியிருக்கிறார். (aiōn )
ଏତ୍ତେଲ୍ଡେନ୍, ପୁର୍ତିନ୍ ଆଗ୍ରଡେଲେନ୍ ଆ ଡିନ୍ନା ସିଲଡ୍ ଆନିନ୍ ବତରନ୍ କି ବତରନ୍ ବନ୍ ପରାନ୍ଡଣ୍ଡନ୍ ଡେତେ, ବନ୍ଡ ନମି ଆନିନ୍ ଅନଞିଡ୍ ଡିନ୍ନା ଇଙନ୍ ଆନିନ୍ଡମ୍ ଅନମଙନ୍ ଅନ୍ତମ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଡମ୍ଲନ୍ ଇର୍ସେନ୍ ସନବ୍ଙାଜନ୍ ଆସନ୍ ଅବ୍ତୁୟ୍ଲନେ । (aiōn )
27 ஒருமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்புக்கு உள்ளாவதும், மனிதனுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது.
ଅଡ଼୍କୋ ମନ୍ରାନ୍ ବତର ରବୁତଜି, ସିଲଡ୍ଲ୍ଲନ୍ ପନ୍ସୁଆତିନ୍ ଡେତେ ।
28 அவ்விதமாக அநேக மக்களுடைய பாவங்களை நீக்கிப்போடும்படி, கிறிஸ்துவும் ஒருமுறை பலியாகச் செலுத்தப்பட்டார்; ஆனால் பாவத்தைச் சுமக்கும்படியாக அல்ல, அவருக்காகக் காத்திருப்போருக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்காகவே அவர் இரண்டாம் முறையாக வருவார்.
ତିଅନ୍ତମ୍ କ୍ରିସ୍ଟନ୍ ନିୟ୍ ଗୋଗୋୟ୍ ମନ୍ରାଞ୍ଜି ଆ ଇର୍ସେ ବୋୟ୍ବୋୟନ୍ ଆସନ୍ ଆବତରନ୍ ସୋରୋପ୍ପାୟ୍ଲନ୍; ଆନିନ୍ ଆରି ବତର ଇୟ୍ତାୟ୍, ଆରି ଅନବ୍ବାଗୁ ତର ଇର୍ସେନ୍ ଆସନ୍ ତଡ୍, ଆର୍ପାୟ୍ ଆନାଜି ଆନିନ୍ଆଡଙ୍ ଜଗେଲେ ଡକୋତଞ୍ଜି, ଆନିଞ୍ଜି ଅନୁରନ୍ ତନିୟନ୍ ଆସନ୍ ଅବ୍ରାଙ୍ଡାତନ୍ ।