< எபிரேயர் 8 >
1 நாங்கள் சொல்வதன் முக்கியமான கருத்து என்னவெனில், நமக்கு அப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
កថ្យមានានាំ វាក្យានាំ សារោៜយម៑ អស្មាកម៑ ឯតាទ្ឫឝ ឯកោ មហាយាជកោៜស្តិ យះ ស្វគ៌េ មហាមហិម្នះ សិំហាសនស្យ ទក្ឞិណបាឝ៌្វោ សមុបវិឞ្ដវាន្
2 கிறிஸ்துவாகிய இவர் அங்கே, பரலோகத்தில் பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்கிறார். இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட உண்மையான இறைசமுகக் கூடாரம். இது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.
យច្ច ទូឞ្យំ ន មនុជៃះ កិន្ត្វីឝ្វរេណ ស្ថាបិតំ តស្យ សត្យទូឞ្យស្យ បវិត្រវស្តូនាញ្ច សេវកះ ស ភវតិ។
3 காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காகவே ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் நியமிக்கப்படுகிறான். எனவே இயேசுவும் செலுத்தும்படி, ஏதோ ஒன்றைத் தம்மிடத்தில் வைத்திருக்க வேண்டியிருந்தது.
យត ឯកៃកោ មហាយាជកោ នៃវេទ្យានាំ ពលីនាញ្ច ទានេ និយុជ្យតេ, អតោ ហេតោរេតស្យាបិ កិញ្ចិទ៑ ឧត្សជ៌នីយំ វិទ្យត ឥត្យាវឝ្យកំ។
4 அவர் பூமியில் இருந்திருந்தால், ஒரு ஆசாரியனாய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில், மோசேயின் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.
កិញ្ច ស យទិ ប្ឫថិវ្យាម៑ អស្ថាស្យត៑ តហ៌ិ យាជកោ នាភវិឞ្យត៑, យតោ យេ វ្យវស្ថានុសារាត៑ នៃវេទ្យានិ ទទត្យេតាទ្ឫឝា យាជកា វិទ្យន្តេ។
5 அவர்கள் பரலோகத்திலுள்ள, உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியாகவும், நிழலாகவும் இங்கே இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே ஊழியம் செய்கிறார்கள். இதனாலேயே மோசே, அந்த இறைசமுகக் கூடாரத்தை அமைக்கத் தொடங்குமுன், அவனுக்கு இறைவன்: “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு” என்று எச்சரிக்கை கொடுத்தார்.
តេ តុ ស្វគ៌ីយវស្តូនាំ ទ្ឫឞ្ដាន្តេន ឆាយយា ច សេវាមនុតិឞ្ឋន្តិ យតោ មូសសិ ទូឞ្យំ សាធយិតុម៑ ឧទ្យតេ សតីឝ្វរស្តទេវ តមាទិឞ្ដវាន៑ ផលតះ ស តមុក្តវាន៑, យថា, "អវធេហិ គិរៅ ត្វាំ យទ្យន្និទឝ៌នំ ទឝ៌ិតំ តទ្វត៑ សវ៌្វាណិ ត្វយា ក្រិយន្តាំ។ "
6 இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் முந்தைய ஆசாரியர்களின் ஊழியத்தைவிட மேன்மையானது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குத்தத்தங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது, அதினால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது.
កិន្ត្វិទានីម៑ អសៅ តស្មាត៑ ឝ្រេឞ្ឋំ សេវកបទំ ប្រាប្តវាន៑ យតះ ស ឝ្រេឞ្ឋប្រតិជ្ញាភិះ ស្ថាបិតស្យ ឝ្រេឞ្ឋនិយមស្យ មធ្យស្ថោៜភវត៑។
7 ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
ស ប្រថមោ និយមោ យទិ និទ៌្ទោឞោៜភវិឞ្យត តហ៌ិ ទ្វិតីយស្យ និយមស្យ កិមបិ ប្រយោជនំ នាភវិឞ្យត៑។
8 ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதினாலேயே: “கர்த்தர் அறிவிக்கிறதாவது, இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.
កិន្តុ ស ទោឞមារោបយន៑ តេភ្យះ កថយតិ, យថា, "បរមេឝ្វរ ឥទំ ភាឞតេ បឝ្យ យស្មិន៑ សមយេៜហម៑ ឥស្រាយេលវំឝេន យិហូទាវំឝេន ច សាទ៌្ធម៑ ឯកំ នវីនំ និយមំ ស្ថិរីករិឞ្យាម្យេតាទ្ឫឝះ សមយ អាយាតិ។
9 நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை; ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை. அதனால் நான், அவர்கள்மேல் கவனம் செலுத்தாமல் இருந்தேன், என்று கர்த்தர் அறிவிக்கிறார்.
បរមេឝ្វរោៜបរមបិ កថយតិ តេឞាំ បូវ៌្វបុរុឞាណាំ មិសរទេឝាទ៑ អានយនាត៌្ហំ យស្មិន៑ ទិនេៜហំ តេឞាំ ករំ ធ្ឫត្វា តៃះ សហ និយមំ ស្ថិរីក្ឫតវាន៑ តទ្ទិនស្យ និយមានុសារេណ នហិ យតស្តៃ រ្មម និយមេ លង្ឃិតេៜហំ តាន៑ ប្រតិ ចិន្តាំ នាករវំ។
10 அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
កិន្តុ បរមេឝ្វរះ កថយតិ តទ្ទិនាត៑ បរមហំ ឥស្រាយេលវំឝីយៃះ សាទ៌្ធម៑ ឥមំ និយមំ ស្ថិរីករិឞ្យាមិ, តេឞាំ ចិត្តេ មម វិធីន៑ ស្ថាបយិឞ្យាមិ តេឞាំ ហ្ឫត្បត្រេ ច តាន៑ លេខិឞ្យាមិ, អបរមហំ តេឞាម៑ ឦឝ្វរោ ភវិឞ្យាមិ តេ ច មម លោកា ភវិឞ្យន្តិ។
11 இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, அல்லது தன் சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.
អបរំ ត្វំ បរមេឝ្វរំ ជានីហីតិវាក្យេន តេឞាមេកៃកោ ជនះ ស្វំ ស្វំ សមីបវាសិនំ ភ្រាតរញ្ច បុន រ្ន ឝិក្ឞយិឞ្យតិ យត អាក្ឞុទ្រាត៑ មហាន្តំ យាវត៑ សវ៌្វេ មាំ ជ្ញាស្យន្តិ។
12 நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”
យតោ ហេតោរហំ តេឞាម៑ អធម៌្មាន៑ ក្ឞមិឞ្យេ តេឞាំ បាបាន្យបរាធាំឝ្ច បុនះ កទាបិ ន ស្មរិឞ្យាមិ។ "
13 இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று.
អនេន តំ និយមំ នូតនំ គទិត្វា ស ប្រថមំ និយមំ បុរាតនីក្ឫតវាន៑; យច្ច បុរាតនំ ជីណ៌ាញ្ច ជាតំ តស្យ លោបោ និកដោ ៜភវត៑។