< எபிரேயர் 8 >
1 நாங்கள் சொல்வதன் முக்கியமான கருத்து என்னவெனில், நமக்கு அப்படிப்பட்ட பிரதான ஆசாரியர் ஒருவர் இருக்கிறார். அவர் பரலோகத்தில் உன்னதமான இறைவனுடைய அரியணையின் வலதுபக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
Kamik kꞌut ri qas ukꞌuꞌx ri tajin kaqabꞌij loq are chi kꞌo chik qukꞌ ri kinimal ri e chꞌawenelabꞌ cho ri Dios, are waꞌ ri xtꞌuyiꞌk pa uwiqiqꞌabꞌ ri utꞌuyulibꞌal ri Dios.
2 கிறிஸ்துவாகிய இவர் அங்கே, பரலோகத்தில் பரிசுத்த இடத்தில் ஊழியம் செய்கிறார். இது கர்த்தரால் ஏற்படுத்தப்பட்ட உண்மையான இறைசமுகக் கூடாரம். இது மனிதரால் ஏற்படுத்தப்பட்டதல்ல.
Are waꞌ ri kinimal chꞌawenelabꞌ ri kapatanijik pa ri Tyoxalaj kꞌolibꞌal, are wa ri qas tzij Tabernáculo ri utz kukꞌaꞌxik ri man achi taj yakowinaq.
3 காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காகவே ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் நியமிக்கப்படுகிறான். எனவே இயேசுவும் செலுத்தும்படி, ஏதோ ஒன்றைத் தம்மிடத்தில் வைத்திருக்க வேண்டியிருந்தது.
Rumal cher kojonel ri e kinimaꞌqil ri e chꞌawenelabꞌ cho ri Dios, yaꞌtal bꞌe chike kakitzuj sipanik, tzi choqꞌaqꞌ wi chi kꞌo kutzuj che sipanik.
4 அவர் பூமியில் இருந்திருந்தால், ஒரு ஆசாரியனாய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில், மோசேயின் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.
We ta kꞌo ri Jesús cho ri uwachulew, mat bꞌa chꞌawenel riꞌ cho ri Dios jeriꞌ rumal e kꞌo chi chꞌawenelabꞌ cho ri Dios ri kakitzuj ri sipanik jetaq ri kubꞌij ri utaqanik ri Moisés.
5 அவர்கள் பரலோகத்திலுள்ள, உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியாகவும், நிழலாகவும் இங்கே இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே ஊழியம் செய்கிறார்கள். இதனாலேயே மோசே, அந்த இறைசமுகக் கூடாரத்தை அமைக்கத் தொடங்குமுன், அவனுக்கு இறைவன்: “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு” என்று எச்சரிக்கை கொடுத்தார்.
We chꞌawenelabꞌ cho ri Dios ri kepatanijik pa ri Tyoxalaj kꞌolibꞌal xaq esal uwach ri kape na, jacha ri xubꞌij loq ri Moisés are jubꞌiqꞌ karaj kuyak ri qꞌijilaꞌbꞌal Dios ri utz kukꞌaꞌx kumal achyabꞌ, ri Dios xubꞌij che ri Moisés: Qas naꞌtaj chawe je kabꞌan che jetaq ri xinkꞌut chawach puꞌwiꞌ le juyubꞌ.
6 இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் முந்தைய ஆசாரியர்களின் ஊழியத்தைவிட மேன்மையானது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குத்தத்தங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது, அதினால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது.
Are kꞌu ri chak ri xuya ri Dios che ri Jesucristo rumal Areꞌ kinimaꞌqil ri e chꞌawenelabꞌ cho ri Dios, sibꞌalaj kꞌo na chikiwach nikꞌaj chik, rumal rech areꞌ kꞌo jun chꞌekom tzij ri jeꞌl na cho ronojel rumal cher pa Dios yaꞌtal chaqe jun jeꞌl laj chiꞌnik.
7 ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.
Qas tzij wi, we ta ri nabꞌe chꞌekom tzij tzꞌaqat, mat xya chi riꞌ jun ukabꞌ chꞌekom tzij.
8 ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதினாலேயே: “கர்த்தர் அறிவிக்கிறதாவது, இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.
Are kꞌu ri Dios, are xrilo chi man kaniman ta ri tinimit jetaq ri karaj Areꞌ xubꞌij: Kape na ri qꞌij are kinbꞌan na jun kꞌakꞌ chꞌekom tzij rukꞌ ri tinimit Israel xuqujeꞌ rukꞌ ri tinimit Judá.
9 நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை; ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை. அதனால் நான், அவர்கள்மேல் கவனம் செலுத்தாமல் இருந்தேன், என்று கர்த்தர் அறிவிக்கிறார்.
Man kajunumataj taj rukꞌ ri chꞌekom tzij ri xinbꞌan kukꞌ ri itat inan ojer, are xeꞌnwesaj loq pa Egipto xeꞌntzuyej loq, rumal kꞌu che ri man xejeqiꞌ taj pa ri chꞌekom tzij, man xel ta chi na kꞌuꞌx chike.
10 அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.
Rumal kꞌu riꞌ kinbꞌan chi na jun chꞌekom tzij kukꞌ ri tinimit Israel: “Kinya na ri nutaqanik pa ri kichomabꞌal xuqujeꞌ kintzꞌibꞌaj na pa ri kanimaꞌ. In kinux na kiDios xuqujeꞌ aꞌreꞌ kuꞌx na e nutinimit.”
11 இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, அல்லது தன் சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.
Pa ri qꞌij riꞌ man choqꞌaqꞌ ta chik chi jun kuya kꞌutuꞌn che ri ukꞌulja xuqujeꞌ man kꞌo ta jun ri kubꞌij che ri rachalal: “Chawetaꞌmaj uwach ri Ajawxel, rumal cher konojel kaketaꞌmaj na nuwach kachapleꞌtaj la rukꞌ ri nitzꞌ akꞌal kꞌa rukꞌ ri nim winaq.
12 நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”
Kinkuy na ri ketzelal xuqujeꞌ man kanaꞌtaj ta chi wi chwe ri kimak”.
13 இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று.
Ri Dios are xubꞌij kꞌakꞌ che we chꞌekom tzij riꞌ, xubꞌij chi man kꞌo ta chi kutayij ri jun ri xikꞌow kanoq rumal qꞌeꞌl chik xuqujeꞌ jubꞌiqꞌ karaj kasach uwach.