< எபிரேயர் 5 >
1 ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் மனிதரிடையே இருந்து தெரிந்தெடுக்கப்பட்டு, இறைவனுக்குரிய காரியங்களில், காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாய் நியமிக்கப்படுகிறான்.
୧ଜିଉଦିମନର୍ ଜେତ୍କି ବଡ୍ ପୁଜାରିମନ୍ ତାକର୍ ନିଜର୍ ଲକ୍ମନର୍ତେଇଅନି ବାଚାଇଅଇବାଇ । ତାକର୍ବାଟେଅନି ପାପ୍ କେମା କର୍ବା ବଲି ଆରି ସର୍ପିଦେବା ବଲି, ଦେଇକରି ପର୍ମେସର୍କେ ସେବା କର୍ବାଇ ।
2 பிரதான ஆசாரியன் தானும் பலவீனனானபடியால், அறியாமையில் இருக்கிறவர்களுடனும் வழிவிலகிச் செல்கிறவர்களுடனும் இவன் தயவு காட்டக்கூடியவனாய் இருக்கிறான்.
୨ଜେଡେବେଲେ ତାର୍ ସଙ୍ଗାରିମନ୍ ନାଜାନିକରି ରଇବାଇ, ଆରି ବୁଲ୍ କାମ୍ କରିରଇବାଇ, ସେ ସେମନର୍ ସଙ୍ଗ୍ ଦୟାଦରମ୍ ଦେକାଇକରି ରଇପାର୍ସି । କାଇକେବଇଲେ ତାର୍ ଜିବନେ ମିସା ବେସି ବୁଲ୍ ରଇସି ।
3 இதனாலேயே அவன் தன்னுடைய பாவங்களுக்காகவும் மக்களின் பாவங்களுக்காகவும் பலிகளைச் செலுத்த வேண்டியதாயிருக்கிறது.
୩ଆରି ତାକେ ମିସା ବେସି ବୁଲ୍ ରଇଲାକେ ସେ ଅବ୍କା ବିନ୍ ଲକର୍ ପାପର୍ ପାଇ ବଲି ଦେଲେ ନଏଁ, ମାତର୍ ନିଜର୍ ପାପର୍ଲାଗି ମିସା ବଲି ସର୍ପିଦେବାକେ ପଡ୍ସି ।
4 மேலும் அந்த மதிப்புக்குரிய ஊழியத்தை ஒருவனும் தனக்குத்தானே பொறுப்பாக்கிக்கொள்ள முடியாது. ஆரோனைப்போலவே, அவனும் இறைவனால் அழைக்கப்பட வேண்டும்.
୪କେ ମିସା ନିଜେ ବାଚିଅଇକରି ବଡ୍ପୁଜାରିର୍ ବେସି ସନ୍ମାନ୍ ପାଇବା ପଦ୍ ପାଇ ନାପାରେ । ମାତର୍ ଗଟେକ୍ ଲକ୍ ପର୍ମେସର୍ ଡାକ୍ଲା ଇସାବେସେ ବଡ୍ ପୁଜାରିର୍ ପଦ୍ ପାଇଅଇସି । ଜେନ୍ତାରି କି କେତେ କେତେ ବରସ୍ ପୁର୍ବେ ଆରଣ୍କେ ବାଚିରଇଲା ।
5 அவ்விதமாகவே, கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்கு அந்த மகிமையை தனதாக்கிக்கொள்ளவில்லை. இறைவனே அவரைக்குறித்து சொல்லியிருக்கிறதாவது, “நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.”
୫ସେନ୍ତାରିସେ କିରିସ୍ଟ ବଡ୍ ପୁଜାରିର୍ ସନ୍ମାନ୍ ପାଇବାକେ ନିଜ୍କେ ବଡ୍ କରେ ନାଇ । ମାତର୍ ପର୍ମେସର୍ସେ ତାକେ ବାଚ୍ଲା । ତାର୍ ବାଦୁଲେ ସେ ତାକେ କଇଲା, “ତୁଇ ମର୍ ପଅ, ଆଜି ମୁଇ ତର୍ ବାବା ଅଇଲିଆଚି ।”
6 இன்னொரு இடத்தில், இறைவன் அவரைக்குறித்து, “நீர் என்றென்றைக்கும் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி ஆசாரியராக இருக்கிறீர்” என்று சொல்லியிருக்கிறார். (aiōn )
୬ଆରି ଗଟେକ୍ ଜାଗାଇ ମିସା ସେ କଇଲା, “ତୁଇ ପୁଜାରି ପଦ୍ ପାଇକରି ମଲ୍କିସେଦକର୍ କୁଟୁମ୍ ପାରା କାଲ୍ କାଲ୍ ଜୁଗ୍ ଜୁଗ୍ ପୁଜାରି ଅଇ ରଇସୁ ।” (aiōn )
7 இயேசு பூமியிலிருந்த நாட்களில், தம்மை மரணத்திலிருந்து காப்பாற்ற வல்லமையுள்ளவரை நோக்கி, சத்தமாய் கதறி, கண்ணீர்விட்டு, தமது வேண்டுதல்களைச் சொல்லி மன்றாடினார். அவருடைய பயபக்தியான அர்ப்பணிப்பினிமித்தம், அவருடைய மன்றாட்டு கேட்கப்பட்டது.
୭ଜିସୁ ଏ ଜଗତେ ରଇଲାବେଲେ, ସେ ଆକ୍ମାରି କାନ୍ଦିକରି ଆରି ଆଁସୁ ଜରାଇକରି କାନ୍ଦି ପର୍ମେସର୍କେ ପାର୍ତନା କରିଲାଗିରଇଲା । ମରନେଅନି ତାକେ ରକିଆ କର୍ବାକେ ପର୍ମେସର୍କେ ବପୁଆଚେ ବଲି ସେ ଜାନିକରି ଏନ୍ତାରି କଲା । ସେ ନିଜେ ଦୟାଦରମ୍ ଦେକାଇଲାକେ ଆରି ପର୍ମେସରର୍ କାତା ମାନ୍ଲାକେ, ପର୍ମେସର୍ ତାର୍ ପାର୍ତନା ସୁନ୍ଲା ।
8 இயேசு இறைவனின் மகனாய் இருந்துங்கூட, தாம் அனுபவித்த வேதனையின் மூலமாகவே, கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்.
୮ଜିସୁ ପର୍ମେସରର୍ ପଅ ଅଇରଇଲେ ମିସା, ସେ ଦୁକ୍ କସ୍ଟ ପାଇରଇଲାର୍ ଲାଗି, ତାର୍ କାତା ମାନ୍ବାକେ ସିକ୍ଲା ।
9 இப்படி இயேசு முழுமையாகப் பிரதான ஆசாரியனாக்கப்பட்ட பின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற எல்லோருக்கும் நித்திய இரட்சிப்பைக் கொடுக்கும் காரணரானார். (aiōnios )
୯ସେ ପର୍ମେସରର୍ କାତା ମାନ୍ଲାକେ ପୁରାପୁରୁନ୍ ସିଦ୍ ଅଇଲା । ତାକେ ବିସ୍ବାସ୍ କର୍ବା ଲକ୍ମନ୍କେ କେବେ ନ ସାର୍ବା ମୁକ୍ତି ଦେବା ଲକ୍ ଅଇଲା । (aiōnios )
10 இயேசு மெல்கிசேதேக்கின் முறைமையின்படி பிரதான ஆசாரியனாய் இருப்பதற்காக, இறைவனாலே நியமிக்கப்பட்டார்.
୧୦ସେଟାର୍ ପାଇ ତାକେ ପର୍ମେସର୍ ମଲ୍କିସେଦକ୍ ପୁଜାରିର୍ ପାରା ବଡ୍ ପୁଜାରି କରି ବାଚ୍ଲା ।
11 இதைக்குறித்து சொல்ல நமக்கு அதிகம் உண்டு. ஆனால் நீங்கள் கற்றுக்கொள்வதில் மந்தமாய் இருப்பதனால், இதை விளங்கப்படுத்துவது கடினமாயிருக்கிறது.
୧୧ଏ ବିସଇ ଆରି ଅଦିକ୍ ତମ୍କେ ଜାନାଇବି ବଲି ମୁଇ ମନ୍ କଲିନି । ମାତର୍ ତମେ ଦାପ୍ରେ ବୁଜି ନାପାରାସ୍କେ ବୁଜାଇବାକେ କସ୍ଟ ଆଚେ ।
12 உண்மையிலேயே இக்காலத்திற்குள் நீங்கள் வேத ஆசிரியர்களாய் இருந்திருக்க வேண்டும். ஆனால் இறைவனுடைய வார்த்தைகளின் ஆரம்ப பாடங்களையே மீண்டும் ஒருவர் உங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டிய நிலையிலேயே நீங்கள் இருக்கிறீர்கள். உங்களுக்குத் தேவையானது பால்தான், திடமான உணவு அல்ல.
୧୨ତମେ ବିସ୍ବାସ୍ କରି ବେସିଦିନ୍ ଅଇଗାଲା ଆଚେ । ଆରି ଏବେ ତମେ ତମର୍ ସଙ୍ଗାରିମନ୍କେ ସିକାଇବାର୍ ରଇଲା । ମାତର୍ ପର୍ମେସରର୍ ପର୍ତୁମ୍ ସିକିଆ ତମ୍କେ ଏବେ ସିକାଇବାକେ ଲକର୍ ଲଡାଆଚେ । ତମେ ଗଟେକ୍ ଦୁଦ୍ କାଇବା ପିଲାର୍ପାରା ଆଚାସ୍ । କାଇକେବଇଲେ ଆଁଟ୍ଟା ମନ୍ କାତ୍ରି ନାପାରାସ୍ ।
13 பாலைக் குடிக்கிறவன் இன்னும் குழந்தையாகவே இருக்கிறான். இதனால் அவன் நீதியைப் பற்றின படிப்பினையில் தேர்ச்சி பெறாதவனாய் இருக்கிறான்.
୧୩ଜେ ଦୁଦ୍ କାଇବାର୍ ଆଚେ, ସେ ଏବେ ମିସା ପିଲାସେ । ସେନ୍ତାରି ଲକ୍ମନ୍ ଟିକ୍ ଆରି ବୁଲ୍ ଚଲାଚଲ୍ତି କର୍ବାଟା ଚିନି ନାପାର୍ଲାଇନି ।
14 முதிர்ச்சியடைந்தவர்களுக்கே திடமான உணவு தகுதியானது. அவர்களே தொடர்ச்சியான பயிற்சியினால், தீமையிலிருந்து நன்மையை வித்தியாசம் காணக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.
୧୪ଚାବି ଚାବି କାଇବା କାଦି ବଡ୍ ଲକ୍ମନର୍ପାଇ । ସେମନ୍ ନିକ ଆରି କାରାପ୍ ଚିନ୍ବାକେ, ନିଜ୍କେ ଅବିଆସ୍ କରାଇ ଆଚତ୍ ।