< எபிரேயர் 10 >

1 மோசேயின் சட்டம் வரப்போகின்ற நன்மைகளின் ஒரு நிழல் மாத்திரமே, அதன் நிஜமல்ல. இதன் காரணமாகவே ஒவ்வொரு வருடமும், திரும்பத்திரும்ப தொடர்ச்சியாகச் செலுத்தப்பட்ட பலிகளின் மூலமாய், வழிபாட்டிற்கு வருகிறவர்களை ஒருபோதும் முழுமை பெறச்செய்ய, மோசேயின் சட்டத்தால் இயலாதிருக்கிறது.
ৱ্যৱস্থা ভৱিষ্যন্মঙ্গলানাং ছাযাস্ৱৰূপা ন চ ৱস্তূনাং মূৰ্ত্তিস্ৱৰূপা ততো হেতো ৰ্নিত্যং দীযমানৈৰেকৱিধৈ ৰ্ৱাৰ্ষিকবলিভিঃ শৰণাগতলোকান্ সিদ্ধান্ কৰ্ত্তুং কদাপি ন শক্নোতি|
2 அவ்வாறு முடியுமாயிருந்தால், பலிகள் செலுத்துவதும் நின்றிருக்கும் அல்லவா? ஏனெனில் இறைவனை ஆராதிக்கிற மக்கள், ஒரே முறையாகத் தங்களுடைய பாவங்களிலிருந்து உண்மையாகவே சுத்திகரிக்கப்பட்டு இருப்பார்கள். அவர்கள் தங்களுடைய பாவத்தைக்குறித்துத் தொடர்ந்து குற்ற உணர்வுடையவர்களாய் இருந்திருக்கமாட்டார்களே!
যদ্যশক্ষ্যৎ তৰ্হি তেষাং বলীনাং দানং কিং ন ন্যৱৰ্ত্তিষ্যত? যতঃ সেৱাকাৰিষ্ৱেককৃৎৱঃ পৱিত্ৰীভূতেষু তেষাং কোঽপি পাপবোধঃ পুন ৰ্নাভৱিষ্যৎ|
3 ஆனால் அந்த பலிகள் ஒவ்வொரு வருடமும், பாவங்களை நினைப்பூட்டுவதாகவே இருந்தன.
কিন্তু তৈ ৰ্বলিদানৈঃ প্ৰতিৱৎসৰং পাপানাং স্মাৰণং জাযতে|
4 ஏனெனில் காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தினால், பாவங்களை ஒருபோதும் நீக்கிப்போட முடியாது.
যতো ৱৃষাণাং ছাগানাং ৱা ৰুধিৰেণ পাপমোচনং ন সম্ভৱতি|
5 இதன் காரணமாகவே கிறிஸ்து உலகத்திற்குள் வந்தபோது, அவர் சொன்னதாவது: “பலியையும், காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால் ஒரு உடலை நீர் எனக்கென ஆயத்தம் செய்தீர்;
এতৎকাৰণাৎ খ্ৰীষ্টেন জগৎ প্ৰৱিশ্যেদম্ উচ্যতে, যথা, "নেষ্ট্ৱা বলিং ন নৈৱেদ্যং দেহো মে নিৰ্ম্মিতস্ত্ৱযা|
6 தகன காணிக்கைகளிலும், பாவநிவாரண காணிக்கைகளிலும் நீர் பிரியப்படவில்லை.
ন চ ৎৱং বলিভি ৰ্হৱ্যৈঃ পাপঘ্নৈ ৰ্ৱা প্ৰতুষ্যসি|
7 புத்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறபடி, ‘இதோ நான் இருக்கிறேன்; இறைவனே, அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன் என்றேன்.’”
অৱাদিষং তদৈৱাহং পশ্য কুৰ্ৱ্ৱে সমাগমং| ধৰ্ম্মগ্ৰন্থস্য সৰ্গে মে ৱিদ্যতে লিখিতা কথা| ঈশ মনোঽভিলাষস্তে মযা সম্পূৰযিষ্যতে| "
8 முன்பு கிறிஸ்து, “பலிகளையும், காணிக்கைகளையும், தகன காணிக்கைகளையும், பாவநிவாரணக் காணிக்கைகளையும் நீர் விரும்பவுமில்லை, அவற்றில் நீர் பிரியப்படவுமில்லை” என்றார். ஆனால் மோசேயின் சட்டத்தின்படி அவை செலுத்தப்பட்டன.
ইত্যস্মিন্ প্ৰথমতো যেষাং দানং ৱ্যৱস্থানুসাৰাদ্ ভৱতি তান্যধি তেনেদমুক্তং যথা, বলিনৈৱেদ্যহৱ্যানি পাপঘ্নঞ্চোপচাৰকং, নেমানি ৱাঞ্ছসি ৎৱং হি ন চৈতেষু প্ৰতুষ্যসীতি|
9 பின்பு அவர், “இதோ, நான் இருக்கிறேன், அடியேன் உமது விருப்பத்தைச் செய்ய வந்திருக்கிறேன்” என்றார். இதனால் அவர் முதலாவதை நீக்கிவிட்டு, இரண்டாவதை ஏற்படுத்தி நிலைநிறுத்துகிறார்.
ততঃ পৰং তেনোক্তং যথা, "পশ্য মনোঽভিলাষং তে কৰ্ত্তুং কুৰ্ৱ্ৱে সমাগমং;" দ্ৱিতীযম্ এতদ্ ৱাক্যং স্থিৰীকৰ্ত্তুং স প্ৰথমং লুম্পতি|
10 இவ்விதமாக, இயேசுகிறிஸ்து ஒரேதரம் எல்லா காலத்திற்குமாக தமது உடலை பலியாகச் செலுத்தியதின் மூலம் இறைவனுடைய சித்தத்தை நிறைவேற்றினதினால் நம்மை பரிசுத்தமாக்கியிருக்கிறார்.
১০তেন মনোঽভিলাষেণ চ ৱযং যীশুখ্ৰীষ্টস্যৈককৃৎৱঃ স্ৱশৰীৰোৎসৰ্গাৎ পৱিত্ৰীকৃতা অভৱাম|
11 ஒவ்வொரு ஆசாரியனும் நாள்தோறும் இறைசமுகத்தில் நின்று, தனது பணிகளைச் செய்கிறான். ஒருபோதும் பாவங்களைப் போக்க முடியாத பலிகளைத் திரும்பத்திரும்ப செலுத்துகிறான்.
১১অপৰম্ একৈকো যাজকঃ প্ৰতিদিনম্ উপাসনাং কুৰ্ৱ্ৱন্ যৈশ্চ পাপানি নাশযিতুং কদাপি ন শক্যন্তে তাদৃশান্ একৰূপান্ বলীন্ পুনঃ পুনৰুৎসৃজন্ তিষ্ঠতি|
12 ஆனால் கிறிஸ்துவாகிய இந்த ஆசாரியன், பாவங்களுக்கான ஒரே பலியை எல்லாக் காலத்திற்குமாக செலுத்தி, பின் இறைவனுடைய வலதுபக்கத்தில் அமர்ந்தார்.
১২কিন্ত্ৱসৌ পাপনাশকম্ একং বলিং দৎৱানন্তকালাৰ্থম্ ঈশ্ৱৰস্য দক্ষিণ উপৱিশ্য
13 அந்தவேளைமுதல், கிறிஸ்து தமது பகைவர்கள் தமது பாதபீடமாக்கப்படுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.
১৩যাৱৎ তস্য শত্ৰৱস্তস্য পাদপীঠং ন ভৱন্তি তাৱৎ প্ৰতীক্ষমাণস্তিষ্ঠতি|
14 ஏனெனில் கிறிஸ்து ஒரே பலியினாலே, பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.
১৪যত একেন বলিদানেন সোঽনন্তকালাৰ্থং পূযমানান্ লোকান্ সাধিতৱান্|
15 பரிசுத்த ஆவியானவரும் இதைக்குறித்து நமக்கு சாட்சி கொடுக்கிறார். அவர் முதலில் சொல்கிறதாவது:
১৫এতস্মিন্ পৱিত্ৰ আত্মাপ্যস্মাকং পক্ষে প্ৰমাণযতি
16 “அந்த நாட்களுக்குப்பின்பு, நான் அவர்களுடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே: நான் எனது சட்டங்களை அவர்களுடைய இருதயங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய மனங்களில் நான் எழுதுவேன் என்று கர்த்தர் சொல்கிறார்.”
১৬"যতো হেতোস্তদ্দিনাৎ পৰম্ অহং তৈঃ সাৰ্দ্ধম্ ইমং নিযমং স্থিৰীকৰিষ্যামীতি প্ৰথমত উক্ত্ৱা পৰমেশ্ৱৰেণেদং কথিতং, তেষাং চিত্তে মম ৱিধীন্ স্থাপযিষ্যামি তেষাং মনঃসু চ তান্ লেখিষ্যামি চ,
17 பின்னும் அவர் சொல்லுகிறதாவது: “நான் அவர்களுடைய பாவங்களையும் சட்டமீறுதல்களையும் ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”
১৭অপৰঞ্চ তেষাং পাপান্যপৰাধাংশ্চ পুনঃ কদাপি ন স্মাৰিষ্যামি| "
18 எனவே, எங்கே பாவங்கள் மன்னிக்கப்பட்டதோ, அங்கே பாவங்களை நீக்குவதற்கான எவ்வித பலியும் இனிமேல் தேவையில்லை.
১৮কিন্তু যত্ৰ পাপমোচনং ভৱতি তত্ৰ পাপাৰ্থকবলিদানং পুন ৰ্ন ভৱতি|
19 ஆகையால் பிரியமானவர்களே, இயேசுவினுடைய இரத்தத்தின் மூலமாய் மகா பரிசுத்த இடத்திற்குள் செல்வதற்கு தைரியம் நமக்கு உண்டு.
১৯অতো হে ভ্ৰাতৰঃ, যীশো ৰুধিৰেণ পৱিত্ৰস্থানপ্ৰৱেশাযাস্মাকম্ উৎসাহো ভৱতি,
20 அவர் திரைச்சீலையின் மூலமாக ஒரு புதிதாக வாழும் வழியை நமக்குத் திறந்திருக்கிறார். அதுவே அவருடைய மாம்சம்.
২০যতঃ সোঽস্মদৰ্থং তিৰস্কৰিণ্যাৰ্থতঃ স্ৱশৰীৰেণ নৱীনং জীৱনযুক্তঞ্চৈকং পন্থানং নিৰ্ম্মিতৱান্,
21 இப்பொழுது இறைவனுடைய வீட்டிற்குப் பொறுப்பாக நமது பிரதான ஆசாரியர் இருக்கிறபடியால்,
২১অপৰঞ্চেশ্ৱৰীযপৰিৱাৰস্যাধ্যক্ষ একো মহাযাজকোঽস্মাকমস্তি|
22 நாம் குற்றமனசாட்சி நீக்கப்பட்ட, சுத்த இருதயத்துடனும், சுத்தமான தண்ணீரினால் கழுவப்பட்ட உடலுடனும், பரிபூரண விசுவாசமுள்ள உண்மையான உள்ளத்துடனும், இறைவனை அணுகி சேருவோமாக.
২২অতো হেতোৰস্মাভিঃ সৰলান্তঃকৰণৈ ৰ্দৃঢৱিশ্ৱাসৈঃ পাপবোধাৎ প্ৰক্ষালিতমনোভি ৰ্নিৰ্ম্মলজলে স্নাতশৰীৰৈশ্চেশ্ৱৰম্ উপাগত্য প্ৰত্যাশাযাঃ প্ৰতিজ্ঞা নিশ্চলা ধাৰযিতৱ্যা|
23 நமக்கு வாக்குத்தத்தம் கொடுத்தவர் வாக்குமாறாதவராய் இருப்பதனால், நாம் அறிக்கையிடுகிற நம்பிக்கையை வழுவாது உறுதியாய்ப் பற்றிக்கொள்வோம்.
২৩যতো যস্তাম্ অঙ্গীকৃতৱান্ স ৱিশ্ৱসনীযঃ|
24 அத்துடன் நாம் அன்பாயிருப்பதிலும் நற்செயல்களைச் செய்வதிலும் எப்படி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தலாம் என்பதைப்பற்றி சிந்திப்போம்.
২৪অপৰং প্ৰেম্নি সৎক্ৰিযাসু চৈকৈকস্যোৎসাহৱৃদ্ধ্যৰ্থম্ অস্মাভিঃ পৰস্পৰং মন্ত্ৰযিতৱ্যং|
25 சிலர் சபையாக ஒன்றுகூடி வருவதை விட்டுவிடுகிறதுபோல, நாமும் செய்யாமல் கர்த்தருடைய நாள் நெருங்கி வருவதைக் காண்கிறதினால் நாம் ஒருவரையொருவர் இன்னும் அதிகமாய் ஊக்குவிப்போம்.
২৫অপৰং কতিপযলোকা যথা কুৰ্ৱ্ৱন্তি তথাস্মাভিঃ সভাকৰণং ন পৰিত্যক্তৱ্যং পৰস্পৰম্ উপদেষ্টৱ্যঞ্চ যতস্তৎ মহাদিনম্ উত্তৰোত্তৰং নিকটৱৰ্ত্তি ভৱতীতি যুষ্মাভি ৰ্দৃশ্যতে|
26 நாம் சத்தியத்தை அறியும் அறிவைப் பெற்ற பின்னும், வேண்டுமென்றே பாவம் செய்துகொண்டு இருப்போமானால், இனிமேலும் பாவங்களை நீக்குவதற்கான பலி வேறொன்றும் இருக்காது.
২৬সত্যমতস্য জ্ঞানপ্ৰাপ্তেঃ পৰং যদি ৱযং স্ৱংচ্ছযা পাপাচাৰং কুৰ্ম্মস্তৰ্হি পাপানাং কৃতে ঽন্যৎ কিমপি বলিদানং নাৱশিষ্যতে
27 ஆனால் பயப்படத்தக்கதான நியாயத்தீர்ப்பையும், இறைவனின் பகைவர்களைச் சுட்டெரிக்கின்றதான பற்றியெரியும் நெருப்பையுமே எதிர்நோக்க வேண்டும்.
২৭কিন্তু ৱিচাৰস্য ভযানকা প্ৰতীক্ষা ৰিপুনাশকানলস্য তাপশ্চাৱশিষ্যতে|
28 மோசேயின் சட்டத்தைப் புறக்கணித்த எவரும், இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் சாட்சியத்தினாலே இரக்கம் காட்டப்படாமல் மரித்தார்கள்.
২৮যঃ কশ্চিৎ মূসসো ৱ্যৱস্থাম্ অৱমন্যতে স দযাং ৱিনা দ্ৱযোস্তিসৃণাং ৱা সাক্ষিণাং প্ৰমাণেন হন্যতে,
29 அப்படியானால் இறைவனின் மகனை காலின்கீழ் மிதித்தவன், தன்னைப் பரிசுத்தமாக்கிய புதிய உடன்படிக்கையின் இரத்தத்தை அசுத்தமாக எண்ணியவன், கிருபையைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரை அவமானப்படுத்தியவன் இன்னும் எவ்வளவு கடுமையாகத் தண்டிக்கப்படுவான் என்று யோசித்துப் பாருங்கள்.
২৯তস্মাৎ কিং বুধ্যধ্ৱে যো জন ঈশ্ৱৰস্য পুত্ৰম্ অৱজানাতি যেন চ পৱিত্ৰীকৃতো ঽভৱৎ তৎ নিযমস্য ৰুধিৰম্ অপৱিত্ৰং জানাতি, অনুগ্ৰহকৰম্ আত্মানম্ অপমন্যতে চ, স কিযন্মহাঘোৰতৰদণ্ডস্য যোগ্যো ভৱিষ্যতি?
30 ஏனெனில், “பழிவாங்குதல் எனக்குரியது; நானே ஏற்றபடி பதில் செய்வேன்” என்றும், “கர்த்தர் தமது மக்களை நியாயந்தீர்ப்பார்” என்றும் சொல்லியிருக்கிறவரை நமக்குத் தெரியும்.
৩০যতঃ পৰমেশ্ৱৰঃ কথযতি, "দানং ফলস্য মৎকৰ্ম্ম সূচিতং প্ৰদদাম্যহং| " পুনৰপি, "তদা ৱিচাৰযিষ্যন্তে পৰেশেন নিজাঃ প্ৰজাঃ| " ইদং যঃ কথিতৱান্ তং ৱযং জানীমঃ|
31 ஜீவனுள்ள இறைவனின் கைகளில் விழுவது பயங்கரமானதே.
৩১অমৰেশ্ৱৰস্য কৰযোঃ পতনং মহাভযানকং|
32 வெளிச்சத்தை நீங்கள் பெற்ற ஆரம்ப நாட்களில் நீங்கள் பல வேதனைகளின் மத்தியில், பெரும் போராட்டத்தில் நிலைத்து நின்ற உங்கள் நிலையை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.
৩২হে ভ্ৰাতৰঃ, পূৰ্ৱ্ৱদিনানি স্মৰত যতস্তদানীং যূযং দীপ্তিং প্ৰাপ্য বহুদুৰ্গতিৰূপং সংগ্ৰামং সহমানা একতো নিন্দাক্লেশৈঃ কৌতুকীকৃতা অভৱত,
33 சில சமயங்களில் நீங்கள் பகிரங்கமாக அவமானப்படுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டீர்கள். இன்னும் வேறுசில சமயங்களில், இவ்விதம் துன்புறுத்தப்பட்டவர்களுடன் தோள்கொடுத்து நின்றீர்கள்.
৩৩অন্যতশ্চ তদ্ভোগিনাং সমাংশিনো ঽভৱত|
34 சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு அனுதாபம் காண்பித்தீர்கள். உங்கள் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டபோது, அவற்றைவிடச் மேன்மையானதும், என்றும் நிலைத்திருக்கிறதுமான உரிமைச்சொத்து உங்களுக்கு இருக்கிறது என்பதை அறிந்திருந்ததினால் அதை மகிழ்ச்சியாய் ஏற்றுக்கொண்டீர்கள்.
৩৪যূযং মম বন্ধনস্য দুঃখেন দুঃখিনো ঽভৱত, যুষ্মাকম্ উত্তমা নিত্যা চ সম্পত্তিঃ স্ৱৰ্গে ৱিদ্যত ইতি জ্ঞাৎৱা সানন্দং সৰ্ৱ্ৱস্ৱস্যাপহৰণম্ অসহধ্ৱঞ্চ|
35 ஆகையால் உங்களுக்கிருக்கும் அந்த மனவுறுதியை நீங்கள் இழந்துவிடாதீர்கள். அது உங்களுக்கு ஒரு பெரிதான வெகுமதியைக் கொண்டுவரும்.
৩৫অতএৱ মহাপুৰস্কাৰযুক্তং যুষ্মাকম্ উৎসাহং ন পৰিত্যজত|
36 நீங்கள் விடாமுயற்சியுடையவர்களாய் இருக்கவேண்டும். அப்பொழுதே நீங்கள் இறைவனுடைய சித்தத்தைச் செய்து முடித்தபின், அவர் வாக்குக்கொடுத்ததைப் பெற்றுக்கொள்வீர்கள்.
৩৬যতো যূযং যেনেশ্ৱৰস্যেচ্ছাং পালযিৎৱা প্ৰতিজ্ঞাযাঃ ফলং লভধ্ৱং তদৰ্থং যুষ্মাভি ৰ্ধৈৰ্য্যাৱলম্বনং কৰ্ত্তৱ্যং|
37 ஏனெனில், “வருகிறவர் கொஞ்சக் காலத்திலே, வந்துவிடுவார். அவர் தாமதிக்கமாட்டார்.
৩৭যেনাগন্তৱ্যং স স্ৱল্পকালাৎ পৰম্ আগমিষ্যতি ন চ ৱিলম্বিষ্যতে|
38 ஆனால், “எனது நீதிமான்கள் விசுவாசத்தினாலே பிழைப்பார்கள். அவர்களில் ஒருவனாவது பின்வாங்கிப்போனால், நான் அவனில் பிரியமாயிருக்கமாட்டேன்” என்ற உற்சாகமூட்டும் வேதவசனங்களை நாம் அறிவோம்.
৩৮"পুণ্যৱান্ জনো ৱিশ্ৱাসেন জীৱিষ্যতি কিন্তু যদি নিৱৰ্ত্ততে তৰ্হি মম মনস্তস্মিন্ ন তোষং যাস্যতি| "
39 நாமோ விசுவாசத்திலிருந்து பின்வாங்கி, அழிந்துபோகிறவர்களோடு அல்ல. விசுவாசித்து, இரட்சிக்கப்படுகிறவர்களோடே சேர்ந்தவர்களாயிருக்கிறோம்.
৩৯কিন্তু ৱযং ৱিনাশজনিকাং ধৰ্ম্মাৎ নিৱৃত্তিং ন কুৰ্ৱ্ৱাণা আত্মনঃ পৰিত্ৰাণায ৱিশ্ৱাসং কুৰ্ৱ্ৱামহে|

< எபிரேயர் 10 >