< ஆகாய் 1 >

1 பெர்சிய அரசன் தரியுவின் ஆட்சியின் இரண்டாம் வருடம், ஆறாம் மாதம் முதலாம் நாள், இறைவாக்கினன் ஆகாய் மூலம் இறைவாக்கு வந்தது. அது செயல்தியேலின் மகன் யூதாவின் ஆளுநர் செருபாபேலுக்கும், யோசதாக்கின் மகனான தலைமை ஆசாரியன் யோசுவாவுக்கும் வந்த யெகோவாவின் வார்த்தை:
Ын анул ал дойля ал ымпэратулуй Дариус, ын зиуа ынтый а луний а шася, кувынтул Домнулуй а ворбит прин пророкул Хагай кэтре Зоробабел, фиул луй Шеалтиел, дрегэторул луй Иуда, ши кэтре Иосуа, фиул луй Иоцадак, мареле преот, астфел:
2 சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “யெகோவாவின் ஆலயத்தை மறுபடியும் கட்டியெழுப்பும் காலம் இன்னும் வரவில்லை” என இந்த மக்கள் சொல்கிறார்கள்.
„Аша ворбеште Домнул оштирилор: ‘Попорул ачеста зиче: «Н-а венит ынкэ время пентру зидиря дин ноу а Касей Домнулуй!»’”
3 அப்பொழுது இறைவாக்கினன் ஆகாய் மூலம் யெகோவாவின் வார்த்தை வந்தது.
Де ачея кувынтул Домнулуй ле-а ворбит прин пророкул Хагай астфел:
4 “என் ஆலயம் இடிபாடாய்க் கிடக்கையில் நீங்கள் மட்டும் உங்கள் அலங்காரமான வீடுகளில் வாழும் காலமா இது?”
„Дар пентру вой а венит оаре время сэ локуиць ын касе кэптушите ку таван, кынд Каса ачаста есте дэрыматэ?”
5 இப்போதும் சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்களுக்கு நடப்பதைப் பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
Аша ворбеште акум Домнул оштирилор: „Уйтаци-вэ ку бэгаре де сямэ ла кэиле воастре!
6 நீங்கள் அதிகமாய் விதைத்திருக்கிறீர்கள், மிகக் கொஞ்சமாய் அறுவடை செய்கிறீர்கள்; நீங்கள் சாப்பிடுகிறீர்கள், ஆனால் ஒருபோதும் திருப்தியடைவதில்லை; நீங்கள் குடிக்கிறீர்கள், ஒருபோதும் உங்கள் தாகமோ தீருவதில்லை. உடைகளை உடுத்திக்கொள்கிறீர்கள், என்றாலும் குளிர் உங்களைவிட்டுப் போவதில்லை. நீங்கள் பணத்தைச் சம்பாதிக்கிறீர்கள், ஆனால் அதை ஓட்டையான பைகளிலேயே போடுகிறீர்கள்.”
Семэнаць мулт ши стрынӂець пуцин; мынкаць ши тот ну вэ сэтураць; бець ши тот ну вэ потолиць сетя; вэ ымбрэкаць ши тот ну вэ есте калд ши чине кыштигэ о симбрие о пуне ынтр-о пунгэ спартэ!”
7 சேனைகளின் யெகோவா சொல்கிறதாவது: “உங்கள் நடத்தையைப்பற்றி கவனமாய் யோசித்துப் பாருங்கள்.
Аша ворбеште Домнул оштирилор: „Уйтаци-вэ ку бэгаре де сямэ ла кэиле воастре!
8 மலைகளில் ஏறிப்போய் மரங்களை வெட்டிவந்து ஆலயத்தை கட்டுங்கள், அதில் நான் மகிழ்ந்து, நான் கனம்பண்ணப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார்.
Суици-вэ пе мунте, адучець лемне ши зидиць Каса! Еу Мэ вой букура де лукрул ачеста ши вой фи прослэвит”, зиче Домнул.
9 நீங்கள் எதிர்ப்பார்த்ததோ அதிகமான அறுவடை, ஆனால் அது மிகக் கொஞ்சமாக மாறிற்று. நீங்கள் வீட்டிற்கு கொண்டு வந்ததையும் நான் ஊதிவிட்டேன். ஏனென்றால் என் ஆலயம் பாழடைந்து கிடக்கையில் நீங்கள் உங்கள் வீடுகளைப் பற்றியே அதிக கருத்தாய் இருக்கிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்கிறார்.
„Вэ аштептаць ла мулт, ши ятэ кэ аць авут пуцин; л-аць адус акасэ, дар Еу л-ам суфлат. Пентру че?”, зиче Домнул оштирилор. „Дин причина Касей Меле, каре стэ дэрыматэ, пе кынд фиекаре дин вой аляргэ пентру каса луй.
10 ஆகவே உங்களின் அலட்சியத்தால் வானம் பனியைப் பெய்யாமலும், நிலம் விளைச்சலை கொடுக்காமலும் போயிற்று.
Де ачея черуриле ну в-ау дат роуа ши пэмынтул ну шь-а дат роаделе.
11 நான் வயலின்மேலும், மலைகளின்மேலும், தானியத்தின்மேலும், புதுத் திராட்சை இரசத்தின்மேலும், எண்ணெயின்மேலும், பூமியில் விளையும் எல்லாவற்றின்மேலும், மனிதர்மேலும், மந்தைகள்மேலும், உங்கள் கைகளின் முயற்சிகள்மேலும் வறட்சியை வருவித்தேன்.
Ам кемат сечета песте царэ, песте мунць, песте грыу, песте муст, песте унтделемн, песте тот че поате адуче пэмынтул, песте оамень ши песте вите ши песте тот лукрул мынилор воастре.”
12 அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யெகோசாதாக்கின் மகன் யோசுவா என்னும் தலைமை ஆசாரியனும் மக்களில் மீதியான அனைவரும் தங்கள் இறைவனாகிய யெகோவாவின் குரலுக்குக் கீழ்ப்படிந்தார்கள். தங்கள் இறைவனாகிய யெகோவா இறைவாக்கினன் ஆகாயை அனுப்பியதால், அவனுடைய செய்திகளுக்கும் கீழ்ப்படிந்தார்கள். மக்களோ யெகோவாவுக்குப் பயந்தார்கள்.
Зоробабел, фиул луй Шеалтиел, Иосуа, фиул луй Иоцадак, мареле преот, ши тоатэ рэмэшица попорулуй ау аскултат гласул Домнулуй Думнезеулуй лор ши кувинтеле пророкулуй Хагай, фииндкэ Домнул Думнезеул лор ыл тримисесе. Ши попорул с-а темут де Домнул.
13 அப்பொழுது யெகோவாவின் தூதுவனாகிய ஆகாய், யெகோவாவின் இந்தச் செய்தியை மக்களுக்குக் கொடுத்து, “நான் உங்களுடன் இருக்கிறேன் என்று யெகோவா அறிவிக்கிறார்” என்றான்.
Хагай, тримисул Домнулуй, а зис попорулуй, дупэ порунка Домнулуй: „Еу сунт ку вой, зиче Домнул.”
14 இவ்வாறு யெகோவா யூதாவின் ஆளுநரான செயல்தியேலின் மகன் செருபாபேலின் ஆவியையும், யெகோசாதாக்கின் மகனும் தலைமை ஆசாரியனுமாகிய யோசுவாவின் ஆவியையும், மக்களில் மீதியானோர் அனைவரின் ஆவியையும் தூண்டினார். அவர்கள் எல்லோரும், தங்கள் இறைவனாகிய சேனைகளின் யெகோவாவின் ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்தார்கள்.
Домнул а трезит духул луй Зоробабел, фиул луй Шеалтиел, дрегэторул луй Иуда, ши духул луй Иосуа, фиул луй Иоцадак, мареле преот, ши духул ынтреӂий рэмэшице а попорулуй. Аша кэ ей ау венит ши с-ау пус пе лукру ын Каса Домнулуй оштирилор, Думнезеул лор,
15 இது ஆறாம் மாதம் இருபத்து நான்காம் நாள் நிகழ்ந்தது. இது தரியு அரசனின் ஆட்சியின் இரண்டாம் வருடம்,
ын зиуа а доуэзечь ши патра а луний а шася, ын анул ал дойля ал ымпэратулуй Дариус.

< ஆகாய் 1 >