< ஆதியாகமம் 5 >

1 ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
アダムの傳の書は是なり神人を創造りたまひし日に神に象りて之を造りたまひ
2 அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
彼等を男女に造りたまへり彼等の創造られし日に神彼等を祝してかれらの名をアダムと名けたまへり
3 ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
アダム百三十歳に及びて其像に循ひ己に象りて子を生み其名をセツと名けたり
4 சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
アダムのセツを生し後の齡は八百歳にして男子女子を生り
5 ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
アダムの生存へたる齡は都合九百三十歳なりき而して死り
6 சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
セツ百五歳に及びてエノスを生り
7 சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
セツ、エノスを生し後八百七年生存へて男子女子を生り
8 சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
セツの齡は都合九百十二歳なりき而して死り
9 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
エノス九十歳におよびてカイナンを生り
10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
エノス、カイナンを生し後八百十五年生存へて男子女子を生り
11 ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
エノスの齡は都合九百五歳なりき而して死り
12 கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
カイナン七十歳におよびてマハラレルを生り
13 மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
カイナン、マハラレルを生し後八百四十年生存へて男子女子を生り
14 கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
カイナンの齡は都合九百十歳なりきしかして死り
15 மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
マハラレル六十五歳に及びてヤレドを生り
16 யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
マハラレル、ヤレドを生し後八百三十年生存へて男子女子を生り
17 மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
マハラレルの齡は都合八百九十五歳なりき而して死り
18 யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
ヤレド百六十二歳に及びてエノクを生り
19 ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
ヤレド、エノクを生し後八百年生存へて男子女子を生り
20 யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
ヤレドの齡は都合九百六十二歳なりき而して死り
21 ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
エノク六十五歳に及びてメトセラを生り
22 மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
エノク、メトセラを生し後三百年神とともに歩み男子女子を生り
23 ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
エノクの齡は都合三百六十五歳なりき
24 ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
エノク神と偕に歩みしが神かれを取りたまひければをらずなりき
25 மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
メトセラ百八十七歳に及びてレメクを生り
26 லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
メトセラ、レメクを生しのち七百八十二年生存へて男子女子を生り
27 மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
メトセラの齡は都合九百六十九歳なりき而して死り
28 லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
レメク百八十二歳に及びて男子を生み
29 அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
其名をノアと名けて言けるは此子はヱホバの詛ひたまひし地に由れる我操作と我勞苦とに就て我らを慰めん
30 நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
レメク、ノアを生し後五百九十五年生存へて男子女子を生り
31 லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
レメクの齡は都合七百七十七歳なりき而して死り
32 நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.
ノア五百歳なりきノア、セム、ハム、ヤペテを生り

< ஆதியாகமம் 5 >