< ஆதியாகமம் 33 >
1 யாக்கோபு நிமிர்ந்து பார்த்தபோது, தொலைவில் ஏசா நானூறு பேருடன் வருவதைக் கண்டான்; ஆகவே அவன் லேயாளிடமும், ராகேலிடமும், இரு பணிப்பெண்களிடமும் பிள்ளைகளைப் பிரித்துக்கொடுத்தான்.
၁ထိုအခါ ယာကုပ် သည် မြော် ကြည့် ၍ ၊ အစ်ကိုဧသော သည် လူ လေး ရာ ပါလျက် ချီ လာသည်ကိုမြင် လျှင် ၊ လေအာ ၊ ရာခေလ ၊ ကျွန် မနှစ် ယောက်တို့တွင် သား များ တို့ကို ဝေ ပေးလေ၏။
2 இருபணிப் பெண்களையும் அவர்கள் பிள்ளைகளையும், முன்னால் நிறுத்தினான். அடுத்தாக லேயாளையும் அவள் பிள்ளைகளையும், கடைசியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினான்.
၂ကျွန် မနှစ်ယောက်ကိုကား၊ သူ တို့သား များနှင့် ရှေ့ ကနေစေ၍ ၊ လေအာ နှင့် သူ ၏သား တို့ကို အလယ်၌ ၎င်း၊ ရာခေလ နှင့် ယောသပ် ကို နောက် ၌၎င်း ထား လေ ၏။
3 அவர்களுக்கு முன்பாகச் சென்ற யாக்கோபு, தன் சகோதரனாகிய ஏசா நெருங்கிவந்து கொண்டிருப்பதைக் கண்டு, ஏழுமுறை தரைமட்டும் குனிந்து அவனை வாழ்த்தினான்.
၃သူ တို့ရှေ့ မှာ ကိုယ်တိုင် လွန် သွား၍ ၊ ခုနစ် ကြိမ် တိုင်အောင် ဦးညွှတ် ပြပ်ဝပ်လျက် ၊ အစ်ကို အနီးသို့ ချဉ်းကပ် လေ၏။
4 ஆனால் ஏசாவோ, யாக்கோபைக் கண்டதும் ஓடிப்போய், அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிப்பிடித்து முத்தமிட்டான். இருவருமே அழுதார்கள்.
၄ထိုအခါ ဧသော သည် ကြိုဆိုခြင်း ငှါ ပြေး လာ၍ ၊ လည် ချင်း ရှက် လျက် ၊ ပိုက်ဘက် နမ်းရှုတ် ခြင်းကိုပြု၍၊ နှစ်ယောက်စလုံးတို့သည် ငိုကြွေး ကြ၏။
5 பின்பு ஏசா நிமிர்ந்து பார்த்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டபோது, “உன்னோடிருக்கும் இவர்கள் யார்?” என்று யாக்கோபிடம் கேட்டான். அதற்கு அவன், “இவர்கள் உமது அடியவனாகிய எனக்கு இறைவன் கிருபையாய்த் தந்த பிள்ளைகள்” என்றான்.
၅ထိုနောက် ၊ မြော် ကြည့် ၍ ၊ မိန်းမ များ၊ သူငယ် များကို မြင် လျှင် ၊ သင် ၌ပါ သောဤ သူတို့သည်၊ အဘယ် သူနည်းဟုမေး သော်၊ ကိုယ်တော် ၏ ကျွန် အား ၊ ဘုရားသခင် ပေး သနားတော်မူသောသူငယ် ဖြစ်ကြပါ၏ဟု ပြန်ပြော ပြီးမှ၊
6 அப்பொழுது பணிப்பெண்களும் அவர்களுடைய பிள்ளைகளும் வந்து குனிந்து வணங்கினார்கள்.
၆ကျွန် မတို့သည်၊ မိမိ တို့သား များနှင့် ချဉ်းကပ် ၍ ဦးညွှတ် ကြ၏။
7 அடுத்ததாக லேயாளும் தன் பிள்ளைகளுடன் வந்து வணங்கினாள். கடைசியாக ராகேலும் யோசேப்பும் வந்து வணங்கினார்கள்.
၇ထိုနောက် ၊ လေအာ သည် သူ ၏သား များနှင့် ချဉ်းကပ် ၍ ဦးညွှတ် ကြ၏။ ထိုနောက် ၊ ယောသပ် နှင့် ရာခေလ သည် ချဉ်းကပ် ၍ ဦးညွှတ် ခြင်းကို ပြုကြ၏။
8 அப்பொழுது ஏசா, “நான் வழியிலே சந்தித்த மிருகக் கூட்டங்களை நீ அனுப்பியதன் காரணம் என்ன?” என்று கேட்டான். அதற்கு யாக்கோபு, “ஆண்டவனே! அது உம்முடைய கண்களில் தயவு கிடைக்கவேண்டும் என்பதற்காகவே” என்றான்.
၈ဧသောကလည်း၊ ကျွန်ုပ်တွေ့ သော တိရစ္ဆာန် စု အပေါင်း တို့သည်၊ အဘယ်သို့ သောအရာနည်းဟုမေး လျှင်၊ သခင် ၏စိတ် တော်နှင့် တွေ့ စေခြင်းငှါ ဖြစ်ပါသည် ဟု ပြန်ပြော ၏။
9 அதற்கு ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் ஏராளம் இருக்கின்றன. உன்னிடம் உள்ளவற்றை நீயே வைத்துக்கொள்” என்றான்.
၉ဧသော ကလည်း၊ ငါ့ ညီ ၊ ငါ ၌ လုံလောက် အောင် ရှိ ၏။ သင် ၏ ဥစ္စာတို့ကို ယူ ထားဦးလော့ဟုဆို ၏။
10 அதற்கு யாக்கோபு, “அப்படியல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைக்குமானால், என்னிடமிருந்து இந்த அன்பளிப்பை ஏற்றுக்கொள்ளும். இப்பொழுது என்னை நீர் தயவாய் ஏற்றுக்கொண்டிருக்கிறபடியால், நான் உமது முகத்தைப் பார்ப்பது இறைவனுடைய முகத்தைப் பார்ப்பதுபோல் இருக்கிறது.
၁၀ယာကုပ် ကလည်း ၊ ထိုသို့မဆိုပါနှင့်။ စိတ်တော် နှင့် တွေ့ သည်မှန်လျှင် ၊ ကျွန်တော် ဆက် သော လက်ဆောင် ကို ခံယူ တော်မူပါ။ ဘုရားသခင် ၏ မျက်နှာ တော် ကို ဖူးမြင် ရသကဲ့သို့ ၊ ကိုယ်တော် ၏ မျက်နှာ ကို ဖူးမြင် ရပါ၏။ စိတ် တော်သည်လည်းနူးညွတ် ပါ၏။
11 இறைவன் என்மேல் இரக்கமுடையவராயிருக்கிறார், எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் இருக்கின்றன. எனவே உமக்குக் கொண்டுவரப்பட்ட அன்பளிப்புகளைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளும்” என்று சொன்னான். அவ்வாறு அவன் வற்புறுத்தியபடியால் ஏசா அவற்றை ஏற்றுக்கொண்டான்.
၁၁ကိုယ်တော် ထံ သို့ရောက် သော ကျွန်တော် ၏ မင်္ဂလာ ကိုခံယူ တော်မူပါ။ ဘုရားသခင် သည်၊ ကျွန်တော် ၌ များစွာသောကျေးဇူး ကို ပြုတော်မူပြီ။ ကျွန်တော် ၌ လုံလောက် အောင်ရှိ ပါ၏ဟူ၍ တိုက်တွန်း သောကြောင့် ခံယူ လေ၏။
12 அதன்பின்பு ஏசா, “வா, நாம் புறப்பட்டுச் செல்வோம்; நான் உன்முன் செல்கிறேன்” என்று யாக்கோபைக் கூப்பிட்டான்.
၁၂ဧသောကလည်း၊ ခရီး သွားကြစို့၊ သင့် ရှေ့ မှာ ကျွန်ုပ်သွား မည်ဟုဆို လျှင်၊
13 அதற்கு யாக்கோபு ஏசாவிடம், “எனது பிள்ளைகளோ சிறு குழந்தைகள், அதோடு பால் கொடுக்கும் ஆடுகளையும், பசுக்களையும் நான் கவனிக்க வேண்டும் என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக்கொண்டு போனால் எல்லா மிருகங்களும் இறந்துவிடும்.
၁၃ယာကုပ်က၊ သခင် သိ သည်အတိုင်း၊ ဤသူငယ် တို့သည် နုငယ် ပါ၏။ သား ငယ်ပါသောသိုး ၊ ဆိတ်၊ နွားမ တို့သည် ကျွန်တော် ၌ပါပါ၏။ တနေ့ ခြင်းတွင် အနှင် လွန် လျှင် ၊ ရှိသမျှ တို့သည် သေ ကြပါလိမ့်မည်။
14 ஆகையால் என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே செல்லும்; நான் உமக்குப் பின்னால் என் பிள்ளைகளுடைய மந்தைகளுடைய நடையின் வேகத்திற்குத் தக்கதாக நடந்து, உமது இருப்பிடமாகிய சேயீரை வந்து சேருவேன்” என்றான்.
၁၄ထိုကြောင့်သခင် သည်၊ ကိုယ်တော် ၏ ကျွန် ရှေ့ မှာကြွ နှင့်တော်မူပါ။ ကျွန်တော်မူကား၊ ကျွန်တော်ဆောင် ခဲ့သော တိရစ္ဆာန်များ၊ သူငယ် များ၊ တတ်နိုင်သမျှအတိုင်း ၊ သခင် နေရာ စိရ ပြည်သို့ ရောက် အောင်၊ တဖြည်းဖြည်း ပို့ဆောင် ပါမည်ဟု လျှောက်လေ၏။
15 அப்பொழுது ஏசா, “அப்படியானால் என்னுடைய ஆட்களில் சிலரை உன்னுடன் விட்டுப் போகிறேன்” என்றான். அதற்கு யாக்கோபு, “அப்படிச் செய்வானேன்? என் ஆண்டவனுடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்தால் மட்டும் போதும்” என்றான்.
၁၅ဧသော ကလည်း ၊ သို့ဖြစ်လျှင်အကျွန်ုပ် ၌ ပါ သောသူ အချို့တို့ကို ညီ၌ထား ခဲ့ပါရစေဟုဆိုလျှင် ၊ ယာကုပ်က၊ အဘယ် အကြောင်းရှိပါသနည်း။ သခင် ၏ စိတ် တော်နှင့်တွေ့ ပါစေဟု ပြန် ဆိုသော်၊
16 எனவே ஏசா, அன்றைக்கே சேயீருக்குத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.
၁၆ဧသော သည် ထိုနေ့ ခြင်းတွင် စိရ ပြည်သို့ ခရီး သွား၍ ပြန် လေ၏။
17 ஆனால் யாக்கோபு, சுக்கோத்துக்குப் போய் அங்கே தனக்கு ஒரு இடத்தை அமைத்து, தன் வளர்ப்பு மிருகங்களுக்கும் குடில்களைப் போட்டான், அதினாலேயே அந்த இடத்திற்குச் சுக்கோத் என்னும் பெயர் வந்தது.
၁၇ယာကုပ် လည်း ၊ သုကုတ် အရပ်သို့ ခရီး သွား၍ ၊ ကိုယ် နေဘို့ အိမ် ကို၎င်း ၊ တိရစ္ဆာန် များနေဘို့ တင်းကုပ် တို့ကို၎င်း၊ ဆောက် လေ၏။ ထို့ကြောင့် ထိုအရပ် ကို၊ သုကုတ် ဟူ၍တွင် လေသတည်း။
18 பின்பு யாக்கோபு பதான் அராமிலிருந்து புறப்பட்டு, பாதுகாப்பாக கானான் நாட்டிலுள்ள சீகேம் பட்டணத்திற்கு வந்து, அங்கே அந்த பட்டணம் தெரியக்கூடிய இடத்தில் கூடாரம் அமைத்தான்.
၁၈ထိုနောက်မှ ၊ ရှေခင် မြို့ သို့ ဘေးမဲ့ ရောက် လေ၏။ ပါဒနာရံ ပြည်မှ ပြန်လာ၍၊ ခါနာန် ပြည် သို့ ရောက် သော လမ်းခရီးတွင် ၊ ထိုမြို့ရှိသတည်း။ ထိုမြို့ ရှေ့ မှာတဲ ကို ဆောက်လေ၏။
19 யாக்கோபு தான் கூடாரம் அமைத்த அந்த நிலத்தை, ஏமோரின் மகன்களிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு வாங்கினான். இந்த ஏமோர் சீகேமின் தகப்பன்.
၁၉တဲ ဆောက် ရာမြေ အကွက် ကို ရှေခင် ၏အဘ ၊ ဟာမော် ၏သား တို့တွင်၊ ငွေ တပိဿာ အဘိုးပေး၍ ဝယ် ရသတည်း။
20 அங்கே யாக்கோபு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு, ஏல்எல்லோகே இஸ்ரயேல் என்று பெயரிட்டான்.
၂၀ထို အရပ်၌လည်း ယဇ် ပလ္လင်ကို တည် ပြီးလျှင် ၊ ဧလေလောဣသရေလ ဟူ၍ သမုတ် လေ၏။