< ஆதியாகமம் 24 >

1 ஆபிரகாம் இப்பொழுது வயது முதிர்ந்தவன் ஆனான்; யெகோவா எல்லாவிதத்திலும் அவனை ஆசீர்வதித்தார்.
အာဗြဟံ သည်အို ၍ ၊ အသက် အရွယ်ကြီးရင့် လှပြီ။ ထာဝရဘုရား သည်၊ အရာရာ ၌ သူ့ ကို ကောင်းကြီး ပေးတော်မူပြီ။
2 ஆபிரகாம் தன் வீட்டிலுள்ள யாவற்றுக்கும் பொறுப்பாயிருந்த தலைமைப் பணியாளனிடம், “நீ என் தொடையின்கீழ் உன் கையை வைத்து,
အာဗြဟံ သည်၊ မိမိ အိမ်သား တို့တွင် အသက် ကြီး၍ ဘဏ္ဍာစိုး လုပ်သောသူကို ခေါ် လျက်၊
3 பரலோகத்துக்கு இறைவனும், பூமிக்கு இறைவனுமாகிய யெகோவாவின் பெயரால் எனக்குச் சத்தியம் செய்யவேண்டும். நான் கானானியர் மத்தியில் வாழ்வதால் அவர்களுடைய மகள்களில் ஒருத்தியையும் என் மகனுக்கு மனைவியாக நீ எடுக்கமாட்டாய் என்றும்,
သင် သည်၊ ငါ နေ သောခါနာန် အမျိုးသမီး တို့ တွင်၊ ငါ့ သား ဘို့ မယား ကို မ ရွေး မယူဘဲ၊
4 என் நாட்டிற்கும், என் உறவினரிடத்திற்கும் போய், என் மகன் ஈசாக்கிற்கு ஒரு மனைவியை எடுப்பாய் என்றும் சத்தியம் செய்யவேண்டும்” என்றான்.
ငါ့ ပြည် ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ သွား ၍ ၊ ငါ့ သား ဣဇာက် အဘို့ မယား ကို ယူ ရမည်ဟု၊ သင် ၏လက် ကို ငါ့ ပေါင် အောက် ၌ထား ပြီးမှ၊ ကောင်းကင် မြေကြီး အရှင် ဘုရားသခင် ၊ ထာဝရဘုရား ကို တိုင်တည်၍၊ ငါကျိန် ဆိုစေ ပါမည်ဟုဆို၏။
5 அப்பொழுது அவ்வேலைக்காரன், “நான் தெரிந்தெடுக்கும் பெண் என்னுடன் வர விரும்பவில்லையென்றால், உம்முடைய மகன் ஈசாக்கை நீர் விட்டுவந்த நாட்டுக்கு அழைத்துப் போகவேண்டுமோ?” என்று கேட்டான்.
ကျွန် ကလည်း ၊ မိန်းမ သည်ဤ ပြည် သို့ ကိုယ်တော် ၏သား ကို တဖန်ကျွန်တော်ခေါ် သွားရပါမည်လောဟု မေး လေသော်၊
6 அதற்கு ஆபிரகாம், “என் மகனை திரும்பவும் அவ்விடத்திற்கு அழைத்துப் போகாதபடி கவனமாயிரு.
အာဗြဟံ က၊ ထို ပြည်သို့ ငါ့ သား ကိုခေါ် ၍ မ သွား နှင့်။ သတိပြု လော့။
7 என் தகப்பன் வீட்டிலிருந்தும், நான் பிறந்த நாட்டிலிருந்தும் என்னை அழைத்த பரலோகத்தின் இறைவனாகிய யெகோவா, என்னிடம் பேசி, எனக்கு ஆணையிட்டு, ‘உனக்கும் உன் சந்ததிக்கும் இந்நாட்டைக் கொடுப்பேன்’ என்று வாக்களித்திருக்கிறார். ஆதலால் அவர், நீ அங்கிருந்து என் மகனுக்கு ஒரு பெண்ணைக் கொண்டுவர உனக்கு முன்பாக தமது தூதனை அனுப்புவார்.
ငါ့ အဘ ၏အိမ် မှ ၎င်း၊ ငါ့ အမျိုးသား နေရာပြည် မှ ၎င်း ငါ့ ကိုခေါ် ၍၊ သင် ၏အမျိုးအနွယ် အား ဤ ပြည် ကို ငါပေး မည်ဟု၊ ငါ့ အား ဗျာဒိတ် တော်ပေး၍ ကျိန်ဆို တော်မူသော ကောင်းကင် ဘုံရှင် ဘုရားသခင် ထာဝရဘုရား သည်၊ မိမိ ကောင်းကင်တမန် ကို သင့် ရှေ့ ၌ စေလွှတ် တော်မူသဖြင့် ၊ သင်သည်ထို ပြည်မှ ငါ့ သား ဘို့ မယား ကို ယူ ရလိမ့် မည်။
8 அந்தப் பெண் இவ்விடம் வர விரும்பவில்லையென்றால், நீ எனக்குச் செய்து கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய். என் மகனை மட்டும் அங்கே அழைத்துக்கொண்டு போகாதே” என்றான்.
မိန်းမ သည်သင် နှင့်အတူ မ လိုက် လို လျှင် ၊ သင် သည်၊ ယခုငါ ပေးသောကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ။ ငါ့ သား ကို ထို ပြည်သို့ ခေါ် ၍ မ သွားနှင့်ဟုဆိုပြီးမှ၊
9 அப்படியே அவ்வேலைக்காரன் தன் கையை தன் எஜமான் ஆபிரகாமின் தொடையின்கீழ் வைத்து, அவன் இந்தக் காரியத்தைக்குறித்து ஆணையிட்டுச் சத்தியம் செய்தான்.
ကျွန် သည် သခင် အာဗြဟံ ၏ ပေါင် အောက် ၌ လက် ကိုထား ၍ ထို အမှု ၌ ကျိန်ဆို လေ၏။
10 பின்பு அவ்வேலைக்காரன் ஆபிரகாமிடமிருந்து எல்லா வகையான நல்ல பொருட்களையும், அவனுடைய பத்து ஒட்டகங்கள்மீது ஏற்றிக்கொண்டு போனான். அவன் மெசொப்பொத்தாமியா வழியாகப்போய், நாகோர் பட்டணத்தை வந்தடைந்தான்.
၁၀ထိုကျွန် သည်လည်း ၊ မိမိ သခင်၏ဥစ္စာ ရှိသမျှ ကို စီရင် သော သူဖြစ်၍၊ သခင် ၏ကုလားအုပ် စုထဲက ၊ ကုလားအုပ် ဆယ် စီးကိုယူ ၍ထ သွား သဖြင့် ၊ မေသောပေါဘာမိ တိုင်း၊ နာခေါ် မြို့ သို့ ရောက် လေ၏။
11 அவன் பட்டணத்திற்கு வெளியே இருந்த ஒரு கிணற்றருகே தன் ஒட்டகங்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக மண்டியிடச் செய்தான்; அது பெண்கள் தண்ணீர் எடுக்கவரும் மாலை வேளையாக இருந்தது.
၁၁မိန်းမများရေခပ် သော ညဦး ယံအချိန် ၌ ၊ မြို့ ပြင် ရေတွင်း နား မှာ ကုလားအုပ် တို့ကို ဝပ် စေပြီးလျှင်၊
12 அப்பொழுது அவன், “யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, இன்று எனக்கு வெற்றியைத் தந்து, என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டும்.
၁၂အကျွန်ုပ် ၏သခင် ၊ အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ယနေ့ အကျွန်ုပ် အကြံကို ထမြောက် စေ၍ ၊ အကျွန်ုပ် ၏သခင် အာဗြဟံ ၌ ကျေးဇူး ပြု တော်မူပါဟု၊ အကျွန်ုပ်ဆုတောင်း ပါ၏။
13 இதோ நான் இந்த நீரூற்றண்டையில் நிற்கிறேன், இந்த நகரத்து மக்களின் இளம்பெண்கள் தண்ணீர் மொள்ள வருகிறார்கள்.
၁၃အကျွန်ုပ် သည်၊ ဤရေတွင်း နား မှာ ရပ်နေ ၍ ၊ ထိုမြို့ သူ သတို့သမီး တို့သည်၊ ရေ ခပ် ခြင်းငှါ လာ ကြသည် တွင်၊
14 நான் இங்கு வரும் ஒரு பெண்ணிடம், ‘உன் குடத்தைச் சரித்து நான் குடிக்கும்படி தண்ணீர் ஊற்று’ என்று சொல்வேன். அப்பொழுது, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் ஊற்றுவேன்’ என்று சொல்கிறவள் எவளோ, அவளே உமது அடியானாகிய ஈசாக்குக்கு நீர் தெரிந்துகொண்ட பெண்ணாயிருக்கட்டும். இதனால் என் எஜமான் ஆபிரகாமுக்கு இரக்கம் காட்டினீர் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்று மன்றாடினான்.
၁၄အကြင်သတို့သမီးကို၊ ကျွန်ုပ်သောက် ခြင်းငှါသင် ရေ ဘူးကို ချ ပါဟုဆို သော်၊ သောက် ပါ၊ သင် ၏ကုလားအုပ် တို့ကိုလည်း ရေ တိုက်ပါမည်ဟု၊ ပြန် ဆိုသော သမီး သည်၊ ကိုယ်တော် ၏ကျွန် ဣဇာက် ဘို့ ခန့်ထားတော်မူ သောသူဖြစ် ပါစေသော။ ထိုသို့အားဖြင့်၊ အကျွန်ုပ် ၏ သခင် ၌ ကျေးဇူး ပြု တော်မူကြောင်း ကို၊ အကျွန်ုပ်သိ ရပါ မည်ဟု လျှောက်ဆို၏။
15 அவன் மன்றாடி முடிக்குமுன்பே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்தாள். அவள் ஆபிரகாமின் சகோதரன் நாகோருக்கும், அவன் மனைவி மில்க்காளுக்கும் மகனான பெத்துயேலின் மகள்.
၁၅ထိုသို့လျှောက်ဆို၍မ ပြီး မှီ၊ အာဗြဟံ အစ်ကို နာခေါ် မယား မိလခါ သား ၊ ဗေသွေလ ၏ သမီး ရေဗက္က သည်၊ ရေ ဘူးကိုထမ်း လျက် ထွက် လာသည်ကိုမြင် ၏။
16 அவள் மிகவும் அழகுடையவளும், ஒருவனுடனும் உறவுகொள்ளாத கன்னியாகவும் இருந்தாள். அவள் நீரூற்றண்டைக்குப் போய் தன் குடத்தை நிரப்பிக்கொண்டு மேலே ஏறிவந்தாள்.
၁၆ထို သတို့သမီး သည်၊ အလွန် အဆင်း လှ ၍၊ ယောက်ျား နှင့် မ ဆက်ဆံ သေးသော ကညာ ဖြစ်၏။ ရေတွင်း သို့ ဆင်း ၍ ၊ ရေဘူး ကို ရေနှင့်ဖြည့် ပြီးမှ တက် လာ ၏။
17 வேலைக்காரன் அவளை சந்திக்கும்படி விரைந்து, “தயவுசெய்து உன் குடத்திலிருந்து எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொடு” என்றான்.
၁၇ကျွန် သည်လည်း၊ ထိုမိန်းမ နှင့် တွေ့ ခြင်းငှါ ပြေး ၍ ၊ သင် ၏ရေ ဘူး၌ ရေ အနည်းငယ် ကို သောက် ပါရစေဟု ဆို လေသော်၊
18 உடனே அவள், “ஐயா, குடியுங்கள்” என்று சொல்லி, குடத்தை விரைவாய் இறக்கிக் கையில் பிடித்து, அவனுக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
၁၈မိန်းမက၊ သောက် ပါလောအရှင် ဟုဆို သဖြင့် ၊ မိမိ လက် ပေါ်မှာ၊ အလျင် အမြန်ရေ ဘူးကို ချ ၍ ၊ ရေကို ပေး လေ၏။
19 அவள் அவனுக்குக் குடிக்கக் கொடுத்தபின், “உமது ஒட்டகங்கள் குடித்துத் தீருமட்டும் அவைகளுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்றாள்.
၁၉ရေကို ပေး ပြီးလျှင် ၊ သင် ၏ကုလားအုပ် တို့သည် လည်း ၊ ဝစွာ သောက် စရာဘို့ ရေခပ် ပါမည်ဟု ဆို သည် အတိုင်း၊
20 அவள் தன் குடத்திலிருந்த தண்ணீரை விரைவாய்த் தொட்டிக்குள் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைப்பதற்காக ஊற்றண்டைக்கு ஓடினாள். அவனுடைய ஒட்டகங்களுக்குப் போதுமான அளவு தண்ணீரை இறைத்து ஊற்றினாள்.
၂၀အလျင် အမြန်ဘူး၌ရှိသောရေကိုရေ တိုက်ခွက် ထဲ၌ လောင်း ပြီးလျှင် ၊ တဖန် ခပ် ခြင်းငှါ ရေတွင်း သို့ ပြေး ၍ ၊ ကုလားအုပ် အဘို့ ရေခပ် လေ၏။
21 யெகோவா தான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்தாரோ இல்லையோ என்று அறிவதற்காக, அவன் ஒன்றும் பேசாமல் அவளைக் கூர்ந்து கவனித்தான்.
၂၁ယောက်ျား သည် ထိုမိန်းမ ကို အံ့ဩ ၍ ၊ မိမိ ရောက် လာသောအမှုကို ထာဝရဘုရား ပြုစု တော်မူသည်၊ မ မူသည်ကို သိ လို၍ ၊ တိတ်ဆိတ် စွာ နေလေ၏။
22 ஒட்டகங்கள் தண்ணீர் குடித்து முடிந்தபின், அந்த மனிதன் ஒரு பெக்கா நிறையுள்ள தங்க மூக்குத்தியையும், பத்து சேக்கல் நிறையுள்ள இரண்டு தங்க வளையல்களையும் அவளுக்குக் கொடுத்தான்.
၂၂ကုလားအုပ် များကို ရေသောက် စေပြီး သော နောက်၊ ယောက်ျား သည်၊ အချိန် ငါး မူးရှိသောရွှေ နှာဆွဲ ၊ အကျပ်တ ဆယ်အချိန် ရှိသောရွှေ လက်ကောက် တရံ ကို ထုတ် ၍၊
23 பின்பு அவளிடம், “நீ யாருடைய மகள்? இரவு தங்குவதற்காக உன் தகப்பன் வீட்டில் எங்களுக்கு இடமுண்டா? தயவுசெய்து எனக்குச் சொல்” என்றான்.
၂၃သင် သည် အဘယ်သူ ၏သမီး ဖြစ်သနည်း။ ကျွန်ုပ် ကို ပြော ပါ။ သင် ၏အဘ အိမ် ၌ ကျွန်ုပ်တို့ တည်းခို စရာ အရပ် ရှိ သလောဟု မေး လေသော်
24 அவள் அவனுக்குப் பதிலளித்து, “நான், நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான பெத்துயேலின் மகள்” என்றாள்.
၂၄မိန်းမက၊ ကျွန်ုပ် သည် နာခေါ် ၏မယားမိလခါ ဘွား မြင်သော၊ ဗေသွေလ ၏သမီး ဖြစ်သည်ဟူ၍၎င်း၊
25 மேலும் அவள், “எங்களிடத்தில் வைக்கோலும், ஒட்டகத்திற்குத் தீனியும் வேண்டியளவு இருக்கின்றன. உங்களுக்கு இரவில் தங்குவதற்கு இடமும் உண்டு” என்றாள்.
၂၅ကျွန်ုပ် တို့၌ မြက် ခြောက်များ၊ စားဘွယ် သောက်ဘွယ်များနှင့် တည်းခို စရာ အရပ် လည်း ရှိသည်ဟူ၍၎င်း ဆို လေ၏။
26 உடனே அந்த வேலைக்காரன் தலைதாழ்த்தி யெகோவாவை வழிபட்டு,
၂၆ထိုအခါ ယောက်ျား သည် ဦးညွှတ် ချ၍ ထာဝရဘုရား ကို ကိုးကွယ် လျက်၊
27 “என் எஜமான் ஆபிரகாமின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். என் எஜமானுக்கு அவர் தமது இரக்கத்தையும் உண்மையையும் காட்டாமல் இருக்கவில்லை. யெகோவா என்னையோ, என் எஜமானின் உறவினர் வீட்டுக்கே வழிநடத்தி வந்திருக்கிறார்” என்றான்.
၂၇ကရုဏာ ၊ သစ္စာ တော်ကို အကျွန်ုပ် သခင် မှ ရုပ်သိမ်း တော်မ မူသော၊ အကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား သည် မင်္ဂလာ ရှိတော်မူစေ သတည်း။ လမ်း မှာ သွားလျက်ရှိသောအကျွန်ုပ် ကို ထာဝရဘုရား သည် အကျွန်ုပ် သခင် ၏ညီအစ်ကို တို့အိမ် သို့ ပို့ဆောင် တော်မူပါသည်တကားဟု မြွက်ဆို ၏။
28 அப்பெண் ஓடிப்போய், நடந்தவற்றைத் தன் தாயின் வீட்டாரிடம் சொன்னாள்.
၂၈သတို့သမီး သည်လည်း ပြေး ၍ အမိ ၏အိမ် ၌ ဤ အရာ များကို ကြား ပြောလေ၏။
29 ரெபெக்காளுக்கு லாபான் என்னும் பெயருடைய ஒரு சகோதரன் இருந்தான். அவன் நீரூற்றருகே நின்ற அம்மனிதனிடம் விரைந்து போனான்.
၂၉ရေဗက္က ၌ လာဗန် အမည် ရှိသောမောင် တယောက်ရှိ၏။ လာဗန် သည် ယောက်ျား ရှိရာ ရေတွင်း သို့ ပြေး ၏။
30 லாபான் தன் சகோதரியின் மூக்குத்தியையும், கைகளிலிருந்த வளையல்களையும் கண்டான். அத்துடன் அம்மனிதன் சொன்னவற்றையும் ரெபெக்காள் சொல்லக் கேட்டவுடனே, லாபான் போய் நீரூற்றின் அருகே அம்மனிதன் ஒட்டகங்கள் அண்டையில் நிற்கக் கண்டான்.
၃၀သူ သည်နှာဆွဲ ကို၎င်း ၊ နှမ လက် ၌ လက်ကောက် ကို၎င်း မြင် ၍ ၊ ထိုယောက်ျား သည်ကျွန်ုပ် ကို ဤသို့ ပြော သည်ဟု၊ နှမ ရေဗက္က ဆိုသော စကား ကို ကြား သောအခါ ၊ ရေတွင်း ၌ ကုလားအုပ် အနား မှာရပ် နေသောယောက်ျား ထံသို့ ရောက် သောအခါ၊
31 அவன் அந்த மனிதனிடம், “யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவரே, வாரும்; நீர் ஏன் இங்கே வெளியே நிற்கிறீர்? உமக்காக வீட்டையும், ஒட்டகங்களுக்கு இடத்தையும் ஆயத்தப்படுத்தியிருக்கிறேன்” என்றான்.
၃၁ထာဝရဘုရား ကောင်းကြီး ပေးတော်မူသောသူ၊ ကျွန်ုပ်အိမ်သို့ ဝင် ပါလော့။ ပြင် ၌အဘယ်ကြောင့် ရပ် နေသနည်း။ အိမ် ကို၎င်း၊ ကုလားအုပ် များနေရာ အရပ်ကို၎င်း ၊ ကျွန်ုပ် ပြင် ပါပြီဟုဆို သဖြင့်၊
32 இதனால் அந்த மனிதன் லாபானுடன் வீட்டிற்குப் போனான், ஒட்டகங்களின் சுமைகள் இறக்கப்பட்டன. ஒட்டகங்களுக்கு வைக்கோலும் தீனியும் கொண்டுவரப்பட்டன. பின்பு அம்மனிதனுக்கும் அவனோடு வந்தவர்களுக்கும் கால்களைக் கழுவத் தண்ணீர் கொண்டுவரப்பட்டது.
၃၂ယောက်ျား ကိုအိမ် သို့ သွင်း ၍ ကုလားအုပ် တို့ တန်ဆာကို ချွတ် ပြီးမှ ၊ သူတို့အားမြက် ခြောက်နှင့် စားစရာ ကိုပေး ၏။ ယောက်ျား ခြေ ၊ လိုက်သောသူ တို့ ခြေ ဆေး ဘို့ ရေ ကိုလည်း ပေးလေ၏။
33 அதன்பின்பு அவனுக்கு முன்பாக உணவு வைக்கப்பட்டது. ஆனால் அவனோ, “நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி முடிக்கும்வரை சாப்பிடமாட்டேன்” என்றான். அதற்கு லாபான், “அப்படியானால் அதை எங்களுக்குச் சொல்லும்” என்றான்.
၃၃သူ့ ရှေ့ မှာ စား စရာကို ထည့် သောအခါ ၊ သူက၊ ကျွန်ုပ်သည် ကိုယ် အမှု ကိုမပြော မှီ မ စား လိုပါဟုဆို လျှင် ၊ ပြော ပါဟုဆို ၏။
34 அதற்கு அவன், “நான் ஆபிரகாமின் வேலைக்காரன்.”
၃၄ယောက်ျားကလည်း၊ ကျွန်ုပ် ကားအာဗြဟံ ၏ ကျွန် ဖြစ်ပါ၏။
35 யெகோவா என் எஜமானை நிறைவாக ஆசீர்வதித்ததினால், அவர் செல்வந்தனாக இருக்கிறார். யெகோவா அவருக்கு அநேக செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஒட்டகங்களையும், கழுதைகளையும், வேலைக்காரர்களையும், வேலைக்காரிகளையும், வெள்ளியையும், தங்கத்தையும் கொடுத்திருக்கிறார்.
၃၅ထာဝရဘုရား သည် ကျွန်ုပ် ၏သခင် ကို အလွန် ကောင်းကြီး ပေးတော်မူသဖြင့် ၊ သူသည်ကြီးမြတ် ခြင်းသို့ ရောက်လေပြီ။ သိုးစု ၊ နွားစု ၊ ရွှေ ၊ ငွေ ၊ ကျွန် ယောက်ျား၊ ကျွန် မိန်းမ၊ ကုလားအုပ် နှင့် မြည်း များတို့ကိုပေး တော်မူပြီ။
36 என் எஜமானின் மனைவி சாராள் தன் முதிர்வயதில் அவருக்கு ஒரு மகனைப் பெற்றாள், அவர் தமக்குச் சொந்தமான எல்லாவற்றையும் தன் மகனுக்கே கொடுத்திருக்கிறார்.
၃၆ကျွန်ုပ် သခင် ၏မယား စာရာ သည်၊ သခင် အသက် အိုသောအခါ ၊ သူ့အားသား ကို ဘွားမြင် သဖြင့် ၊ ထို သားအား ဥစ္စာရှိသမျှ ကိုသခင်သည် အပ်ပေး ပြီ။
37 என் எஜமான் என்னை ஆணையிட்டுச் சத்தியம் செய்யப்பண்ணி, “நான் வசிக்கும் நாட்டிலுள்ள கானானியரின் மகள்களில் இருந்து, நீ என் மகனுக்கு மனைவியை எடுக்கக்கூடாது.
၃၇ကျွန်ုပ် ၏သခင် ကလည်း ၊ သင်သည်ငါ နေ သောခါနာန် အမျိုးသမီး တို့တွင် ၊ ငါ့ သား ဘို့ မယား ကို မ ရွေး ဘဲ၊
38 ஆனால் என் தகப்பன் குடும்பத்திற்கும், என் சொந்த வம்சத்திற்கும் போய் என் மகனுக்கு ஒரு மனைவியை எடுக்கவேண்டும்” என்று என்னிடம் சொன்னார்.
၃၈ငါ့ အဘ ၏အိမ် ၊ ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ သွား ၍ ၊ ငါ့ သား ဘို့ မယား ကို ယူ ရမည်ဟု အကျွန်ုပ် ကို ကျိန်ဆို စေ၏။
39 “அப்பொழுது நான் என் எஜமானிடம், ‘அந்தப் பெண் என்னுடன் வரச் சம்மதியாவிட்டால் என்ன செய்வது?’ எனக் கேட்டேன்.
၃၉အကျွန်ုပ် ကလည်း၊ မိန်းမ သည်မ လိုက် လိုလျှင် အဘယ်သို့ နည်းဟု သခင် ကို မေး လေသော်၊
40 “அதற்கு அவர், ‘நான் யெகோவாவுக்குமுன் உண்மையாய் நடக்கிறேன், அவர் தமது தூதனை உன்னுடன் அனுப்பி, உன்னுடைய பயணத்தை வெற்றியடையப் பண்ணுவார். என் தகப்பனின் குடும்பத்தைச் சேர்ந்த என் சொந்த வம்சத்திலிருந்தே, நீ என் மகனுக்கு ஒரு பெண்ணை எடுப்பாய்.
၄၀သခင်က၊ အကြင်ထာဝရဘုရား သခင်ရှေ့ တော် ၌ ငါသွား လာ၏၊ ထိုဘုရားသည် မိမိ ကောင်းကင်တမန် ကို သင် နှင့်အတူ စေလွှတ် ၍ ၊ သင် သွား သောအမှုကို ပြုစု တော်မူသဖြင့် ၊ ငါ့ အမျိုးသား ချင်း၊ ငါ့ အဘ ၏အိမ် ထဲက ငါ့ သား ဘို့ မယား ကိုယူ ရမည်။
41 நீ என் வம்சத்தாரிடம் போகும்போது, என் ஆணையிலிருந்து விடுபடுவாய்; அவர்கள் பெண் கொடுக்க மறுத்தாலும், நீ எனக்குக் கொடுத்த ஆணையிலிருந்து விடுபடுவாய்’ என்றார்.
၄၁ငါ့ အမျိုးသား ချင်းတို့ထံသို့ ရောက် သောအခါ ၊ သင်သည် ငါ ပေးသော ကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ။ ထိုသူတို့သည်မိန်းမကိုမ ပေး သော်လည်း ၊ သင် သည် ငါ ပေးသော ကျိန်ဆို ခြင်းနှင့် ကင်းလွတ် စေ မည်ဟု ပြော ၏။
42 “இன்று நான் நீரூற்றருகே வந்தபோது, ‘யெகோவாவே, என் எஜமான் ஆபிரகாமின் இறைவனே, உமக்கு விருப்பமானால் நான் வந்த பயணத்தை வெற்றியடையச் செய்யும்.
၄၂ကျွန်ုပ်သည်ယနေ့ ရေတွင်း သို့ ရောက် ပြီးလျှင် ၊ ကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ဘုရားသခင် ထာဝရဘုရား ၊ အကျွန်ုပ် ရောက် လာသောအမှုကို ယခု ပြုစု တော်မူလျှင်၊
43 இதோ, நான் இந்த நீரூற்றருகே நிற்கிறேன். தண்ணீர் எடுப்பதற்காக ஒரு இளம்பெண் வருவாளானால், நான் அவளிடம், “உன் குடத்திலிருந்து குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் தா” என்று கேட்பேன்.
၄၃အကျွန်ုပ် သည် ရေတွင်း နား မှာရပ် နေ၍၊ ရေခပ် ခြင်းငှါ လာ သောအကြင်သမီး ကညာကို၊ ကျွန်ုပ် သောက် ဘို့ သင် ၏ရေဘူး ၌ ရေ အနည်းငယ် ကိုပေး ပါဟုတောင်း သော်၊
44 அதற்கு அவள், “குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் இறைத்துக் கொடுப்பேன்” என்று சொல்வாளானால், அவளே என் எஜமானின் மகனுக்கு யெகோவா நியமித்த பெண்ணாயிருக்கட்டும்’ என்று மன்றாடினேன்.
၄၄သောက် ပါ။ သင် ၏ကုလားအုပ် တို့ဘို့ လည်း ရေခပ် ပါမည်ဟု ပြန်ဆိုသောသမီးကညာသည်၊ ကိုယ်တော် ကျွန် ၏သား ဘို့ ၊ ခန့်ထား တော်မူသောမိန်းမ ဖြစ်ပါစေ သောဟု လျှောက်ဆို ၏။
45 “இவ்வாறு நான் என் இருதயத்தில் மன்றாடி முடிக்குமுன்னே, ரெபெக்காள் தன் குடத்தைத் தோளில் வைத்தபடி வந்து, நீருற்றுக்குப் போய் தண்ணீர் இறைத்தாள். அப்பொழுது நான் அவளிடம், ‘எனக்குக் குடிக்கத் தண்ணீர் தா’ என்று கேட்டேன்.
၄၅ထိုသို့စိတ်နှလုံး ၌ လျှောက်ဆို ၍ မ ပြီး မှီ၊ ရေဗက္က သည် ရေဘူး ကို ထမ်း လျက် ထွက် လာသဖြင့် ၊ ရေတွင်း သို့ ဆင်း ၍ ရေခပ် သည်ကို ကျွန်ုပ် မြင် လျှင်၊ ရေ သောက်ပါရ စေဟု သူ့ ကို တောင်း လေသော်၊
46 “அவள் விரைவாக தன் தோளிலிருந்த குடத்தை இறக்கி, ‘குடியும், உமது ஒட்டகங்களுக்கும் தண்ணீர் கொடுப்பேன்’ என்று சொன்னாள். அப்படியே நான் குடித்தேன், என் ஒட்டகங்களுக்கும் அவள் தண்ணீர் கொடுத்தாள்.
၄၆သူသည်အလျင် အမြန်ပခုံးပေါ် က ရေဘူး ကို ချ လျက် ၊ သောက် ပါလော့။ သင် ၏ ကုလားအုပ် တို့ကိုလည်း ၊ ရေ တိုက်ပါမည်ဟုဆို သည်အတိုင်း ၊ ကျွန်ုပ်သောက် ရ၏။ ကုလားအုပ် တို့ကိုလည်း ရေတိုက် လေ၏။
47 “அப்பொழுது நான் அவளிடம், ‘நீ யாருடைய மகள்?’ என்று கேட்டேன். “அதற்கு அவள், ‘நாகோருக்கு மில்க்காள் பெற்ற மகனான, பெத்துயேலின் மகள்’ என்றாள். “அப்பொழுது நான் அவளுக்கு மூக்குத்தியையும் வளையல்களையும் கொடுத்தேன்.
၄၇ကျွန်ုပ်ကလည်း၊ သင် သည် အဘယ်သူ ၏ သမီး ဖြစ်သနည်းဟုမေး သော်၊ သူက၊ ကျွန်ုပ်သည် မိလခါ ဘွားမြင် သော နာခေါ် သား ဗေသွေလ ၏သမီး ဖြစ်သည် ဟုပြော ဆို၏။ ကျွန်ုပ်သည် မိလခါဘွားမြင်သော နာခေါ်သားဗေသွေလ၏သမီးဖြစ်သည်ဟုပြောဆို၏။ ကျွန်ုပ် သည်လည်း၊ သူ ၏ မျက်နှာ ၌ နှာဆွဲ ကို၎င်း၊ သူ ၏လက် ၌ လက်ကောက် တို့ကို၎င်းထည့် ပြီးလျှင်၊
48 பின்பு நான் தலைகுனிந்து, யெகோவாவை வழிபட்டேன். என் எஜமான் ஆபிரகாமின் இறைவனைத் துதித்தேன்; என் எஜமானின் சகோதரனுடைய பேத்தியை அவருடைய மகனுக்கு மனைவியாக எடுக்க, சரியான வழியில் என்னை நடத்திய யெகோவாவைத் துதித்தேன்.
၄၈ဦးညွှတ် ချ၍ ၊ ကျွန်ုပ် သခင် အစ်ကို ၏ မြေး ကို သခင် ၏သား ဘို့ ယူ စေခြင်းငှါ ၊ မှန် သောလမ်း ဖြင့် ပို့ဆောင် တော်မူသောကျွန်ုပ် သခင် အာဗြဟံ ၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ကို ကောင်းကြီး ပေး၍ ကိုးကွယ် လေ၏။
49 ஆகவே, நீங்கள் என் எஜமானுக்குத் தயவாகவும், உண்மையாகவும் நடக்க விரும்பினால் எனக்குச் சொல்லுங்கள்; இல்லையென்றால் அதையும் எனக்குச் சொல்லுங்கள், அப்பொழுது எப்பக்கம் திரும்பவேண்டும் என்பதை நான் அறிந்துகொள்வேன்” என்றான்.
၄၉ယခု တွင်သင် တို့သည်၊ ကျွန်ုပ် သခင် ၌ သစ္စာ နှင့် ကျေးဇူး ပြုမည်၊ မ ပြုမည်ကို ပြော ပါ။ ကျွန်ုပ် သည်လည်း ၊ လက်ျာ လမ်းဖြစ်စေ ၊ လက်ဝဲ လမ်းဖြစ်စေ၊ တလမ်းလမ်းသို့ လိုက်သွားပါမည်ဟု ပြောဆို၏။
50 அதற்கு லாபானும் பெத்துயேலும், “இது யெகோவாவினால் வந்திருக்கிறது; இதில் நாங்கள் குறுக்கிட்டு ஒன்றுமே சொல்லமுடியாது.
၅၀လာဗန် နှင့် ဗေသွေလ တို့ကလည်း ၊ ဤအမှုသည် ထာဝရဘုရား စီရင်တော်မူသောအမှုဖြစ်၏။ အကျွန်ုပ်တို့ သည်၊ သင့် အား ကောင်း မကောင်း ကို မ ပြော နိုင် ပါ။
51 ரெபெக்காள் இதோ இருக்கிறாள்; அவளை நீ கூட்டிக்கொண்டுபோ, யெகோவா நடத்தியபடியே இவள் உனது எஜமானின் மகனுக்கு மனைவியாகட்டும்” என்றார்கள்.
၅၁ရေဗက္က သည် သင့် ရှေ့ ၌ရှိပါ၏။ ယူ သွားပါ လော့။ ထာဝရဘုရား မိန့် တော်မူသည်အတိုင်း ၊ သင် ၏ သခင် သား ၏ မယား ဖြစ် စေဟုပြန် ဆို၏။
52 ஆபிரகாமின் வேலைக்காரன் அவர்கள் சொன்னதைக் கேட்டதும், யெகோவாவுக்கு முன்பாக தரைமட்டும் குனிந்து வழிபட்டான்.
၅၂ထိုစကားကိုကြား လျှင် ၊ အာဗြဟံ ကျွန် သည် ဦးညွှတ်ချ၍၊ ထာဝရဘုရား ကို ကိုးကွယ် ပြီးမှ၊
53 அதன்பின் அந்த வேலைக்காரன் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும், உடை வகைகளையும் கொண்டுவந்து ரெபெக்காளுக்குக் கொடுத்தான். அவளது சகோதரனுக்கும், தாய்க்கும் பெரும் மதிப்புமிக்க அன்பளிப்புகளைக் கொடுத்தான்.
၅၃ငွေ ဖလား ၊ ရွှေ ဖလား ၊ အဝတ် တန်ဆာများကို ထုတ် ၍ ရေဗက္က အား ပေး ၏။ သူ ၏အမိ ၊ မောင် အား လည်း၊ အဘိုးထိုက်သော လက်ဆောင် ကိုပေး ၏။
54 பின்பு அவனும் அவனோடு வந்த மனிதர்களும் சாப்பிட்டுக் குடித்து, அன்றிரவு அங்கே தங்கினார்கள். மறுநாள் காலையில் அவன் எழுந்ததும், “என் எஜமானிடத்திற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
၅၄သူ နှင့် သူ ၏အဘော်အပေါင်းတို့သည်၊ စားသောက် ၍ ညဉ့် ကို လွန်စေပြီးမှ ၊ နံနက် ယံ၌ ထ လျက် ၊ ကျွန်ုပ် သည်၊ သခင် ထံသို့ ပြန် ပါရစေဟု ဆို လေသော်၊
55 ஆனால் ரெபெக்காளின் சகோதரனும், தாயும், “பத்து நாட்களுக்காவது பெண் எங்களுடன் தங்கியிருக்கட்டும்; அதன்பின் போகலாம்” என்றார்கள்.
၅၅မောင် နှင့် အမိ က၊ မိန်းမ ကလေးသည်၊ ကျွန်ုပ် တို့ ထံမှာ ၊ ဆယ် ရက် ခန့် လောက်နေ ပါစေဦး။ နောက်မှ ၊ သူ့ကို သွားပါစေမည်ဟု ဆို ကြ၏။
56 அதற்கு அவன், “யெகோவா என் பயணத்தின் நோக்கத்தை நிறைவேறச் செய்தபடியால், என்னைத் தடைசெய்ய வேண்டாம். என் எஜமானிடம் நான் போவதற்கு என்னை வழியனுப்பி வையுங்கள்” என்றான்.
၅၆ထို သူကလည်း ၊ ကျွန်ုပ် ကို မ ဆီးတား ပါနှင့်။ ထာဝရဘုရား သည်၊ ကျွန်ုပ် ရောက် လာသောအမှုကို ပြုစု တော်မူပြီ။ ကျွန်ုပ် သည် သခင် ထံသို့ သွား ရသောအခွင့် ကိုပေး ပါလော့ဟုဆိုလျှင်၊
57 அப்பொழுது அவர்கள், “நாம் பெண்ணைக் கூப்பிட்டு இதைப்பற்றி அவளிடம் கேட்போம்” என்றார்கள்.
၅၇သူတို့က၊ မိန်းကလေး ကို ခေါ် ၍ ၊ သူ့ အလို ကို မေး ပါဦးမည်ဟု ဆို သည်နှင့်၊
58 பின் ரெபெக்காளைக் கூப்பிட்டு, “நீ இந்த மனிதனுடன் போகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அவள், “ஆம் போகிறேன்” என்றாள்.
၅၈ရေဗက္က ကို ခေါ် ၍ သင်သည်ဤ လူ နှင့်အတူ ယခုလိုက် မည်လောဟု မေး သောအခါ ၊ ကျွန်ုပ်လိုက် ပါမည် ဟုဆို ၏။
59 எனவே அவர்கள், தமது சகோதரி ரெபெக்காளை, அவளது தாதியோடும், ஆபிரகாமின் வேலைக்காரனோடும், அவனுடன் வந்த மனிதரோடும் வழியனுப்பி வைத்தார்கள்.
၅၉သို့ဖြစ်၍ ၊ မိမိ နှမ ရေဗက္က နှင့် သူ ၏အထိန်း ကို၎င်း ၊ အာဗြဟံ ကျွန် နှင့် သူ ၏လူ တို့ကို၎င်းလွှတ် လိုက် ကြ၏။
60 அவர்கள் ரெபெக்காளை ஆசீர்வதித்து சொன்னது: “எங்கள் சகோதரியே, நீ ஆயிரம் பதினாயிரமாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியினர் தங்கள் பகைவரின் பட்டண வாசல்களைத் தங்கள் உரிமையாக்கிக் கொள்வார்களாக.”
၆၀ရေဗက္က ကိုလည်း ၊ သင် သည် ကျွန်ုပ် တို့၏နှမ ဖြစ်၏။ အသောင်း အသိန်းတို့၏အမိဖြစ်ပါစေသော။ သင် ၏အမျိုးအနွယ် သည် ရန်သူ တို့၏ တံခါး များကို အစိုး ရပါစေသောဟု ကောင်းကြီး ပေးကြ၏။
61 பின்பு ரெபெக்காளும் அவள் தோழியரும் ஆயத்தமாகி, தங்கள் ஒட்டகங்களில் ஏறி, அந்த மனிதருடன் போனார்கள். இவ்விதம் அந்த வேலைக்காரன் ரெபெக்காளை அழைத்துக்கொண்டு புறப்பட்டான்.
၆၁ရေဗက္က နှင့် သူ ၏မိန်းမငယ် တို့သည်ထ ၍ ၊ ကုလားအုပ် ကိုစီး လျက် ၊ ထိုယောက်ျား နှင့်အတူ လိုက် ကြ ၏။ ထိုသို့ အာဗြဟံကျွန် သည် ရေဗက္က ကို ဆောင်ယူ သွား လေ၏။
62 அந்நாட்களில் ஈசாக்கு பீர்லகாய்ரோயீ என்ற இடத்திலிருந்து வந்து, நெகேவ் பகுதியில் தங்கியிருந்தான்.
၆၂ထိုအခါ တောင် ပြည် အတွင်း ၌ နေ သောဣဇာက် သည်၊ ဗေရလဟဲရော လမ်းဖြင့် ရောက် လာသည် ဖြစ်၍၊
63 ஒரு மாலை நேரத்தில் தியானம் செய்வதற்காக ஈசாக்கு வெளியே வயலுக்குப் போனான். அவன் நிமிர்ந்து பார்த்தபோது, ஒட்டகங்கள் வருவதைக் கண்டான்.
၆၃ညဦး အချိန်၌ ဆင်ခြင် လိုသောငှါ ၊ တော အရပ် သို့ ထွက်သွား ၍ ၊ မြော် ကြည့် လျှင် ၊ ကုလားအုပ် များ လာ သည်ကို မြင် လေ၏။
64 ரெபெக்காளும் நிமிர்ந்து பார்த்து, ஈசாக்கைக் கண்டாள். உடனே அவள் ஒட்டகத்திலிருந்து கீழே இறங்கினாள்.
၆၄ရေဗက္က သည်လည်း ၊ မြော် ကြည့် ၍ ဣဇာက် ကို မြင် သောအခါ ၊ ကုလားအုပ် အပေါ် မှ ဆင်း ပြီးလျှင်၊
65 அவள் அந்த வேலைக்காரனிடம், “நம்மைச் சந்திக்கும்படி வயல்வெளியில் வந்துகொண்டிருக்கும் அம்மனிதன் யார்?” என்று கேட்டாள். அதற்கு அவன், “அவர்தான் என் எஜமான்” என்றான். உடனே அவள் முகத்திரையை எடுத்துத் தன்னை மூடிக்கொண்டாள்.
၆၅ကျွန်ုပ် တို့ကို ကြိုဆို ခြင်းငှါ ၊ တော ၌ လာ သောထိုသူကား၊ အဘယ်သူ နည်းဟု ကျွန် ကို မေး လေသော် ၊ ကျွန်က၊ ထိုသူ သည် ကျွန်ုပ် သခင် ဖြစ်ပါ၏ဟု ပြောဆို သောစကားကိုကြားလျှင်၊ ရေဗက္ကသည် မျက်နှာဖုံး ကို ယူ ၍ ဖုံး လေ၏။
66 வேலைக்காரன் தான் செய்த எல்லாவற்றையும் ஈசாக்கிடம் சொன்னான்.
၆၆ကျွန် သည်လည်း၊ မိမိပြု လေသမျှ တို့ကို ဣဇာက် အား ကြား ပြောပြီးမှ၊
67 ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளின் கூடாரத்திற்குக் கூட்டிக்கொண்டுவந்து, அவளைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு மனைவியானாள், அவன் அவளை நேசித்தான். தன் தாயின் மரணத்திற்குப்பின் அவனுக்குத் துக்கத்திலிருந்து இப்படி ஆறுதல் கிடைத்தது.
၆၇ဣဇာက် သည် မိမိ အမိ စာရာ ၏ တဲ သို့ ရေဗက္က ကို ဆောင်ယူ ၍ စုံဘက် လေ၏။ ရေဗက္က ကိုချစ် နှစ်မြို့သဖြင့် ၊ အမိ သေသောအမှု၌ သက်သာ ခြင်းသို့ ရောက် လေ၏။

< ஆதியாகமம் 24 >