< ஆதியாகமம் 12 >

1 யெகோவா ஆபிராமிடம் சொன்னார்: “நீ உன் நாட்டையும், உன் உறவினரையும், உன் தகப்பன் குடும்பத்தாரையும் விட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் நாட்டிற்குப் போ.
Rəbbee İbramık'le eyhen: – Yiğna ölka, dekkın xav, vas k'anebınbı g'alepçe, Zı vak'le eyhesde ölkeeqa hoora.
2 “நான் உன்னை ஒரு பெரிய நாடாக்குவேன், உன்னை ஆசீர்வதிப்பேன்; உன் பெயரை மேன்மைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாயிருப்பாய்.
Vas xayir-düə hevles, vake xədın millet g'ales, do axtı qa'as, yiğne doyuka xayir-düə hevles.
3 உன்னை ஆசீர்வதிப்பவர்களை நான் ஆசீர்வதிப்பேன், உன்னை சபிக்கும் எவரையும் நான் சபிப்பேன். பூமியின் எல்லா மக்கள் கூட்டங்களும் உன் மூலமாய் ஆசீர்வதிக்கப்படுவார்கள்.”
Zı vas xayir-düə huvuynbışis, xayir-düə, bed-düə hav'uynbışis, bed-düə g'axuvles. Ç'iyeyne aq'valyne gırgıne milletbışe valek'ena xayir-düə alyapt'as.
4 யெகோவா ஆபிராமுக்குச் சொன்னபடியே, ஆபிராம் புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனுடன் போனான். ஆபிராம் ஆரானிலிருந்து புறப்படும்போது, அவனுக்கு எழுபத்தைந்து வயதாயிருந்தது.
İbram, Rəbbee eyhəxür, yəqqı'l gexha. Lutur mang'uka sacigee ayk'an. Xaraneençe qığeç'uyng'a İbramıqa yights'ale xholle senniy vod.
5 ஆபிராம் தன் மனைவி சாராய், தன் சகோதரனின் மகன் லோத்து, ஆரான் நாட்டில் தாங்கள் சம்பாதித்தவைகள், தங்களுடன் இருந்த வேலைக்காரர்கள் எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு கானான் நாட்டிற்குப் போகப் புறப்பட்டு, அங்கு போய்ச்சேர்ந்தார்கள்.
İbramee Xaranee hı'iyn gırgın kar, xhunaşşe Saray, çoçuna dix Lut, cun nukarar alyapt'ı Kana'anne ölkeeqa yəqqı'l gexha. Manbı Kana'anne ölkeeqa hiviyxharanbı.
6 ஆபிராம் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்து, சீகேமில் உள்ள மோரேயின் கருவாலி மரத்தடிக்கு வந்துசேர்ந்தான். அப்பொழுது கானானியர் அங்கே வசித்தார்கள்.
İbram maa'ar More eyhene mı'qəsqa, Şekem eyhene cigeene hiyxhar. Manke maa'ad Kana'anaaşin milletniy eyxhen.
7 யெகோவா ஆபிராமுக்குக் காட்சியளித்து, “உன் சந்ததிக்கு நான் இத்தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொன்னார். அதனால் ஆபிராம் அங்கே தனக்குக் காட்சியளித்த யெகோவாவுக்கு, ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
Rəbb İbramısqa dyagu uvhuyn: – Zı ina ölka yiğne nasılıs hevles. İbramee cus dyaguyne Rəbbis, maa'ad q'urbanbı alyaa'an ciga alya'a.
8 அவன் அங்கிருந்து பெத்தேலுக்குக் கிழக்கேயுள்ள மலைப்பக்கமாய்ப் போய், பெத்தேல் மேற்கிலும், ஆயி கிழக்கிலும் இருக்கத்தக்கதாக தன் கூடாரத்தை அமைத்தான். அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் பெயரைக் கூப்பிட்டு வழிபட்டான்.
Mançer Bet-Eline şargılyne suvabınane cigeeqa ayk'an. Ma'ab mang'vee çadır giviyxə. Çadırne garbıl Bet-El, şargılib Ğay eyhena şahar vooxhe. İbramee maa'ad Rəbbis q'urbanbı gyaat'an ciga ali'ı ı'bəədat ha'a.
9 பின்பு ஆபிராம் அங்கிருந்து புறப்பட்டு, நெகேப் என்னும் தென்தேசத்தை நோக்கிச் சென்றான்.
İbram kırra-kırra mançer ayk'anna canubulqa, Negevne sahrayne suralqa.
10 அந்நாட்களில், அந்த நாட்டிலே பஞ்சம் ஏற்பட்டது; பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்தபடியால், ஆபிராம் சிலகாலம் எகிப்தில் குடியிருப்பதற்காகப் போனான்.
İne ölkee it'umun mısvalybı xət qetxhava İbram sık'ınna gahıs Misirılqa ayk'ann.
11 அவன் எகிப்தின் அருகே வந்தபோது, தன் மனைவி சாராயிடம், “நீ மிகவும் அழகிய பெண் என்பது எனக்குத் தெரியும்.
Misireeqa hiviyxharang'a mang'vee cune xhunaşşe Sarayk'le eyhen: – Ğu geer uftanra yixhay zak'le ats'an.
12 எகிப்தியர் உன்னைக் காணும்போது, ‘இவள் அவனுடைய மனைவி’ என்று சொல்லி, என்னைக் கொன்றுவிடுவார்கள் ஆனால் உன்னையோ உயிரோடு விட்டுவிடுவார்கள்.
Misirbışe ğu g'aycu eyhesın: «İng'una xhunaşşevur». Manke manbışe zı gik'u ğu üç'ürra g'alerçes.
13 அதனால் நீ, உன்னை என் சகோதரி என்று சொல், அப்பொழுது அவர்கள் உனக்காக என்னை நன்றாக நடத்துவார்கள்; நானும் உன் நிமித்தம் உயிர் தப்புவேன்” என்றான்.
Hucoone ixhes ğu manbışik'le eyhe, ğu yizda yiçu vor, yiğnemee zak sidyoot'a, üç'ürra g'alyaraççe.
14 ஆபிராம் எகிப்திற்கு வந்தபோது, சாராய் மிகவும் அழகானவள் என்பதை எகிப்தியர் கண்டார்கள்.
İbram Misirqa hirxhılymee, misiribışik'le mang'una xhunaşşe geer uftanra yixhay g'ecen.
15 பார்வோனின் அதிகாரிகள் அவளைக் கண்டதும், அவளுடைய அழகைப்பற்றிப் பார்வோனிடம் புகழ்ந்தார்கள்; அதனால் சாராய் பார்வோனின் அரண்மனைக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.
Zəiyfa g'aycuyne Misirne paççahne, fironne insanaaşe məng'ı'ne micagiyvalina gaf fironus haa'a. Manar qiykekkana fironne sareeqa.
16 பார்வோன் சாராயின் நிமித்தம் ஆபிராமை நன்றாக நடத்தினான்; ஆபிராம் செம்மறியாடுகளையும், மாடுகளையும், ஆண் பெண் கழுதைகளையும், ஒட்டகங்களையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் பெற்றுக்கொண்டான்.
Firon məng'ı'nimee İbramıkar yugra ıxha. Mang'uqa çavra-vəq'ə, əməler, devabı, nukar adamer, nukar yedar vooxhe.
17 ஆனால் யெகோவா ஆபிராமின் மனைவி சாராயின் நிமித்தம், பார்வோனையும் அவனுடைய வீட்டாரையும் கொடிய வியாதியால் தாக்கினார்.
İbramne xhunaşşe Saraynimee Rəbbee fironneyiy fironne xaabınbışilqa xətta ık'arbı alyaa'a.
18 அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து, “நீ எனக்கு என்ன செய்துவிட்டாய்? இவள் உன் மனைவி என்று ஏன் எனக்குச் சொல்லவில்லை?
Fironee İbram qort'ul eyhen: – İn hucoon ğu zak hı'iyn?! Nya'a Saray yiğna xhunaşşe yixhay ittevhu?
19 ‘இவள் என் சகோதரி’ என்று ஏன் எனக்குச் சொன்னாய்? அதனால் அல்லவா அவளை என் மனைவியாக்கிக் கொள்ளும்படி எடுத்தேன்? இதோ, உன் மனைவி; அவளைக் கூட்டிக்கொண்டு போய்விடு!” என்றான்.
Nişil-allane «yizda yiçuva» uvhu, məng'ı'ka davatbı ha'as hassır? Alert'e yiğna xhunaşşer, hoora!
20 பார்வோன் ஆபிராமைக் குறித்துத் தன் வேலைக்காரருக்கு கட்டளையிட்டான், அவர்கள் அவனை அவன் மனைவியுடனும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றுடனும் அவனை நாட்டிற்கு வெளியே அனுப்பிவிட்டார்கள்.
Fironee İbramiy cuna xhunaşşe, cone vardatıka sacigee ölkençe yəqqı'l hee'eva əmr haa'a.

< ஆதியாகமம் 12 >