< ஆதியாகமம் 11 >
1 அக்காலத்தில் முழு உலகமும் ஒரே மொழியையும், பொதுவான ஒரே பேச்சு வழக்கையும் உடையதாய் இருந்தது.
Bıkırne dyunyel sa miziy sa yuşe vuxha.
2 மக்கள் கிழக்குநோக்கி இடம்பெயர்ந்து சென்றபோது, சிநெயார் நாட்டிலே ஒரு சமவெளியைக் கண்டு, அங்கே குடியேறினார்கள்.
İnsanar şargılqa qöng'ə Şinarne ölkee manbışik'le q'adaal g'acu, maayib avxuynbı.
3 அங்கே அவர்கள், “நாம் செங்கல் செய்து, அவற்றை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். அவர்கள் கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லையும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலையும் உபயோகித்தார்கள்.
Sana-sang'uk'le: «Qudoora karpıç hı'ı yugda qecesva» uvhu. Manbışe g'ayeyne cigee karpıç, battağne cigeeyid g'ır alyat'u.
4 பின்னும் அவர்கள், “வாருங்கள், நாம் வானத்தைத் தொடும்படியான கோபுரத்தைக் கொண்ட ஒரு பட்டணத்தைக் கட்டுவோம்; அதனால் நமக்குப் புகழ் உண்டாகும்படி செய்து, நாம் பூமியெங்கிலும் சிதறிப் போகாமல் இருப்போம்” என்றும் சொல்லிக்கொண்டார்கள்.
Qiyğad «Şas sa şahariy q'om xəybışeeqa hiviyxharna gulle alyav'u do qığahas, deşxhee mançeb ehevkasınbıva» uvhu.
5 மனிதர் கட்டிக்கொண்டிருந்த நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்க, யெகோவா இறங்கி வந்தார்.
İnsanaaşe alyav'una şahariy gulle g'avces Rəbb avqa geç'e.
6 யெகோவா, “அவர்கள் ஒரே மொழி பேசும் ஒரே மக்களாய் இருப்பதால் இதைச் செய்யத்தொடங்கி இருக்கிறார்கள்; ஆகவே அவர்கள் திட்டமிடும் எதையும் அவர்களால் செய்யமுடியாமல் போகாது.
Rəbbee uvhuyn: «Haane, manbışin gırgınbı sa milletinbı sa mizelenbı vob. Mançil-allad manbışe inəxübna iş haa'a gibğıl. Həşde manbışde yik'es hucooyiy ıkkan ha'as əxə.
7 ஆதலால் நாம் அங்கே இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றவர் விளங்கிக்கொள்ளாதபடி, அவர்களுடைய மொழியைக் குழப்பிவிடுவோம் வாருங்கள்” என்றார்.
Qudoora geepç'ı manbışin mizyar alikka'as. Sang'vee uvhuyn mansanbışik'le mats'axhecen».
8 அப்படியே யெகோவா அவர்களை அங்கிருந்து பூமியெங்கும் சிதறப்பண்ணி, அவர்கள் பட்டணத்தைக் கட்டுவதை நிறுத்தினார்.
İnəxüb Rəbbe manbı ç'iyeyne aq'valqa ehevka'anbı, şahar alyav'uyid ulyoyzaran.
9 முழு உலகத்தினுடைய மொழியையும் யெகோவா குழப்பினபடியால், அந்த இடம் பாபேல் என்று அழைக்கப்பட்டது. யெகோவா அங்கிருந்து அவர்களைப் பூமியெங்கும் சிதறப்பண்ணினார்.
Rəbbee insanaaşin mizyar alikkı'il-alla mane cigayk'le Baabil (alikkı'iy) eyhe. Ç'iyeyne aq'vayne yoq'ne suralqab mançe ehevkaa'a.
10 சேமின் வம்சவரலாறு இதுவே: பெருவெள்ளம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் சென்றபின், சேம் 100 வயதாய் இருக்கும்போது, அர்பக்சாத்தைப் பெற்றான்.
Nühune duxayn Samın nasılin taarix inəxüd vod: q'ıfrımıka qadıyne xhinele q'ölle senna qiyğa, Samıka vəş sennang'a mang'una dix Arpakşad yedike eyxhe.
11 அர்பக்சாத் பிறந்த பிறகு, சேம் 500 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
Arpakşad ıxhayle qiyğa, Sam xhod vəş senna axva. Mang'us mebın xəppa dixbıyiy yişba vuxha.
12 அர்பக்சாத் 35 வயதாய் இருக்கும்போது, சேலாவைப் பெற்றான்.
13 சேலா பிறந்த பிறகு அர்பக்சாத் 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
14 சேலா 30 வயதாய் இருக்கும்போது, ஏபேரைப் பெற்றான்.
15 ஏபேர் பிறந்த பிறகு, சேலா 403 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
16 ஏபேர் 34 வயதாய் இருக்கும்போது, பேலேகைப் பெற்றான்.
17 பேலேகு பிறந்த பிறகு, ஏபேர் 430 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
18 பேலேகு 30 வயதாய் இருக்கும்போது ரெகூவைப் பெற்றான்.
19 ரெகூ பிறந்த பிறகு, பேலேகு 209 வருடங்கள் வாழ்ந்து இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
20 ரெகூ 32 வயதாய் இருக்கும்போது செரூகுவைப் பெற்றான்.
21 செரூகு பிறந்த பிறகு ரெகூ 207 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
22 செரூகு 30 வயதாய் இருக்கும்போது நாகோரைப் பெற்றான்.
23 நாகோர் பிறந்த பிறகு செரூகு 200 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
24 நாகோர் 29 வயதாய் இருக்கும்போது தேராகுவைப் பெற்றான்.
25 தேராகு பிறந்த பிறகு நாகோர் 119 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் வேறு மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
26 தேராகு 70 வயதாய் இருக்கும்போது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.
27 தேராகின் வம்சவரலாறு இதுவே: ஆபிராம், நாகோர், ஆரான் ஆகியோருக்குத் தேராகு தகப்பனானான். ஆரான் லோத்துக்குத் தகப்பனானான்.
Terahıke g'abıynbışin taarix inəxüd vod: Terah İbramna, Naxorna, Haranna dek ıxha. Haranıka Lut donana sa dix ıxha.
28 தன் தகப்பன் தேராகு உயிரோடிருக்கும்போதே, ஆரான் தனது பிறப்பிடமான கல்தேயர் நாட்டிலுள்ள ஊர் என்னும் இடத்தில் இறந்தான்.
Haran, vuc ıxhayne ölkee – Xaldeyaaşine Ur şaharee qik'uyng'a, mang'una dek üç'ürraniy vor.
29 ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள். ஆபிராமின் மனைவி சாராய், நாகோரின் மனைவி மில்க்காள்; மில்க்காள் ஆரானின் மகள், ஆரான் மில்க்காள், இஸ்காள் ஆகிய இருவரின் தகப்பன்.
İbrameyid Naxoreyid davatbı hı'ı. İbramne xhunaşşeyn do Saray, Naxorned xhunaşşeyn do Milka ıxha (Milkayiy İska Haranın yişba vuxha).
30 சாராய் குழந்தை இல்லாமல் மலடியாய் இருந்தாள், ஏனெனில் அவளுக்குப் பிள்ளைகள் இல்லை.
Sarays uşaxar vooxhe deşdiy.
31 தேராகு, தன் மகன் ஆபிராமையும், ஆரானின் மகனான தன் பேரன் லோத்தையும், ஆபிராமின் மனைவியான தன் மருமகள் சாராயையும், அழைத்துக்கொண்டு கல்தேயரின் நாட்டிலுள்ள ஊர் என்னும் பட்டணத்தைவிட்டு, கானான் நாட்டுக்குப் போகப் புறப்பட்டான். ஆனால் அவர்கள் ஆரான் என்னும் இடத்திற்கு வந்தபோது, அங்கேயே குடியிருந்துவிட்டார்கள்.
Terahee dix İbram, Haranna dix eyxhena neva Lut, İbramna xhunaşşe yeexhena sos Saray cuka alyabat'a. Kana'anne ölkeeqa vüqqəva, manbı sanab Xaldeyaaşine Ur şahareençe avayk'ananbı. Manbı Xaraneqa qabı, maayib aaxvanbı.
32 தேராகு 205 வருடங்கள் வாழ்ந்தபின் ஆரானிலே இறந்தான்.
Q'öd vəşşe xholle sennang'a Xaranee Terah qek'ana.