< கலாத்தியர் 4 >

1 நான் சொல்வது என்னவென்றால், உரிமையாளனாய் இருக்கும் ஒருவன், முழுச் சொத்துக்கும் உரிமையாளனாய் இருந்தாலும், அவன் சிறுபிள்ளையாய் இருக்கும்வரை, ஒரு அடிமைக்கும் அவனுக்கும் வித்தியாசம் இருக்கும்.
ⲁ̅ϯϫⲱ ⳿ⲙⲙⲟⲥ ϫⲉ ⳿ⲉⲫⲟⲥⲟⲛ ⳿ⲭⲣⲟⲛⲟⲛ ⳿ⲉⲡⲓ⳿ⲕⲗⲏ ⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲟⲩⲕⲟⲩϫⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲟⲩ ⲡⲉ ⳿ⲙⲙⲟⲛ ⳿ϩⲗⲓ ⳿ⲛϣⲓⲃϯ ⳿ⲙⲙⲟϥ ⲛⲉⲙ ⲟⲩⲃⲱⲕ ⲉϥⲟⲓ ⳿ⲙ⳪ ⳿ⲉⲉⲛⲭⲁⲓ ⲛⲓⲃⲉⲛ.
2 அவனுடைய தகப்பன் நியமித்த காலம் வரும்வரைக்கும் அவன் பாதுகாவலர்கள், நிர்வாகிகள் ஆகியோருக்குக் கீழ்ப்பட்டே இருக்கிறான்.
ⲃ̅ⲁⲗⲗⲁ ⲁϥⲭⲏ ϧⲁ ϩⲁⲛⲉⲡⲓ⳿ⲧⲣⲟⲡⲟⲥ ⲛⲉⲙ ϩⲁⲛⲟⲓⲕⲟⲛⲟⲙⲟⲥ ϣⲁ ϯⲛⲉⲓ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥⲓⲱⲧ.
3 இவ்விதமாய் நாமும் பிள்ளைகளாய் இருந்தபோது, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கு அடிமைகளாய் இருந்தோம்.
ⲅ̅ⲡⲁⲓⲣⲏϯ ⳿ⲁⲛⲟⲛ ϩⲱⲛ ϩⲟⲧⲉ ⲉⲛⲟⲓ ⳿ⲛ⳿ⲁⲗⲟⲩ ⲛⲁⲛⲭⲏ ϧⲁ ⲛⲓ⳿ⲥⲧⲟⲓⲭⲓⲟⲛ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲕⲟⲥⲙⲟⲥ ⲉⲛⲟⲓ ⳿ⲙⲃⲱⲕ ⲛⲱⲟⲩ.
4 ஆனால் காலம் நிறைவேறியபொழுது, இறைவன் தம்முடைய மகனை மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டவராய், ஒரு பெண்ணிடத்தில் பிறந்தவராய் அனுப்பினார்.
ⲇ̅ϩⲟⲧⲉ ⲇⲉ ⲉⲧⲁϥ⳿ⲓ ⳿ⲛϫⲉ ⳿ⲫⲙⲟϩ ⳿ⲛⲧⲉ ⲡⲓⲥⲏⲟⲩ ⲁ ⲫϯ ⲟⲩⲱⲣⲡ ⳿ⲙⲡⲉϥϣⲏⲣⲓ ⳿ⲉⲁϥϣⲱⲡⲓ ϧⲁ ⲟⲩ⳿ⲥϩⲓⲙⲓ ⳿ⲉⲁϥϣⲱⲡⲓ ϧⲁ ⲡⲓⲛⲟⲙⲟⲥ.
5 இறைவன் மோசேயின் சட்டத்துக்குக் கீழ்ப்பட்டிருந்தவர்களை மீட்டு, நாம் பிள்ளைகளுக்குரிய முழு உரிமைகளையும் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து அனுப்பப்பட்டார்.
ⲉ̅ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉϥϣⲏⲡ ⲛⲏⲉⲧϧⲁ ⲡⲓⲛⲟⲙⲟⲥ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲛϭⲓ ⳿ⲛϯⲙⲉⲧϣⲏⲣⲓ.
6 நீங்கள் அவருடைய பிள்ளைகளாய் இருப்பதனால், “அப்பா, பிதாவே!” என்று கூப்பிடத்தக்க இறைவன் தமது மகனுடைய ஆவியை, உங்களுடைய இருதயங்களுக்குள் அனுப்பியிருக்கிறார்.
ⲋ̅ⲟⲧⲓ ⲇⲉ ϫⲉ ⳿ⲛⲑⲱⲧⲉⲛ ϩⲁⲛϣⲏⲣⲓ ⲁ ⲫϯ ⲧⲁⲟⲩⲟ ⳿ⲙⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⳿ⲛⲧⲉ ⲡⲉϥϣⲏⲣⲓ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲛⲉⲧⲉⲛϩⲏ ⲧ ⲉϥⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ϫⲉ ⲁⲃⲃⲁ ⳿ⲫⲓⲱⲧ.
7 ஆகவே இனியும் நீங்கள் அடிமைகள் அல்ல, மகன்களாய் இருக்கிறீர்கள்; நீங்கள் மகன்களாய் இருப்பதனால், இறைவன் உங்களை உரிமையாளர்களாயும் ஆக்கியிருக்கிறார்.
ⲍ̅ϩⲱⲥⲧⲉ ⳿ⲛⲑⲟⲕ ⲟⲩⲃⲱⲕ ⲁⲛ ϫⲉ ⲁⲗⲗⲁ ⲟⲩϣⲏⲣⲓ ⲓⲥϫⲉ ⲇⲉ ⲟⲩϣⲏⲣⲓ ⲓⲉ ⲟⲩ⳿ⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲟⲥ ⲟⲛ ⳿ⲉⲃⲟⲗ ϩⲓⲧⲉⲛ ⲫϯ.
8 முன்பு நீங்கள் இறைவனை அறியாதிருந்தபோது, இயல்பாகவே இறைவன் இல்லாதவைகளுக்கு அடிமைகளாயிருந்தீர்கள்.
ⲏ̅ⲁⲗⲗⲁ ⳿ⲙⲡⲓⲥⲏⲟⲩ ⲙⲉⲛ ⳿ⲉⲧⲉ⳿ⲙⲙⲁⲩ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲫϯ ⲁⲛ ⲁⲧⲉⲧⲉⲛⲉⲣⲃⲱⲕ ⳿ⲛⲛⲏ ⲫⲩⲥⲓ ⲉⲧⲉ ϩⲁⲛⲛⲟⲩϯ ⲁⲛ ⲛⲉ.
9 ஆனால் இப்பொழுதோ, நீங்கள் இறைவனை அறிந்திருக்கிறீர்கள். அதைவிட, இறைவனால் நீங்கள் அறியப்பட்டும் இருக்கிறீர்கள். இப்படியிருக்க, உலகத்தின் அடிப்படை போதனைகளுக்கும் பலவீனமும் கேவலமுமானவற்றிற்குத் திரும்புகிறீர்களே! அது ஏன்? அவைகளுக்கு மீண்டும் அடிமைகளாக விரும்புகிறீர்களா?
ⲑ̅ϯⲛⲟⲩ ⲇⲉ ⲁⲧⲉⲧⲉⲛⲥⲟⲩⲉⲛ ⲫϯ ⲙⲁⲗⲗⲟⲛ ⲇⲉ ⲁ ⲫϯ ⲥⲟⲩⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⲡⲱⲥ ⲧⲉⲧⲉⲛⲕⲱϯ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⲟⲛ ⳿ⲉ⳿ϧⲣⲏⲓ ⳿ⲉⲛⲓϫⲱⲃ ⲟⲩⲟϩ ⳿ⲛϩⲏ ⲕⲓ ⳿ⲛ⳿ⲥⲧⲟⲓⲭⲓⲟⲛ ⲛⲏⲉⲧⲉⲧⲉⲛⲟⲩⲱϣ ⳿ⲉⲉⲣⲃⲱⲕ ⲛⲱⲟⲩ ⳿ⲛⲕⲉⲥⲟⲡ.
10 நீங்கள் விசேஷ நாட்களையும், மாதங்களையும், பருவகாலங்களையும், வருடங்களையும் கைக்கொண்டு நடக்கிறீர்களே.
ⲓ̅⳿ⲉⲁⲧⲉⲧⲉⲛϯ⳿ϩⲑⲏⲧⲉⲛ ⳿ⲉϩⲁⲛ⳿ⲉϩⲟⲟⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲁⲃⲏⲧ ⲛⲉⲙ ϩⲁⲛⲥⲏⲟⲩ ⲛⲉⲙ ϩⲁⲛⲣⲟⲙⲡⲓ.
11 நான் உங்களுக்காகப் பட்ட பாடுகள் எல்லாம் வீணாகப் போய்விட்டதோ என்று பயப்படுகிறேன்.
ⲓ̅ⲁ̅ϯⲉⲣϩⲟϯ ϧⲁⲧⲉⲧⲉⲛϩⲏ ⲙⲏⲡⲱⲥ ⲉⲧⲁⲓ ϭⲓϧⲓⲥⲓ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϩⲓⲕⲏ.
12 பிரியமானவர்களே, என்னைப்போலாகுங்கள் என்று உங்களைக் கேட்கிறேன், ஏனெனில் நானும் உங்களைப்போல் ஆனேன். நீங்கள் எனக்கு எவ்விதத் தீமையும் செய்யவில்லை.
ⲓ̅ⲃ̅ϣⲱⲡⲓ ⳿ⲙⲡⲁⲣⲏϯ ϫⲉ ⳿ⲁⲛⲟⲕ ϩⲱ ⳿ⲙⲡⲉⲧⲉⲛⲣⲏϯ ⲛⲁ⳿ⲥⲛⲏⲟⲩ ϯϯϩⲟ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϭ ⲓⲧ ⳿ⲛϫⲟⲛⲥ ⳿ⲛ⳿ϩⲗⲓ.
13 நீங்கள் அறிந்திருக்கிறபடி என் வியாதியின் காரணமாகவே, முதலில் நான் உங்களுக்கு நற்செய்தியை பிரசங்கித்தேன்.
ⲓ̅ⲅ̅ⲧⲉⲧⲉⲛ⳿ⲉⲙⲓ ⲇⲉ ϫⲉ ⲉⲑⲃⲉ ⲟⲩϣⲱⲛⲓ ⳿ⲛⲧⲉ ϯⲥⲁⲣⲝ ⲁⲓϩⲓϣⲉⲛⲛⲟⲩϥⲓ ⲛⲱⲧⲉⲛ ⳿ⲛϣⲟⲣⲡ.
14 என்னுடைய வியாதி உங்களுக்குப் பல பாடுகளை உண்டாக்கிய போதுங்கூட, நீங்கள் என்னை வெறுப்புடன் நடத்தவும் இல்லை, என்னைப் புறக்கணிக்கவும் இல்லை. ஆனால் என்னை இறைவனின் தூதனைப்போல் வரவேற்றீர்கள். கிறிஸ்து இயேசுவை வரவேற்பதுபோல் வரவேற்றீர்கள் என்றுங்கூடச் சொல்வேன்.
ⲓ̅ⲇ̅ⲟⲩⲟϩ ⲡⲉⲧⲉⲛⲡⲓⲣⲁⲥⲙⲟⲥ ⲉⲧⲭⲏ ϧⲉⲛ ⲧⲁⲥⲁⲣⲝ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϣⲟϣϥ ⲟⲩⲇⲉ ⳿ⲙⲡⲉⲧⲉⲛϩⲓⲑⲁϥ ⳿ⲛⲥⲱϥ ⲁⲗⲗⲁ ⲁⲣⲉⲧⲉⲛϣⲟⲡϥ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲛⲟⲩⲁⲅⲅⲉⲗⲟⲥ ⳿ⲛⲧⲉ ⲫϯ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲠⲭ̅ⲥ̅ Ⲓⲏ̅ⲥ̅.
15 அப்போது இருந்த அந்த ஆசீர்வாதம், இப்போது எங்கே போயிற்று? இயலுமானால், உங்கள் கண்களைக்கூட பிடுங்கி எனக்குக் கொடுத்திருப்பீர்கள் என்று நானே சாட்சி கூறுவேன்.
ⲓ̅ⲉ̅ⲁϥⲑⲱⲛ ⲟⲩⲛ ⲡⲉⲧⲉⲛⲙⲁⲕⲁⲣⲓⲥⲙⲟⲥ ϯⲉⲣ ⲙⲉⲑⲣⲉ ⲅⲁⲣ ⲛⲱⲧⲉⲛ ϫⲉ ⲉⲛⲉ ⲟⲩⲟⲛ⳿ϣϫⲟⲙ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⳿ⲉⲫⲉⲣⲕ ⲛⲉⲧⲉⲛⲃⲁⲗ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲁⲣⲉⲧⲉⲛⲛⲁⲧⲏⲓⲧⲟⲩ ⲛⲏⲓ ⲡⲉ.
16 சத்தியத்தை உங்களுக்குச் சொன்னதினாலே, நான் இப்பொழுது உங்களுக்குப் பகைவன் ஆனேனா?
ⲓ̅ⲋ̅ϩⲱⲥⲧⲉ ⲁⲓⲉⲣϫⲁϫⲓ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϫⲉ ϯ ⲧⲁⲙⲟ ⳿ⲙⲙⲱⲧⲉⲛ ⲉⲑⲙⲏⲓ.
17 இப்பொழுது சிலர் உங்களைத் தங்கள் பக்கமாக இழுத்துக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்களே, ஆனால் அவர்களுடைய நோக்கங்களோ நல்லவை அல்ல. அவர்கள் எங்களிடமிருந்து உங்களைப் பிரித்து, நீங்களும் அவர்கள் சார்பாய் இருப்பதையே விரும்புகிறார்கள்.
ⲓ̅ⲍ̅ⲥⲉⲭⲟϩ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ⳿ⲛⲕⲁⲗⲱⲥ ⲁⲛ ⲁⲗⲗⲁ ⲉⲩⲟⲩⲱϣ ⳿ⲉ⳿ϣⲑⲁⲙ ⳿ⲉⲣⲱⲧⲉⲛ ϩⲓⲛⲁ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲭⲟϩ ⳿ⲉⲣⲱⲟⲩ.
18 நோக்கம் நல்லதென்றால், அதில் தீவிர ஆர்வம் காண்பிப்பது நல்லதுதான். அவ்வித ஆர்வத்தை உங்களுடன் நான் இருக்கும்போது மாத்திரமல்ல, எப்பொழுதுமே காண்பிக்கவேண்டும்.
ⲓ̅ⲏ̅ⲛⲁⲛⲉⲥ ⲇⲉ ⳿ⲉⲭⲟϩ ϧⲉⲛ ⲡⲓⲡⲉⲑⲛⲁⲛⲉϥ ⳿ⲛⲥⲏⲟⲩ ⲛⲓⲃⲉⲛ ⲟⲩⲟϩ ⲉⲓⲭⲏ ϧⲁⲧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ ⳿ⲙⲙⲁⲩⲁⲧϥ ⲁⲛ.
19 என் பிள்ளைகளே, கிறிஸ்து உங்களில் உருவாகும் வரைக்கும் உங்களுக்காக நான் வேதனைப்படுகிறேன்.
ⲓ̅ⲑ̅ⲛⲁϣⲏⲣⲓ ⲛⲁⲓ ⳿ⲉϯ ϯⲛⲁⲕϩⲓ ⳿ⲙⲙⲱⲟⲩ ⳿ⲛⲕⲉⲥⲟⲡ ϣⲁⲧⲉ Ⲡⲭ̅ⲥ̅ ϭⲓⲙⲟⲣⲫⲏ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
20 இப்பொழுது உங்களுடனே நான் இருக்கவும், உங்களுடன் வேறுவிதமாய்ப் பேசவும் எவ்வளவாய் விரும்புகிறேன். ஏனெனில், உங்களைக்குறித்து நான் மிகவும் கலக்கம் அடைந்திருக்கிறேன்.
ⲕ̅ⲛⲁⲓⲟⲩⲱϣ ⲇⲉ ⳿ⲉ⳿ⲓ ϩⲁⲣⲱⲧⲉⲛ ϯⲛⲟⲩ ⲟⲩⲟϩ ⳿ⲉϣⲓⲃϯ ⳿ⲛⲧⲁ⳿ⲥⲙⲏ ϫⲉ ϯϣⲟⲗϩ ⳿ⲛϩⲏⲧ ϧⲉⲛ ⲑⲏⲛⲟⲩ.
21 மோசேயின் சட்டத்திற்கு கீழ்ப்பட்டிருக்க விரும்புகிறவர்களே, மோசேயின் சட்டம் சொல்வதை நீங்கள் அறியாதிருக்கிறீர்களா? அதை எனக்குச் சொல்லுங்கள்.
ⲕ̅ⲁ̅⳿ⲁϫⲟⲥ ⲟⲩⲛ ⲛⲏⲓ ⲁⲧⲉⲧⲉⲛⲟⲩⲱϣ ⳿ⲉϣⲱⲡⲓ ϧⲁ ⲡⲓⲛⲟⲙⲟⲥ ⳿ⲛⲧⲉⲧⲉⲛⲥⲱⲟⲩⲛ ⳿ⲙⲡⲓⲛⲟⲙⲟⲥ ⲁⲛ.
22 ஆபிரகாமுக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும், ஒருவன் அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும், மற்றவன் சுதந்திரமுள்ள பெண்ணிடத்தில் பிறந்தான் என்றும் எழுதப்பட்டிருக்கிறதே.
ⲕ̅ⲃ̅⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⲅⲁⲣ ϫⲉ ⲁⲃⲣⲁⲁⲙ ⲁϥ⳿ϫⲫⲉ ϣⲏⲣⲓ ⲃ̅ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲃⲱⲕⲓ ⲛⲉⲙ ⲟⲩⲁⲓ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ϯⲣⲉⲙϩⲏ.
23 அடிமைப் பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகன், சாதாரண முறையிலேயே பிறந்தான்; சுதந்திரமான பெண்ணிடத்தில் பிறந்த அவனுடைய மகனோ, இறைவனுடைய வாக்குத்தத்தத்தின் பிரதிபலனின்படி பிறந்தான்.
ⲕ̅ⲅ̅ⲁⲗⲗⲁ ⲡⲓ⳿ⲉⲃⲟⲗ ⲙⲉⲛ ϧⲉⲛ ϯⲃⲱⲕⲓ ⲉⲧⲁⲩⲙⲁⲥϥ ⲕⲁⲧⲁ ⲥⲁⲣⲝ ⲡⲓ⳿ⲉⲃⲟⲗ ⲇⲉ ϧⲉⲛ ϯⲣⲉⲙϩⲏ ⲟⲩ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⲟⲩ⳿ⲉⲡⲁⲅⲅⲉⲗⲓⲁ ⲡⲉ.
24 இதை ஒரு அடையாளப்பூர்வமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த இரண்டு பெண்களும், இரண்டு உடன்படிக்கைகளுக்கும் எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். ஒரு உடன்படிக்கை சீனாய் மலையைச் சேர்ந்தது. அது அடிமைகளாகப் போகும் பிள்ளைகளைப் பெறுகிறது. இது ஆகாருக்கு ஒப்பாய் இருக்கிறது.
ⲕ̅ⲇ̅ⲉⲧⲉ ⲛⲁⲓ ⲛⲉ ⳿ⲉϣⲁⲩⲉⲣⲁⲗⲗⲏⲅⲟⲣⲓⲛ ⳿ⲙⲙⲱⲟⲩ ⲇⲓ⳿ⲁⲑⲏⲕⲏ ⲃ̅ϯ ⲛⲉ ⲛⲁⲓ ⲟⲩ⳿ⲓ ⲙⲉⲛ ⳿ⲉⲃⲟⲗ ϧⲉⲛ ⳿ⲡⲧⲱⲟⲩ ⳿ⲛⲥⲓⲛⲁ ⲉⲥⲙⲓⲥⲓ ⲉⲩⲙⲉⲧⲃⲱⲕ ⲉⲧⲉ ⲁⲅⲁⲣ ⲧⲉ.
25 அரேபியாவிலுள்ள சீனாய் மலைக்கு ஆகார் அடையாளமாய் இருக்கிறாள். அவள் இப்பொழுது இருக்கும் எருசலேம் நகருக்கும் ஒப்பாய் இருக்கிறாள். ஏனெனில் எருசலேமும், அதன் பிள்ளைகளுடன் அடிமையாய் இருக்கிறதே.
ⲕ̅ⲉ̅ⲁⲅⲁⲣ ⲇⲉ ⲡⲉ ⳿ⲡⲧⲱⲟⲩ ⳿ⲛⲥⲓⲛⲁ ⲉϥⲭⲏ ϧⲉⲛ ⳿ⲧⲁⲣⲁⲃⲓⲁ ⲁϥⲟⲓ ⲇⲉ ⳿ⲛ⳿ϣⲫⲏⲣ ⳿ⲛϯⲙⲁϯ ⲛⲉⲙ ⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⳿ⲛⲧⲉ ϯⲛⲟⲩ ⳿ⲥⲟⲓ ⲅⲁⲣ ⳿ⲙⲃⲱⲕⲓ ⲛⲉⲙ ⲛⲉⲥϣⲏⲣⲓ.
26 ஆனால் மேலே பரலோகத்திலுள்ள எருசலேமோ சுதந்தரமானவள். அவளே நம்முடைய தாய்.
ⲕ̅ⲋ̅⳿ⲓⲗ̅ⲏ̅ⲙ̅ ⲇⲉ ⲉⲧⲉ⳿ⲙ⳿ⲡϣⲱⲓ ⲟⲩⲣⲉⲙϩⲏ ⲧⲉ ⲉⲧⲉ ⲧⲉⲛⲙⲁⲩ ⲧⲉ.
27 ஏனெனில், “பிள்ளை பிள்ளைபெறாத மலடியே, சந்தோஷப்படு; பிரசவ வேதனைப்படாதவளே, மகிழ்ச்சியுடன் சத்தமிடு; ஏனெனில் கைவிடப்பட்டவளின் பிள்ளைகள் கணவனுடன் வாழ்கிறவளுடைய பிள்ளைகளைவிட அதிகமாயிருப்பார்கள்” என்று எழுதியிருக்கிறதே.
ⲕ̅ⲍ̅⳿ⲥ⳿ⲥϧⲏⲟⲩⲧ ⲅⲁⲣ ϫⲉ ⲟⲩⲛⲟϥ ⳿ⲙⲙⲟ ϯ ⲁϭⲣⲏⲛ ⲑⲏ ⲉⲧⲉ ⳿ⲙⲡⲁⲥⲙⲓⲥⲓ ⲫⲱϫⲓ ⲟⲩⲟϩ ⲱϣ ⳿ⲉⲃⲟⲗ ⲑⲏ ⲉⲧⲉ ⳿ⲙⲡⲁⲥϯⲛⲁⲕϩⲓ ϫⲉ ⲛⲁϣⲉ ⲛⲓϣⲏ ⲣⲓ ⳿ⲛⲧⲉ ϯϣⲁϥⲏ ⲙⲁⲗⲗⲟⲛ ⳿ⲉϩⲟⲧⲉ ⲑⲏ ⲉⲧⲉ ⲟⲩⲟⲛⲧⲁⲥ ⳿ⲙⲡⲓϩⲁⲓ ⳿ⲙⲙⲁⲩ.
28 பிரியமானவர்களே, நீங்களோ ஈசாக்கைப் போல் வாக்குத்தத்தத்தின் பிள்ளைகளாய் இருக்கிறீர்கள்.
ⲕ̅ⲏ̅⳿ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲛⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⲕⲁⲧⲁ ⳿ Ⲓⲥⲁⲁⲕ ⳿ⲁⲛⲟⲛ ϩⲁⲛϣⲏⲣⲓ ⳿ⲛⲧⲉ ϯⲉⲡⲁⲅⲅⲉⲗⲓⲁ.
29 அக்காலத்தில் சாதாரண முறையில் பிறந்த மகன், பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையின் மூலமாய் பிறந்த மகனைத் துன்புறுத்தினான். அவ்விதமாகவே, இப்பொழுதும் நடைபெறுகிறது.
ⲕ̅ⲑ̅ⲁⲗⲗⲁ ⳿ⲙ⳿ⲫⲣⲏϯ ⳿ⲙⲡⲓⲥⲏⲟⲩ ⲉⲧⲧⲏ ⲛⲁⲣⲉ ⲡⲓⲙⲓⲥⲓ ⲕⲁⲧⲁ ⲥⲁⲣⲝ ϭⲟϫⲓ ⳿ⲛⲥⲁ ⲡⲓⲙⲓⲥⲓ ⲕⲁⲧⲁ ⲡⲓⲡ͞ⲛⲁ̅ ⲡⲁⲓⲣⲏϯ ⲟⲛ ϯⲛⲟⲩ.
30 ஆனால் வேதவசனம் என்ன சொல்கிறது? “அடிமைப் பெண்ணையும், அவள் மகனையும் வெளியே அனுப்பிவிடும்; ஏனெனில், அடிமைப்பெண்ணின் மகன் சுதந்திரமான பெண்ணின் மகனுடனே, சொத்துரிமையை ஒருபோதும் பகிர்ந்துகொள்ளக் கூடாது.”
ⲗ̅ⲁⲗⲗⲁ ⲟⲩ ⲡⲉ ⲉⲧⲉ ϯ⳿ⲅⲣⲁⲫⲏ ϫⲱ ⳿ⲙⲙⲟϥ ϩⲓⲟⲩ⳿ⲓ ⳿ⲛⲧⲁⲓⲃⲱⲕⲓ ⳿ⲉⲃⲟⲗ ⲛⲉⲙ ⲡⲉⲥϣⲏ ⲣⲓ ⳿ⲛⲛⲉ ⳿ⲡϣⲏⲣⲓ ⲅⲁⲣ ⳿ⲛϯⲃⲱⲕⲓ ⲉⲣ⳿ⲕⲗⲏ ⲣⲟⲛⲟⲙⲓⲛ ⲛⲉⲙ ⳿ⲡϣⲏⲣⲓ ⳿ⲛϯⲣⲉⲙϩⲉ.
31 ஆகவே பிரியமானவர்களே, நாம் மோசேயின் சட்டத்தில் கட்டுப்பட்ட அடிமைப்பெண்ணின் பிள்ளைகள் அல்ல, சுதந்திரமான பெண்ணின் விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிள்ளைகள்.
ⲗ̅ⲁ̅⳿ⲁⲛⲟⲛ ⲇⲉ ⲛⲉⲛ⳿ⲥⲛⲏⲟⲩ ⳿ⲁⲛⲟⲛ ⲛⲉⲛϣⲏⲣⲓ ⳿ⲛϯⲃⲱⲕⲓ ⲁⲛ ⲁⲗⲗⲁ ϯⲣⲉⲙϩⲉ

< கலாத்தியர் 4 >