< எஸ்றா 5 >

1 அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
וְהִתְנַבִּ֞י חַגַּ֣י נְבִיאָה (נְבִיָּ֗א) וּזְכַרְיָ֤ה בַר־עִדֹּוא֙ נְבִיאַיָּא (נְבִיַּיָּ֔א) עַל־יְה֣וּדָיֵ֔א דִּ֥י בִיה֖וּד וּבִירוּשְׁלֶ֑ם בְּשֻׁ֛ם אֱלָ֥הּ יִשְׂרָאֵ֖ל עֲלֵיהֹֽון׃ ס
2 அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.
בֵּאדַ֡יִן קָ֠מוּ זְרֻבָּבֶ֤ל בַּר־שְׁאַלְתִּיאֵל֙ וְיֵשׁ֣וּעַ בַּר־יֹֽוצָדָ֔ק וְשָׁרִ֣יו לְמִבְנֵ֔א בֵּ֥ית אֱלָהָ֖א דִּ֣י בִירֽוּשְׁלֶ֑ם וְעִמְּהֹ֛ון נְבִיאַיָּא (נְבִיַּיָּ֥א) דִֽי־אֱלָהָ֖א מְסָעֲדִ֥ין לְהֹֽון׃ פ
3 அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர்.
בֵּהּ־זִמְנָא֩ אֲתָ֨א עֲלֵיהֹ֜ון תַּ֠תְּנַי פַּחַ֧ת עֲבַֽר־נַהֲרָ֛ה וּשְׁתַ֥ר בֹּוזְנַ֖י וּכְנָוָתְהֹ֑ון וְכֵן֙ אָמְרִ֣ין לְהֹ֔ם מַן־שָׂ֨ם לְכֹ֜ם טְעֵ֗ם בַּיְתָ֤א דְנָה֙ לִבְּנֵ֔א וְאֻשַּׁרְנָ֥א דְנָ֖ה לְשַׁכְלָלָֽה׃ ס
4 அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர்.
אֱדַ֥יִן כְּנֵ֖מָא אֲמַ֣רְנָא לְּהֹ֑ם מַן־אִנּוּן֙ שְׁמָהָ֣ת גֻּבְרַיָּ֔א דִּֽי־דְנָ֥ה בִנְיָנָ֖א בָּנַֽיִן׃
5 ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.
וְעֵ֣ין אֱלָהֲהֹ֗ם הֲוָת֙ עַל־שָׂבֵ֣י יְהוּדָיֵ֔א וְלָא־בַטִּ֣לוּ הִמֹּ֔ו עַד־טַעְמָ֖א לְדָרְיָ֣וֶשׁ יְהָ֑ךְ וֶאֱדַ֛יִן יְתִיב֥וּן נִשְׁתְּוָנָ֖א עַל־דְּנָֽה׃ פ
6 ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே:
פַּרְשֶׁ֣גֶן אִ֠גַּרְתָּא דִּֽי־שְׁלַ֞ח תַּתְּנַ֣י ׀ פַּחַ֣ת עֲבַֽר־נַהֲרָ֗ה וּשְׁתַ֤ר בֹּוזְנַי֙ וּכְנָ֣וָתֵ֔הּ אֲפַ֨רְסְכָיֵ֔א דִּ֖י בַּעֲבַ֣ר נַהֲרָ֑ה עַל־דָּרְיָ֖וֶשׁ מַלְכָּֽא׃
7 அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது: தரியு அரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
פִּתְגָמָ֖א שְׁלַ֣חוּ עֲלֹ֑והִי וְכִדְנָה֙ כְּתִ֣יב בְּגַוֵּ֔הּ לְדָרְיָ֥וֶשׁ מַלְכָּ֖א שְׁלָמָ֥א כֹֽלָּא׃ ס
8 நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.
יְדִ֣יעַ ׀ לֶהֱוֵ֣א לְמַלְכָּ֗א דִּֽי־אֲזַ֜לְנָא לִיה֤וּד מְדִֽינְתָּא֙ לְבֵית֙ אֱלָהָ֣א רַבָּ֔א וְה֤וּא מִתְבְּנֵא֙ אֶ֣בֶן גְּלָ֔ל וְאָ֖ע מִתְּשָׂ֣ם בְּכֻתְלַיָּ֑א וַעֲבִ֥ידְתָּא דָ֛ךְ אָסְפַּ֥רְנָא מִתְעַבְדָ֖א וּמַצְלַ֥ח בְּיֶדְהֹֽם׃ ס
9 அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம்.
אֱדַ֗יִן שְׁאֵ֙לְנָא֙ לְשָׂבַיָּ֣א אִלֵּ֔ךְ כְּנֵ֖מָא אֲמַ֣רְנָא לְהֹ֑ם מַן־שָׂ֨ם לְכֹ֜ם טְעֵ֗ם בַּיְתָ֤א דְנָה֙ לְמִבְנְיָ֔ה וְאֻשַּׁרְנָ֥א דְנָ֖ה לְשַׁכְלָלָֽה׃
10 அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.
וְאַ֧ף שְׁמָהָתְהֹ֛ם שְׁאֵ֥לְנָא לְהֹ֖ם לְהֹודָעוּתָ֑ךְ דִּ֛י נִכְתֻּ֥ב שֻׁם־גֻּבְרַיָּ֖א דִּ֥י בְרָאשֵׁיהֹֽם׃ ס
11 அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து: “நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான்.
וּכְנֵ֥מָא פִתְגָמָ֖א הֲתִיב֣וּנָא לְמֵמַ֑ר אֲנַ֣חְנָא הִמֹּ֡ו עַבְדֹוהִי֩ דִֽי־אֱלָ֨הּ שְׁמַיָּ֜א וְאַרְעָ֗א וּבָנַ֤יִן בַּיְתָא֙ דִּֽי־הֲוָ֨א בְנֵ֜ה מִקַּדְמַ֤ת דְּנָה֙ שְׁנִ֣ין שַׂגִּיאָ֔ן וּמֶ֤לֶךְ לְיִשְׂרָאֵל֙ רַ֔ב בְּנָ֖הִי וְשַׁכְלְלֵֽהּ׃
12 எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
לָהֵ֗ן מִן־דִּ֨י הַרְגִּ֤זוּ אֲבָהֳתַ֙נָא֙ לֶאֱלָ֣הּ שְׁמַיָּ֔א יְהַ֣ב הִמֹּ֔ו בְּיַ֛ד נְבוּכַדְנֶצַּ֥ר מֶֽלֶךְ־בָּבֶ֖ל כַּסְדָּיָא (כַּסְדָּאָ֑ה) וּבַיְתָ֤ה דְנָה֙ סַתְרֵ֔הּ וְעַמָּ֖ה הַגְלִ֥י לְבָבֶֽל׃ ס
13 “ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான்.
בְּרַם֙ בִּשְׁנַ֣ת חֲדָ֔ה לְכֹ֥ורֶשׁ מַלְכָּ֖א דִּ֣י בָבֶ֑ל כֹּ֤ורֶשׁ מַלְכָּא֙ שָׂ֣ם טְעֵ֔ם בֵּית־אֱלָהָ֥א דְנָ֖ה לִבְּנֵֽא׃
14 அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான்.
וְ֠אַף מָאנַיָּ֣א דִֽי־בֵית־אֱלָהָא֮ דִּ֣י דַהֲבָ֣ה וְכַסְפָּא֒ דִּ֣י נְבוּכַדְנֶצַּ֗ר הַנְפֵּק֙ מִן־הֵֽיכְלָא֙ דִּ֣י בִֽירוּשְׁלֶ֔ם וְהֵיבֵ֣ל הִמֹּ֔ו לְהֵיכְלָ֖א דִּ֣י בָבֶ֑ל הַנְפֵּ֨ק הִמֹּ֜ו כֹּ֣ורֶשׁ מַלְכָּ֗א מִן־הֵֽיכְלָא֙ דִּ֣י בָבֶ֔ל וִיהִ֙יבוּ֙ לְשֵׁשְׁבַּצַּ֣ר שְׁמֵ֔הּ דִּ֥י פֶחָ֖ה שָׂמֵֽהּ׃
15 கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.
וַאֲמַר־לֵ֓הּ ׀ אֵלֶּה (אֵ֚ל) מָֽאנַיָּ֔א שֵׂ֚א אֵֽזֶל־אֲחֵ֣ת הִמֹּ֔ו בְּהֵיכְלָ֖א דִּ֣י בִירוּשְׁלֶ֑ם וּבֵ֥ית אֱלָהָ֖א יִתְבְּנֵ֥א עַל־אַתְרֵֽהּ׃ ס
16 “எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.
אֱדַ֙יִן֙ שֵׁשְׁבַּצַּ֣ר דֵּ֔ךְ אֲתָ֗א יְהַ֧ב אֻשַּׁיָּ֛א דִּי־בֵ֥ית אֱלָהָ֖א דִּ֣י בִירוּשְׁלֶ֑ם וּמִן־אֱדַ֧יִן וְעַד־כְּעַ֛ן מִתְבְּנֵ֖א וְלָ֥א שְׁלִֽם׃
17 “ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.
וּכְעַ֞ן הֵ֧ן עַל־מַלְכָּ֣א טָ֗ב יִ֠תְבַּקַּר בְּבֵ֨ית גִּנְזַיָּ֜א דִּי־מַלְכָּ֣א תַמָּה֮ דִּ֣י בְּבָבֶל֒ הֵ֣ן אִיתַ֗י דִּֽי־מִן־כֹּ֤ורֶשׁ מַלְכָּא֙ שִׂ֣ים טְעֵ֔ם לְמִבְנֵ֛א בֵּית־אֱלָהָ֥א דֵ֖ךְ בִּירוּשְׁלֶ֑ם וּרְע֥וּת מַלְכָּ֛א עַל־דְּנָ֖ה יִשְׁלַ֥ח עֲלֶֽינָא׃ ס

< எஸ்றா 5 >