< எஸ்றா 5 >
1 அதன்பின் இறைவாக்கினன் ஆகாயும், இத்தோவின் மகனான இறைவாக்கினன் சகரியாவும், யூதாவிலும் எருசலேமிலும் உள்ள யூதர்களுக்கு தங்களுக்கு மேலாய் இருந்த இஸ்ரயேலரின் இறைவனின் பெயரால் இறைவாக்கு உரைத்தனர்.
Na rĩrĩ, mũnabii Hagai, na mũnabii Zekaria wa rũciaro rwa Ido, nĩmarathĩire Ayahudi a kũu Juda na Jerusalemu thĩinĩ wa rĩĩtwa rĩa Ngai wa Isiraeli, mũgitĩri wao.
2 அப்பொழுது செயல்தியேலின் மகன் செருபாபேலும், யோசதாக்கின் மகன் யெசுவாவும் எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டத்தொடங்கினர். இறைவனின் இறைவாக்கினர்களும் அவர்களுடனிருந்து அவர்களுக்கு உதவிசெய்தனர்.
Hĩndĩ ĩyo Zerubabeli mũrũ wa Shealitieli, na Jeshua mũrũ wa Jozadaku makĩambĩrĩria wĩra wa gwaka rĩngĩ nyũmba ya Ngai kũu Jerusalemu, na anabii a Ngai maarĩ hamwe nao makĩmateithia.
3 அக்காலத்தில் ஐபிராத்து மறுகரையில் ஆளுநனாய் இருந்த தத்னாயும், சேத்தார்பொஸ்னாயும், அவர்களுடைய நண்பர்களும் இவர்களிடம் வந்து, “இந்த ஆலயத்தைத் திரும்பக் கட்டவும், இந்தக் கட்டிடத்தைத் திரும்பவும் செய்து முடிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டனர்.
Ihinda rĩu Tatenai, barũthi wa Mũrĩmo-wa-Farati, na Shetharu-Bozenai, hamwe na athiritũ ao magĩthiĩ kũrĩ o, makĩmooria atĩrĩ, “Nũũ wamũheire rũtha rwa gwaka rĩngĩ hekarũ ĩno na gũcookereria mwako ũyũ?”
4 அத்துடன், “இதைக் கட்டுகிற மனிதர்களின் பெயர்கள் என்ன?” எனவும் கேட்டனர்.
Ningĩ makĩũria atĩrĩ, “Andũ arĩa maraaka nyũmba ĩno metagwo atĩa?”
5 ஆனால் இறைவனின் கண் யூதரின் முதியவர்கள்மேல் இருந்தது. தரியு அரசனுக்கு இதைக்குறித்து அறிவிக்கப்பட்டு அவனிடமிருந்து எழுத்துமூலம் பதில் வரும்வரை அவர்களுடைய வேலை நிறுத்தப்படவில்லை.
No rĩrĩ, Ngai nĩaroraga athuuri acio a Ayahudi, na matiatigithirio wĩra nginya ũhoro ũkinyĩrio Dario, na marũa ma macookio make maamũkĩrwo.
6 ஐபிராத்து நதிக்கு அக்கரையில் ஆளுநராய் இருந்த தத்னாவும், சேத்தார்பொஸ்னாயும், அவர்கள் கூட்டாளிகளான ஐபிராத்து நதியின் மறுகரையிலுள்ள அதிகாரிகளும் தரியு அரசனுக்கு எழுதிய கடிதத்தின் பிரதி இதுவே:
Ĩno nĩyo kobi ya marũa marĩa maatũmĩirwo Mũthamaki Dario nĩ Tatenai ũrĩa warĩ barũthi wa Mũrĩmo-wa-Farati, marĩ na Shetharu-Bozenai na athiritũ ao, arĩa maarĩ anene a Mũrĩmo-wa-Farati.
7 அவர்கள் அவனுக்கு அனுப்பிய அறிக்கையின் விபரமாவது: தரியு அரசனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
Ũhoro ũrĩa maamũtũmĩire watariĩ ũũ: Kũrĩ Mũthamaki Dario: Ngeithi cia thayũ.
8 நாங்கள் யூதா மாவட்டத்திலுள்ள மேன்மையுள்ள இறைவனின் ஆலயத்துக்குப் போனோம் என்பதை அரசன் தெரிந்திருக்க வேண்டும். அந்த மக்கள் அதைப் பெரிய கற்களினால் கட்டி மரத்தாலான உத்திரங்களையும் சுவர்களின்மேல் வைக்கிறார்கள். அந்த வேலை மிகக் கவனத்துடனும், துரிதமாகவும் செய்யப்பட்டு வருகிறது.
Nĩ wega mũthamaki amenye atĩ ithuĩ nĩtwathiire rũgongo rwa Juda, kũu hekarũ-inĩ ya Ngai ũrĩa mũnene. Andũ acio nĩmaraaka hekarũ na mahiga manene, o na magekĩra mbaũ rũthingo-inĩ. Wĩra nĩũrarutwo na kĩyo, na nĩũrathiĩ na mbere mũno ũrĩ moko-inĩ ma arĩa maraũruta.
9 அதனால் நாங்கள் அங்குள்ள முதியவர்களிடம் விசாரித்து அவர்களிடம், “இந்த ஆலயக் கட்டிடத்தை திரும்பக் கட்டவும், இந்தக் கட்டட அமைப்பைப் புதுப்பிக்கவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யார்?” எனக் கேட்டோம்.
Tuoririe athuuri acio atĩrĩ, “Nũũ wamũheire rũtha rwa gwaka rĩngĩ hekarũ ĩno na gũcookereria mwako ũyũ?”
10 அத்துடன் நாங்கள் உமக்கு அறிவிக்கும் நோக்கத்துடன் முதியவர்களின் பெயர்களைக் கேட்டு எழுதினோம்.
Ningĩ nĩtwamoririe marĩĩtwa mao, nĩgeetha twandĩke marĩĩtwa ma atongoria ao, nĩguo tũkũmenyithie.
11 அவர்கள் எங்களுக்குப் பதிலுரைத்து: “நாங்கள் வானத்துக்கும், பூமிக்கும் இறைவனாய் இருப்பவரின் ஊழியர்கள். பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட ஒரு ஆலயத்தையே நாங்கள் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கிறோம். அதை இஸ்ரயேலின் ஒரு பெரிய அரசன் கட்டி முடித்திருந்தான்.
Ũũ nĩguo maatũcokeirie: “Ithuĩ tũrĩ ndungata cia Ngai wa igũrũ na thĩ, na tũraaka rĩngĩ hekarũ ĩrĩa yakĩtwo mĩaka mĩingĩ mĩthiru, ĩrĩa yakĩtwo na ĩkarĩkio nĩ mũthamaki mũnene wa Isiraeli.
12 எங்களுடைய முற்பிதாக்கள் பரலோகத்தின் இறைவனுக்குக் கோபமூட்டினதால், அவர் இவர்களை பாபிலோன் அரசனான கல்தேயனாகிய நேபுகாத்நேச்சாரின் கையில் ஒப்புக்கொடுத்தார். எனவே அவன் இந்த ஆலயத்தை அழித்து மக்களை பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.
No tondũ maithe maitũ nĩmarakaririe Ngai wa igũrũ, nĩamaneanire kũrĩ Nebukadinezaru ũrĩa Mũkalidei, mũthamaki wa Babuloni, ũrĩa wamomorire hekarũ ĩno na agĩthaamĩria andũ bũrũri wa Babuloni.
13 “ஆனாலும் பாபிலோன் அரசன் கோரேஸின் முதலாம் வருடத்தில், இறைவனின் ஆலயத்தைத் திரும்பக் கட்டும்படி கோரேஸ் ஒரு கட்டளை பிறப்பித்தான்.
“No rĩrĩ, mwaka wa mbere wa Kurusu mũthamaki wa Babuloni, mũthamaki nĩathanire atĩ nyũmba ĩno ya Ngai yakwo rĩngĩ.
14 அத்துடன் நேபுகாத்நேச்சார் அரசன் எருசலேமிலுள்ள ஆலயத்தில் இருந்து எடுத்துச்சென்று, பாபிலோனிலுள்ள கோயிலுக்குள் கொண்டுபோய் வைத்திருந்த தங்கத்தினாலும் வெள்ளியினாலுமான பொருட்களை, கோரேஸ் அரசன் பாபிலோனின் கோயிலிலிருந்து எடுத்தான். பின்பு அவற்றை அரசன் தான் ஆளுநனாக நியமித்திருந்த சேஸ்பாத்சார் என்பவனிடம் கொடுத்தான்.
O na nĩarutire kuuma hekarũ ĩrĩa yarĩ Babuloni indo cia thahabu na cia betha cia nyũmba ya Ngai, iria Nebukadinezaru aarutĩte hekarũ-inĩ kũu Jerusalemu, agĩcitwara hekarũ-inĩ kũu Babuloni. “Nake Mũthamaki Kurusu agĩcineana kũrĩ mũndũ wetagwo Sheshibazaru, ũrĩa aatuĩte barũthi,
15 கோரேஸ் அரசன் அவனிடம், ‘இப்பொருட்களை நீ எருசலேமிலுள்ள ஆலயத்தில் கொண்டுபோய் வை. அவ்விடத்திலேயே இறைவனுடைய ஆலயத்தைத் திரும்பவும் கட்டு’ எனச் சொன்னான்.
na akĩmwĩra atĩrĩ, ‘Oya indo ici ũcitware na ũciige thĩinĩ wa hekarũ kũu Jerusalemu, na wake rĩngĩ nyũmba ya Ngai o harĩa yarĩ.’
16 “எனவே சேஸ்பாத்சார் வந்து எருசலேமில் இறைவனின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போட்டான். அந்த நாள் முதல் இன்றுவரை அது கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இன்னும் முடிவடையவில்லை” என்றார்கள்.
Nĩ ũndũ ũcio Sheshibazaru agĩũka agĩaka mũthingi wa nyũmba ya Ngai kũu Jerusalemu. Kuuma mwaka ũcio nginya ũmũthĩ mwako ũcio no ũthiiaga na mbere na ndũrĩ warĩĩka.”
17 “ஆகையால் இப்பொழுதும் அரசனுக்கு மனவிருப்பமிருந்தால், பாபிலோனிலுள்ள அரச பதிவேட்டுச் சுவடிகளை ஆராய்ந்து பார்க்கட்டும். எருசலேமில் இறைவனின் ஆலயத்தைத் திரும்பவும் கட்டும்படி, கோரேஸ் அரசன் உண்மையாக ஒரு கட்டளையை பிறப்பித்தாரோ என்று தேடிப் பார்க்கட்டும். பின்பு அரசன் இந்தக் காரியத்தில் தீர்மானத்தை எங்களுக்கும் அனுப்பட்டும்” என்றார்கள்.
Na rĩrĩ, mũthamaki angĩona kwagĩrĩire-rĩ, nĩgũtuĩrio maandĩko-inĩ ma ũthamaki ma tene ma Babuloni, kuoneke kana Mũthamaki Kurusu ti-itherũ nĩarutĩte watho wa gwaka rĩngĩ nyũmba ĩno ya Ngai gũkũ Jerusalemu. Ningĩ reke mũthamaki atũtũmĩre itua rĩake ũhoro-inĩ ũcio.