< எசேக்கியேல் 44 >

1 மீண்டும் அந்த மனிதன் என்னை ஆலயத்தின் கிழக்கு நோக்கியிருந்த வெளிவாசலுக்குக் கொண்டுவந்தான். அது பூட்டப்பட்டிருந்தது.
ထိုနောက် ၊ သန့်ရှင်း ရာအရပ်အရှေ့ သို့ မျက်နှာပြု သောပြင် တံခါး သို့ ဆောင် သွား၍ ၊ ထိုတံခါးသည် ပိတ် လျက်ရှိ၏။
2 யெகோவா என்னிடம், “இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும். இது திறக்கப்படலாகாது. இதின் வழியாக யாரும் உட்செல்லவும் கூடாது. இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா இதின் வழியாகவே வந்தார். ஆகவே இது பூட்டப்பட்டே இருக்கும்.
ထာဝရဘုရား ကလည်း ၊ ဤ တံခါး ကိုမ ဖွင့် ဘဲ ပိတ် ထားလျက်ရှိရမည်။ လူ များမ ဝင် ရကြ။ အကြောင်းမူကား ၊ ဣသရေလ အမျိုး၏ ဘုရားသခင် ထာဝရဘုရား ဝင် တော်မူသောကြောင့် ပိတ် ထားလျက်ရှိရမည်။
3 இந்த நுழைவு வாசலின் உட்புறத்தில் யெகோவாவுக்குமுன் சாப்பிடுவதற்கு இளவரசன் மட்டுமே உட்காரலாம். அவன் புகுமுக மண்டபத்தின் நுழைவாசல் உட்சென்று அதே வழியாக வெளியேறவேண்டும் என்றார்.”
မင်းသား အဘို့ဖြစ်၏။ မင်းသားသည် ထာဝရဘုရား ရှေ့ တော်၌ စားသောက် ၍ထိုတံခါးဝ မှာ ထိုင် ရ လိမ့်မည်၊ မင်းသားသည် ထိုတံခါးမုတ်ဖြင့် ထွက် ဝင် ရလိမ့်မည်ဟု မိန့် တော်မူ၏။
4 பின்பு அம்மனிதன் என்னை ஆலயத்துக்கு முன்னாலிருக்கும் வடக்கு வாசல்வழியால் அழைத்து வந்தான். நான் பார்த்தேன் அப்பொழுது யெகோவாவினுடைய மகிமை யெகோவாவினுடைய ஆலயத்தை நிரப்புவதைக் கண்டேன், நான் உடனே முகங்குப்புற விழுந்தேன்.
ထိုအခါ အိမ် တော်ရှေ့ ၊ မြောက် တံခါး လမ်း ဖြင့် ငါ့ ကိုဆောင်သွား ၍ ၊ ထာဝရဘုရား ၏ဘုန်း တော်သည် ထာဝရဘုရား ၏အိမ် တော်ကို ဖြည့် တော်မူသဖြင့် ၊ ငါသည် ပြပ်ဝပ် လျက်နေ၏။
5 யெகோவா என்னிடம், “மனுபுத்திரனே, கவனமாகப் பார், கவனித்துக் கேள், யெகோவாவினுடைய ஆலயத்தைப் பற்றிய எல்லா ஒழுங்குவிதிகளையும் பற்றி, நான் கூறும் ஒவ்வொன்றையும் கருத்தாய் கவனித்துக்கொள். ஆலயத்தின் புகுமுக வாசலையும் பரிசுத்த இடத்தின் வெளியேறும் எல்லா வாசல்களையும் குறித்துக் கவனம் செலுத்து.
ထာဝရဘုရား ကလည်း၊ အချင်းလူသား ၊ စေ့စေ့ကြည့်ရှု ၍ မှတ် လော့။ ထာဝရဘုရား ၏ အိမ် တော်အဘို့ ငါစီရင် ထုံးဖွဲ့ချက် ပညတ် တရားရှိသမျှ တို့ကို နားထောင် လော့။ အိမ် တော်ဝင် ရာတံခါးဝနှင့် သန့်ရှင်း ရာဌာနမှ ထွက် ရာတံခါးဝရှိသမျှ တို့ကို စေ့စေ့မှတ် လော့။
6 கலகக்காரராகிய இஸ்ரயேல் குடும்பத்தாரிடம் நீ சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. இஸ்ரயேல் குடும்பத்தாரே, வெறுக்கத்தக்க உங்கள் செயல்கள் போதும்.
ပုန်ကန် တတ်သောသူ ဣသရေလ အမျိုးသား တို့ အား အရှင် ထာဝရဘုရား ၏ အမိန့် တော်ကို ဆင့်ဆို ရမည် မှာ၊ အိုဣသရေလ အမျိုးသား တို့၊
7 உங்கள் வெறுக்கத்தக்க எல்லா பழக்கவழக்கங்களுடனும் அயல் நாட்டினரையும் என் பரிசுத்த ஆலயத்திற்குள் கொண்டுவந்தீர்கள். அவர்களோ இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனம் இல்லாதவர்கள். என் ஆலய தூய்மையைக் கெடுத்தீர்கள். ஆகாரத்தையும் கொழுப்பையும் இரத்தத்ததையும் எனக்கு காணிக்கையாகச் செலுத்தியபோதிலும் என் உடன்படிக்கையை மீறினீர்கள்.
သင်တို့သည် ငါ့ ဘောဇဉ် တည်းဟူသောဆီဥ နှင့် အသွေး ကို ပူဇော် သောအခါ ၊ ငါ့ ဗိမာန် ကိုညစ်ညူး စေခြင်းငှါ ၊ အရေဖျား လှီးခြင်းကို မခံသောစိတ် နှင့် အရေဖျား လှီးခြင်းကို မခံ သောကိုယ် ရှိသောတပါး အမျိုးသားတို့ကို ငါ ၏သန့်ရှင်း ရာဌာနထဲသို့ သွင်း ၍နေရာ ချသဖြင့် ၊ စက်ဆုပ် ရွံရှာဘွယ်သော အမှုများကို ပြုမိသည်ဖြစ်၍၊ ရောင့်ရဲ သောစိတ် ရှိကြလော့။ စက်ဆုပ် ရွံရှာဘွယ်သောအမှုများ အားဖြင့် ငါ့ ပဋိညာဉ် ကို ဖျက် ကြပြီ။
8 என் பரிசுத்த காரியங்களில் உங்களுடைய கடமைகளைச் செய்வதற்குப் பதிலாக, என் பரிசுத்த ஆலயத்தையே மற்றவர்களின் பொறுப்பில் விட்டீர்கள்.
ငါ ၏သန့်ရှင်း ရာဌာနကို မ စောင့် ။ ထိုဌာန၌ စောင့် သောသူတို့ကို ကိုယ်အလိုအလျောက်ခန့်ထား ကြပြီ။
9 ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: இருதயத்திலும் மாம்சத்திலும் விருத்தசேதனமற்ற எந்தவொரு அந்நியனும் என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது. இஸ்ரயேலருக்குள் வசிக்கும் அந்நியன்கூட என் பரிசுத்த இடத்திற்குள் போகக்கூடாது.
အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူသည်ကား၊ ဣသရေလ အမျိုးသား တို့တွင် နေ၍၊ အရေဖျား လှီးခြင်းကို မခံသောစိတ် နှင့် အရေဖျား လှီးခြင်းကိုမခံသော ကိုယ် ရှိ သောတပါး အမျိုးသားသည် ငါ ၏သန့်ရှင်း ရာဌာနထဲသို့ မ ဝင် ရ။
10 “‘இஸ்ரயேல் வழிதவறியபோது, சில லேவியர் என்னைவிட்டுத் தூரமாய்ப் போய் விக்கிரகங்களுக்குப் பின்னால் திரிந்தார்கள். அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமக்கவேண்டும்.
၁၀ဣသရေလ အမျိုးသားတို့သည် ငါ့ ထံမှ ထွက်၍ လမ်းလွှဲ ပြီးလျှင်၊ မိမိ တို့ရုပ်တု များနောက်သို့ လိုက် သွား သောအခါ၊ ငါ့ ထံမှ ထွက်၍လမ်းလွှဲ သော လေဝိ သားတို့ သည်လည်း ကိုယ် အပြစ် ကိုခံရ ကြမည်။
11 அவர்கள் ஆலய வாசல்களுக்குப் பொறுப்பாக இருந்து, அங்கே பணிசெய்யலாம். அவர்கள் மக்களுக்காகத் தகன காணிக்கைகளையும், பலிகளையும் வெட்டி மக்கள் முன்நின்று அவர்களுக்கும் ஊழியம் செய்யலாம். அவர்கள் இவ்வாறு மட்டுமே என் பரிசுத்த இடத்தில் பணிபுரியலாம்.
၁၁သို့ရာတွင် ၊ ငါ ၏သန့်ရှင်း ရာဌာနနှင့်ဆိုင်သော အမှု စောင့်ဖြစ်၍၊ ဗိမာန် တော်၌တံခါး တို့ကို စောင့် လျက် ၊ အမှု တော်ကို ဆောင်ရွက်လျက်နေရကြမည်။ မီးရှို့ ရာယဇ် နှင့် လူ များပူဇော်သော ယဇ်ကောင် တို့ကိုသတ် ၍၊ လူများ ကိုယ်စားအမှု တော်ကို ဆောင်ရွက်ရကြမည်။
12 ஆனால் அவர்கள் தங்கள் விக்கிரகங்களுக்கு முன்பாக நின்று அவைகளை வணங்கி, இஸ்ரயேலரைப் பாவத்தில் விழச்செய்தபடியால், அவர்கள் தங்கள் பாவத்தின் விளைவுகளைச் சுமந்தேயாக வேண்டும். இதை நான் என் உயர்த்திய கையினால் ஆணையிட்டிருக்கிறேன் என ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
၁၂သူတို့သည် ရုပ်တု တို့ရှေ့မှာ လူများအမှု ကို ဆောင်ရွက်သဖြင့် ၊ ဣသရေလ အမျိုး ထိမိ ၍ ဒုစရိုက် အပြစ်ထဲသို့ လဲစရာအကြောင်းဖြစ်ဘူးသောကြောင့် ၊ သူ တို့ တဘက် ၌ငါကျိန်ဆို ၍၊ သူတို့သည် ကိုယ် အပြစ် ကို ခံရ ကြမည် ။
13 அவர்கள் என்னருகே வந்து, ஆசாரியர்களாய்ப் பணிபுரியவோ அல்லது பரிசுத்த காரியங்களுக்கும் மகா பரிசுத்த காணிக்கைகளுக்கும் அருகில் வரவோகூடாது. தங்களுடைய வெறுக்கத்தக்க செயல்களுக்கான வெட்கத்தை அவர்கள் சுமக்கவேண்டும்.
၁၃ယဇ်ပုရောဟိတ် လုပ်၍ ငါ့ ထံသို့ မ ချဉ်းကပ် ရကြ။ အလွန် သန့်ရှင်းသော ငါ့ဌာန၌ သန့်ရှင်း သောအရာတို့ကို မချဉ်းကပ် ရကြ။ ကိုယ် အရှက်ကွဲ ခြင်း၊ ကိုယ်ပြု မိသော စက်ဆုပ် ရွံရှာဘွယ်အမှုတို့ကိုခံရ ကြမည်။
14 எனினும் அவர்கள் ஆலயத்தைப் பராமரிக்கும் வேலைகளுக்குப் பொறுப்பாயிருக்கவும், அதில் சம்பந்தப்பட்ட வேலைகளையெல்லாம் செய்யவும் நான் அவர்களை நியமிப்பேன்.
၁၄အိမ် တော်ကိုစောင့် ၍၊ အိမ်တော်၌ ခပ်သိမ်း သောအမှု တို့ကို ဆောင်ရွက် စေခြင်းငှါ ငါခန့်ထား မည်။
15 “‘ஆனால், இஸ்ரயேல் என்னைவிட்டு வழிதவறிச் சென்றபோது, என் பரிசுத்த ஆலயத்தின் கடமைகளை சாதோக்கின் சந்ததிகளான லேவியர்கள் உண்மையாய்ச் செய்துவந்தார்கள். அவர்களே எனக்கு ஆசாரியர்களாயிருந்து, எனக்கு முன்பாகப் பணிசெய்ய என்னருகே வரவேண்டும். கொழுப்பும் இரத்தமுமான பலிகளைச் செலுத்துவதற்கு அவர்களே எனக்கு முன்பாக நிற்கவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
၁၅ဣသရေလ အမျိုးသား တို့သည် ငါ့ ထံမှ ထွက်၍ လမ်းလွဲ သောအခါ ၊ ငါ ၏သန့်ရှင်း ရာဌာနကို စောင့်နေသော လေဝိ အမျိုးဖြစ်သော ဇာဒုတ် သား ၊ ယဇ်ပုရောဟိတ် တို့သည် ငါ့ အမှု ကိုဆောင်ခြင်းငှါ ငါ့ ထံသို့ ချဉ်းကပ် ရကြ၏။ ငါ့ အား ဆီဥ နှင့် အသွေး ကို ပူဇော် ခြင်းငှါ အရှေ့ မှာရပ် ရကြမည်ဟု အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူ၏။
16 அவர்கள் மாத்திரமே என் பரிசுத்த இடத்திற்குள் வரவேண்டும். என்முன் பணிசெய்யவும், எனது பணியை நிறைவேற்றவும் அவர்கள் மட்டுமே என் மேஜையருகில் வரவேண்டும்.
၁၆ထိုသူ တို့သည် ငါ ၏သန့်ရှင်း ရာဌာနထဲသို့ ဝင် ၍ ငါ့ အမှု ကိုဆောင်ခြင်းငှါ ၊ ငါ့ စားပွဲ အနားသို့ ချဉ်းကပ် ၍ ငါ့ အမှု စောင့်ဖြစ်ရကြမည်။
17 “‘உள்முற்ற வாசலுக்குள் அவர்கள் வரும்போது அவர்கள் மென்பட்டு நூல் உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உள்முற்றநுழைவு வாசலிலோ அல்லது ஆலயத்துக்கு உட்புறத்திலோ ஊழியம் செய்யும்போது அவர்கள் கம்பளி உடைகளை உடுத்தக்கூடாது.
၁၇သူတို့သည် အတွင်း တန်တိုင်း တံခါး အတွင်း သို့ ဝင် သောအခါ ၊ ပိတ် အဝတ် ကိုသာ ဝတ် ရကြမည်။ အတွင်း တန်တိုင်း တံခါး အတွင်း၌ အမှု တော်ကိုဆောင်ရွက်စဉ် ၊ သိုးမွေး အဝတ်ကို မ ဝတ် ရကြ။
18 அவர்கள் தங்கள் தலைகளில் மென்பட்டு தலைப்பாகைகளையும், இடைகளில் மென்பட்டு உள்ளுடைகளையும் உடுத்திக்கொள்ளவேண்டும். வேர்வை உண்டாக்கக்கூடிய எதையும் இடுப்பில் அணியக்கூடாது.
၁၈ခေါင်း ပေါ်မှာ ပိတ် ဦးထုပ် ကို ဆောင်း ၍ ၊ ခါး ၌ ပိတ် ပေါင်းဘီ ကိုဝတ် ရကြမည်။ ချွေးထွက် စေသော အဝတ်ကို မ ဝတ် ရကြ။
19 அவர்கள் மக்கள் இருக்கும் வெளிமுற்றத்திற்குப் போகும்போது, அவர்கள் ஊழியத்தில் ஈடுபடுகையில் உடுத்தியிருந்த உடைகளைக் கழற்றி அவற்றைப் பரிசுத்த அறைகளில் வைத்துவிட்டு, வேறு உடைகளை உடுத்திக்கொள்ளவேண்டும். உடைகளைத் தொடுவதன் மூலமாக மக்கள் தாங்கள் பரிசுத்தமடைய முயற்சிக்கக்கூடாது என்பதற்காகவே இப்படிச் செய்யவேண்டும்.
၁၉လူ များရှိရာ ပြင် တန်တိုင်း သို့ ထွက်သွား သောအခါ ၊ အမှုတော်ကို ဆောင် စဉ်တွင်ဝတ်သောအဝတ် ကို ချွတ် ၍ ၊ သန့်ရှင်း သောအခန်း တို့၌ ထား ပြီးလျှင် ၊ အခြား သောအဝတ် ကိုဝတ် ရကြမည်။ အရင်အဝတ် ကိုဝတ်လျက် လူ များတို့ကို မ သန့်ရှင်း စေရကြ။
20 “‘அவர்கள் முழுதாக தலைகளைச் சவரம் செய்யவோ, தலைமயிரை நீளமாய் வளர்க்கவோ கூடாது. அவர்கள் தங்களுடைய தலைமயிரைக் கத்தரித்துக்கொள்ளவேண்டும்.
၂၀မိမိ တို့ဆံပင် ကိုလည်း မ ရိတ် ရ၊ မ ရှည် စေခြင်းငှါဖြတ် ရမည်။
21 ஆசாரியர்களில் யாரும் உள்முற்றத்தினுள் செல்லும்போது திராட்சை இரசம் அருந்தக்கூடாது.
၂၁ယဇ်ပုရောဟိတ် သည် အတွင်း တန်တိုင်း ထဲသို့ ဝင် သောအခါ စပျစ်ရည် ကိုမ သောက် ရ။
22 விதவைகளையோ அல்லது விவாகரத்துப் பெற்ற பெண்களையோ அவர்கள் திருமணம் செய்யக்கூடாது. இஸ்ரயேல் வம்சத்துக் கன்னிகைகளை அல்லது ஆசாரியர்களின் விதவைகளை மட்டுமே அவர்கள் திருமணம் செய்யலாம்.
၂၂မုတ်ဆိုးမ နှင့် မစုံဘက်ရ။ လင်ကွာ သောမိန်းမနှင့် မ စုံဘက် ရ။ ဣသရေလ အမျိုး အပျိုကညာ နှင့် သော်၎င်း၊ ယဇ်ပုရောဟိတ် ၏မယား ဖြစ် ဘူးသော မုတ်ဆိုးမ နှင့်သော်၎င်းစုံဘက် ရမည်။
23 அவர்கள் பரிசுத்தமானவற்றுக்கும் சாதாரணமானவற்றுக்கும் இடையிலான வித்தியாசத்தை என் மக்களுக்குக் போதிக்கவேண்டும். அசுத்தமானதையும் சுத்தமானதையும் வித்தியாசப்படுத்துவது எப்படி என்பதையும் காண்பிக்கவேண்டும்.
၂၃ငါ ၏လူ တို့သည် သန့်ရှင်း သောအရာ၊ မ သန့်ရှင်းသောအရာတို့ကို၎င်း၊ စင်ကြယ် သောအရာ၊ မ စင်ကြယ်သောအရာတို့ကို၎င်းပိုင်းခြား ၍သိစေခြင်းငှါသွန်သင် ရကြမည်။
24 “‘எந்தப் பிரச்சனைகளிலும் ஆசாரியர்கள் நீதிபதிகளாய்ப் பணிபுரிந்து அதை எனது சட்டதிட்டங்களுக்கேற்ப தீர்மானிக்கவேண்டும். அவர்கள் எனது சட்டங்களையும், நியமிக்கப்பட்டுள்ள எனது எல்லா பண்டிகைகளில் என் கட்டளைகளையும் கைக்கொள்ளவேண்டும். எனது ஓய்வுநாட்களையும் பரிசுத்தமாய்க் கடைப்பிடிக்கவேண்டும்.
၂၄တရားတွေ့ မှုကိုစီရင်လျှင်၊ ငါ ၏ဓမ္မသတ် အတိုင်း စီရင် ရကြမည်။ ငါ ၏ဓမ္မပွဲ တို့ကို ဆောင်ရွက်လျှင်၊ ငါ စီရင် ထုံးဖွဲ့ချက်တို့ကို၎င်း ၊ ငါ ၏ဥပုသ် နေ့တို့ကို၎င်းစောင့်ရှောက် ရကြမည်။
25 “‘ஒரு ஆசாரியன், இறந்துபோன ஒருவனுக்கு அருகில் செல்வதால் தன்னை அசுத்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. ஆனாலும் இறந்தது அவனுடைய தந்தை, தாய், மகன், மகள், சகோதரன் அல்லது விவாகமாகாத சகோதரியாக இருப்பின், அவன் அவ்வாறான அசுத்தத்துக்குள்ளாகலாம்.
၂၅အသေကောင် ကိုချဉ်း ၍ ကိုယ်ကိုမ ညစ်ညူး စေရ။ သို့ရာတွင် ၊ ကိုယ်မိ ဘ ၊ သား သမီး ၊ ညီအစ်ကို ၊ လင် မ နေ သောနှမ အတွက် ကိုယ်ကို ညစ်ညူး စေရသော အခွင့်ရှိ၏။
26 அவன் சுத்திகரிக்கப்பட்ட பின்னர் ஏழு நாட்கள் காத்திருக்கவேண்டும்.
၂၆သန့်ရှင်း ခြင်းကိုပြုပြီးမှ ခုနစ် ရက် နေ ရမည်။
27 அதன்பின் பரிசுத்த ஆலயத்தில் ஆராதனை செய்வதற்காக அவன் உள்முற்றத்தினுள் போகும் நாளிலே, அவன் தனக்காக ஒரு பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்று ஆண்டவராகிய யெகோவா அறிவிக்கிறார்.
၂၇သန့်ရှင်း ရာဌာန၌ အမှုတော်ကိုဆောင် ခြင်းငှါ အတွင်း တန်တိုင်း သန့်ရှင်း ရာဌာနထဲသို့ ဝင် သောနေ့ တွင် ၊ အပြစ် ဖြေရာယဇ်ကို ပူဇော် ရမည်ဟု အရှင် ထာဝရဘုရား မိန့် တော်မူ၏။
28 “‘ஆசாரியர்களின் உரிமைச்சொத்தாய் நான் மட்டுமே இருக்கவேண்டும். எனவே இஸ்ரயேலில் நீங்கள் அவர்களுக்குச் சொத்துக்களைக் கொடுக்கவேண்டாம். நானே அவர்கள் சொத்தாயிருப்பேன்.
၂၈ထိုအရာသည် ယဇ်ပုရောဟိတ် တို့၏ အမွေ ဥစ္စာ ဖြစ် ရမည်။ ငါ သည်သူ တို့အမွေ ဥစ္စာဖြစ်၏။ ဣသရေလ ပြည်၌ သူ တို့အား အမွေ မြေကို မ ပေး ရ။ ငါ သည်သူ တို့၏ အမွေ မြေဖြစ်၏။
29 அவர்கள் தானிய காணிக்கைகளையும், பாவநிவாரண காணிக்கைகளையும், குற்றநிவாரண காணிக்கைகளையும் சாப்பிடுவார்கள். அத்துடன் இஸ்ரயேலில் யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்டவை எல்லாம் அவர்களுக்குரியதாகும்.
၂၉ပူဇော် သောမုန့်ညက်နှင့် အပြစ် ဖြေရာယဇ်၊ ဒုစရိုက် ဖြေရာယဇ်ကို စား ရကြမည်။ ဣသရေလ အမျိုးသားကျိန်ဆို ၍ ပူဇော်သမျှ တို့ကိုလည်း သိမ်းယူ ရကြမည်။
30 முதற்பலன்களில் சிறந்தவைகளும் உங்களுடைய விசேஷ கொடைகளும் ஆசாரியருக்கு உரியதாகும். அரைத்தமாவின் உணவின் முதற்பங்கை நீங்கள் அவர்களுக்குக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அது உங்கள் வீட்டாருக்கு ஒரு ஆசீர்வாதமாய் அமையும்.
၃၀အဦး သီးသောအသီးအမျိုးမျိုး နှင့် ၊ ချီးမြှောက်ရာ ပူဇော်သက္ကာ အလုံးစုံ တို့ကို ယဇ်ပုရောဟိတ် သည် သိမ်းယူ ရမည်။ သူသည်သင့် အိမ် ၌ ကောင်းကြီး မင်္ဂလာကို သက်ရောက် စေခြင်းငှါ ၊ အဦး နယ်သော မုန့်စိမ်း ကို သူ ၌ လှူ ရမည်။
31 ஆசாரியர்கள் செத்துக்கிடந்த பறவையையோ மிருகத்தையோ சாப்பிடப்கூடாது; அல்லது மிருகங்களால் கொல்லப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது.
၃၁ငှက် ဖြစ်စေ ၊ သား ဖြစ်စေ၊ အလိုလို သေသော အကောင်၊ သားရဲ ကိုက်၍ သေသောအကောင်ကို ယဇ်ပုရောဟိတ် မ စား ရ။

< எசேக்கியேல் 44 >