< யாத்திராகமம் 40 >

1 பின்பு யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
Домнул а ворбит луй Мойсе ши а зис:
2 “நீ சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தை, முதலாம் மாதம், முதலாம் நாளில் நிறுவவேண்டும்.
„Ын зиуа ынтый а луний ынтый, сэ ынтинзь локашул кортулуй ынтылнирий.
3 அதில் சாட்சிப்பெட்டியை வைத்து அதைத் திரையினால் மறைக்கவேண்டும்.
Сэ пуй ын ел кивотул мэртурией ши, ынаинтя кивотулуй, сэ атырнь пердяуа динэунтру.
4 மேஜையைக் கொண்டுவந்து, அதற்குரியவற்றை மேஜையின்மேல் வைக்கவேண்டும். அதன்பின் குத்துவிளக்குகளைக் கொண்டுவந்து அதன் அகல்விளக்குகளை வைக்கவேண்டும்.
Апой сэ адучь маса ши сэ пуй пе еа челе рындуите. Дупэ ачея, сэ адучь сфешникул ши сэ-й ашезь канделеле.
5 தங்கத் தூபபீடத்தைச் சாட்சிப்பெட்டியின் முன் வைத்து, இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைப்போட வேண்டும்.
Алтарул дин аур пентру тэмые сэ-л ашезь ынаинтя кивотулуй мэртурией ши сэ атырнь пердяуа ла уша кортулуй.
6 “பின்பு தகன பலிபீடத்தை சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின், வாசலுக்கு முன் வைக்கவேண்டும்.
Сэ ашезь алтарул пентру ардериле-де-тот ынаинтя уший локашулуй кортулуй ынтылнирий.
7 தொட்டியை சபைக் கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் வைத்து, அதில் தண்ணீரை ஊற்றவேண்டும்.
Лигянул сэ-л ашезь ынтре кортул ынтылнирий ши алтар ши сэ пуй апэ ын ел.
8 அவற்றைச் சுற்றிலும் முற்றத்தை அமைத்து முற்றத்தின் வாசலுக்குத் திரையைப்போட வேண்டும்.
Сэ ашезь куртя де жур ымпрежур ши сэ пуй пердяуа ла поарта курций.
9 “பின்பு அபிஷேக எண்ணெயை எடுத்து, இறைசமுகக் கூடாரத்தையும், அங்குள்ள எல்லாவற்றையும் அபிஷேகம்பண்ணு. அதையும் அதன் பணிமுட்டுகளையும் அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது அது பரிசுத்தமாயிருக்கும்.
Сэ ей унтделемнул пентру унӂере, сэ унӂь ку ел кортул ши тот че купринде ел ши сэ-л сфинцешть, ку тоате унелтеле луй, ши ва фи сфынт.
10 பின்பு தகன பலிபீடத்தையும், அதன் பாத்திரங்களையும் அபிஷேகம் செய்து, பீடத்தை அர்ப்பணம் செய்யவேண்டும். அப்பொழுது பலிபீடம் மகா பரிசுத்தமுள்ளதாயிருக்கும்.
Сэ унӂь алтарул пентру ардериле-де-тот ши тоате унелтеле луй ши сэ сфинцешть алтарул, ши алтарул ва фи прясфынт.
11 பின்பு தொட்டியையும், அதன் கால்களையும் அபிஷேகம்பண்ணி, அவற்றை அர்ப்பணம் செய்யவேண்டும்.
Сэ унӂь лигянул ку пичорул луй ши сэ-л сфинцешть.
12 “அதன்பின்பு ஆரோனையும், அவன் மகன்களையும் சபைக் கூடாரத்தின் நுழைவுவாசலில் கொண்டுவந்து, அவர்களை தண்ணீரால் கழுவவேண்டும்.
Апой сэ адучь пе Аарон ши пе фиий луй ла уша кортулуй ынтылнирий ши сэ-й спель ку апэ.
13 ஆரோனுக்குப் பரிசுத்த உடைகளை உடுத்தி, அவன் ஆசாரியராக எனக்குப் பணிசெய்வதற்கு அவனை அபிஷேகம்பண்ணி, அர்ப்பணம் செய்யவேண்டும்.
Сэ ымбрачь пе Аарон ку вешминтеле сфинте, сэ-л унӂь ши сэ-л сфинцешть, ка сэ-Мь факэ служба де преот.
14 அவனுடைய மகன்களையும் அழைத்துவந்து, அவர்களுக்கு உள் அங்கிகளை உடுத்து.
Сэ кемь ши пе фиий луй, сэ-й ымбрачь ку туничиле
15 அவர்கள் எனக்கு ஆசாரியப் பணிசெய்யும்படி, அவர்களுடைய தகப்பனை அபிஷேகம் செய்ததுபோலவே அவர்களையும் அபிஷேகம் செய்யவேண்டும். அவர்கள் பெற்ற இந்த, ‘அபிஷேகம்’ தலைமுறைதோறும் நீடித்திருக்கும் ஆசாரியத்துவத்திற்கான அபிஷேகமாய் இருக்கும்.”
ши сэ-й унӂь кум ай унс пе татэл лор, ка сэ-Мь факэ служба де преоць. Ын путеря ачестей унӂерь, ей вор авя пуруря дрептул преоцией принтре урмаший лор.”
16 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே எல்லாவற்றையும் செய்தான்.
Мойсе а фэкут ынтокмай кум ый порунчисе Домнул; аша а фэкут.
17 இவ்விதமாக எகிப்திலிருந்து புறப்பட்ட இரண்டாம் வருடம் முதலாம் மாதம் முதல் நாளன்று, இறைசமுகக் கூடாரம் அமைக்கப்பட்டது.
Ын зиуа ынтый а луний ынтый а анулуй ал дойля, кортул ера ашезат.
18 மோசே இறைசமுகக் கூடாரத்தை அமைத்தபோது, அதன் அடித்தளங்களை அதனிடங்களில் பொருத்தி சட்டப்பலகைகளை நிறுத்தி, அதன் குறுக்குச் சட்டங்களையும் மாட்டி, அதன் கம்பங்களை நிறுத்தினான்.
Мойсе а ашезат кортул; й-а пус пичоареле, а ашезат скындуриле ши вериӂиле ши а ридикат стылпий.
19 யெகோவா கட்டளையிட்டபடியே மோசே இறைசமுகக் கூடாரத்திற்கு மேலாகக் கூடாரத்தை விரித்து, கூடாரத்தின்மேல் மூடுதிரையைப் போட்டான்.
А ынтинс ынвелитоаря каре служя де акопериш дясупра кортулуй ши пе дясупра а пус ынвелитоаря акоперишулуй кортулуй, кум порунчисе луй Мойсе Домнул.
20 பின்பு சாட்சிக் கற்பலகைகளை எடுத்து அவற்றைப் பெட்டிக்குள் வைத்தான். பின்பு அதைத் தூக்கும் கம்புகளைப் பெட்டியில் மாட்டி, கிருபாசனத்தைப் பெட்டியின் மேலே வைத்தான்.
Апой а луат мэртурия ши а пус-о ын кивот; а пус друӂий ла кивот ши а ашезат капакул испэширий дясупра кивотулуй.
21 இவ்வாறு மோசே யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, பெட்டியை இறைசமுகக் கூடாரத்திற்குள் கொண்டுவந்து, மூடுதிரையைத் தொங்கவிட்டு சாட்சிப்பெட்டியை மறைத்தான்.
А адус кивотул ын корт; а атырнат пердяуа деспэрцитоаре ынаинтя луй ши а акоперит астфел кивотул мэртурией, кум порунчисе луй Мойсе Домнул.
22 அதன்பின் மோசே மேஜையை சபைக் கூடாரத்தில் திரைக்கு வெளியே, இறைசமுகக் கூடாரத்தின் வடக்குத் திசையில் வைத்தான்.
А ашезат маса ын кортул ынтылнирий, ын партя де мязэноапте а кортулуй, динкоаче де пердяуа динэунтру;
23 யெகோவாவின் கட்டளைப்படியே யெகோவாவின் முன்பாக மேஜையில் அப்பங்களை வைத்தான்.
ши а пус пе еа пыниле ынаинтя Домнулуй, кум порунчисе луй Мойсе Домнул.
24 பின்பு குத்துவிளக்கை சபைக் கூடாரத்தில், மேஜைக்கு எதிரே இறைசமுகக் கூடாரத்தின் தெற்கு பக்கத்தில் வைத்தான்.
Апой а ашезат сфешникул ын кортул ынтылнирий, ын фаца месей, ын партя де мязэзи а кортулуй;
25 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே விளக்குகளை யெகோவா முன்னிலையில் வைத்தான்.
ши й-а ашезат канделеле ынаинтя Домнулуй, кум порунчисе луй Мойсе Домнул.
26 தங்கப் பலிபீடத்தைச் சபைக் கூடாரத்தின் திரைக்கு முன்னால் வைத்தான்.
Апой а ашезат алтарул де аур ын кортул ынтылнирий ын фаца перделей динэунтру,
27 யெகோவா தனக்குக் கட்டளையிட்டபடியே, மோசே நறுமணத்தூளை அதன்மேல் எரித்தான்.
а арс пе ел тэмые мироситоаре, кум порунчисе луй Мойсе Домнул.
28 இறைசமுகக் கூடாரத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான்.
А ашезат пердяуа ла уша кортулуй.
29 யெகோவா அவனுக்குக் கட்டளையிட்டபடியே, சபைக் கூடாரமான இறைசமுகக் கூடாரத்தின் நுழைவு வாசலுக்கு அருகே தகன பலிபீடத்தை வைத்து, அதன்மேல் தகன காணிக்கையையும், தானியக் காணிக்கையையும் செலுத்தினான்.
А ашезат алтарул пентру ардериле-де-тот ла уша локашулуй кортулуй ынтылнирий ши а адус пе ел ардеря-де-тот ши жертфа де мынкаре, кум порунчисе луй Мойсе Домнул.
30 பின்பு சபைக் கூடாரத்திற்கும் பீடத்திற்கும் இடையில் தொட்டியை வைத்து, கழுவுவதற்கு அதற்குள் தண்ணீரை ஊற்றினான்.
А ашезат лигянул ынтре кортул ынтылнирий ши алтар ши а пус ын ел апэ пентру спэлат.
31 மோசேயும், ஆரோனும், அவன் மகன்களும், தங்கள் கைகளையும், கால்களையும் கழுவுவதற்கு அதை உபயோகித்தார்கள்.
Мойсе, Аарон ши фиий луй шь-ау спэлат мыниле ши пичоареле ын ел;
32 யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் சபைக் கூடாரத்திற்குள் போகும்போதும் அல்லது பீடத்திற்கு அருகே வரும்போதும் தங்களைக் கழுவிக்கொள்வார்கள்.
кынд интрау ын кортул ынтылнирий ши се апропияу де алтар, се спэлау, кум порунчисе луй Мойсе Домнул.
33 பின்பு மோசே இறைசமுகக் கூடாரத்தையும், பலிபீடத்தையும் சுற்றி முற்றத்தை அமைத்து, முற்றத்தின் வாசலில் திரையைத் தொங்கவிட்டான். இவ்வாறு மோசே எல்லா வேலைகளையும் செய்துமுடித்தான்.
Апой а ридикат куртя ымпрежурул кортулуй ши алтарулуй ши а пус пердяуа ла поарта курций. Астфел а испрэвит Мойсе лукраря.
34 அப்பொழுது சபைக் கூடாரத்தை ஒரு மேகம் மூடியது. யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியது.
Атунч, норул а акоперит кортул ынтылнирий ши слава Домнулуй а умплут кортул.
35 மேகம் சபைக் கூடாரத்தின்மேல் தங்கியிருந்தபடியாலும், யெகோவாவின் மகிமை இறைசமுகக் கூடாரத்தை நிரப்பியிருந்தபடியாலும் மோசேயினால் சபைக் கூடாரத்திற்குள் போகமுடியாதிருந்தது.
Мойсе ну путя сэ интре ын кортул ынтылнирий, пентру кэ норул стэтя дясупра луй ши слава Домнулуй умпля кортул.
36 இஸ்ரயேலரின் பயணங்கள் எல்லாவற்றிலும், இறைசமுகக் கூடாரத்திற்கு மேலுள்ள மேகம் மேலே எழும்பும்போது, அவர்கள் புறப்படுவார்கள்.
Кыт ау цинут кэлэторииле лор, копиий луй Исраел порняу нумай кынд се ридика норул дясупра кортулуй.
37 மேகம் மேலே எழும்பாதிருந்தால், அது மேலே எழும்பும்வரை புறப்படாதிருப்பார்கள்.
Ши кынд ну се ридика норул, ну порняу пынэ че ну се ридика.
38 இஸ்ரயேல் மக்கள் பயணம் செய்த காலமெல்லாம் இஸ்ரயேல் குடும்பத்தாரின் பார்வையில் யெகோவாவின் மேகம் பகல் வேளையில் இறைசமுகக் கூடாரத்தின் மேலாகக் காணப்பட்டது. இரவுவேளையில் அந்த மேகத்தில் நெருப்பும் இருக்கக் காணப்பட்டது.
Норул Домнулуй ера дясупра кортулуй зиуа, яр ноаптя ера ун фок ынаинтя ынтреӂий касе а луй Исраел, ын тимпул тутурор кэлэториилор лор.

< யாத்திராகமம் 40 >