< யாத்திராகமம் 27 >

1 “சித்தீம் மரத்தினால் மூன்று முழம் உயரமான ஒரு பலிபீடத்தைச் செய்யவேண்டும். அது ஐந்து முழம் நீளமும், ஐந்து முழம் அகலமுமுள்ள சதுரமாய் இருக்கவேண்டும்.
Алтарул сэ-л фачь дин лемн де салкым; лунӂимя луй сэ фие де чинч коць ши лэцимя луй, де чинч коць. Алтарул сэ фие ын патру колцурь ши ынэлцимя луй сэ фие де чинч коць.
2 அதன் நான்கு மூலைகளிலும் மூலைக்கு ஒவ்வொன்றாக நான்கு கொம்புகளைச் செய்யவேண்டும். கொம்புகளும், பலிபீடமும் ஒரே அமைப்பாய் இருக்கவேண்டும். பலிபீடத்தை வெண்கலத் தகட்டினால் மூடவேண்டும்.
Ын челе патру колцурь, сэ фачь ниште коарне каре сэ фие динтр-о букатэ ку алтарул ши сэ-л акоперь ку арамэ.
3 அதற்குரிய எல்லா பாத்திரங்களையும், வெண்கலத்தினாலேயே செய்யவேண்டும். சாம்பலை அகற்றுவதற்கான பானைகளும், சாம்பல் அள்ளும் வாரிகளும், தெளிப்பதற்கான கிண்ணங்களும், இறைச்சியைக் குத்தும் முட்கரண்டிகளும், நெருப்புச் சட்டிகளும் வெண்கலத்தால் செய்யப்படவேண்டும்.
Сэ фачь пентру алтар оале де скос ченуша, лопець, лигене, фуркулице ши тигэй пентру кэрбунь; тоате унелтеле луй сэ ле фачь де арамэ.
4 வெண்கலப் பின்னல் வேலைப்பாடான ஒரு கிராதியைச் செய்து, அதன் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையத்தை அமைக்கவேண்டும்.
Сэ фачь алтарулуй ун грэтар де арамэ, ын кип де реця, ши сэ пуй патру вериӂь де арамэ ла челе патру колцурь але рецелей.
5 பலிபீடத்தின் விளிம்பின் கீழ் அந்தக் கிராதியை வை. அது பலிபீடத்தின் அடியிலிருந்து பாதி உயரத்தில் இருக்கும்.
Грэтарул сэ-л пуй суб стряшина алтарулуй, ынчепынд де жос, аша кэ грэтарул сэ винэ пынэ ла жумэтатя алтарулуй.
6 சித்தீம் மரத்தினால் பலிபீடத்திற்குத் தண்டுகளைச் செய்து, அவற்றை வெண்கலத் தகடுகளால் மூடவேண்டும்.
Сэ фачь апой ниште друӂь пентру алтар, друӂь де лемн де салкым, ши сэ-й акоперь ку арамэ.
7 பலிபீடத்தைக் கொண்டுசெல்லும்போது, அதன் இரண்டு பக்கங்களிலும் இருக்கத்தக்கதாக அந்தத் தண்டுகள் வளையங்களிலே மாட்டப்படவேண்டும்.
Сэ вырь друӂий ын вериӂь, ши друӂий сэ фие де амындоуэ пэрциле алтарулуй кынд ыл вор пурта.
8 பலிபீடத்தை மரப்பலகைகளினால் செய்யவேண்டும். அதன் உட்புறம் இடைவெளிவிட்டு வெறுமையாய் இருக்கவேண்டும். உனக்கு மலையில் காண்பிக்கப்பட்டபடியே அது செய்யப்படவேண்டும்.
Сэ-л фачь дин скындурь ши гол пе динэунтру. Сэ фие фэкут аша кум ци с-а арэтат пе мунте.
9 “இறைசமுகக் கூடாரத்திற்கு ஒரு முற்றத்தை அமைக்கவேண்டும். முற்றத்தின் தெற்குப் பக்கம் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். திரித்த மென்பட்டு நூலினால் நெய்யப்பட்ட திரைகள் அங்கு இடப்பட வேண்டும்.
Куртя кортулуй с-о фачь астфел. Ынспре партя де мязэзи, пентру алкэтуиря курций, сэ фие ниште пынзе де ин субцире, рэсучит, пе о лунӂиме де о сутэ де коць пентру ачастэ примэ латурэ,
10 அங்கே இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
ку доуэзечь де стылпь, каре сэ стя пе доуэзечь де пичоаре де арамэ; кырлиӂеле стылпилор ши бецеле лор де легэтурэ сэ фие де арӂинт.
11 அப்படியே வடக்குப் பக்கமும் நூறுமுழம் நீளமாய் இருக்கவேண்டும். அங்கேயும் திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் இருபது கம்பங்களும், அவற்றுக்கான இருபது வெண்கல அடித்தளங்களும் அமைக்கப்பட வேண்டும். அந்தக் கம்பங்களில் வெள்ளிக் கொக்கிகளும், பூண்களும் இருக்கவேண்டும்.
Ынспре партя де мязэноапте, сэ фие, де асеменя, ниште пынзе пе о лунӂиме де о сутэ де коць, ку доуэзечь де стылпь ши ку челе доуэзечь де пичоаре але лор де арамэ; кырлиӂеле стылпилор ши бецеле лор де легэтурэ сэ фие де арӂинт.
12 “முற்றத்தின் மேற்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும். அங்கே பத்து கம்பங்களுடனும், பத்து அடித்தளங்களுடனும் திரைகள் இருக்கவேண்டும்.
Ынспре партя де апус, сэ фие пентру лэцимя курций ниште пынзе де чинчзечь де коць, ку зече стылпь ши челе зече пичоаре але лор.
13 சூரியன் உதிக்கும் திசையை நோக்கியிருக்கிற முற்றத்தின் கிழக்குப் பக்கமும் ஐம்பது முழம் அகலமாய் இருக்கவேண்டும்.
Ынспре партя де рэсэрит, пе лынгэ чей чинчзечь де коць пентру лэцимя курций,
14 வாசலின் ஒரு பக்கத்தில் பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றுடன் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
сэ май фие чинчспрезече коць де пынзэ пентру о арипэ, ку трей стылпь ши челе трей пичоаре але лор,
15 வாசலின் மறுபக்கத்திலும், பதினைந்து முழம் நீளமான திரைகள் இருக்கவேண்டும். அவற்றிற்கும் மூன்று கம்பங்களும், மூன்று அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
ши чинчспрезече коць де пынзэ пентру а доуа арипэ, ку трей стылпь ши челе трей пичоаре але лор.
16 “முற்றத்தின் நுழைவு வாசலுக்கு இருபது முழம் நீளமான ஒரு திரையைச் செய்யவேண்டும். நீலநூல், ஊதாநூல், கருஞ்சிவப்புநூல், திரிக்கப்பட்ட மென்பட்டு ஆகியவற்றைக்கொண்டு சித்திரத்தையற்காரனின் வேலையாய் அது செய்யப்படவேண்டும். நான்கு கம்பங்களும், நான்கு அடித்தளங்களும் அதற்கு இருக்கவேண்டும்.
Пентру поарта курций кортулуй, сэ фие о пердя латэ де доуэзечь де коць, албастрэ, пурпурие ши кэрэмизие ши де ин субцире рэсучит, лукратэ ла гергеф, ку патру стылпь ши челе патру пичоаре але лор.
17 முற்றத்தைச் சுற்றியுள்ள கம்பங்கள் எல்லாம் வெள்ளிப் பூண்களும், கொக்கிகளும் வெண்கல அடித்தளங்களும் உடையதாய் இருக்கவேண்டும்.
Тоць стылпий курций де жур ымпрежур сэ айбэ беце де легэтурэ де арӂинт, кырлиӂе де арӂинт ши пичоаре де арамэ.
18 முற்றத்தின் நீளம் நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்கவேண்டும். அதைச் சுற்றிலும் திரித்த மென்பட்டினாலான ஐந்து முழம் உயரமான திரைகளும் அவற்றின் வெண்கல அடித்தளங்களும் இருக்கவேண்டும்.
Лунӂимя курций сэ фие де о сутэ де коць; лэцимя, де чинчзечь де коць де фиекаре парте ши ынэлцимя, де чинч коць; пынзеле сэ фие де ин субцире рэсучит, яр пичоареле сэ фие де арамэ.
19 இறைசமுகக் கூடாரத்திற்கான முளைகளும், முற்றத்திற்கான முளைகளும், எல்லா உபயோகத்திற்காகவும் அங்கு பயன்படுத்தப்படும் எல்லா பொருட்களும் வெண்கலத்தினாலேயே செய்யப்படவேண்டும்.
Тоате унелтеле рындуите пентру служба кортулуй, тоць цэруший луй ши тоць цэруший курций сэ фие де арамэ.
20 “விளக்குகள் தொடர்ந்து எரிந்து ஒளி கொடுக்கும்படியாக, ஒலிவ விதைகளை இடித்துப் பிழிந்தெடுத்த தெளிந்த எண்ணெயைக் கொண்டுவரும்படி இஸ்ரயேலருக்குக் கட்டளையிடு.
Сэ порунчешть копиилор луй Исраел сэ-ць адукэ пентру сфешник унтделемн курат де мэслине, фэрэ дрождий, ка сэ ардэ ын канделе некурмат.
21 சபைக் கூடாரத்தில் சாட்சிப்பெட்டியின் முன்னால் இருக்கும் திரைக்கு வெளியே, ஆரோனும் அவன் மகன்களும் விளக்குகளை மாலைவேளை தொடங்கி விடியும்வரை யெகோவாவுக்கு முன்னால் எரிந்துகொண்டிருக்கச் செய்யவேண்டும். இது தலைமுறைதோறும் இஸ்ரயேலர் மத்தியில் நிரந்தர நியமமாய் இருக்கும்.
Аарон ши фиий сэй сэ-л прегэтяскэ ын кортул ынтылнирий, динкоаче де пердяуа каре есте ынаинтя кивотулуй мэртурией, пентру ка сэ ардэ де сяра пынэ диминяца ынаинтя Домнулуй. Ачаста есте о леӂе вешникэ пентру урмаший лор ши пе каре копиий луй Исраел вор требуи с-о цинэ.

< யாத்திராகமம் 27 >