< யாத்திராகமம் 23 >

1 “பொய் வதந்திகளைப் பரப்பவேண்டாம். தீயநோக்கமுள்ள சாட்சியாய் இருந்து கொடியவனுக்கு உதவவேண்டாம்.
Nang ni laithoe e kamthang hah patuen na pathang mahoeh, na dei mahoeh. Tamikalanhoehnaw hoi lungkânging teh kapanuekkhaikung lah na awm mahoeh.
2 “பிழையானதைச் செய்யும் மக்கள் கூட்டத்தைப் பின்பற்றவேண்டாம். ஒரு வழக்கில் நீங்கள் சாட்சி கொடுக்கும்போது, அதிகமான மக்களுக்கு சார்பாக இருந்து நீதியைப் புரட்டவேண்டாம்.
Tamikathoutnaw e hnukkâbang mahoeh. Lawkceng navah tami kalen kambawng laihoi lamthung phensak hanlah na dei mahoeh.
3 ஒரு ஏழையின் வழக்கிலே அவனுக்கு பட்சபாதம் காட்டவேண்டாம்.
Mathoe koehai kapeknae na tawn mahoeh.
4 “உங்கள் பகைவனுடைய மாட்டையோ அல்லது கழுதையையோ வழிதப்பி திரிகிறதை நீங்கள் காணநேரிட்டால், அதைத் திரும்பவும் அவனிடம் கொண்டுபோய்விடத் தவறவேண்டாம்.
Na taran e marang maito lam ka hmang e na hmawt pawiteh bout na thak pouh awh han.
5 உங்களை வெறுக்கிறவனுடைய கழுதை சுமையோடே விழுந்துகிடக்கக் கண்டால், அதை அங்கேயே விட்டுவிட்டுப் போகவேண்டாம். அவனுக்கு உதவிசெய்யவும் தவறவேண்டாம்.
Nang na ka hmawt ngai hoeh e tami e la hah a hno ni a ratet e na hmawt pawiteh, na kabawp ngai hoeh hai na kabawp han.
6 “உங்களிடத்தில் இருக்கும் ஏழை மக்களுக்கு அவர்களுடைய வழக்கில் நீதிவழங்க மறுக்கவேண்டாம்.
Mathoe ni nang na oun nah kahawi hoeh lah ahni lawk na ceng mahoeh.
7 பொய்க்குற்றச்சாட்டுடன் சம்பந்தப்படவேண்டாம். குற்றமற்றவனையும், உண்மையுள்ளவனையும் கொலைசெய்ய வேண்டாம். ஏனெனில் நான் குற்றவாளியைத் தண்டியாமல் விடமாட்டேன்.
Kahmanhoeh e hno na roun han. Yon ka tawn hoeh e tamikalan hah na thet mahoeh. Bangkongtetpawiteh, tamikathout teh kai ni ka ngaithoum mahoeh.
8 “இலஞ்சம் வாங்கவேண்டாம், இலஞ்சம் பார்வையுள்ளவர்களைக் குருடராக்கி, நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுகிறது.
Nang ni tadawngnae na cat mahoeh. Tadawngnae ni tami lungkaangnaw hah mit a dawn sak teh tami kalannaw lawk a phen sak.
9 “பிறநாட்டினனை ஒடுக்கவேண்டாம்; பிறநாட்டினராய் இருப்பது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமே. ஏனெனில், நீங்களும் எகிப்தில் பிறநாட்டினராய் இருந்தீர்களே.
Ram alouke imyin hah rektap awh hanh. Nangmouh teh Izip ram dawk imyin lah ouk na o awh toung dawkvah, imyin ni a tawn e lungthin hah na panue awh.
10 “நீங்கள் ஆறு வருடங்களுக்கு உங்கள் வயல்களை விதைத்து விளைச்சலை அறுவடை செய்யவேண்டும்.
Kum taruk touh thung laikawk na tawk vaiteh cakang na pâtung awh han.
11 ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள்.
A kum sari nah laikawk tawk laipalah na ta han. Hottelah, na sak pawiteh, mathoenaw ni a ca thai awh van han. Kacawie naw hai saringnaw ni a ca awh han. Hot patetvanlah, misur takha, olive takha hai na sak awh han.
12 “நீங்கள் ஆறு நாட்களுக்கு உங்கள் வேலையைச் செய்யுங்கள். ஏழாம்நாளோ வேலைசெய்யவேண்டாம். அதனால் உங்கள் எருதும், கழுதையும் இளைப்பாறட்டும். பிறநாட்டினனும் உங்கள் வீட்டில் பிறந்த அடிமையும் இளைப்பாறி, புதுபெலன் பெறட்டும்.
Hnin taruk touh thung thaw na tawk awh han. A hnin sari nah na kâhat awh han. Hottelah, na sak pawiteh, na maito hoi lanaw ni kâhatnae tueng a tawn awh han. Na canaw, imyinnaw hai tha a dam awh han.
13 “நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் செய்யக் கவனமாயிருங்கள். பிற நாட்டு தெய்வங்களின் பெயரைச்சொல்லிக் கூப்பிடவேண்டாம். அவற்றின் பெயரை உங்கள் உதடுகளினால் உச்சரிக்கவும் வேண்டாம்.
Ka dei e lawknaw pueng hah pâkuem awh. Alouke cathut min hah dei awh hanh. Na pahni dawk hoi dei e lawk ayâ ni thai hanh naseh.
14 “வருடத்தில் மூன்றுமுறை நீங்கள் எனக்குப் பண்டிகை கொண்டாடவேண்டும்.
Kum touh dawk vai thum touh kai hanlah pawi na sak awh han.
15 “முதலாவதாக புளிப்பில்லாத அப்பப்பண்டிகையைக் கொண்டாடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்டபடி, ஏழுநாட்களுக்கு புளிப்பில்லாத அப்பத்தைச் சாப்பிடுங்கள். ஆபீப் மாதத்தில், குறிக்கப்பட்ட காலத்தில் இதைச் செய்யுங்கள். ஏனெனில் அந்த மாதத்தில்தான் நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வெளியேவந்தீர்கள். “ஒருவரும் வெறுங்கையுடன் என்முன் வரக்கூடாது.
Tonphuenhoehe vaiyei pawi na sak awh han. Kâ na poe tangcoung e patetlah hnin sari touh thung tonphuenhoehe na ca awh han. Bangkongtetpawiteh, hote thapa dawk nangmouh teh Izip ram hoi na tâco awh. Hote pawi na sak awh navah apihai kai koe a kuthrawng hoi tho hanh naseh.
16 “நீங்கள் விதைத்த உங்கள் வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு, அறுவடைப் பண்டிகையைக் கொண்டாடுங்கள். “பின்பு ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், உங்கள் வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்பின் பண்டிகையைக் கொண்டாடுங்கள்.
Laikawk tawk teh cang a han nah, cang takhawknae thoseh, cakang koung kuem hoi kum abaw nah, cavanca pawi thoseh na sak awh han.
17 “இவ்வாறாக வருடத்தில் மூன்றுமுறை எல்லா ஆண்களும் ஆண்டவராகிய யெகோவா முன்பாக வரவேண்டும்.
Nangmouh thung dawk tongpa pueng teh kum touh dawk vai thum touh Bawipa Jehovah e hmalah minhmai na patue awh han.
18 “பலியின் இரத்தத்தை புளிப்பூட்டப்பட்ட எதனுடனும் சேர்த்து எனக்குச் செலுத்தவேண்டாம். “எனது பண்டிகைக் காணிக்கைகளின் கொழுப்பை மறுநாள் காலைவரை பலியிடாமல் வைத்திருக்கக்கூடாது.
Kai e sathei e thi hah ton phuen e vaiyei kalawt laihoi na poe mahoeh. Kai e sathei e athaw hai amom totouh na tat awh mahoeh.
19 “உங்கள் நிலத்திலுள்ள முதற்பலன்களில் சிறந்தவற்றையே உங்கள் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவர வேண்டும். “வெள்ளாட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கவேண்டாம்.
Na law dawk e a pawhik kahawi poung e aluepaw hah na BAWIPA Cathut e im dawk na thokhai awh han. Hmaeca hah a manu e sanutui hoi na thawng mahoeh.
20 “பாருங்கள், வழியெல்லாம் உங்களைப் பாதுகாத்து நான் ஆயத்தப்படுத்தியிருக்கிற இடத்திற்கு உங்களைக் கொண்டுவருவதற்காக, நான் உங்களுக்கு முன்னால் ஒரு தூதனை அனுப்புகிறேன்.
Khenhaw! lam vah nang na ring vaiteh, ka rakueng e hmuen koe hrawi hanelah na hmalah kalvantami ka patoun han.
21 அவர் சொல்வதை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு விரோதமாகக் கலகம் செய்யவேண்டாம். ஏனெனில் என் பெயர் அவரில் இருப்பதால் உங்கள் கலகத்தை அவர் மன்னிக்கமாட்டார்.
Hote kalvantami hah barinae tawn. A lawk hah ngai pouh. A kâ ek hanh. Kâ na tapoenae hah ahni ni na ngaithoum awh mahoeh. Kai e ka min teh ahni dawk ao.
22 அவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்டு, நான் சொல்வதையெல்லாம் செய்வீர்களானால், நான் உங்கள் பகைவர்களுக்குப் பகைவராய் இருப்பேன். உங்களை எதிர்ப்பவர்களை நானும் எதிர்ப்பேன்.
Nang ni atangcalah a lawk na ngai teh, kaie kâlawk patetlah na sak pawiteh, nange tarannaw hah ka taran van han. Nang kangangnaw hah kai ni ka ngang van han.
23 என் தூதன் உங்களுக்கு முன்சென்று, எமோரியர், ஏத்தியர், பெரிசியர் கானானியர், ஏவியர், எபூசியர் வாழும் இடத்திற்கு உங்களைக் கொண்டுபோவார். நானும் அவர்களை அழித்தொழிப்பேன்.
Kaie kalvantami ni na hmalah a cei vaiteh Amor tami, Hit tami, Periz tami, Kanaan tami, Hiv tami hoi Jubusitnaw onae hmuen koe na hrawi awh vaiteh, ahnimouh teh koung ka pâlei han.
24 நீங்கள் அவர்களுடைய தெய்வங்களை வணங்கவோ, வழிபடவோ, அவர்களின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றவோ வேண்டாம். நீங்கள் அவற்றை அழித்து அவர்களின் தெய்வச்சிலைகளையும் துண்டுகளாக நொறுக்கவேண்டும்.
Ahnimae cathut hah na bawk awh mahoeh. Ahnimae bawknae patet lahai na sak awh mahoeh. Koung na raphoe awh vaiteh kutsak cathutnaw hai phetrasei lah na dei pouh han.
25 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவையே வழிபடுங்கள், அவருடைய ஆசீர்வாதம் உங்கள் உணவிலும், தண்ணீரிலும் இருக்கும். உங்களிடமிருந்து நோயை நீக்கிவிடுவேன்.
Nangmae BAWIPA Cathut hah na bawk awh han. Na vaiyei thoseh, tui thoseh yawhawinae a poe han. Lacik hai nange nathung hoi a takhoe han.
26 உங்கள் நாட்டில் ஒருவரும் கருச்சிதைவடையவோ, மலட்டுத்தன்மை உடையவர்களாகவோ இருக்கமாட்டார்கள். உங்களுக்கு முழுமையான ஆயுள் காலத்தை நான் கொடுப்பேன்.
Na ram dawk camo ronae hoi carôenae awm mahoeh. Na hringyung ka vang sak han.
27 “நான் உங்களுக்கு முன்பாக என் பயங்கரத்தை அனுப்பி, நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு நாட்டினரையும் கலங்கப்பண்ணுவேன். உங்கள் பகைவரையெல்லாம் புறமுதுகு காட்டி ஓடச்செய்வேன்.
Kai na takinae lungthin hah na hmalah ka patoun vaiteh, na phanae hmuen pueng koe e miphunnaw pueng hah ka raphoe han. Na tarannaw pueng hah hnuklah ka ban sak han.
28 ஏவியரையும் கானானியரையும் ஏத்தியரையும் உங்கள் வழியைவிட்டுத் துரத்திவிட உங்களுக்கு முன்னே குளவிகளை அனுப்புவேன்.
Khoingannaw hah na hmalah ka patoun vaiteh, Hitnaw, Kanaannaw, Hivnaw hah na hmalah a pâlei han.
29 ஆனால் நான் அவர்களை ஒரு வருடத்திற்குள்ளாகவே துரத்திவிடமாட்டேன். அப்படிச் செய்தால், நாடு பாழாய்ப் போய்விடும், காட்டு விலங்குகளும் உங்களால் சமாளிக்க முடியாத அளவு பெருகிவிடும்.
Hote taminaw kum touh hoi na hmalah lahoi koung ka pâlei mahoeh. Koung ka pâlei pawiteh, ram dawk tami kingdi vaiteh sarang teh nang hanlah kapap han.
30 நீங்கள் அந்நாட்டை உரிமையாக்கிக்கொள்ளும் அளவுக்குப் பெருகுகிறவரைக்கும், நான் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களை உங்கள் முன்னின்று துரத்துவேன்.
Nang ni na pungdaw teh ram dawk na kawi hoehnahlan pueng, ahnimouh teh payai lahoi ka pâlei han.
31 “செங்கடல் தொடங்கி பெலிஸ்தியரின் கடல் வரைக்கும், பாலைவனம்தொடங்கி யூப்பிரடீஸ் நதிவரைக்கும் உங்கள் எல்லையை நிலைப்படுத்துவேன். அந்நாட்டில் வாழும் மக்களை உங்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன். அப்பொழுது நீங்கள் அவர்களை உங்கள் முன்னிலையில் இருந்து வெளியே துரத்திவிடுவீர்கள்.
Na ramri teh tuipui paling tui koehoi Filistin tuipui totouh, thingyeiyawn hoi tuipui totouh kai ni ka khoe han. Hote khocanaw teh na kut dawk na poe vaiteh nang ni na pâlei han.
32 அவர்களுடனோ, அவர்களின் தெய்வங்களுடனோ ஒரு உடன்படிக்கையையும் செய்யவேண்டாம்.
Ahnimouh hoi thoseh, ahnimae cathutnaw hoi thoseh, kâhuikonae na sak awh mahoeh.
33 உங்கள் நாட்டில் அவர்களை வாழவிடவேண்டாம். இல்லையெனில் நீங்கள் எனக்கு விரோதமாய் பாவம் செய்வதற்கு அவர்கள் காரணமாயிருப்பார்கள். அவர்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு நிச்சயமாக உங்களுக்கு ஒரு கண்ணியாக இருக்கும்” என்றார்.
Nang ni kai koe yonnae na sak hanelah, ahnimouh ni a sak han tie puennae ao dawkvah, ahnimouh teh na ram dawk awm awh mahoeh. Nang ni ahnimae cathut hah na bawk pawiteh, kamthuinae katang lah ao han telah Mosi koe atipouh.

< யாத்திராகமம் 23 >