< எபேசியர் 5 >
1 ஆகவே நீங்கள் இறைவனுடைய அன்பான பிள்ளைகளாய் இருப்பதனால், இறைவனைப்போல் நடவுங்கள்.
୧ପର୍ମେସର୍କେ ବେସି ଆଲାଦ୍ କର୍ବା ତାର୍ ପିଲାମନ୍ ଅଇବାକେ, ତାର୍ପାରା ଅଇ ଗଟେକ୍ ଆଲାଦର୍ ଚଲାଚଲ୍ତି କରା ।
2 கிறிஸ்து நம்மில் அன்பாயிருந்ததினால், இறைவனுக்கு நறுமணமுள்ள காணிக்கையாயும், பலியாயும் நமக்காகத் தம்மைக் கொடுத்தார். அதுபோலவே நீங்களும் அன்புள்ள வாழ்க்கையை வாழுங்கள்.
୨ଜେନ୍ତାର୍ କି କିରିସ୍ଟ ଆମ୍କେ ଆଲାଦ୍ କରି ଆମର୍ ପାଇ ମରି ରଇଲା । ଗଟେକ୍ ସୁନ୍ଦର୍ ବାସ୍ନା ଅଇବା ବଲି ପାରା ସେ ତାର୍ ଜିବନ୍ ପର୍ମେସର୍କେ ସର୍ପିଦେଲା ।
3 உங்கள் மத்தியில் விபசாரம், பாலியல் ஒழுக்கக்கேடு, பேராசை ஆகிய எந்தவொரு அசுத்தமும் இருக்கக்கூடாது. இறைவனுடைய பரிசுத்த மக்களுக்கு இவை தகுதியற்றதானபடியால், இவற்றைப்பற்றினப் பேச்சே உங்களுக்குள் அடிபடக்கூடாது.
୩ମାତର୍ ତମର୍ ବିତ୍ରେ ବେସିଆ ଇସାବେ ରଇବା ଚଲାଚଲ୍ତି, କି କାଇ ରକାମର୍ ସୁକଲ୍ ନ ଅଇବାଟା କି ଲବ୍ ଅଇବାଟା ଆଚେ, ବଲି ବିନ୍ ଲକ୍ମନ୍ ନ କଅତ୍ । କାଇକେବଇଲେ ଏଟା ସବୁ ପର୍ମେସରର୍ ସୁକଲ୍ ଲକ୍ମନ୍ କର୍ବା ଟିକ୍ ବିସଇ ନଏ ।
4 அவ்வாறே வெட்கமான செயலும், மூடத்தனமான பேச்சுகளும், கீழ்த்தரமான பரியாசங்களும் உங்களுக்கு ஏற்றதல்ல. இறைவனுக்கு நன்றி செலுத்துவதே உங்களுக்குத் தகுதியானது.
୪ସେନ୍ତାରିସେ ଜନ୍ଟାକି ଲଡାକେ ନ ଆଇବା ଗୁନ୍ଚଲନ୍, କି କାରାପ୍ କାତା, ଲାଜ୍ କର୍ବା କାତା କି ଟାପ୍ରା କାତା ତମର୍ଟାନେ ନ ଡିସ । ଏଟାମନ୍ ତମର୍ଟାନେ ରଇବାଟା ଟିକ୍ ନଏ । ତାର୍ବାଦୁଲେ ତମେ ପର୍ମେସର୍କେ ଦନିଅବାଦ୍ ଦେବା କାତା କୁଆ ।
5 ஒழுக்கக்கேடாய் நடக்கிறவனோ, தூய்மையற்றவனோ, இறைவன் அல்லாதவைகளை வணங்குகிறவனுக்கு ஒப்பான பேராசைக்காரனோ, கிறிஸ்துவுக்கும் இறைவனுக்கும் உரிய அரசில் எவ்வித உரிமைப்பங்கும் பெறுவதில்லை. இதை நிச்சயமாய் அறிந்துகொள்ளுங்கள்.
୫ତମେ ଜାନ୍ବାର୍ ଆଚେ ଜେ, କେନ୍ତାରି ମିସା ବେସିଆ କାମ୍ କର୍ବା ଲକ୍, କି ସୁକଲ୍ ନ ଅଇଲା ଲକ୍, କି ଲବ୍ରା ଲକ୍ ପରମେସରର୍ ଆରି କିରିସ୍ଟର୍ ରାଇଜେ ରଇବା କାଇ ବିସଇ ମିଲାଇବାକେ ଅଦିକାର୍ ପାଇ ନାପାରତ୍ । ଗଟେକ୍ ଲବ୍ରା, ପୁତ୍ଲା ପୁଜା କର୍ବା ଲକର୍ ସଙ୍ଗ୍ ସମାନ୍ ।
6 வீணான வார்த்தைகளினால் ஒருவரும் உங்களை ஏமாற்ற இடமளிக்காதீர்கள். இப்படிப்பட்டவற்றின் நிமித்தமே இறைவனுடைய கோபம், அவருக்குக் கீழ்ப்படியாதவர்கள்மேல் வருகிறது,
୬ବିନ୍ ଲକର୍ ଟାନେଅନି କାଇ ଲଡାକେ ନ ଆଇବା ଚୁଚା କାତା ସୁନି ନାଡାଇ ଉଆ ନାଇ । କାଇକେବଇଲେ, ଏନ୍ତାରି କରି ତାକେ ନ ନାମ୍ବା ଲକ୍ମନ୍କେ ପର୍ମେସର୍ ଡଣ୍ଡ୍ ଦେଇସି ।
7 எனவே இப்படிப்பட்டவர்களோடு பங்காளர்களாய் இருக்கவேண்டாம்.
୭ତେବର୍ପାଇ ସେନ୍ତାରି ଲକ୍ମନର୍ ସଙ୍ଗ୍ ମିସା ନାଇ ।
8 ஏனெனில் ஒருகாலத்தில் நீங்கள் இருளாய் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுதோ, கர்த்தரில் வெளிச்சமாய் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளிச்சத்தின் பிள்ளைகளாக வாழுங்கள்.
୮କାଇକେବଇଲେ ଆଗ୍ତୁ ତମେ ଆନ୍ଦାରେ ରଇଲାସ୍ । ମାତର୍ ଏବେ ମାପ୍ରୁର୍ ସଙ୍ଗ୍ ମିସ୍ଲାର୍ପାଇ ଉଜଲେ ପୁରି ଆଚାସ୍ । ତେବର୍ପାଇ ଉଜଲେ ରଇବା ଲକ୍ମନର୍ପାରା ଚଲାଚଲ୍ତି କରା ।
9 வெளிச்சத்தின் கனியோ, எல்லா நன்மைகளையும், நீதியையும், உண்மையையும் கொண்டிருக்கிறது.
୯କାଇକେବଇଲେ, ଉଜ୍ଲେ ରଇଲେ ତେଇଅନି ସବୁ ରକାମର୍ ନିକ, ଦରମ୍, ଆରି ସତ୍ ବିସଇ ବାରଇସି ।
10 எனவே கர்த்தருக்கு மகிழ்ச்சி கொடுக்கக்கூடியது எது என்று அறிந்துகொள்ளுங்கள்.
୧୦ପର୍ମେସର୍କେ ସାର୍ଦା କରାଇବା ବିସଇ କଜିକରି ମିଲାଆ ।
11 இருளுக்குரிய பயனற்ற செயல்களில் பங்காளர்களாய் இருக்கவேண்டாம். அவைகளை வெளியரங்கமாக்குங்கள்.
୧୧ଆନ୍ଦାରେ ରଇବା ଲକ୍ମନ୍ କର୍ବା କାଇ ମୁଲିଅ ନ ରଇବା କାମେ ମିସାନାଇ । ସେଟାମନ୍କେ କାଇ ମୁଲିଅ ନାଇ । ତାର୍ ବାଦୁଲେ ସେନ୍ତାରି କାରାପ୍ ଅଇବା କାମ୍ ନ ଲୁଚାଇ ଦେକାଇଦିଆସ୍ ।
12 ஏனெனில், கீழ்ப்படியாதவர்கள் இரகசியமாக செய்கின்ற காரியங்களைக் குறித்துப் பேசுவதுகூட வெட்கத்துக்குரியதாய் இருக்கிறது.
୧୨ସେନ୍ତାରି ଲୁଚ୍ତେ କର୍ବା କାମର୍ ବିସଇ କାତା ଅଇବାକେ ମିସା ଲାଜ୍ ଲାଗ୍ସି ।
13 எல்லாக் காரியங்களும் வெளிச்சத்தினால் வெளிப்படுத்தப்படும்போது, மறைந்திருந்தவைகள் தெரியவருகின்றன. ஏனெனில், வெளிச்சமே எல்லாவற்றையும் தெளிவாய் வெளிப்படுத்துகிறது.
୧୩ଏନ୍ତାରି କାମ୍ ନ ଲୁଚାଇ ବାର୍କରାଇଲେ, ତେଇର୍ ସତ୍ ବିସଇ ଲକ୍ମନ୍ ଦେକ୍ବାଇ ।
14 அதனால்தான் இப்படி சொல்லப்பட்டுள்ளது: “நித்திரை செய்பவனே விழித்தெழு, இறந்தவர்களை விட்டு உயிர்த்தெழு, கிறிஸ்து உன்மேல் பிரகாசிப்பார்.”
୧୪କାଇକେବଇଲେ ଉଜଲର୍ ସବୁ ବିସଇ ଉଜଲ୍ସେ । ସେଟାର୍ ପାଇ ଏନ୍ତାରି ଲେକାଅଇଲାଆଚେ, “ଏ ଗୁନେରାମନ୍ ଉଟା, ମଲାପାରା ନ ରଇକରି ଜିବନ୍ ରୁଆ, କିରିସ୍ଟ ତମ୍କେ ଉଜଲ୍ ଦେଇସି ।”
15 எனவே நீங்கள் எப்படி வாழ்கிறீர்கள் என்பதைக்குறித்து கவனமாயிருங்கள். ஞானமற்றவர்களைப்போல் வாழவேண்டாம், ஞானமுள்ளவர்களாய் வாழுங்கள்.
୧୫ତେବେ ତମର୍ ଚଲାଚଲ୍ତି କର୍ବାଟାନେ ଜାଗ୍ରତ୍ ରୁଆ । ବକୁଆ ଲକ୍ମନର୍ପାରା ନ ଅଇ ବୁଦିରଇବା ଲକର୍ପାରା ରୁଆ ।
16 நாட்கள் தீயதாய் இருப்பதனால், கிடைக்கும் எல்லாச் சந்தர்ப்பங்களையும் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
୧୬ସବୁବେଲେ ନିକ କାମ୍ କର୍ବାକେ କଜ୍ତେ ରୁଆ । କାଇକେବଇଲେ ଏ ଜୁଗର୍ ଲକ୍ମନ୍ ବେସି କାରାପ୍ ଆଚତ୍ ।
17 மூடத்தனம் உள்ளவர்களாய் இருக்கவேண்டாம். கர்த்தரின் சித்தம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள்.
୧୭ତେବର୍ପାଇ ବୁଦିନଇଲା ଲକ୍ ପାରା ନଅଇ ମାପ୍ରୁର୍ ମନ୍କଲାଟା କଜିକରି ମିଲାଆ ।
18 மதுபானம் குடித்து வெறிகொள்ளவேண்டாம். அது சீர்கேட்டிற்கே வழிநடத்தும். மாறாக பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு,
୧୮ମଦ୍ ପେଣ୍ଡମ୍ କାଇ ମାତା ନାଇ । କାଇକେବଇଲେ ସେଟା ତମ୍କେ ଡିଲା ଚାଡ୍ବା ଗରୁଗାଇର୍ ପାରା ଚଲାଚଲ୍ତି କର୍ବାକେ ଡାକିନେଇସି । ତାର୍ବାଦୁଲେ ସୁକଲ୍ଆତ୍ମା ବାନ୍ଦିନେବାକେ ସର୍ପିଉଆ ।
19 சங்கீதங்களினாலும், கீர்த்தனைகளினாலும், ஆவிக்குரிய பாடல்களினாலும் ஒருவரோடொருவர் பேசி, உங்கள் உள்ளத்திலே இசைபாடி கர்த்தரைப் போற்றுங்கள்.
୧୯ଗିତ୍ ସଙ୍ଗିତାର୍ ଗିତ୍, ଆତ୍ମାଇ ଅନି ଆଇବା ବିନ୍ ଗିତ୍ମନ୍, ତମର୍ ବିତ୍ରେ କୁଆକୁଇ ଉଆ । ଗିତ୍ କଇକରି ନିଜେ ନିଜେ ମନ୍ବିତ୍ରେ ମାପ୍ରୁକେ ଡାକ୍ପୁଟା କରା ।
20 எப்பொழுதும், எல்லாவற்றிற்காகவும் நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயரில், பிதாவாகிய இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.
୨୦ଆମର୍ ମାପ୍ରୁ ଜିସୁକିରିସ୍ଟର୍ ନାଉଁଦାରି ସବୁବେଲେ ସବୁ ବିସଇର୍ପାଇ ବାବା ପର୍ମେସର୍କେ ଦନିଅବାଦ୍ ଦିଆସ୍ ।
21 கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் பயபக்தியின் நிமித்தம், ஒருவருக்கொருவர் பணிந்திருங்கள்.
୨୧କିରିସ୍ଟର୍ପାଇ ରଇବା ତମର୍ ସନ୍ମାନର୍ ଲାଗି, ତମର୍ ତମର୍ ବିତ୍ରେ ସର୍ପାସର୍ପି ଉଆ ।
22 மனைவிகளே, நீங்கள் கர்த்தருக்குப் பணிந்து நடப்பதுபோல, உங்கள் கணவருக்கு பணிந்து நடவுங்கள்.
୨୨ଏ ମାଇଜିମନ୍ ତମେ ଜେନ୍ତାର୍ ମାପ୍ରୁକେ ସର୍ପିଅଇ ଆଚାସ୍, ସେନ୍ତାରି ତମର୍ ନିଜର୍ ନିଜର୍ ମୁନୁସ୍କେ ମିସା ସର୍ପି ଉଆ ।
23 ஏனெனில் கிறிஸ்து தமது உடலாகிய திருச்சபையின் தலைவராய் இருப்பதுபோல, கணவன் தனது மனைவியின் தலைவனாய் இருக்கிறான். கிறிஸ்துவே தமது திருச்சபையின் இரட்சகராக இருக்கிறார்.
୨୩କାଇକେବଇଲେ କିରିସ୍ଟ ଜେ କି ତାର୍ ଗାଗଡ୍ପାରା ରଇବା ମଣ୍ଡଲିର୍ ନେତା ଆଚେ, ସେନ୍ତାରିସେ ମୁନୁସ୍ ମିସା ତାର୍ ମାଇଜିର୍ ନେତା ଆଚେ । କିରିସ୍ଟସେ ତାର୍ ମଣ୍ଡଲିକେ ରକିଆ କଲାଆଚେ ।
24 அப்படியே திருச்சபையானது கிறிஸ்துவுக்குப் பணிந்து நடப்பதுபோல, மனைவிகளும் தங்கள் கணவர்களுக்கு எல்லாவற்றிலும் பணிந்திருக்கவேண்டும்.
୨୪ତେବର୍ପାଇ ମଣ୍ଡ୍ଲି ଜେନ୍ତାର୍ କିରିସ୍ଟକେ ସର୍ପି ଅଇସି, ସେନ୍ତାରି ଏ ମାଇଜିମନ୍, ତମେ ମିସା ସବୁ ବିସଇତେଇ ତମର୍ ମନସ୍ମନର୍ ଟାନେ ସର୍ପି ଅଇବାର୍ଆଚେ ।
25 கணவர்களே, கிறிஸ்து திருச்சபையில் அன்புகூர்ந்து, அதற்காகத் தம்மை ஒப்புக்கொடுத்தது போலவே, நீங்களும் மனைவியிடம் அன்பாய் இருங்கள்.
୨୫ଏ ମୁନୁସ୍ମନ୍, କିରିସ୍ଟ ଜେନ୍ତାର୍ ମଣ୍ଡ୍ଲିକେ ଆଲାଦ୍ କରି, ତାକେ ସୁକଲ୍ କର୍ବାକେ ନିଜେ ସର୍ପିଅଇଲା, ସେନ୍ତାରିସେ ତମେ ମିସା ନିଜର୍ ମାଇଜିମନ୍କେ ଆଲାଦ୍କରା ।
26 கிறிஸ்து வார்த்தையின் மூலம் தண்ணீரினால் திருச்சபையைச் சுத்திகரித்து பரிசுத்தமாக்கும்படியும்,
୨୬କିରିସ୍ଟ ପର୍ମେସରର୍ ବାକିଅ ସଙ୍ଗ୍ ଆରି ପାନିସଙ୍ଗ୍ ଦଇକରି ମଣ୍ଡ୍ଲିକେ ସୁକଲ୍ କଲା ।
27 மகிமையுள்ள திருச்சபை எவ்வித மாசும், மறுவும், வேறு எவ்வித குறைபாடும் அற்றதாகவும், பரிசுத்தமுள்ளவர்களாயும், குற்றமற்றவர்களாயும் தம்முன் நிறுத்திக்கொள்ளும்படியே கிறிஸ்து தம்மை ஒப்புக்கொடுத்தார்.
୨୭ମଣ୍ଡଲିକେ ତାର୍ ମୁଆଟେ ଆନ୍ଲାବେଲେ, ମଣ୍ଡଲି ଜେନ୍ତାରି କି, କାଇ ମୁର୍କି ନ ଅଇତେ, ଅସୁକଲ୍ ନଇତେ, କାଇ ଦସ୍ ନ ଅଇତେ ରଇ, ତାର୍ ବାଦୁଲେ ସୁକଲ୍ ଆରି ସିଦ୍ କାରାଇ ତାକେ ଟିଆ କରାଇସି ।
28 இவ்விதமாகவே கணவர்களும் தங்கள் மனைவிகளில், தங்கள் சொந்த உடல்களைப்போல் அன்பு செலுத்தவேண்டும். தன் மனைவியில் அன்பாயிருக்கிறவன் தன்னிலேயே அன்பாயிருக்கிறான்.
୨୮ସେନ୍ତାରିସେ ମୁନୁସ୍ମନ୍ ନିଜର୍ ଗାଗଡ୍କେ ଜତନ୍ କରି ଆଲାଦ୍ କଲାପାରା ନିଜର୍ ମାଇଜିମନ୍କେ ସେନ୍ତାରି କରା । ଜେ ନିଜର୍ ମାଇଜିକେ ଆଲାଦ୍ କର୍ସି, ସେ ନିଜ୍କେ ମିସା ଆଲାଦ୍ କର୍ସି ।
29 ஒருவனும் தன் சொந்த உடலை ஒருபோதும் வெறுத்ததில்லை. மாறாக, தனது உடலுக்கு வேண்டியதைக் கொடுத்து அதைப் பராமரிக்கிறான். இதுபோலவே, கிறிஸ்துவும் தமது திருச்சபையைப் பராமரிக்கிறார்.
୨୯କେ ମିସା କେବେ ନିଜର୍ ଗାଗଡ୍କେ ଗିନ୍ ନ କରେ । ମାତର୍ ତାର୍ପାଇ ଦୁଆପୁଚା କରି କାଦି କୁଆଇସି । ଜେନ୍ତାରି କି କିରିସ୍ଟ ତାର୍ ମଣ୍ଡଲିର୍ ପାଇ ଜତନ୍ କଲାନି ।
30 நாமும் கிறிஸ்துவிடைய உடலின் அங்கங்களாய் இருக்கிறோமே.
୩୦କାଇକେବଇଲେ ଆମେ ସବୁ ତାର୍ ଗାଗଡର୍ ବାଗ୍ ଅଇଆଚୁ ।
31 இந்தக் காரணத்தினால் ஒருவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டு, தனது மனைவியுடன் இணைந்திருப்பான்; இருவரும் ஒரே உடலாயிருப்பார்கள்
୩୧ଏଟାର୍ପାଇ ଦରମ୍ ସାସ୍ତରେ ଲେକାଅଇଆଚେ ମୁନୁସ୍ ତାର୍ ନିଜର୍ ଆୟା ବାବାକେ ଚାଡି ନିଜର୍ ମାଇଜିର୍ ସଙ୍ଗ୍ ମିସି ଜାଇସି । ଆରି ସେ ଦୁଇଲକ୍ ମିସି ଗଟେକ୍ ଅଇବାଇ ।
32 இது ஒரு மிக ஆழ்ந்த இரகசியம். ஆனால் நானோ கிறிஸ்துவையும், திருச்சபையையும் பற்றிப் பேசுகிறேன்.
୩୨ଏଟା ଗଟେକ୍ ବଡ୍ ଲୁଚି ରଇବା ବିସଇ । ମାତର୍ ମୁଇ କିରିସ୍ଟ ଆରି ମଣ୍ଡଲି ବିତ୍ରେ ମିସିବିଡି ରଇବା ବିସଇ କାତା ଅଇଲିନି ।
33 ஆனால் நீங்கள் ஒவ்வொருவனும், தன்னில் தான் அன்பாயிருப்பது போலவே, தன் மனைவியிலும் அன்பாயிருக்கவேண்டும். ஒவ்வொரு மனைவியும் தன் கணவனை மதித்து நடக்கவேண்டும்.
୩୩ସାରାସାରି ତମେ ଗଟେକ୍ ଗଟେକ୍ ଲକ୍ ନିଜେ ନିଜେ ଆଲାଦ୍ ଅଇଲାପାରା ନିଜର୍ ନିଜର୍ ମାଇଜିକେ ସେନ୍ତାରି କର୍ବାର୍ ଆଚେ । ଆରି ମାଇଜିମନ୍ ତାକର୍ ମୁନୁସ୍ମନ୍କେ ସନ୍ମାନ୍ ଦେବାର୍ ଆଚେ ।