< எபேசியர் 4 >

1 ஆகையால் கர்த்தருக்காக கைதியாய் இருக்கிற நான் உங்களிடம் வேண்டிக்கொள்கிறதாவது: நீங்கள் இறைவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ற தகுதியுடன் உங்கள் வாழ்க்கையை வாழுங்கள்.
អតោ ពន្ទិរហំ ប្រភោ រ្នាម្នា យុឞ្មាន៑ វិនយេ យូយំ យេនាហ្វានេនាហូតាស្តទុបយុក្តរូបេណ
2 முழுமையான தாழ்மையும் சாந்தமும் உள்ளவர்களாய் இருங்கள்; ஒருவரையொருவர் சகித்து, பொறுமையோடு அன்புடன் நடவுங்கள்.
សវ៌្វថា នម្រតាំ ម្ឫទុតាំ តិតិក្ឞាំ បរស្បរំ ប្រម្នា សហិឞ្ណុតាញ្ចាចរត។
3 சமாதானத்தில் இணைந்து, ஆவியானவரால் கொடுக்கப்பட்டிருக்கும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள உங்களால் இயன்ற எல்லாவற்றையும் செய்யுங்கள்.
ប្រណយពន្ធនេន ចាត្មន ឯក្យំ រក្ឞិតុំ យតធ្វំ។
4 நீங்கள் அழைக்கப்பட்டபோது, ஒரே நம்பிக்கைக்கு அழைக்கப்பட்டீர்கள்; அதுபோலவே, ஒரே உடலும் ஒரே ஆவியானவரும்,
យូយម៑ ឯកឝរីរា ឯកាត្មានឝ្ច តទ្វទ៑ អាហ្វានេន យូយម៑ ឯកប្រត្យាឝាប្រាប្តយេ សមាហូតាះ។
5 ஒரே கர்த்தரும், ஒரே விசுவாசமும், ஒரே திருமுழுக்குமே உண்டு.
យុឞ្មាកម៑ ឯកះ ប្រភុរេកោ វិឝ្វាស ឯកំ មជ្ជនំ, សវ៌្វេឞាំ តាតះ
6 ஒரே இறைவனாகவும், எல்லோருக்கும் தந்தையாகவும் இருக்கிறவரும் ஒருவரே. அவர் எல்லோருக்கும் மேலாக ஆட்சி செய்கிறவர். அவரே எல்லோரோடும், எல்லோரிலும் செயலாற்றுகிறவர்.
សវ៌្វោបរិស្ថះ សវ៌្វវ្យាបី សវ៌្វេឞាំ យុឞ្មាកំ មធ្យវត៌្តី ចៃក ឦឝ្វរ អាស្តេ។
7 கிறிஸ்து தாராளமாய் கொடுத்திருக்கிறதற்கு ஏற்றவாறு, நம்மில் ஒவ்வொருவரும் அவருடைய கிருபை வரத்தைப் பெற்றிருக்கிறோம்.
កិន្តុ ខ្រីឞ្ដស្យ ទានបរិមាណានុសារាទ៑ អស្មាកម៑ ឯកៃកស្មៃ វិឝេឞោ វរោៜទាយិ។
8 ஆதலால்: “அவர் வானமண்டலத்திற்கு மேலெழுந்து போனபோது, தம்முடன் பல கைதிகளை அணியணியாய் கூட்டிச்சென்றார். அவர் மனிதருக்கு வரங்களையும் கொடுத்தார்” என்று சொல்லப்பட்டிருக்கிறது.
យថា លិខិតម៑ អាស្តេ, "ឩទ៌្ធ្វម៑ អារុហ្យ ជេត្ឫន៑ ស វិជិត្យ ពន្ទិនោៜករោត៑។ តតះ ស មនុជេភ្យោៜបិ ស្វីយាន៑ វ្យឝ្រាណយទ៑ វរាន៑៕ "
9 “அவர் மேலெழுந்து போனார்” என்பதன் அர்த்தம் என்ன? அவர் அதற்குமுன்னதாக பூமியின் தாழ்வான இடங்களுக்கு இறங்கினார் என்று அர்த்தமாகிறது அல்லவா?
ឩទ៌្ធ្វម៑ អារុហ្យេតិវាក្យស្យាយមត៌្ហះ ស បូវ៌្វំ ប្ឫថិវីរូបំ សវ៌្វាធះស្ថិតំ ស្ថានម៑ អវតីណ៌វាន៑;
10 கீழே இறங்கிச் சென்றவர் தான் எல்லா வானங்களுக்கும் மேலாய், படைப்பு முழுவதிலும் தாம் நிறைந்திருப்பதற்காக மேலெழுந்து சென்றார்.
យឝ្ចាវតីណ៌វាន៑ ស ឯវ ស្វគ៌ាណាម៑ ឧបយ៌្យុបយ៌្យារូឍវាន៑ យតះ សវ៌្វាណិ តេន បូរយិតវ្យានិ។
11 கிறிஸ்து சிலரை அப்போஸ்தலராகவும், சிலரை இறைவாக்கினராகவும், சிலரை நற்செய்தி வேலைக்காரர்களாகவும், இன்னும் சிலரை மேய்ப்பர்களாகவும், வேதாகம ஆசிரியர்களாகவும் இருக்கும்படி திருச்சபைக்குக் கொடுத்தார்.
ស ឯវ ច កាំឝ្ចន ប្រេរិតាន៑ អបរាន៑ ភវិឞ្យទ្វាទិនោៜបរាន៑ សុសំវាទប្រចារកាន៑ អបរាន៑ បាលកាន៑ ឧបទេឝកាំឝ្ច និយុក្តវាន៑។
12 கிறிஸ்துவின் பணிகளைச் செய்வதற்கு, இறைவனுடைய மக்களை ஆயத்தப்படுத்துவதற்காகவே கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையை இவ்விதமாய் கட்டியெழுப்புவதே அவர் இவர்களைக் கொடுத்த நோக்கமாயிருந்தது.
យាវទ៑ វយំ សវ៌្វេ វិឝ្វាសស្យេឝ្វរបុត្រវិឞយកស្យ តត្ត្វជ្ញានស្យ ចៃក្យំ សម្បូណ៌ំ បុរុឞត៌្ហញ្ចាត៌្ហតះ ខ្រីឞ្ដស្យ សម្បូណ៌បរិមាណស្យ សមំ បរិមាណំ ន ប្រាប្នុមស្តាវត្
13 இவ்விதமாக நாம் எல்லோரும் இறைவனுடைய மகனைப்பற்றிய விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமனப்பட்டு, கிறிஸ்துவினுடைய முழுநிறைவான வளர்ச்சியின் அளவை பெற்று, நாம் முதிர்ச்சியடைந்த மக்களாவதே, அந்த நோக்கத்தின் முடிவாயிருக்கிறது.
ស បរិចយ៌្យាកម៌្មសាធនាយ ខ្រីឞ្ដស្យ ឝរីរស្យ និឞ្ឋាយៃ ច បវិត្រលោកានាំ សិទ្ធតាយាស្តាទ្ឫឝម៑ ឧបាយំ និឝ្ចិតវាន៑។
14 அப்பொழுது நாம் தொடர்ந்து குழந்தைத்தனமுள்ளவர்களாய் இருக்கமாட்டோம். காற்றினாலும் அலைகளினாலும் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்படுவதுபோல், மனிதரின் வெவ்வேறு புதுப்புது போதனைகளினால், நாமும் அலைக்கழிக்கப்படமாட்டோம். மனிதரின் தந்திரமும் கபடமுமுள்ள ஏமாற்றும் சூழ்ச்சியில் இழுபடவுமாட்டோம்.
អតឯវ មានុឞាណាំ ចាតុរីតោ ភ្រមកធូត៌្តតាយាឝ្ឆលាច្ច ជាតេន សវ៌្វេណ ឝិក្ឞាវាយុនា វយំ យទ៑ ពាលកា ឥវ ទោលាយមានា ន ភ្រាម្យាម ឥត្យស្មាភិ រ្យតិតវ្យំ,
15 மாறாக அன்புடனே உண்மையைப் பேசுகிறவர்களாய், எல்லாவகையிலும் நம் தலைவராயிருக்கிற கிறிஸ்துவுக்குள் வளர்ச்சியடைவோம்.
ប្រេម្នា សត្យតាម៑ អាចរទ្ភិះ សវ៌្វវិឞយេ ខ្រីឞ្ដម៑ ឧទ្ទិឝ្យ វទ៌្ធិតវ្យញ្ច, យតះ ស មូទ៌្ធា,
16 அவராலேயே முழு உடலும், இணைக்கும் மூட்டுகளினால் ஒன்றிணைக்கப்பட்டு, வளர்ச்சியடைந்து அவை ஒவ்வொன்றும் தங்களுக்கு குறிக்கப்பட்ட வேலையைச் செய்வதால் அன்பில் பெருகுகிறது.
តស្មាច្ចៃកៃកស្យាង្គស្យ ស្វស្វបរិមាណានុសារេណ សាហាយ្យករណាទ៑ ឧបការកៃះ សវ៌្វៃះ សន្ធិភិះ ក្ឫត្ស្នស្យ ឝរីរស្យ សំយោគេ សម្មិលនេ ច ជាតេ ប្រេម្នា និឞ្ឋាំ លភមានំ ក្ឫត្ស្នំ ឝរីរំ វ្ឫទ្ធិំ ប្រាប្នោតិ។
17 எனவே கர்த்தரில் நான் இதை உங்களுக்கு வலியுறுத்தி சொல்கிறதாவது: நீங்கள் தொடர்ந்து யூதரல்லாதவர்களைப்போல, அவர்களின் பயனற்ற சிந்தனையில் வாழக்கூடாது.
យុឞ្មាន៑ អហំ ប្រភុនេទំ ព្រវីម្យាទិឝាមិ ច, អន្យេ ភិន្នជាតីយា ឥវ យូយំ បូន រ្មាចរត។
18 அவர்கள் விளங்கிக்கொள்வதில் மந்தமுள்ளவர்களாயும், இறைவனின் வாழ்விலிருந்து பிரிக்கப்பட்டவர்களாயும் வாழ்கிறார்கள்; இது அவர்களுடைய இருதயக்கடினத்தினால் ஏற்பட்ட அறிவீனத்தினால் நடக்கிறது.
យតស្តេ ស្វមនោមាយាម៑ អាចរន្ត្យាន្តរិកាជ្ញានាត៑ មានសិកកាឋិន្យាច្ច តិមិរាវ្ឫតពុទ្ធយ ឦឝ្វរីយជីវនស្យ ពគីព៌្ហូតាឝ្ច ភវន្តិ,
19 அவர்கள் முற்றிலும் உணர்வற்றவர்களாகி, தங்களைச் சிற்றின்பங்களுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள். இதனால் எல்லாவித அசுத்தமான செயல்களையும் செய்து, காம வேட்கையில் தொடர்ந்து ஈடுபட ஆசைப்படுகிறார்கள்.
ស្វាន៑ ចៃតន្យឝូន្យាន៑ ក្ឫត្វា ច លោភេន សវ៌្វវិធាឝៅចាចរណាយ លម្បដតាយាំ ស្វាន៑ សមប៌ិតវន្តះ។
20 ஆனால் நீங்கள் கிறிஸ்துவை இவ்விதமாக கற்றுக்கொள்ளவில்லை.
កិន្តុ យូយំ ខ្រីឞ្ដំ ន តាទ្ឫឝំ បរិចិតវន្តះ,
21 நீங்கள் நிச்சயமாகவே அவரைக்குறித்துக் கேள்விப்பட்டதும் இயேசுவில் இருக்கும் சத்தியதின்படியே நீங்கள் போதிக்கப்பட்டீர்கள்.
យតោ យូយំ តំ ឝ្រុតវន្តោ យា សត្យា ឝិក្ឞា យីឝុតោ លភ្យា តទនុសារាត៑ តទីយោបទេឝំ ប្រាប្តវន្តឝ្ចេតិ មន្យេ។
22 உங்கள் முந்திய வாழ்க்கை முறையைப் பொறுத்தவரையில், ஏமாற்றும் ஆசைகளினால் உங்கள் பழைய மனித சுபாவம் சீர்கெடுவதால், அதை நீக்கிவிட வேண்டும் என போதிக்கப்பட்டீர்கள்;
តស្មាត៑ បូវ៌្វកាលិកាចារការី យះ បុរាតនបុរុឞោ មាយាភិលាឞៃ រ្នឝ្យតិ តំ ត្យក្ត្វា យុឞ្មាភិ រ្មានសិកភាវោ នូតនីកត៌្តវ្យះ,
23 உங்கள் மனப்பான்மையில் புதிதாக்கப்பட வேண்டும் என்றும் அறிந்திருக்கிறீர்கள்.
យោ នវបុរុឞ ឦឝ្វរានុរូបេណ បុណ្យេន សត្យតាសហិតេន
24 இறைவனுடைய தன்மையைக் கொண்டதாக இருக்கும்படி, உண்மையான நீதியிலும் பரிசுத்தத்திலும் உருவான புதிதாக்கப்பட்ட மனிதனுக்குரிய சுபாவத்தை தரித்துக்கொள்ளுங்கள்.
ធាម៌្មិកត្វេន ច ស្ឫឞ្ដះ ស ឯវ បរិធាតវ្យឝ្ច។
25 ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும், உங்களிடமிருந்து பொய் சொல்வதை அகற்றிவிடுங்கள். நாம் எல்லோரும் ஒரே உடலின் அங்கத்தினர்களாய் இருப்பதனால், நாம் ஒவ்வொருவரும் நமது அயலவருடன் உண்மையையே பேசவேண்டும்.
អតោ យូយំ សវ៌្វេ មិថ្យាកថនំ បរិត្យជ្យ សមីបវាសិភិះ សហ សត្យាលាបំ កុរុត យតោ វយំ បរស្បរម៑ អង្គប្រត្យង្គា ភវាមះ។
26 “நீங்கள் உங்கள் கோபத்தில் பாவம் செய்யவேண்டாம்”: பொழுது சாய்வதற்குள் உங்கள் கோபம் தணியட்டும்.
អបរំ ក្រោធេ ជាតេ បាបំ មា កុរុធ្វម៑, អឝាន្តេ យុឞ្មាកំ រោឞេសូយ៌្យោៜស្តំ ន គច្ឆតុ។
27 பிசாசுக்கு உங்கள் வாழ்வில் கால் வைக்க இடம் கொடாதிருங்கள்.
អបរំ ឝយតានេ ស្ថានំ មា ទត្ត។
28 களவு செய்வதில் ஈடுபட்டவன் தொடர்ந்து களவு செய்யாமல், தனது கைகளினால் பயனுள்ள வேலைகளைச் செய்யவேண்டும். அப்போது ஏழைகளுடன் பகிர்ந்துகொள்வதற்கும், அவனிடம் ஏதாவது இருக்கும்.
ចោរះ បុនឝ្ចៃយ៌្យំ ន ករោតុ កិន្តុ ទីនាយ ទានេ សាមត៌្ហ្យំ យជ្ជាយតេ តទត៌្ហំ ស្វករាភ្យាំ សទ្វ្ឫត្ត្យា បរិឝ្រមំ ករោតុ។
29 தீமையான வார்த்தைகள் உங்கள் வாயிலிருந்து வெளியே புறப்படவேண்டாம். ஆனால் கேட்பவர்கள் பயனடையும்படி, அவர்களுடைய தேவைக்கு ஏற்றவாறு, வளர்ச்சி பெறுவதற்கு உதவியான வார்த்தைகளையே பேசுங்கள்.
អបរំ យុឞ្មាកំ វទនេភ្យះ កោៜបិ កទាលាបោ ន និគ៌ច្ឆតុ, កិន្តុ យេន ឝ្រោតុរុបការោ ជាយតេ តាទ្ឫឝះ ប្រយោជនីយនិឞ្ឋាយៃ ផលទាយក អាលាបោ យុឞ្មាកំ ភវតុ។
30 இறைவனுடைய பரிசுத்த ஆவியானவரைத் துக்கப்படுத்தாதிருங்கள். நீங்கள் இறைவனுடையவர்கள் என்பதற்கு உங்களின் மீட்பு நாள்வரை உங்கள்மீது பொறிக்கப்பட்ட அச்சடையாளமாய் ஆவியானவர் இருக்கிறார்.
អបរញ្ច យូយំ មុក្តិទិនបយ៌្យន្តម៑ ឦឝ្វរស្យ យេន បវិត្រេណាត្មនា មុទ្រយាង្កិតា អភវត តំ ឝោកាន្វិតំ មា កុរុត។
31 எல்லா விதமான கசப்பு உணர்வுகள், சினம், கோபம், வாய்ச்சண்டை, அவதூறாய் பேசுதல் ஆகியவற்றையும், எல்லா விதமான தீங்கையும் விட்டுவிடுங்கள்.
អបរំ កដុវាក្យំ រោឞះ កោឞះ កលហោ និន្ទា សវ៌្វវិធទ្វេឞឝ្ចៃតានិ យុឞ្មាកំ មធ្យាទ៑ ទូរីភវន្តុ។
32 ஒருவரில் ஒருவர் தயவுள்ளவர்களாயும், மனவுருக்கமுள்ளவர்களாயும் இருங்கள். கிறிஸ்துவில் இறைவன் உங்களை மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவரையொருவர் மன்னியுங்கள்.
យូយំ បរស្បរំ ហិតៃឞិណះ កោមលាន្តះករណាឝ្ច ភវត។ អបរម៑ ឦឝ្វរះ ខ្រីឞ្ដេន យទ្វទ៑ យុឞ្មាកំ ទោឞាន៑ ក្ឞមិតវាន៑ តទ្វទ៑ យូយមបិ បរស្បរំ ក្ឞមធ្វំ។

< எபேசியர் 4 >