< உபாகமம் 30 >

1 நான் உங்கள்முன் வைத்த இந்த எல்லா ஆசீர்வாதங்களும், சாபங்களும் உங்கள்மேல் வரும்பொழுது, உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை எந்த நாடுகளின் மத்தியில் சிதறடித்தாரோ, அவர்கள் மத்தியிலிருந்தே இவைகளைச் சிந்தித்துக்கொள்ளுங்கள்.
هنگامی که تمام این برکت‌ها و لعنتها اتفاق بیفتد و شما در میان قومهای بیگانه‌ای که خداوند، خدایتان شما را به آنجا رانده است سخنان مرا به یاد بیاورید
2 நீங்களும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பி, நான் இன்று உங்களுக்குக் கொடுக்கும் கட்டளைகள் எல்லாவற்றின்படியும், உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவருக்குக் கீழ்ப்படிந்தால்,
و به سوی خداوند، خدایتان بازگشت نمایید و شما و فرزندانتان با تمامی دل فرامینی را که امروز به شما دادم اطاعت کنید،
3 அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா, நீங்கள் இழந்துபோன செல்வங்களை உங்களுக்குத் திரும்பக் கொடுப்பார். அவர் உங்கள்மேல் மனமிரங்கி, உங்களைச் சிதறடித்திருக்கிற எல்லா நாடுகளிலுமிருந்து உங்களைத் திரும்பவும் கூட்டிச்சேர்ப்பார்.
آنگاه خداوند، خدایتان شما را از اسارت نجات خواهد داد. او بر شما ترحم خواهد کرد و شما را از بین تمام قومهایی که شما را در آنها پراکنده کرده است جمع خواهد نمود.
4 வானத்தின்கீழ் இருக்கும் மிகத் தூரமான நாட்டிற்கு நீங்கள் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், அங்கிருந்தும் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களைக் கூட்டிச்சேர்த்து, மீண்டும் கொண்டுவருவார்.
اگر در دورترین نقاط دنیا هم باشید او شما را جمع می‌کند
5 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் முற்பிதாக்களுக்குச் சொந்தமாயிருந்த நாட்டுக்கு உங்களைக் கொண்டுவருவார்; நீங்கள் அதைத் திரும்பவும் உரிமையாக்கிக்கொள்வீர்கள். அவர் உங்களை உங்கள் முற்பிதாக்களிலும் பார்க்க அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாகவும், எண்ணிக்கையில் அதிகமானோராகவும் ஆக்குவார்.
و به سرزمین نیاکانتان باز می‌گرداند تا دوباره مالک آن شوید. او شما را کامیابتر و پرشمارتر از نیاکانتان خواهد ساخت.
6 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் இருதயங்களையும், உங்கள் சந்ததியாரின் இருதயங்களையும் விருத்தசேதனம்பண்ணுவார். அப்பொழுது நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் அவரில் அன்புகூர்ந்து வாழ்வீர்கள்.
او دلهای شما و فرزندانتان را پاک خواهد کرد تا خداوند، خدایتان را با تمامی دل و جان دوست بدارید و در آن سرزمین زنده بمانید.
7 உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை வெறுத்துத் துன்புறுத்தும் உங்கள் பகைவர்கள்மேல் இந்தச் சாபங்களையெல்லாம் வரப்பண்ணுவார்.
یهوه خدایتان همه این لعنت‌ها را متوجه دشمنانتان و کسانی که به شما آزار می‌رسانند خواهد کرد.
8 திரும்பவும் நீங்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் அவருடைய எல்லா கட்டளைகளையும் கைக்கொள்வீர்கள்.
پس شما باز از خداوند اطاعت خواهید کرد و همه فرمانهایش را که من امروز به شما می‌دهم نگاه خواهید داشت.
9 அப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் கையிட்டுச்செய்யும் எல்லா வேலைகளிலும் உங்களை அதிக செல்வச் செழிப்புள்ளவர்களாக்குவார். உங்களுடைய கர்ப்பத்தின் கனியிலும், உங்கள் வளர்ப்பு மிருகங்களின் குட்டிகளிலும், உங்கள் நிலத்தின் பயிர் வகைகளிலும் செழிப்பைக் கட்டளையிடுவார். அவர் உங்கள் முற்பிதாக்களில் மகிழ்ச்சியடைந்தது போலவே, உங்களிலும் மகிழ்ந்து உங்களைச் செழிப்படையப்பண்ணுவார்.
یهوه خدایتان شما را در تمام کارهایتان برکت خواهد داد و به شما فرزندان بسیار و گله و محصول فراوان عطا خواهد کرد، چون خداوند بار دیگر از شما راضی خواهد شد، همچنانکه از پدران شما راضی بود.
10 நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, இந்த சட்டப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொண்டு, உங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பும்போது அவர் உங்களைச் செழிக்கப்பண்ணுவார்.
اگر به صدای یهوه خدایتان گوش فرا دهید و از فرمانها و فرایض او که در این کتاب شریعت نوشته شده، اطاعت کنید و با تمامی دل و جان به سوی یهوه خدایتان بازگردید، او از شما خشنود خواهد بود.
11 இப்பொழுது நான் உங்களுக்குக் கொடுக்கும் கட்டளை, நீங்கள் விளங்கிக்கொள்வதற்கு அதிக கடினமானதும் அல்ல. கைக்கொள்வதற்கு இயலாததும் அல்ல.
اطاعت از این فرمان که من امروز به شما می‌دهم، خارج از توانایی و دور از دسترس شما نیست.
12 அது வானத்தின் உயரத்தில் இருப்பதும் அல்ல. ஆகவே, “யார் வானத்திற்கு ஏறி அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி, அதை எங்களுக்கு அறிவிப்பவன் யார்?” என்று நீங்கள் கேட்கவேண்டும்.
چون این فرمان در آسمان نیست که بگویید: «چه کسی به آسمان بالا خواهد رفت و آن را پایین خواهد آورد تا آن را بشنویم و اطاعت کنیم؟»
13 அது கடலுக்கு அப்பால் உள்ளதும் அல்ல. ஆகவே, “யார் கடலைக் கடந்து, அதைப் பெற்றுக்கொண்டு நாங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அதை எங்களுக்கு அறிவிப்பான்” என்றும் நீங்கள் கேட்கவேண்டியதில்லை.
و نه در ماورای دریاهاست که بگویید: «چه کسی می‌تواند به آن سوی دریاها برود و آن را برای ما بیاورد تا آن را بشنویم و اطاعت کنیم؟»
14 அந்த வார்த்தை உங்களுக்கு மிக அருகிலேயே இருக்கிறது. நீங்கள் அதற்குக் கீழ்ப்படியும்படி அது உங்கள் வாயிலும், உங்கள் இருதயத்திலும் இருக்கிறது.
این کلام به شما بسیار نزدیک است؛ آن در دهان و در دل شماست تا بتوانید آن را به جا آورید.
15 பாருங்கள், இன்று நான் வாழ்வையும் செல்வச் செழிப்பையும், அத்துடன் மரணத்தையும் அழிவையும் உங்கள்முன் வைக்கிறேன்.
حال گوش کنید، من امروز مرگ و زندگی، بدی و خوبی را در برابر شما قرار داده‌ام تا یکی را برگزینید.
16 ஏனெனில், இன்று உங்கள் இறைவனாகிய யெகோவாவிடத்தில் நீங்கள் அன்பு வைக்கவும், அவருடைய வழிகளில் நடக்கவும், அவருடைய கட்டளைகளையும், விதிமுறைகளையும், சட்டங்களையும் கைக்கொள்ளவும் நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன். கைக்கொள்வீர்களானால் நீங்கள் வாழ்ந்து பெருகுவீர்கள். நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் நாட்டிலே உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்.
من امروز به شما دستور داده‌ام که یهوه خدایتان را دوست داشته در راه او گام بردارید و فرمانها و فرایض و قوانین او را نگاه دارید تا زنده مانده، قومی بزرگ بشوید و یهوه خدایتان به شما در سرزمینی که تصرف خواهید کرد، برکت بدهد.
17 ஆனால் உங்களுடைய இருதயம் விலகி, நீங்கள் கீழ்ப்படியாமற்போய், வேறு தெய்வங்களை வணங்கி, அவற்றை வழிபடும்படி இழுப்புண்டு போவீர்களானால்,
ولی اگر گوش ندهید و اطاعت نکنید و به دنبال خدایان دیگر بروید و آنها را بپرستید،
18 நிச்சயமாய் நீங்கள் அழிக்கப்படுவீர்கள் என்று இந்த நாளில் நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நீங்கள் யோர்தானைக் கடந்துபோய் உரிமையாக்கிக்கொள்ளப்போகும் அந்நாட்டிலே நீடித்து வாழமாட்டீர்கள்.
در این صورت همین امروز به شما اعلام می‌کنم که بدون شک نابود خواهید شد و در سرزمینی که از رود اردن گذر می‌کنید تا آن را تصرف کنید، عمری طولانی نخواهید داشت.
19 நான் வாழ்வையும் சாவையும், ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைத்திருக்கிறேன் என்பதற்கு, வானத்தையும் பூமியையும் உங்களுக்கு விரோதமான சாட்சிகளாக இன்று அழைக்கிறேன். இப்பொழுது வாழ்வைத் தெரிந்தெடுத்துக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்களும், உங்கள் பிள்ளைகளும் வாழ்வடைவீர்கள்.
زمین و آسمان را شاهد می‌گیرم که امروز زندگی و مرگ، برکت و لعنت را در برابر شما قرار داده‌ام. زندگی را انتخاب کنید تا شما و فرزندانتان زنده بمانید.
20 இப்பொழுது உங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் அன்பு செலுத்துங்கள். அப்பொழுது அவருடைய குரலுக்குச் செவிகொடுத்து அவரை உறுதியாய்ப் பற்றிக்கொள்வீர்கள். ஏனெனில் யெகோவாவே உங்கள் வாழ்வாயிருக்கிறார். அவர் உங்கள் முற்பிதாக்களாகிய ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்குக் கொடுப்பதாக ஆணையிட்ட நாட்டில் உங்களை நீண்ட நாட்கள் வாழச்செய்வார்.
خداوند، خدایتان را دوست داشته، از او اطاعت کنید و به او بچسبید، زیرا او زندگی شماست و به شما و فرزندانتان در سرزمینی که با سوگند به پدرانتان ابراهیم و اسحاق و یعقوب وعده داده است، عمری طولانی عطا خواهد فرمود.

< உபாகமம் 30 >