< உபாகமம் 20 >

1 நீங்கள் உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போருக்குப் போகும்போது, குதிரைகளையும், தேர்களையும் உங்களுடைய படையைவிட பெரிய படையையும் கண்டால், அவற்றிற்குப் பயப்படவேண்டாம். ஏனெனில், எகிப்திலிருந்து உங்களை வெளியே கொண்டுவந்த உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களோடு இருப்பார்.
Rĩrĩa mũgaathiĩ kũrũa na thũ cianyu na muone irĩ na mbarathi na ngaari cia ita na mbũtũ cia ita nyingĩ gũkĩra cianyu, mũtikanaciĩtigĩre, nĩ ũndũ Jehova Ngai wanyu, ũrĩa wamũrutire bũrũri wa Misiri, agaakorwo hamwe na inyuĩ.
2 நீங்கள் போருக்குப்போக ஆயத்தமாகும்போது, ஆசாரியன் முன்னேவந்து இராணுவவீரருக்கு உரை நிகழ்த்தவேண்டும்.
Rĩrĩa mũgaakorwo mũkuhĩrĩirie gũthiĩ mbaara, mũthĩnjĩri-Ngai nĩagakuhĩrĩria mbũtũ cia ita na aciarĩrie.
3 அவன் சொல்லவேண்டியதாவது: “இஸ்ரயேலின், கேளுங்கள், இன்று நீங்கள் உங்கள் பகைவரை எதிர்த்துப் போர் புரியப்போகிறீர்கள். சோர்வடையாதீர்கள் பயப்படாதீர்கள், திகிலடையாதீர்கள் அவர்களுக்குமுன் பீதியடையாதீர்கள்.
Aciĩre atĩrĩ, “Thikĩrĩria wee Isiraeli, ũmũthĩ nĩ ũgũthiĩ mbaara-inĩ ũkarũe na thũ ciaku. Ndũgakue ngoro kana wĩtigĩre na ndũkamake kana ũinaine ũrĩ mbere yacio.
4 ஏனெனில், உங்கள் இறைவனாகிய யெகோவாவே உங்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்காக உங்கள் பகைவர்களை எதிர்த்துப் போர்புரிய உங்களுடன் போகிறார்.”
Nĩgũkorwo Jehova Ngai waku nĩwe ũgũtwarana nawe nĩguo akũrũĩrĩre kũrĩ thũ ciaku, akũhootanĩre.”
5 மேலும் அதிகாரிகள் இராணுவவீரரிடம் சொல்லவேண்டியதாவது: “புதுவீட்டைக் கட்டி, அதை அர்ப்பணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் தன் வீட்டுக்குத் திரும்பிப்போகலாம். அவன் யுத்தத்தில் செத்தால் வேறொருவன் அதை அர்ப்பணம் செய்யக்கூடும்.
Anene nao nĩmakooria mbũtũ ya ita atĩrĩ: “Nĩ harĩ mũndũ wakĩte nyũmba njerũ na ndamĩrugũrĩtie? Nĩarekwo acooke mũciĩ, ndagakuĩre mbaara-inĩ, nake mũndũ ũngĩ atuĩke wa kũmĩrugũria.
6 திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, அதன் பலனை அனுபவியாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்; அவன் யுத்தத்தில் செத்தால், வேறொருவன் அத்தோட்டத்தின் பலனை அனுபவிப்பான்.
Nĩ harĩ mũndũ ũhaandĩte mũgũnda wa mĩthabibũ na ndambĩrĩirie gũkenera matunda maguo? Nĩarekwo ainũke ndagakuĩre mbaara-inĩ nake mũndũ ũngĩ atuĩke wa gũkenera matunda macio.
7 தனக்கு நிச்சயித்த பெண்ணை இன்னும் திருமணம் செய்யாதவன் யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம். அவன் போரில் செத்தால், அந்தப் பெண்ணை வேறொருவன் திருமணம்செய்வான்” என்று சொல்லவேண்டும்.
Nĩ harĩ mũndũ marĩkanĩire na mũndũ-wa-nja atĩ nĩekũmũhikia na ndamũhikĩtie? O nake nĩ ainũke ndagakuĩre mbaara-inĩ nake mũndũ-wa-nja ũcio ahikio nĩ mũndũ ũngĩ.”
8 மேலும் அதிகாரிகள் அவர்களிடம், “பயப்படுகிற அல்லது உள்ளத்தில் சோர்வுடைய யாரேனும் உண்டா? அப்படியானால் அவன் திரும்பி வீட்டுக்குப் போகலாம்” என்று சொல்லவேண்டும். ஏனெனில், அவனுடைய உடன் இராணுவவீரர் அவனைப்போல் சோர்வடையாமல் இருக்கவேண்டுமே. அதற்காகவே இப்படிச் சொல்லவேண்டும்.
Ningĩ anene nĩmagacooka morie atĩrĩ, “Nĩ harĩ mũndũ ũretigĩra kana agakua ngoro? Ũcio nĩarekwo ainũke nĩgeetha ariũ a ithe o nao matigakue ngoro.”
9 அதிகாரிகள் இராணுவவீரருடன் பேசி முடித்தபின், அந்த படைக்கு தளபதிகளை நியமிக்கவேண்டும்.
Rĩrĩa anene makaarĩkia kwarĩria mbũtũ cia ita-rĩ, nĩmagathuura anene a ita a gũtongoria mbũtũ icio.
10 ஒரு பட்டணத்தைத் தாக்குவதற்கு அணிவகுத்துச் செல்லும்போது, அதைக் நெருங்கியவுடன் அதன் மக்களுடன் சமாதானத்துக்கு வர முயற்சி செய்யுங்கள்.
Rĩrĩa mũkaambata mũkahũũre itũũra inene, mũkaamba kũũria andũ a rĩo metĩkĩre kũgĩe thayũ.
11 அவர்கள் அதற்கு உடன்பட்டு தங்கள் வாசல்களைத் திறந்தால், அங்குள்ள யாவரும் கட்டாய வேலைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் உங்களுக்கு வேலைசெய்யவேண்டும்.
Mangĩgetĩkĩra na mahingũre ihingo ciao-rĩ, andũ a itũũra rĩu othe magaatuĩka a kũrutithio wĩra na hinya, mamũrutagĩre wĩra.
12 ஆனால் அவர்கள் உங்களுடைய சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல், உங்களை எதிர்த்துப்போரிட்டால், அப்பட்டணத்தை முற்றுகையிடுங்கள்.
Mangĩkaarega kũgĩe thayũ na mambĩrĩrie kũrũa na inyuĩ, mũgaathiũrũrũkĩria itũũra rĩu.
13 உங்கள் இறைவனாகிய யெகோவா அந்தப் பட்டணத்தை உங்களுக்குக் கொடுப்பார். அப்போது அங்குள்ள ஆண்கள் யாவரையும் வாளால் வெட்டிப்போடுங்கள்.
Rĩrĩa Jehova Ngai wanyu akaarĩneana moko-inĩ manyu-rĩ, mũkooraga arũme othe arĩa marĩ thĩinĩ warĩo.
14 பட்டணத்திலுள்ள பெண்களையும், பிள்ளைகளையும், மிருகங்களையும் மற்றும் எல்லாவற்றையும் உங்களுக்காக கொள்ளைப்பொருளாக வைத்துக்கொள்ளலாம். உங்கள் இறைவனாகிய யெகோவா உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களுக்குக் கொடுக்கும் கொள்ளைப்பொருட்களை நீங்கள் பயன்படுத்தலாம்.
No ha ũhoro wa andũ-a-nja, na ciana, na mahiũ, o na kĩndũ kĩrĩa kĩngĩ gĩothe kĩrĩ thĩinĩ wa itũũra rĩu, no mũcitahe ituĩke cianyu. Na rĩrĩ, no mũhũthĩre indo icio Jehova Ngai wanyu amũheete kuuma kũrĩ thũ cianyu.
15 உங்களுக்குத் தூரத்திலுள்ள, எந்த நாட்டையும் சேராத பட்டணங்கள் எல்லாவற்றிற்கும் நீங்கள் இப்படியே செய்யவேண்டும்.
Ũguo nĩguo mũgeeka matũũra manene mothe marĩa marĩ kũraya na kũrĩa mũrĩ no ti ma ndũrĩrĩ iria irĩ gũkuhĩ na inyuĩ.
16 ஆனால் உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுக்கும் நாடுகளின் பட்டணங்களில் உள்ள உயிருள்ள எதையும், எவ்வழியிலும் தப்பவிடவேண்டாம்.
No rĩrĩ, thĩinĩ wa matũũra manene ma ndũrĩrĩ marĩa Jehova Ngai wanyu ekũmũhe matuĩke igai rĩanyu, mũtikanatigie kĩndũ o nakĩ, kĩhihagia kana kĩrĩ muoyo.
17 இறைவனாகிய யெகோவா கட்டளையிட்டபடியே ஏத்தியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய எல்லோரையும் முற்றிலும் அழித்துவிடுங்கள்.
Mũkaamaniina biũ; andũ a Ahiti, na Aamori, na Akaanani, na Aperizi, na Ahivi, na Ajebusi o ta ũrĩa Jehova Ngai wanyu aamwathĩte.
18 ஏனெனில் அவர்கள் தங்கள் தெய்வங்களை வணங்குவதால் செய்கிற அருவருப்பான செயல்களை நீங்கள் பின்பற்றும்படி உங்களுக்கும் போதிப்பார்கள். நீங்களும், உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்வீர்கள்.
Kwaga ũguo nĩmakamũruta kũrũmĩrĩra maũndũ mothe marĩ magigi marĩa mekaga makĩhooya ngai ciao, na inyuĩ nĩmũkehĩria Jehova Ngai wanyu.
19 நீங்கள் ஒரு பட்டணத்தைக் கைப்பற்றுவதற்கு அதற்கு எதிராகச் சண்டையிட்டு நீண்டகாலமாக முற்றுகையிட்டிருந்தால், அங்குள்ள மரங்களை கோடரியால் வெட்டி அழிக்கவேண்டாம். ஏனெனில் அவற்றின் பழங்களை நீங்கள் சாப்பிடலாம். அவற்றை வெட்டி விழுத்தவேண்டாம். மரங்களை முற்றுகையிடுவதற்கு அவை என்ன மனிதர்களா?
Mũngĩgaakorwo mũthiũrũrũkĩirie itũũra ihinda iraaya, mũkĩrĩhũũra nĩguo mũrĩtahe, mũtikanathũkangie mĩtĩ yarĩo na kũmĩtemanga na ithanwa, nĩ ũndũ no mũrĩe matunda mayo. Mũtikanamĩteme. Mĩtĩ ya gĩthaka ĩkĩrĩ andũ, atĩ nĩguo mũmĩthiũrũrũkĩrie?
20 ஆனாலும், பழங்கொடாத மரங்கள் என நீங்கள் அறிந்தால் அவற்றை வெட்டுங்கள். நீங்கள் சண்டைசெய்யும் பட்டணம் வீழ்ச்சியடையும்வரை அரண்கட்டுவதற்காக அவற்றைப் பயன்படுத்தலாம்.
No rĩrĩ, no mũteme mĩtĩ ĩrĩa mũkũmenya atĩ ti ya matunda, na mũmĩtũmĩre gwĩthondekera mwĩgitio wa rũirigo nginya itũũra rĩu rĩrarũa na inyuĩ rĩgwe.

< உபாகமம் 20 >