< கொலோசெயர் 2 >
1 உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.
ଆମ୍ୱେଞ୍ଜି ଆସନ୍, ଲାଅଦିକିଆନ୍ ଆ ମନ୍ରାଜି ଆସନ୍ ଡ ଡିଅଙ୍ଗା ମନ୍ରା ଞେନ୍ଆଡଙ୍ ଅଣ୍ଡ୍ରଙ୍ ଅମ୍ମଡିଁୟ୍ଜି ତି ଅଡ଼୍କୋଞ୍ଜି ଆସନ୍ ଞେନ୍ ଡିଅଙ୍ଗା ଲନୁମ୍ତନାୟ୍, ତିଆତେ ଆମ୍ୱେଞ୍ଜି ଜନାବେନ୍ତୋ ଗାମ୍ତାୟ୍ ।
2 நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே.
ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆନିଞ୍ଜି ଉଗର୍ଲୋଙନ୍ ସର୍ଡାତଜି, ଆନିଞ୍ଜି ଗନନ୍ଲୁଡନ୍ ଆସନ୍ ଗିଆନନ୍ ଆ ରନ୍ନା ଞାଙ୍ତଜି, ଆରି କ୍ରିସ୍ଟନ୍ ମା ଇସ୍ୱରନ୍ ଆ ଜରୁ ବର୍ନେଜି ଗାମ୍ଲେ ଜନନାନ୍ ଆସନ୍ ଆନିଞ୍ଜି ତର୍ଡମ୍ ଡନୁଙ୍ୟମନ୍ ବାତ୍ତେ ମାୟ୍ଲନ୍ ଡକୋନେତଜି ଗାମ୍ଲେ ଞେନ୍ ଲଡୟ୍ତିଁୟ୍ ।
3 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன.
ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ଗିଆନନ୍ ଡ ବୁଡ୍ଡିନ୍ ଆ ରନ୍ନା ଡକୋ ।
4 மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
ଏଙ୍ଗାଲ୍ଡେନ୍ ଆନ୍ନିଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ପାତ୍ୟାବରନ୍ ବାତ୍ତେ କଣ୍ଡାୟ୍ଡଙ୍ବେନ୍ ତଡ୍, ତିଆସନ୍ ଞେନ୍ କେନ୍ ଆ ବର୍ନେ ବର୍ତବେନ୍ ।
5 உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ଡଅଙ୍ଞେନ୍ ବାତ୍ତେ ଅମଙ୍ବେନ୍ ଅଃଡ୍ଡକୋଲନାୟ୍ ଜନଙ୍ଡେନ୍ ପୁରାଡ଼ାନ୍ ବାତ୍ତେ ଞେନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ସରିନ୍ ଡକୋ; କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ରଡୋ ଡର୍ନେନ୍ ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ସବ୍ୟୁଲନ୍ ଏଡ୍ରକୋତନ୍, ତିଆତେ ଗିୟ୍ଲେ ଞେନ୍ ସର୍ଡାତିଁୟ୍ ।
6 எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள்.
ତିଆସନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଏଙ୍ଗାଲେ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍ଆଡଙ୍ ପ୍ରବୁ ଗାମ୍ଲେ ଏଜାଏନ୍, ଏତ୍ତେଲେ ଆନିନ୍ ବୟନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋନାବା ।
7 நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள்.
କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ରବ୍ଡୋଲନ୍ ପଡ଼ୟ୍ଲନ୍ ଡକୋନାବା, ଆରି ଆମ୍ୱେଞ୍ଜି ଏଞ୍ରାଙେନ୍ ଆ ଞନଙ୍ ବାତ୍ତେ ଡର୍ନେଲୋଙନ୍ ଅବ୍ବୋର୍ସାଲନ୍ ଡାତେଙ୍ ସେଙ୍କେବା ।
8 தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
ଅସମୟ୍, କ୍ରିସ୍ଟନ୍ ଆ ଞନଙ୍ଞଙ୍ବର୍ଜି ଅମ୍ରେଙ୍ଡାଲେ ଏର୍ଜାଡ଼ିକାନ୍ ଆ ବର୍ନେଜି, ମନ୍ରାଞ୍ଜି ଆନିଞ୍ଜିଡମ୍ ଆଗ୍ରବ୍ଡେଲ୍ତେଞ୍ଜି ଆ ବର୍ନେଜି, ପୁର୍ତିଲୋଙନ୍ ସିଲଡ୍ ଆଡ୍ରୁଙ୍ତନାଞନ୍ ଆ ବର୍ନେଜି ଡ ପାତ୍ୟାବରଞ୍ଜି ବର୍ରନ୍ ଆନ୍ନିଙ୍ ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ କଣ୍ଡାୟ୍ଡଙ୍ବେନ୍ ତଡ୍, ତିଆସନ୍ ଜାଗର୍ତ ଡକୋନାବା ।
9 ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ କ୍ରିସ୍ଟନ୍ ଆମଙ୍ ତୁମ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ଗୁନ ଡଅଙନ୍ ଅନ୍ତମ୍ ଡକୋତନ୍ ।
10 ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார்.
ଆରି, ଆନିନ୍ ବାତ୍ତେ ଏମ୍ରାୟ୍ଲନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଅନମେଙ୍ଲୋଙନ୍ ବରିୟ୍ ଡେଲବେନ୍, ଅଡ଼୍କୋ ସନୋଡ଼ାଗଡନ୍ ଡ ଡନେଗଡନ୍ ସିଲଡ୍ କ୍ରିସ୍ଟନ୍ ମା ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ସୋଡ଼ା ।
11 நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது.
କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ମାୟ୍ଲନ୍ ଏଡକୋଲନ୍ ଡେନ୍, ଆମ୍ୱେଞ୍ଜି ଆଗବ୍ରେଡନ୍ ଅନ୍ତମ୍ ଡେତବେନ୍, କେନ୍ଆତେ ମନ୍ରାନ୍ ଆତ୍ରୁବ୍ତେନ୍ ଆ ଗନବ୍ରେଡ୍ ତଡ୍, କେନ୍ଆତେ କ୍ରିସ୍ଟନ୍ ଅମ୍ମେଲେ ଗନବ୍ରେଡନ୍ ଡେତେ, କେନ୍ ଆ ଗନବ୍ରେଡ୍ ବାତ୍ତେ ମନ୍ରାନ୍ ଇର୍ସେ ଡଅଙନ୍ ସିଲଡ୍ ଅଡ଼ୁର୍ତେ ।
12 திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார்.
ଇନିଆସନ୍ଗାମେଣ୍ଡେନ୍ ତବ୍ବୁବ୍ଡାନ୍ ଏଞ୍ରାଙେନ୍ ଆସନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍ ବାତ୍ତେ ତନିଲ୍ତିଲନ୍ ଡେଲବେନ୍, ଆରି ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍ ଆ ୟନର୍ମେଙ୍ ଆସନ୍ ଇସ୍ୱରନ୍ ଆ ବୋର୍ସାଲୋଙ୍ ଡର୍ନେନ୍ ବାତ୍ତେ ଆମ୍ୱେଞ୍ଜି ନିୟ୍ ୟର୍ମେଙ୍ଲବେନ୍ ।
13 நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார்.
ଆରି, ଇର୍ସେନ୍ ଆସନ୍ ଡ ଡଅଙ୍ଲୋଙନ୍ ଆମ୍ୱେଞ୍ଜି ଏର୍ଗନବ୍ରେଡ୍ ଡକୋଲବେନ୍, ତିଆସନ୍, ପୁରାଡ଼ାଲୋଙନ୍ ଆରବୁ ଡକୋଲବେନ୍, ବନ୍ଡ ଇସ୍ୱରନ୍ ନମି ଆମ୍ୱେଞ୍ଜିଆଡଙ୍ ନିୟ୍ କ୍ରିସ୍ଟନ୍ ବାତ୍ତେ ଅବ୍ୟର୍ମେଙ୍ଲବେନ୍, ଆନିନ୍ ଇର୍ସେଲେଞ୍ଜି ଅଡ଼୍କୋନ୍ କେମାଲଙ୍ଲନ୍ ।
14 நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார்.
ଆରି, ବିରୁଦଲୋଙ୍ଲେନ୍ ଆଇଡିଡନ୍ ଆ କନାୟ୍କାୟ୍ବର୍ଜି ଆନିନ୍ ପବ୍ଞିଡେନ୍ କି ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ୟୋଡ୍ଲେ ଅମଙ୍ଲେନ୍ ସିଲଡ୍ ତିଆତେ ସବ୍ଙାଜେନ୍ ।
15 அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.
କ୍ରିସ୍ଟନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଡନେଗଡନ୍ ଡ ସନୋଡ଼ାଗଡନ୍ ଆ ଅତିଆରଜି ରୁୟ୍ଲେ ଆତେମଡଞ୍ଜି ଆଅକ୍କାଡଙ୍ଲୋଙନ୍ ଆନିନ୍ ଅବ୍ଜିନୟ୍ଲନ୍ ।
16 எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும்.
ତିଆସନ୍ ଗାଡାନେନ୍ ଆସନ୍ କି ଜୋମ୍ଜୋମ୍ନେନ୍ ଆସନ୍, ପୁର୍ପୁରନ୍ ଆସନ୍ କି ଅମାସିଆନ୍ ଆସନ୍, ଲୋଲୋନେ ଡିନ୍ନାନ୍ ଆସନ୍, ଆନ୍ନିଙ୍ ଆମ୍ବେଞ୍ଜିଆଡଙ୍ ଅବ୍ଡୋସାଡଙ୍ବେନ୍ ତଡ୍ ।
17 இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது.
ତିଆତେଜି ବିଅଜି ଆରଡ଼ୋତାଞନ୍ ଆ ବର୍ନେଜି ଆ ଉମ୍ମୁଲ୍ ଅନ୍ତମ୍, ବନ୍ଡ କ୍ରିସ୍ଟନ୍ ତୁମ୍ ଅଡ଼୍କୋନ୍ ସିଲଡ୍ ଆଜାଡ଼ିଡମ୍ ।
18 பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது.
ଆନାଜି ଲବ୍ଗଃଡମ୍ନେନ୍ ଡ ପାଙ୍ଲଙ୍ବର୍ମରଞ୍ଜି ଆ ପୁର୍ପୁର୍ଲୋଙ୍ ତନାଲ୍ମଡନ୍ ଆଗ୍ରିଜେଞ୍ଜିଆତେ ସାୟ୍ଲେ ଡଅଙ୍ଡାଗୋ ଆ ବୁଡ୍ଡିଞ୍ଜି ବାତ୍ତେ କାଜ୍ଜାନ୍ ଗର୍ବତଞ୍ଜି, ଆନିଞ୍ଜିଆଡଙ୍ ଗିୟ୍ଲେ ଆମ୍ୱେଞ୍ଜି ବାଉଲ୍ଲି ଡେଡଙ୍ବେନ୍ ।
19 இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது.
ଆନିଞ୍ଜି ଅବବନ୍ ଅନ୍ତମ୍ କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ଆମାୟ୍ନେଜି ତଡ୍, ଅବବନ୍ ଅଡ଼୍କୋନ୍ ଅଜାଙଞ୍ଜି ଆ ଜନୁଡ଼େଲୋଙ୍ ଡ ସାତାରନ୍ ବୟନ୍ ମାୟ୍ଲନ୍ ଡକୋତନ୍, ଆରି ଇସ୍ୱରନ୍ ଆ ସନାୟୁମ୍ ବାତ୍ତେ ସୋଡ଼ାଲେ ପାଙ୍ତେ ।
20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்?
ଆମ୍ୱେଞ୍ଜି କ୍ରିସ୍ଟନ୍ ବୟନ୍ ରବୁଲବେନ୍, ଆରି କେନ୍ ପୁର୍ତିଲୋଙନ୍ ଆରବ୍ସୋଡ଼ାତନେନ୍ ଆ ବୋର୍ସାଜି ସିଲଡ୍ ଅଡ଼ୁର୍ଲବେନ୍, ଏତ୍ତେଲ୍ଡେନ୍ ଇନିବା ଆମ୍ୱେଞ୍ଜି କେନ୍ ପୁର୍ତିନ୍ ଆ ମନ୍ରାଜି ଅନ୍ତମ୍ ଏନ୍ନେଲେ ଏଞଣ୍ଡ୍ରମ୍ତନେ?
21 “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!”
“କେନ୍ଆତେ ଏଞମ୍ଡଙେ, ତିଆତେ ଏଜୋମ୍ଡଙେ, ତିଆତେ ଏସୁଙେଡଙେ,” ଇନିବା ଏନ୍ନେଲେ ଏଅଙ୍ତନେ?
22 இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
କେନ୍ଆତେଜି ବସନ୍ନେଃ ରସମ୍ତେ, କେନ୍ଆତେ ଞଣ୍ଡ୍ରମ୍ଲନ୍ବୋ ଡେନ୍ ଇନ୍ନିଙ୍ ଅଃଞାଙ୍ବୋ, କେନ୍ଆତେଜି ମନ୍ରାଜି ଆଗ୍ରବ୍ଡେଲେଞ୍ଜି ଆ ଞନଙ୍ଞଙ୍ବର୍ଜି ।
23 அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது.
କେନ୍ ଏନ୍ନେଗନ୍ ଆ ଞନଙ୍ଜି, ପୁର୍ପୁରନ୍, ଲବ୍ଗଃଡମ୍ନେନ୍ ଡ ଡଅଙନ୍ ଆ ଅଙ୍ନେ ଜୁନେଜି ସତ୍ତର୍ ଅବ୍ତୁୟ୍ଡମ୍ନେନ୍ ତୁମ୍ ଆସନ୍, ବନ୍ଡ ତେତ୍ତେ ଇନ୍ନିଙ୍ ଲାବ ତଡ୍ ।