< கொலோசெயர் 2 >
1 உங்களுக்காகவும், லவோதிக்கேயா பட்டணத்தில் இருக்கிறவர்களுக்காகவும், இன்னும் நேரடியாக என்னைச் சந்தித்திராத மற்றெல்லோருக்காகவும், நான் எவ்வளவாய் போராடுகிறேன் என்பதை நீங்கள் அறியவேண்டும் என நான் விரும்புகிறேன்.
ତୁମିମଃନାର୍ ଆର୍ ଲାଅଦିକିଆର୍ ଲକ୍ମଃନାର୍, ଆରେକ୍ ଜଃତେକ୍ ଲକ୍ ମକେ ନଃଚିନି ନଃଜାଣି ଆଚ୍ତି, ସେ ସଃବୁ ଲକାର୍ ଗିନେ ମୁୟ୍ଁ କଃତେକ୍ କଃସ୍ଟ୍ କଃରିଆଚି ଇରି ତୁମିମଃନ୍ ଜାଣା ବଃଲି ମର୍ ମଃନ୍ ।
2 நீங்களும் அவர்களும் இருதயத்தில் உற்சாகமடைந்தவர்களாய், அன்பினால் ஐக்கியப்பட்டிருக்கவேண்டும் என்பதே என் நோக்கம். இதனால் நீங்கள் முழுமையான விளக்கத்தை நிறைவாகப் பெற்று, இறைவனுடைய இரகசியத்தை அறிந்துகொள்வீர்கள். அந்த இரகசியம் கிறிஸ்துவே.
ମର୍ ମଃନ୍ ଇରି, ଜଃନ୍କଃରି ତୁମିମଃନ୍ ସଃର୍ଦା ଅଃଉଆସ୍ ଏକ୍ ଆରେକ୍ ଲାଡେ ବାନ୍ଦି ଅଃଉଆସ୍ ଆର୍ ସଃତ୍ ଗିଆନ୍ ଲାବ୍ କଃରି ମୁଳ୍ ବଃର୍ସା ହର୍ ଦଃନ୍ ହାୟ୍ ହୁର୍ନ୍ ଅଃଦିକାରି ଅଃଉଆସ୍ ଇରି ମର୍ ମଃନ୍ । ଇତାର୍ ଗିନେ ତୁମିମଃନ୍ ସଃବୁଲକ୍ ଜାଣାସ୍ ଜେ କ୍ରିସ୍ଟ ହଃକା ଇସ୍ୱରାର୍ ସେ ଗୁପ୍ତ କଃତା ।
3 ஞானம், அறிவு ஆகிய செல்வங்கள் எல்லாம் கிறிஸ்துவுக்குள்ளேயே மறைந்திருக்கின்றன.
କ୍ରିସ୍ଟ ଅଃଉଁଲା ସେ କୁଚିକାଡା ଜୁୟ୍ରି ଇସ୍ୱରାର୍ ବୁଦି ଆର୍ ଗିଆନ୍ ହର୍ ସଃବୁ ଲୁକାୟ୍ ରିଲା ଦଃନାର୍ କାହାଟ୍ ଉଗାଳେଦ୍ ।
4 மனதைக் கவரும் விவாதங்களினால் ஒருவரும் உங்களை ஏமாற்றாதபடிக்கே நான் இதை உங்களுக்குச் சொல்கிறேன்.
କେ ତୁମିମଃନ୍କେ ଚଃଲାକି କଃତାୟ୍ ବୁଲ୍କାୟ୍ ନଃକେରେ, ସେତାକ୍ ଇରି କଃଉଁଲେ ।
5 உடலால் நான் உங்களுடன் இல்லாதிருந்தாலும், ஆவியில் நான் உங்களுடனேயே இருக்கிறேன். நீங்கள் எவ்வளவு ஒழுங்குள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும், கிறிஸ்துவில் நீங்கள் வைத்திருக்கும் விசுவாசத்தில் எவ்வளவு உறுதி உள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதையும் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்.
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଜଦି ନିଜ୍ ଗଃଗାଳେ ମୁୟ୍ଁ ସେତି ନାୟ୍, ଅୟ୍ଲେକ୍ ହେଁ ଆତ୍ମାୟ୍ ତୁମିମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ ଆଚି । ତୁମିମଃନାର୍ ନିକରି ଆର୍ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ଜଃବର୍ ବିସ୍ୱାସି ଇରି ଦଃକି ସଃର୍ଦା ଅଃଉଁଲେ ।
6 எனவே கிறிஸ்து இயேசுவை நீங்கள் கர்த்தராய் ஏற்றுக்கொண்டபடியே, அவரில் தொடர்ந்து வாழுங்கள்.
ବଃଲେକ୍, କ୍ରିସ୍ଟଜିସୁକେ ମାପ୍ରୁ ବଃଲି ମାନି ଆଚାସ୍, ସେନ୍କଃରି ତାର୍ ସଃଙ୍ଗ୍ ମିସିକଃରି ଜିବନ୍ କାଟା;
7 நீங்கள் அவரில் வேரூன்றி கட்டி எழுப்பப்பட்டவர்களாகவும் இருங்கள், உங்களுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டது போலவே விசுவாசத்தில் பெலன் கொண்டவர்களாயும், நன்றி மிக்கவர்களாயும் வாழுங்கள்.
ତୁମିମଃନାର୍ ତଃୟ୍ ରିଲା ସିକ୍ୟା ହଃର୍କାରେ ବିସ୍ୱାସେ ଅଃଦିକ୍ ସଃକ୍ତି ଅଃଉଆ । ତୁମିମଃନାର୍ ମଃନ୍ ଦନ୍ୟବାଦେ ହୁର୍ନ୍ ଅଃଉଅ ।
8 தங்களுடைய வெறுமையான, ஏமாற்றும் தத்துவ ஞானத்தினால், ஒருவனும் உங்களை சிக்கவைக்காதபடி பார்த்துக்கொள்ளுங்கள். இவை மனித பாரம்பரியத்திலும், உலக அடிப்படைக் கொள்கையிலுமே தங்கியிருக்கின்றன. இவை கிறிஸ்துவை அடிப்படையாகக் கொண்டவையல்ல.
ଜଃଗ୍ରାତ୍, କେ ଜଃନ୍କଃରି ତୁମିକେ ଜଃଗତାର୍ ବାମାଉତାର୍ କଃରାବ୍ ଗିଆନେ ଆୟ୍ତେ ନଃରେକ ସେ ସଃବୁ ଗିଆନ୍ କ୍ରିସ୍ଟର୍ ସିକ୍ୟା ତଃୟ୍ ହୁଣି ନାସେ ସେରି ମାନାୟ୍ ମଃନାର୍ ହୁର୍ବେ ହୁଣି ଚାଲି ଆୟ୍ଲା ସିକ୍ୟା ଆର୍ ବିସ୍ୱାସ୍ ଉହ୍ରେ ସାସନ୍ କଃର୍ତିରିଲା ଗଃଗାଳ୍ ନାୟ୍ଲା ସଃକ୍ତି ମଃନାର୍ ସିକ୍ୟାର୍ ହଃଳ୍ ।
9 ஏனெனில் இறைவனின் முழுநிறைவும் மனித உடலின்படி கிறிஸ்துவில் குடிகொண்டிருக்கிறது.
ଅଃବ୍କା ମାନାୟ୍ ରୁହାର୍ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ଇସ୍ୱରାର୍ ଗୁଣ୍ ହୁରୁଣ୍ କଃରି ରଃୟ୍ ଆଚେ ।
10 ஆதலால் நீங்களும் கிறிஸ்துவில் நிறைவு பெற்றவர்களாய் இருக்கிறீர்கள். அவரே எல்லா வல்லமைகளுக்கும், அதிகாரங்களுக்கும் மேலாக தலைவராய் இருக்கிறார்.
ତାର୍ ସଃଙ୍ଗ୍ ମିସ୍ଲାର୍ ଗିନେ ତୁମିମଃନ୍ ଜିବନେ ହୁରୁଣ୍ ଲାବ୍ କଃରିଆଚାସ୍ ବିନ୍ ସଃବୁ ସଃକ୍ତି ଆର୍ ଅଃଦିକାରି ଉହ୍ରେ କ୍ରିସ୍ଟର୍ ସାସନ୍ ହାଣ୍ ହଃକା ସଃବ୍କେ ବଃଡ୍ ।
11 நீங்கள் உங்கள் மாம்ச இயல்பை அகற்றிப்போட்டதினால், நீங்களும் கிறிஸ்துவில் விருத்தசேதனத்தைப் பெற்றீர்கள். இந்த விருத்தசேதனம் மனிதருடைய கைகளினால் செய்யப்பட்டது அல்ல. இது கிறிஸ்துவினாலேயே செய்யப்பட்டது.
ଆରେକ୍ ହେଁ ଗଃଗାଳାର୍ ମଃନ୍ବାବ୍ ଚାଡିକଃରି ତୁମିମଃନ୍ କ୍ରିସ୍ଟର୍ ସଃଙ୍ଗ୍ ମିସିକଃରି ମାନାୟ୍ର୍ କଃର୍ତା ସୁନତ୍ ନଃୟ୍କଃରି କ୍ରିସ୍ଟର୍ ସୁନତ୍ ତଃୟ୍ ସୁନତ୍ ଅୟ୍ ଆଚାସ୍ । ସେରି ମାନାୟ୍ର୍ ହାହ୍ କଃଲା ଗଃଗାଳାର୍ ସଃବୁ ସଃକ୍ତି ତଃୟ୍ ହୁଣି ମୁକ୍ଳାୟ୍ଦ୍ ।
12 திருமுழுக்கினால் நீங்கள் அவருடன் அடக்கம்பண்ணப்பட்டு, இறைவனுடைய வல்லமையில் விசுவாசத்தின் மூலமாக, அவருடனேகூட எழுப்பப்பட்டும் இருக்கிறீர்கள். இறைவனே இறந்தோரிடத்தில் இருந்து கிறிஸ்துவை உயிருடன் எழுப்பினார்.
ତୁମିମଃନ୍ ବାପ୍ତିସମେ ତାର୍ ସଃଙ୍ଗ୍ ମଃରି ଉଟି, ଜୁୟ୍ ଇସ୍ୱର୍ ତାକେ ମଃଲା ତଃୟ୍ ହୁଣି ଉଟାୟ୍ଲା ତାର୍ କଃରୁହାର୍ତା ସଃକ୍ତିଏ ସଃତ୍ କଃରି କ୍ରିସ୍ଟର୍ ସଃଙ୍ଗ୍ ଆରେକ୍ ଉଟି ଆଚାସ୍ ।
13 நீங்கள் உங்கள் பாவங்களிலேயும், மாம்சத்தின்படி விருத்தசேதனம் செய்யப்படாததிலேயும் இறந்தவர்களாய் இருக்கையில், இறைவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிர்ப்பித்தார். அவர் நம்முடைய பாவங்களையெல்லாம் மன்னித்தார்.
ହାହାର୍ ଗିନେ ଆର୍ ଗଃଗାଳେ ଅଜିଉଦି ରିଲାକେ ତୁମିମଃନ୍ ତ ମଃରି ରିଲାସ୍, ତୁମିମଃନ୍କେ ହେଁ ଇସ୍ୱର୍ ତାର୍ ଜିବନ୍ ଦଃୟ୍ଆଚେ; ସେ ତ ଅଃମିମଃନ୍କ୍ ସଃବୁ ହାହ୍ କେମା କଃରିଆଚେ ।
14 நமக்கு விரோதமாய் எழுதப்பட்டிருந்த கட்டளைகளைக்கொண்ட கடன் பத்திரத்தை அவர் நீக்கி, அதைச் சிலுவையில் ஆணியடித்து இல்லாமல் அழித்துவிட்டார்.
ଆରେକ୍ ବିଦି ଉହ୍ରେ ଅଃମିମଃନାର୍ ବିରଦେ ଜୁୟ୍ ଦଃସ୍ ଲେକା ରିଲି, ସେରି ସେ ନାସ୍ କଃରି କ୍ରୁସେ ମାରିକଃରି ଅଃମାର୍ ହାଁୟ୍ ରିଲାର୍ ହାହ୍ ଗୁଚାୟ୍ ଆଚେ
15 அவர் ஆளும் வல்லமைகளிடமிருந்தும், அதிகாரங்களிடமிருந்தும் அவற்றின் வல்லமைகளைக் களைந்து, சிலுவையினால் அவற்றின்மேல் வெற்றிகொண்டு, அவற்றைப் பகிரங்கக் காட்சிப் பொருளாக்கினார்.
ଆରେକ୍ ସେ କ୍ରୁସେ କ୍ରିସ୍ଟ ସଃବୁ ରଃକମାର୍ ସଃକ୍ତି ଆର୍ ଅଃଦିକାରି ତଃୟ୍ ହୁଣି ନିଜ୍କେ ମୁକ୍ତ କଃରି ଆଚେ ଆର୍ ସେମଃନ୍କେ ବାନ୍ଦି କଃରି ନିଜେ ଜିଣିକଃରି ଜାତାବଃଳ୍ ସଃବୁ ଲକାର୍ ମୁୟେ ସେମଃନ୍କେ ଲାଜ୍ କଃରାୟ୍ ଆଚେ ।
16 எனவே நீங்கள் சாப்பிடுவது, குடிப்பது என்பவைகளைக் குறித்தோ, பண்டிகைகளையும், அமாவாசைகளையும், ஓய்வுநாட்களையும் குறித்தோ, ஒருவரும் உங்களை குற்றப்படுத்தாமல் இருக்கவேண்டும்.
କାଉଆ ହିଉଆ କି ହଃର୍ବ୍, ଦଃର୍ମ୍ଦିନ୍ କି କଃଉଁଣାଜନ୍ ହଃର୍ବ୍ କି ବିସାଉଁଣି ବାରାର୍ କଃତାୟ୍ କେ ତୁମିକେ ଦଃସି ବିଚାର୍ ନଃକେରତ୍ ।
17 இவையெல்லாம் வரவேண்டியிருந்த காரியங்களின் வெறும் நிழலே; உண்மைப் பொருளோ கிறிஸ்துவில் காணப்படுகின்றது.
ସେରିମଃନ୍ ଅୟ୍ଲି ଆସୁଲା ଦିନେ ଗଃଟ୍ତା ବିସୟାର୍ ହାଁୟ୍ ଗଃଗାଳ୍ ହର୍, ମଃତର୍ କ୍ରିସ୍ଟ ହଃକା ସଃବୁ ବିସୟାର୍ ମୁଳ୍ ।
18 பொய்யான தாழ்மையிலும், இறைவனின் தூதர்களை ஆராதனை செய்வதிலும் மகிழ்கிற அவர்களால், நீங்கள் உங்கள் வெகுமதியைப் பெற்றுக்கொள்வதை இழந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படிப்பட்டவன் தான் கண்ட தரிசனங்களைக்குறித்து, அதிகமாய் விவரித்துச் சொல்கிறான். ஆவிக்குரிய தன்மையற்ற அவனுடைய மனம் வீணான சிந்தனைகளில் பெருமைகொள்கிறது.
ଜୁୟ୍ମଃନ୍ ଦଃର୍ସନ୍ ଚଃଲାକି ସୁସାର୍ ଆର୍ ସଃର୍ଗ୍ଦୁତ୍ ହୁଜା ଉହ୍ରେ ମଃନ୍ ଦଃୟ୍ ନିଜ୍କେ ଗଃର୍ବ୍ କଃର୍ତି, ସେମଃନ୍କେ ଦଃକି ନିଜ୍କେ ସାନ୍ ବାବାନାଁୟ୍ ଇହର୍ ଲକ୍ମଃନ୍ ନିଜ୍କେ ମାନାୟ୍ ମଃନାର୍ ବାବ୍ନାୟ୍ ହଲ୍ୟା ଗଃର୍ବେ ଗଃର୍ବ୍ କଃର୍ତି ।
19 இப்படிப்பட்டவன் தலையாகிய கிறிஸ்துவிலிருந்து தொடர்பை இழந்துவிட்டான். அவரிடமிருந்தே மூட்டுக்களினாலும் தசைநார்களினாலும் தாங்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டிருக்கிற முழு உடலும், இறைவன் வளர்ச்சியைக் கொடுக்க, அது வளர்ச்சியைப் பெறுகிறது.
ଗଃଗାଳାର୍ ମୁଣ୍ଡ୍ ହର୍ କ୍ରିସ୍ଟର୍ ତଃୟ୍ ହୁଣି ସେମଃନ୍ ଦୁର୍ ଅୟ୍ ଆଚ୍ତି ତାର୍ତଃୟ୍ ହୁଣି ଗଃଗାଳାର୍ ସବୁ ଗଃଟିମଃନ୍ ଆର୍ ଚିର୍ମଃନାର୍ ଗିନେ ଉହ୍କାର୍ ହାୟ୍ ଦୁମା ଅୟ୍ଦ୍ ଆର୍ ଗଃଗାଳ୍ ଇସ୍ୱରାର୍ ଇଚା ହଃର୍କାରେ ବାଡେଦ୍ ।
20 நீங்கள் கிறிஸ்துவுடனேகூட உலகத்தின் அடிப்படைக் கொள்கைகளுக்கு இறந்தீர்கள். அப்படியானால் நீங்கள் அதற்கு இன்னும் உட்பட்டவர்கள்போல் உலகத்தின் கட்டளைகளுக்கு ஏன் கீழ்ப்படிகிறீர்கள்?
ତୁମିମଃନ୍ କ୍ରିସ୍ଟର୍ ସଃଙ୍ଗ୍ ମଃରି ଆଚାସ୍ ଆର୍ ଇ ରାଜି ଉହ୍ରେ ରାଜ୍ କଃର୍ତା ସଃକ୍ତିମଃନାର୍ ବଃଳେହୁଣି ମୁକ୍ଳି ଆଚାସ୍ । ତଃବେ କାୟ୍କଃରୁକ୍ ତୁମିମଃନ୍ ଜଃଗତାର୍ ଲକ୍ ହର୍ ଜିବନ୍ କାଟୁଲାସ୍? କାୟ୍କଃରୁକ୍ ତୁମିମଃନ୍ ଇହର୍ ବିଦି ସଃବୁ ମାନୁଲାସ୍,
21 “பயன்படுத்தாதே! ருசிபாராதே! தொடாதே!”
“ଇରି ଦଃରା ନାୟ୍, ସେରି କାହାନାୟ୍, ସେରି ଚିଉଆ ନାୟ୍ ।”
22 இவையெல்லாம் காலப்போக்கில் ஒழிந்துபோகின்றனவே. ஏனெனில் இவை மனிதருடைய கட்டளைகளையும், போதனைகளையும் அடிப்படையாகக் கொண்டவை.
ଇସଃବୁ ବିସୟ୍ ଦୁୟ୍ ଦିନାର୍ । ଇରି ବେବାର୍ ଅଃଉତା ସଃଙ୍ଗେ ସଃଙ୍ଗେ ହଲ୍ୟା ଅୟ୍ଦ୍ । ଇସଃବୁ ଅଃବ୍କା ମାନାୟ୍ ହାଜ୍ଲା ନିଅମ୍ ଆର୍ ସିକ୍ୟା ।
23 அவர்களுடைய இந்தக் கட்டளைகள், தாங்களே தங்கள்மேல் திணித்துக் கொண்ட வழிபாட்டையும், பொய்த் தாழ்மையையும், உடல் ஒடுக்குதல்களையும் பொறுத்தவரையில் ஞானமானதுபோல் தோன்றலாம். ஆனால் உடல் ஆசைகளை அடக்கி ஆள்வதற்கு இவை பயனற்றது.
ବାୟ୍ଦ୍ରେ ସଃର୍ଗ୍ଦୁତ୍ ହୁଜା, ଚଃଲାକି, ସୁସାର୍, ଦଃର୍ମି ଆର୍ ଗଃଗାଳ୍କେ କଃସ୍ଟ୍ ଦେତାର୍ ଗିନେ ଗିଆନାର୍ ନାଉଁ ହାଇ ଆଚେ, ମଃତର୍ ସେତିର୍ ମଲ୍ ନାୟ୍; ସେତାର୍ଗିନେ ଗଃଗାଳାର୍ ମଃନ୍ବାବାର୍ ହୁର୍ନ୍ ଅୟ୍ଦ୍ ।