< அப்போஸ்தலர் 28 >

1 நாங்கள் பாதுகாப்பாய் கரைசேர்ந்தபின்பு அந்தத் தீவு மாலித்தா என்று அழைக்கப்பட்டதை அறிந்தோம்.
ଅଃମିମଃନ୍‌ ରଃକ୍ୟା ହାୟ୍‌ ହଃଚ୍‌ଲାକେ ସେ ଜଃଗା ମିଲିତି ଟାପୁ ବଃଲି ଜାଣ୍‌ଲୁ ।
2 அந்தத் தீவில் இருந்தவர்கள் வழக்கத்திற்கு மாறான தயவை எங்களுக்குக் காண்பித்தார்கள். அங்கு மழையும் குளிருமாய் இருந்ததினால், அவர்கள் நெருப்புமூட்டி, எங்கள் அனைவரையும் அழைத்துச் சென்றார்கள்.
ଆର୍‌ ସେତିର୍‌ ଅଜିଉଦି ଲକ୍‌ମଃନ୍ ଅଃମିକ୍‌ ବଃଡେ ଦଃୟା ଦଃକାୟ୍‌ଲାୟ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ବଃର୍ସା ଆର୍‌ ସିତ୍‌ ଅଃଉତି ରିଲାକ୍‌ ସେମଃନ୍ ଜୟ୍‌ ଲାଗାୟ୍‌ ଅଃମିକ୍‌ ତାହୁକ୍‌ ଦିଲାୟ୍‌ ।
3 பவுல் ஒரு விறகுக்கட்டைச் சேர்த்துக் கொண்டுவந்து, அதை நெருப்பிலே போட்டான். அப்பொழுது விறகுக்குள் இருந்து ஒரு விரியன் பாம்பு, சூடுபட்டதனால் வெளியே வந்து, பவுலின் கையை இறுகப்பிடித்துக் கொண்டது.
ମଃତର୍‌ ପାଉଲ୍‌ ହଃଣ୍ଡେକ୍‌ ଜାଟି ରୁଣ୍ଡାୟ୍‌ ଆଣି ଜୟେ ହଃକାୟ୍‌ଲାକ୍‌ ତାହାତାର୍‌ ଗିନେ ଗଟେକ୍‌ ବିସ୍‌ ସାହ୍‌ ବାରୟ୍‌ ପାଉଲାର୍‌ ଆତେ ଚାବି ଅଳାୟ୍‌ ଅୟ୍‌ରିଲି ।
4 அந்தத் தீவில் இருந்தவர்கள் பாம்பு அவனுடைய கையில் தொங்குவதைக் கண்டபோது, அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து, “இவன் ஒரு கொலை பாதகனாயிருக்கவேண்டும். இவன் கடலில் இருந்து தப்பியபோதும்கூட, நீதி இவனை உயிரோடு வாழவிடவில்லை” என்றார்கள்.
ସେତି ଲକ୍‌ମଃନ୍ ତାର୍‌ ଆତେ ସେ ସାହ୍‌କେ ଅଳାୟ୍‌ ଅୟ୍‌ରିଲାର୍‌ ଦଃକି, ତାକାର୍‌ ତାକାର୍‌ ବିତ୍ରେ କଃଉଆକଇ ଅୟ୍‌ଲାୟ୍‌, “ଇ ବିଦେସିଆ ଲକ୍‌ ବାୟ୍‌ଦ୍‌ରେ ହଃତ୍ୟାକାରି, ସଃମ୍‌ନ୍ଦେ ହୁଣି ରଃକ୍ୟା ହାୟ୍‌ଲାକ୍‌ ହେଁ ଦଃର୍ମ୍‌ ଆକ୍‌ ଜିବନ୍‌ ରେଉଁକେ ନଃଦେଉଁଲି ।”
5 ஆனால் பவுலோ அந்தப் பாம்பை உதறி நெருப்பில் போட்டான். அவனுக்கு எந்தவிதத் தீங்கும் நேரிடவில்லை.
ମଃତର୍‌ ପାଉଲ୍‌ ସେ ସାହ୍‌କେ ଉର୍ଲି ଜୟେ ହଃକାୟ୍‌ଲା, ଆର୍‌ ତାର୍‌ କାୟ୍‌ହେଁ ନୟ୍‌ଲି ।
6 அந்த மக்களோ, அவன் வீங்கி திடீரென விழுந்து சாவான் என்று எதிர்பார்த்தார்கள். நீண்ட நேரமாகியும்கூட அவர்கள் எதிர்பார்த்தபடி, வழக்கத்திற்கு மாறாக அவனுக்கு எதுவும் நேரிடாததைக் கண்டு, அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள். இவன் ஒரு தெய்வம் என்று அவர்கள் சொன்னார்கள்.
ସେ ହୁଲି ଜାୟ୍‌ଦ୍‌ କି ତଃତ୍‌କାଣ୍ ମଃରେଦ୍‌ ବଃଲି ଦଃକ୍ତି ରିଲାୟ୍‌, ମଃତର୍‌ ବୁତେକ୍‌ ବେଳ୍‌ ହଃତେକ୍‌ ଦଃକ୍‌ଲା ହଃଚେ ହେଁ ତାର୍‌ କାୟ୍‌ନୟ୍‌ଲି, ଇରି ଦଃକି ସେମଃନ୍ କଃଉଆକଇ ଅୟ୍‌ଲାୟ୍‌, “ଏ ଗଟେକ୍‌ ମାପ୍ରୁ ।”
7 அந்தத் தீவைச் சேர்ந்தவர்களுக்குத் தலைவனாயிருந்த புபிலியு என்பவனுக்குச் சொந்தமான பெரிய தோட்டம் அருகாமையில் இருந்தது. அவன் எங்களைத் தனது வீட்டிற்குள் அழைத்து, மூன்று நாட்களாக எங்களுக்கு விருந்து உபசாரம் செய்தான்.
ସେ ଜଃଗାର୍‌ ଚଃମେ ପୁବ୍‌ଲିଆ ନାଉଁଆର୍‌ ଗଟେକ୍‌ ମୁଳିକା ଲକାର୍‌ ବୁୟ୍‌ଁ ଆର୍‌ ଗଃର୍‌ ରିଲି, ଅଃମିକ୍‌ କୁଦି ତିନିଦିନ୍ ହଃତେକ୍‌ ତାର୍‌ ଗଃରେ ରେଉଁକ୍‌ ଦିଲା ଆର୍‌ ଜଃତୁନ୍‌ କଃଲା ।
8 அவனுடைய தகப்பனோ, காய்ச்சலினாலும் வயிற்று அளச்சலாலும் நோயுற்றுப் படுக்கையிலேயே கிடந்தான். பவுல் அவனைப் பார்க்கும்படி உள்ளேப் போய், மன்றாடியபின் அவன்மேல் தனது கைகளை வைத்து, அவனை குணமாக்கினான்.
ସଃଡେବଃଳ୍‌ ପୁବ୍‌ଲିଆର୍‌ ଉବାସି ଜଃର୍‌ ଆର୍‌ ବଃନ୍ଦାଳ୍‌ ଗିନେ ସୟ୍‌ରିଲା । ଆର୍‌ ପାଉଲ୍‌ ବିତ୍ରେ ଜାୟ୍‌ ପାର୍ତ୍‌ନା କଃଲା ଆର୍‌ ତାର୍‌ ଉହ୍ରେ ଆତ୍‌ ସଃଙ୍ଗାୟ୍‌ ତାକେ ଉଜ୍‌ କଃଲା ।
9 இது நடந்தபோது, அந்தத் தீவிலிருந்த மற்ற நோயாளிகளும் வந்து, சுகம் பெற்றுக்கொண்டார்கள்.
ଇ ଗଃଟ୍‍ଣା ହଃଚେ ସେ ମିଲ୍‌ତିର୍‌ ସଃବୁ ରଗିମଃନ୍ ଆସି ଉଜ୍‌ ଅୟ୍‌ଲାୟ୍‌ ।
10 அவர்கள் பலவழிகளில் எங்களுக்கு மதிப்புக் கொடுத்தார்கள். சிறிதுகாலம் கழித்து நாங்கள் புறப்பட ஆயத்தமானபோது, எங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுத்து உதவினார்கள்.
ସେମଃନ୍ ହେଁ ଆମିମଃନ୍‌କେ ବଃଳେ ମାନ୍‌ତି କଃଲାୟ୍‌, ଅଃମି ଜଃଉଁକେ ବାରାଉତା ବଃଡେ ଅଃମାର୍‌ ଦଃର୍‌କାର୍‌ ଆସ୍ତିବାଡି ମଃନ୍‌ହେଁ ଦିଲାୟ୍‌ ।
11 மூன்று மாதங்களுக்குப் பிறகு, குளிர்க்காலத்தைக் கழிப்பதற்காக அந்தத் தீவிலே தங்கியிருந்த ஒரு கப்பலில் நாங்கள் புறப்பட்டோம். அது அலெக்சந்திரியாவைச் சேர்ந்த கப்பல். அந்தக் கப்பலின் முகப்பு, இரட்டைத் தெய்வங்களின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருந்தது.
ତିନିମାସ୍‌ ହଃଚେ ଅଃମିମଃନ୍‌ ଗଟେକ୍‌ ଆଲେକ୍‌ଜେଣ୍ଡ୍ରିଆର୍‌ ଜାଜେ ଚଃଗି ଜଃଉଁକେ ଦଃର୍ଲୁ, ସେ ଡଙ୍ଗା ଇ ଜଃଗାୟ୍‌ ସିତ୍‌ କାଳ୍‌ ରିଲି, ତାର୍‌ ଚିନ୍ ଅୟ୍‌ଲି ଜଳା ମାପ୍ରୁ ।
12 நாங்கள் சீரகூசா பட்டணத்தைச் சென்றடைந்து, அங்கே மூன்று நாட்கள் தங்கினோம்.
ସୁରାକୁସ୍‌ ଗଃଳେ ହଚ୍‌ଲୁ, ସେତି ଅଃମିମଃନ୍‌ ତିନିଦିନ୍ ରିଲୁ ।
13 பின் அங்கிருந்து புறப்பட்டு, ரேகியும் துறைமுகத்தை அடைந்தோம். மறுநாள் தெற்கிலிருந்து காற்று வீசியது. நாங்கள் அதற்கடுத்த நாள், புத்தேயோலி துறைமுகத்தைச் சென்றடைந்தோம்.
ଆରେକ୍‌ ସେତି ହୁଣି ଜାଜେ ଜାୟ୍‌ ରେଗିଅ ତଃୟ୍‌ ହଚ୍‌ଲୁ ଦୁୟ୍‌ ଦିନାର୍‌ ହଃଚେ ଉତୁର୍‌ ଦିଗ୍ ବାଟ୍ୟାର୍‌ ବାଉ ଆୟ୍‌ଲାକ୍‌ ଆରେକ୍‌ ଗଟ୍‌ ଦିନ୍ ପୁତେଅଲିକେ ଆୟ୍‌ଲୁ ।
14 அங்கே நாங்கள் சில சகோதரர்களைச் சந்தித்தோம். அவர்கள் எங்களைத் தங்களுடன் ஒரு வாரம் தங்கும்படி அழைத்தார்கள். அதற்குப் பின்பு நாங்கள் ரோம் நகரத்துக்குப் போனோம்.
ସେ ଟାଣେ ଅଃମିମଃନ୍‌ କ୍ରିସ୍ଟାନ୍ ବିସ୍ୱାସି ବାୟ୍‌ମଃନ୍‌କେ ବେଟ୍‌ ଅୟ୍‌ଲୁ, ଆର୍‌ ସେମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ଆଟ୍‌ଦିନ୍ ରେଉଁକ୍‌ ସେମଃନ୍ ଅଃମିକ୍‌ ଗଃଉଆରି କଃଲାୟ୍‌, ଅଃନ୍‌କଃରି ଅଃମିମଃନ୍‌ ରମ୍‌ ହଚ୍‌ଲୁ ।
15 அங்குள்ள சகோதரர்கள் நாங்கள் வருகிறோம் என்று கேள்விப்பட்டதினால், அவர்கள் எங்களைச் சந்திக்கும்படி பயணமாய் புறப்பட்டு, அப்பியூ சந்தை, முச்சத்திரம் ஆகிய இடங்கள்வரை வந்தார்கள். பவுல் அவர்களைக் கண்டு இறைவனுக்கு நன்றி செலுத்தி, உற்சாகமடைந்தான்.
ଅଃମାର୍‌ କବୁର୍‌ ସୁଣି ରମ୍‌ ତଃୟ୍‌ର୍‌ ବିସ୍ୱାସି ବାୟ୍‌ ବେଣିମଃନ୍‌ ଅଃମିକ୍‌ ଅପିଅର୍‌ ଆଟ୍‌, ଆର୍‌ ତିନି ସରାୟ୍‌ ଗଃର୍‌ ହଃତେକ୍‌ ଅଃମିକ୍‌ ବେଟ୍‌ ଅଃଉଁକେ ଆୟ୍‌ଲାୟ୍‌, ଆରେକ୍‌ ପାଉଲ୍‌ ସେମଃନ୍‌କେ ଦଃକି ଇସ୍ୱର୍‌କେ ଜୁଆର୍‌ କଃରି ସାସ୍‌ ହାୟ୍‌ଲା ।
16 நாங்கள் ரோம் நகரத்தைச் சென்றடைந்தபோது, பவுல் ஒரு படைவீரனின் காவலின்கீழ், தனி வீட்டில் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டான்.
ଆର୍‌ ଅଃମିମଃନ୍‌ ରମ୍‌ ତଃୟ୍‌ ହଚ୍‌ଲାକ୍‌ ପାଉଲ୍‌କେ ଜାଗ୍‌ତା ସଃଇନ୍‌ମଃନ୍ ସଃଙ୍ଗେ ଅଃଲ୍‌ଗା ତଃୟ୍‌ ରେଉଁକ୍‌ ଦିଆ ଅୟ୍‌ଲି ।
17 மூன்று நாட்களுக்குபின், அவன் யூதர்களின் தலைவர்களை ஒன்றாக அழைத்தான். அவர்கள் ஒன்றுகூடி வந்தபோது, பவுல் அவர்களைப் பார்த்துச் சொன்னதாவது: “என் சகோதரரே, நம்முடைய மக்களுக்கு விரோதமாகவோ, நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கு விரோதமாகவோ, எதையுமே நான் செய்யவில்லை. ஆனால் நான் எருசலேமிலே கைது செய்யப்பட்டு, ரோமரிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறேன்.
ତିନିଦିନ୍ ଗଃଲାକେ ପାଉଲ୍‌ ଜିଉଦିମଃନାର୍‌ ବଃଡ୍‌ବଃଡ୍ ଲକ୍‌କେ କୁଦ୍‌ଲା ଆର୍‌ ସେମଃନ୍ ରୁଣ୍ଡ୍‌ଲାକ୍‌, ପାଉଲ୍‌ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ଏ ଇସ୍ରାଏଲାର୍‌ ବାୟ୍‌ବେଣିମଃନ୍, ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ମୁୟ୍‌ଁ ନିଜାର୍‌ ଲକ୍‌ ବିରଦେ କି ଅଃମାର୍‌ ଦାଦିବାବୁର୍‌ ରିତିବିଦି ବିରଦେ କାୟ୍‌ରି ନଃକେରି, ଅୟ୍‌ଲେକ୍‌ ହେଁ ଜିରୁସାଲମ୍‌ ତଃୟ୍‌ହୁଣି ରମିୟସମଃନାର୍‌ ଆତେ ସଃହ୍ରିଅୟ୍‌ଲେ ।
18 அவர்கள் என்னை விசாரணை செய்து, மரணதண்டனையை பெறக்கூடிய குற்றம் எதையும் நான் செய்யாததனால், என்னை விடுவிக்க விரும்பினார்கள்.
ସେମଃନ୍ ମର୍‌ ବିଚାର୍‌ କଃରି ମକେ ହଃଚାର୍ଲା ହଃଚେ ମର୍‌ ତଃୟ୍‌ ମଃର୍ନ୍‌ ଦଃଣ୍ଡାର୍‌ କାୟ୍‌ ଦଃସ୍‌ ନଃରିଲାକ୍‌ ମକ୍‌ ଚାଡି ଦେଉଁକ୍‌ ମଃନ୍ କଃର୍ତି ରିଲାୟ୍‌ ।
19 ஆனால் யூதர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, நான் ரோமப் பேரரசன் சீசருக்கு மேல்முறையீடு செய்யும்படி கேட்க நேர்ந்தது. ஆனால், என்னுடைய மக்களுக்கு விரோதமான குற்றச்சாட்டு எதுவும் என்னிடத்தில் இருந்ததில்லை.
ମଃତର୍‌ ଜିଉଦିମଃନ୍ ମକ୍‌ ଚାଡ୍‌ତା କଃତାର୍‌ ବିରଦେ କୟ୍‌ଲାକ୍‌ ମୁୟ୍‌ଁ କାଇସର୍‌ ଚଃମେ ବିଚାର୍‌ ଅଃଉଁକେ ଗଃଉଆରି କଃଲେ, ମର୍‌ ନିଜାର୍‌ ଜାତି ବିରଦେ କାୟ୍‌ କଃତା ନଃରିଲି, ସେରି ନାୟ୍‌ ।
20 இதனாலேயே நான் உங்களைக் கண்டு, உங்களிடம் பேசவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன். இஸ்ரயேலர் எதிர்பார்த்திருந்தவரின் காரணமாகவே நான் இந்தச் சங்கிலிகளால் கட்டப்பட்டிருக்கிறேன்” என்றான்.
ସେତାର୍‌ଗିନେ ଇ ବିସୟେ ମୁୟ୍‌ଁ ତୁମିମଃନ୍‌କେ ମର୍‌ ସଃଙ୍ଗ୍ ବେଟ୍‌ ଅୟ୍‌ କଃତାବାର୍ତା କଃରୁକେ ଗଃଉଆରି କଃଲେ, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇସ୍ରାଏଲାର୍‌ ବଃର୍ସା ଗିନେ ମୁୟ୍‌ଁ ଇ ସିକ୍ଳାୟ୍‌ ବାନ୍ଦାୟ୍‌ ଅୟ୍‌ ଆଚି ।”
21 அதற்கு அவர்கள், “உன்னைக்குறித்து யூதேயாவிலிருந்து கடிதங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை. அங்கிருந்து வந்த சகோதரர்களில், யாரும் உன்னைக் குறித்துத் தீமையான எதையும் அறிவிக்கவோ, சொல்லவோ இல்லை.
ସେତାକ୍‌ ସେମଃନ୍ ତାକେ କୟ୍‌ଲାୟ୍‌, “ତର୍‌ କଃତା ଜିଉଦା ଦେସେ ହୁଣି ଅଃମିମଃନ୍‌ କାୟ୍‌ ଚିଟି ନଃହାଉଁ, କି ବାୟ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେ କେ ଇତି ଆସି ତର୍‌ କଃତା କାୟ୍‌ କଃରାବ୍‌ କବୁର୍‌ ନଃଦେତି କି ନଃକଃଉତି ।
22 ஆனால், உன்னுடைய கருத்துக்களை நாங்கள் கேட்க விரும்புகிறோம். ஏனெனில், எல்லா இடங்களிலும் உள்ள மக்கள், இந்தப் பிரிவினை மார்க்கத்திற்கு விரோதமாக பேசுகிறதை நாங்கள் அறிந்திருக்கிறோம்” என்றார்கள்.
ମଃତର୍‌ ତର୍‌ ବାବ୍‌ କାୟ୍‌ରି ସେରି ଅଃମିମଃନ୍‌ ତର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ସୁଣୁକ୍‌ ମଃନ୍‌କଃରୁଲୁ, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇ ଦଃଳ୍‌ ବିରଦେ କଃତା କଃଉଁଲାୟ୍‌ ବଃଲି ଅଃମି ଜାଣୁ, ସଃବୁ ହାକ୍‌ ତର୍‌ ଦଃଳ୍‌ ବିରଦେ କଃତାକ୍‌ ଅଃଉଁଲାୟ୍‌ ।”
23 அவர்கள் பவுலைச் சந்திக்க ஒருநாளை நியமித்து, பவுல் தங்கியிருந்த இடத்துக்குப் பெருங்கூட்டமாக வந்தார்கள். அவன் காலையிலிருந்து மாலைவரை, இறைவனுடைய அரசைக் குறித்து விவரமாய் அவர்களுக்கு அறிவித்தான். மோசேயினுடைய சட்டத்திலிருந்தும், இறைவாக்கினரின் புத்தகங்களிலிருந்தும் இயேசுவைப்பற்றி எடுத்துக் காண்பித்து, அவர்களை நம்பவைக்க முயற்சித்தான்.
ଇତାକ୍‌ ସେମଃନ୍ ତାର୍‌ ସଃଙ୍ଗ୍ ଗଟେକ୍‌ ଦିନ୍ ଟିକ୍‌କଃରି, ବୁତେକ୍‌ ଲକ୍‌ ତାର୍‌ ବାସାୟ୍‌ ଆୟ୍‌ଲାୟ୍‌ ଆର୍‌ ସେ ସଃକାଳ୍‌ ହୁଣି ସଃଞ୍ଜ୍ ହଃତେକ୍‌ ସେମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ କଃତାଅୟ୍‌ ଇସ୍ୱରାର୍‌ ରାଇଜାର୍‌ ବିସୟେ ସାକି ଦିଲା, ଆରେକ୍‌ ମସାର୍‌ ବିଦି ଆରେକ୍‌ ବାବ୍‌ବାଦିମଃନାର୍‌ ସାସ୍ତର୍‌କେ ଦଃରି ଜିସୁର୍‌ କଃତା ସେମଃନ୍‌କେ ବିସ୍ୱାସ୍‌ କଃରାଉଁକ୍‌ କୟ୍‌ଲା ।
24 சிலர் அவன் சொன்னதைச் சம்மதித்தார்கள், ஆனால் மற்றவர்களோ அதை விசுவாசிக்கவில்லை.
ସେତାକ୍‌ କେକେ କୟ୍‌ଲା କଃତାକ୍‌ ବିସ୍ୱାସ୍‌କଃଲାୟ୍‌ ମଃତର୍‌ କେକେ ସଃତ୍‌ ନଃକେଲାୟ୍‌ ।
25 அவர்கள் தங்களுக்குள்ளேயே மனவேற்றுமைக் கொண்டவர்களாய் இருந்தார்கள். அவர்கள் அவ்விடத்தைவிட்டுப் போவதற்குமுன், பவுல் அவர்களைப் பார்த்து இறுதியாகச் சொன்னதாவது: “பரிசுத்த ஆவியானவர் இறைவாக்கினன் ஏசாயாவின் மூலமாய் பேசியபொழுது, உங்கள் முற்பிதாக்களுடன் இதைப் பொருத்தமாகத்தான் பேசியுள்ளார்:
ଆରେକ୍‌ ସେମଃନାର୍‌ ବିତ୍ରେ ଗଟେକ୍‌ ମଃନ୍ ନୟ୍‌ଲାକ୍‌ ସେତି ହୁଣି ଗଃଳାୟ୍‌ । ସେମଃନ୍ ଜାତାବଃଳ୍‌ ପାଉଲ୍‌ ଗଟେକ୍‌ କଃତା କୟ୍‌ଲା, “ତୁମିମଃନାର୍‌ ଦାଦିବାବୁମଃନ୍‌କେ ବାବ୍‌ବାଦି ଜିସାୟ୍‌ ହୁଣି ପବିତ୍ର ଆତ୍ମା ସଃତ୍‌ କୟ୍‌ ଆଚେ ।”
26 “‘இந்த மக்களிடத்தில் போய், “நீங்கள் எப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருப்பீர்கள், ஆனால் ஒருபோதும் உணரமாட்டீர்கள்; நீங்கள் எப்பொழுதும் காண்பீர்கள், ஆனால் ஒருபோதும் அறிந்துகொள்ளமாட்டீர்கள் என்று சொல்.”
ସେ କୟ୍‌ଆଚେ ଇ ଲକ୍‌ମଃନାର୍‌ ତଃୟ୍‌ ଜାୟ୍‌ କଃଉଆ, ତୁମିମଃନ୍ ସୁଣୁସୁଣୁ ସୁଣାସ୍‌, ମଃତର୍‌ ନଃବୁଜାସ୍‌, ଆରେକ୍‌ ଦଃକୁଦଃକୁ ଦଃକାସ୍‌ ମଃତର୍‌ ଦଃକୁ ନଃହାରାସ୍‌ ।
27 ஏனெனில் இந்த மக்களுடைய இருதயம் மரத்துப்போய் இருக்கிறது; அவர்கள் தங்கள் காதுகளால் மிக அரிதாகவே கேட்கிறார்கள், தங்களுடைய கண்களையும் மூடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் தங்கள் கண்களால் காணாமலும், தங்கள் காதுகளால் கேட்காமலும், தங்கள் இருதயங்களினால் உணர்ந்து, மனம் மாறாமலும் இருக்கிறார்கள்; நானும் அவர்களைக் குணமாக்காமல் இருக்கிறேன்.’
କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ଇ ଲକ୍‌ମଃନ୍ ଅଃବୁଜ୍ୟା, ସେମଃନ୍ କାନେ କଃସ୍ଟେ ସୁଣ୍‌ଲାୟ୍‌, ଆର୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ଆକି ଲୁମଃଲାୟ୍‌, ଜଃନ୍‌କଃରି ସେମଃନ୍ ଆକାୟ୍‌ ନଃଦେକ୍‌ତି, ଆର୍‌ କାନେ ନଃସୁଣ୍‌ତି, ଆର୍‌ ଗଃର୍ବେ ନଃବୁଜ୍‌ତି, ଆରେକ୍‌ ବାଉଳିନାସ୍ତି, ଆର୍‌ ଅଃମି ସେମଃନ୍‌କେ ଉଜ୍‌ ନଃକେରୁ ।
28 “ஆகையால், இறைவனுடைய இரட்சிப்பு யூதரல்லாத மக்களுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது என்பதையும், அவர்கள் அதற்குச் செவிகொடுப்பார்கள் என்பதையும், நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்றான்.
ସଃରାସଃରି ଇସ୍ୱରାର୍‌ ଇ ମୁକ୍ତି କଃର୍ତାର୍‌ ଅଜିଉଦି ଲକ୍‌ମଃନାର୍‌ ତଃୟ୍‌ ହଃଟାଅୟ୍‌ଆଚେ “ତୁମିମଃନ୍ ଇତି ଜାଣା, ସେମଃନ୍ ହେଁ ସୁଣ୍‌ତି ।”
29 பவுல் இதைச் சொல்லி முடித்ததும், யூதர்கள் மிகவும் கடுமையாக விவாதம் செய்துகொண்டு புறப்பட்டுப் போனார்கள்.
ଆର୍‌ ପାଉଲ ଇ ସଃବୁ କଃତା କୟ୍‌ଲାକ୍‌ ଜିଉଦିମଃନ୍ ଅଃହ୍‌ଣା ଅଃହ୍‌ଣାର୍‌ ବିତ୍ରେ କଃଉଆକଇ ଅୟ୍‌ ହଃଳାୟ୍‌ଲାୟ୍‌ ।
30 பவுல் இரண்டு வருடங்கள் முழுவதும், தான் வாடகைக்கு எடுத்த வீட்டிலே தங்கியிருந்து, தன்னைச் சந்திக்க வந்த எல்லோரையும் வரவேற்றான்.
ପାଉଲ୍‌ ଗଟେକ୍‌ ଗଃର୍‌ବାଳା କଃରି ଦୁୟ୍‌ ବଃର୍ସ୍‌ ହଃତେକ୍‌ ରିଲା ଆର୍‌ ତାକେ ଦଃକୁକେ ଆସ୍ତି ରିଲା ସଃବୁ ଲକ୍‌ମଃନ୍‌କେ ସଃର୍ଦାୟ୍‌ କୁଦ୍‌ତିରିଲା ।
31 துணிச்சலுடன் தடை எதுவுமின்றி, இறைவனுடைய அரசைக் குறித்துப் பிரசங்கித்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைக் குறித்துப் போதித்தான்.
ସାସ୍‌ ସଃଙ୍ଗ୍ ଆର୍‌ କାକେ ନଃଡିରିକଃରି ଇସ୍ୱରାର୍‌ ରାଇଜ୍‌ ବିସୟେ ପର୍ଚାର୍‌ କଃରି, ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ବିସୟେ ସିକ୍ୟା ଦେତି ରିଲା ।

< அப்போஸ்தலர் 28 >