< அப்போஸ்தலர் 2 >

1 பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
อปรญฺจ นิสฺตาโรตฺสวาตฺ ปรํ ปญฺจาศตฺตเม ทิเน สมุปสฺถิเต สติ เต สรฺเวฺว เอกาจิตฺตีภูย สฺถาน เอกสฺมินฺ มิลิตา อาสนฺฯ
2 அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
เอตสฺมินฺเนว สมเย'กสฺมาทฺ อากาศาตฺ ปฺรจณฺฑาตฺยุคฺรวาโย: ศพฺทวทฺ เอก: ศพฺท อาคตฺย ยสฺมินฺ คฺฤเห ต อุปาวิศนฺ ตทฺ คฺฤหํ สมสฺตํ วฺยาปฺโนตฺฯ
3 அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன.
ตต: ปรํ วหฺนิศิขาสฺวรูปา ชิหฺวา: ปฺรตฺยกฺษีภูย วิภกฺตา: สตฺย: ปฺรติชโนรฺทฺเธฺว สฺถคิตา อภูวนฺฯ
4 அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள்.
ตสฺมาตฺ สรฺเวฺว ปวิเตฺรณาตฺมนา ปริปูรฺณา: สนฺต อาตฺมา ยถา วาจิตวานฺ ตทนุสาเรณานฺยเทศียานำ ภาษา อุกฺตวนฺต: ฯ
5 அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள்.
ตสฺมินฺ สมเย ปฺฤถิวีสฺถสรฺวฺวเทเศโภฺย ยิหูทียมตาวลมฺพิโน ภกฺตโลกา ยิรูศาลมิ ปฺราวสนฺ;
6 அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
ตสฺยา: กถายา: กึวทนฺตฺยา ชาตตฺวาตฺ สรฺเวฺว โลกา มิลิตฺวา นิชนิชภาษยา ศิษฺยาณำ กถากถนํ ศฺรุตฺวา สมุทฺวิคฺนา อภวนฺฯ
7 அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
สรฺวฺเวอว วิสฺมยาปนฺนา อาศฺจรฺยฺยานฺวิตาศฺจ สนฺต: ปรสฺปรํ อุกฺตวนฺต: ปศฺยต เย กถำ กถยนฺติ เต สรฺเวฺว คาลีลียโลกา: กึ น ภวนฺติ?
8 அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி?
ตรฺหิ วยํ ปฺรเตฺยกศ: สฺวสฺวชนฺมเทศียภาษาภิ: กถา เอเตษำ ศฺฤณุม: กิมิทํ?
9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,
ปารฺถี-มาที-อรามฺนหรยิมฺเทศนิวาสิมโน ยิหูทา-กปฺปทกิยา-ปนฺต-อาศิยา-
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே.
ผฺรุคิยา-ปมฺผุลิยา-มิสรนิวาสิน: กุรีณีนิกฏวรฺตฺติลูพียปฺรเทศนิวาสิโน โรมนคราทฺ อาคตา ยิหูทียโลกา ยิหูทียมตคฺราหิณ: กฺรีตียา อราพียาทโย โลกาศฺจ เย วยมฺ
11 இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள்.
อสฺมากํ นิชนิชภาษาภิเรเตษามฺ อีศฺวรียมหากรฺมฺมวฺยาขฺยานํ ศฺฤณุม: ฯ
12 அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
อิตฺถํ เต สรฺวฺเวอว วิสฺมยาปนฺนา: สนฺทิคฺธจิตฺตา: สนฺต: ปรสฺปรมูจุ: , อสฺย โก ภาว: ?
13 ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
อปเร เกจิตฺ ปริหสฺย กถิตวนฺต เอเต นวีนทฺรากฺษารเสน มตฺตา อภวนฺฯ
14 அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.
ตทา ปิตร เอกาทศภิ รฺชไน: สากํ ติษฺฐนฺ ตาโลฺลกานฺ อุจฺไจ: การมฺ อวทตฺ, เห ยิหูทียา เห ยิรูศาลมฺนิวาสิน: สรฺเวฺว, อวธานํ กฺฤตฺวา มทียวากฺยํ พุธฺยธฺวํฯ
15 நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே!
อิทานีมฺ เอกยามาทฺ อธิกา เวลา นาสฺติ ตสฺมาทฺ ยูยํ ยทฺ อนุมาถ มานวา อิเม มทฺยปาเนน มตฺตาสฺตนฺนฯ
16 இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
กินฺตุ โยเยลฺภวิษฺยทฺวกฺไตฺรตทฺวากฺยมุกฺตํ ยถา,
17 “‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
อีศฺวร: กถยามาส ยุคานฺตสมเย ตฺวหมฺฯ วรฺษิษฺยามิ สฺวมาตฺมานํ สรฺวฺวปฺราณฺยุปริ ธฺรุวมฺฯ ภาวิวากฺยํ วทิษฺยนฺติ กนฺยา: ปุตฺราศฺจ วสฺตุต: ฯ ปฺรตฺยาเทศญฺจ ปฺราปฺสฺยนฺติ ยุษฺมากํ ยุวมานวา: ฯ ตถา ปฺราจีนโลกาสฺตุ สฺวปฺนานฺ ทฺรกฺษฺยนฺติ นิศฺจิตํฯ
18 மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
วรฺษิษฺยามิ ตทาตฺมานํ ทาสทาสีชโนปิริฯ เตไนว ภาวิวากฺยํ เต วทิษฺยนฺติ หิ สรฺวฺวศ: ฯ
19 உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
อูรฺทฺธฺวเสฺถ คคเณ ไจว นีจเสฺถ ปฺฤถิวีตเลฯ โศณิตานิ พฺฤหทฺภานูนฺ ฆนธูมาทิกานิ จฯ จิหฺนานิ ทรฺศยิษฺยามิ มหาศฺจรฺยฺยกฺริยาสฺตถาฯ
20 பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும்.
มหาภยานกไสฺยว ตทฺทินสฺย ปเรศิตุ: ฯ ปุราคมาทฺ รวิ: กฺฤษฺโณ รกฺตศฺจนฺโทฺร ภวิษฺยต: ฯ
21 கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’
กินฺตุ ย: ปรเมศสฺย นามฺนิ สมฺปฺรารฺถยิษฺยเตฯ เสอว มนุโช นูนํ ปริตฺราโต ภวิษฺยติ๚
22 “இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார்.
อโต เห อิสฺราเยลฺวํศียโลกา: สรฺเวฺว กถายาเมตสฺยามฺ มโน นิธทฺธฺวํ นาสรตีโย ยีศุรีศฺวรสฺย มโนนีต: ปุมานฺ เอตทฺ อีศฺวรสฺตตฺกฺฤไตราศฺจรฺยฺยาทฺภุตกรฺมฺมภิ รฺลกฺษไณศฺจ ยุษฺมากํ สากฺษาเทว ปฺรติปาทิตวานฺ อิติ ยูยํ ชานีถฯ
23 இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள்.
ตสฺมินฺ ยีเศา อีศฺวรสฺย ปูรฺวฺวนิศฺจิตมนฺตฺรณานิรูปณานุสาเรณ มฺฤเตฺยา สมรฺปิเต สติ ยูยํ ตํ ธฺฤตฺวา ทุษฺฏโลกานำ หไสฺต: กฺรุเศ วิธิตฺวาหตฯ
24 ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
กินฺตฺวีศฺวรสฺตํ นิธนสฺย พนฺธนานฺโมจยิตฺวา อุทสฺถาปยตฺ ยต: ส มฺฤตฺยุนา พทฺธสฺติษฺฐตีติ น สมฺภวติฯ
25 தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன்.
เอตสฺตินฺ ทายูทปิ กถิตวานฺ ยถา, สรฺวฺวทา มม สากฺษาตฺตํ สฺถาปย ปรเมศฺวรํฯ สฺถิเต มทฺทกฺษิเณ ตสฺมินฺ สฺขลิษฺยามิ ตฺวหํ นหิฯ
26 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
อานนฺทิษฺยติ ตทฺเธโต รฺมามกีนํ มนสฺตุ ไวฯ อาหฺลาทิษฺยติ ชิหฺวาปิ มทียา ตุ ตไถว จฯ ปฺรตฺยาศยา ศรีรนฺตุ มทียํ ไวศยิษฺยเตฯ
27 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs g86)
ปรโลเก ยโต เหโตสฺตฺวํ มำ ไนว หิ ตฺยกฺษฺยสิฯ สฺวกียํ ปุณฺยวนฺตํ ตฺวํ กฺษยิตุํ ไนว ทาสฺยสิฯ เอวํ ชีวนมารฺคํ ตฺวํ มาเมว ทรฺศยิษฺยสิฯ (Hadēs g86)
28 நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.
สฺวสมฺมุเข ย อานนฺโท ทกฺษิเณ สฺวสฺย ยตฺ สุขํฯ อนนฺตํ เตน มำ ปูรฺณํ กริษฺยสิ น สํศย: ๚
29 “சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே.
เห ภฺราตโร'สฺมากํ ตสฺย ปูรฺวฺวปุรุษสฺย ทายูท: กถำ สฺปษฺฏํ กถยิตุํ มามฺ อนุมนฺยธฺวํ, ส ปฺราณานฺ ตฺยกฺตฺวา ศฺมศาเน สฺถาปิโตภวทฺ อทฺยาปิ ตตฺ ศฺมศานมฺ อสฺมากํ สนฺนิเธา วิทฺยเตฯ
30 ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான்.
ผลโต เลากิกภาเวน ทายูโท วํเศ ขฺรีษฺฏํ ชนฺม คฺราหยิตฺวา ตไสฺยว สึหาสเน สมุเวษฺฏุํ ตมุตฺถาปยิษฺยติ ปรเมศฺวร: ศปถํ กุตฺวา ทายูท: สมีป อิมมฺ องฺคีการํ กฺฤตวานฺ,
31 நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs g86)
อิติ ชฺญาตฺวา ทายูทฺ ภวิษฺยทฺวาที สนฺ ภวิษฺยตฺกาลียชฺญาเนน ขฺรีษฺโฏตฺถาเน กถามิมำ กถยามาส ยถา ตสฺยาตฺมา ปรโลเก น ตฺยกฺษฺยเต ตสฺย ศรีรญฺจ น เกฺษษฺยติ; (Hadēs g86)
32 இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம்.
อต: ปรเมศฺวร เอนํ ยีศุํ ศฺมศานาทฺ อุทสฺถาปยตฺ ตตฺร วยํ สรฺเวฺว สากฺษิณ อาสฺมเหฯ
33 கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார்.
ส อีศฺวรสฺย ทกฺษิณกเรโณนฺนตึ ปฺราปฺย ปวิตฺร อาตฺมิน ปิตา ยมงฺคีการํ กฺฤตวานฺ ตสฺย ผลํ ปฺราปฺย ยตฺ ปศฺยถ ศฺฤณุถ จ ตทวรฺษตฺฯ
34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
ยโต ทายูทฺ สฺวรฺคํ นารุโรห กินฺตุ สฺวยมฺ อิมำ กถามฺ อกถยทฺ ยถา, มม ปฺรภุมิทํ วากฺยมวทตฺ ปรเมศฺวร: ฯ
35 உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”’ என்று சொன்னான்.
ตว ศตฺรูนหํ ยาวตฺ ปาทปีฐํ กโรมิ นฯ ตาวตฺ กาลํ มทีเย ตฺวํ ทกฺษวารฺศฺว อุปาวิศฯ
36 “ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
อโต ยํ ยีศุํ ยูยํ กฺรุเศ'หต ปรเมศฺวรสฺตํ ปฺรภุตฺวาภิษิกฺตตฺวปเท นฺยยุํกฺเตติ อิสฺราเยลียา โลกา นิศฺจิตํ ชานนฺตุฯ
37 அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
เอตาทฺฤศีํ กถำ ศฺรุตฺวา เตษำ หฺฤทยานำ วิทีรฺณตฺวาตฺ เต ปิตราย ตทนฺยเปฺรริเตภฺยศฺจ กถิตวนฺต: , เห ภฺราตฺฤคณ วยํ กึ กริษฺยาม: ?
38 அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள்.
ตต: ปิตร: ปฺรตฺยวททฺ ยูยํ สรฺเวฺว สฺวํ สฺวํ มน: ปริวรฺตฺตยธฺวํ ตถา ปาปโมจนารฺถํ ยีศุขฺรีษฺฏสฺย นามฺนา มชฺชิตาศฺจ ภวต, ตสฺมาทฺ ทานรูปํ ปริตฺรมฺ อาตฺมานํ ลปฺสฺยถฯ
39 இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான்.
ยโต ยุษฺมากํ ยุษฺมตฺสนฺตานานาญฺจ ทูรสฺถสรฺวฺวโลกานาญฺจ นิมิตฺตมฺ อรฺถาทฺ อสฺมากํ ปฺรภุ: ปรเมศฺวโร ยาวโต ลากานฺ อาหฺวาสฺยติ เตษำ สรฺเวฺวษำ นิมิตฺตมฺ อยมงฺคีการ อาเสฺตฯ
40 பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான்.
เอตทนฺยาภิ รฺพหุกถาภิ: ปฺรมาณํ ทตฺวากถยตฺ เอเตโภฺย วิปถคามิโภฺย วรฺตฺตมานโลเกภฺย: สฺวานฺ รกฺษตฯ
41 பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
ตต: ปรํ เย สานนฺทาสฺตำ กถามฺ อคฺฤหฺลนฺ เต มชฺชิตา อภวนฺฯ ตสฺมินฺ ทิวเส ปฺราเยณ ตฺรีณิ สหสฺราณิ โลกาเสฺตษำ สปกฺษา: สนฺต:
42 அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
เปฺรริตานามฺ อุปเทเศ สงฺคเตา ปูปภญฺชเน ปฺรารฺถนาสุ จ มน: สํโยคํ กฺฤตฺวาติษฺฐนฺฯ
43 அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.
เปฺรริไต รฺนานาปฺรการลกฺษเณษุ มหาศฺจรฺยฺยกรฺมมสุ จ ทรฺศิเตษุ สรฺวฺวโลกานำ ภยมุปสฺถิตํฯ
44 விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள்.
วิศฺวาสการิณ: สรฺวฺว จ สห ติษฺฐนต: ฯ เสฺวษำ สรฺวฺวา: สมฺปตฺตี: สาธารเณฺยน สฺถาปยิตฺวาภุญฺชตฯ
45 அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள்.
ผลโต คฺฤหาณิ ทฺรวฺยาณิ จ สรฺวฺวาณิ วิกฺรีย สรฺเวฺวษำ สฺวสฺวปฺรโยชนานุสาเรณ วิภชฺย สรฺเวฺวโภฺย'ททนฺฯ
46 ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள்.
สรฺวฺว เอกจิตฺตีภูย ทิเน ทิเน มนฺทิเร สนฺติษฺฐมานา คฺฤเห คฺฤเห จ ปูปานภญฺชนฺต อีศฺวรสฺย ธนฺยวาทํ กุรฺวฺวนฺโต โลไก: สมาทฺฤตา: ปรมานนฺเทน สรลานฺต: กรเณน โภชนํ ปานญฺจกุรฺวฺวนฺฯ
47 அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.
ปรเมศฺวโร ทิเน ทิเน ปริตฺราณภาชไน รฺมณฺฑลีมฺ อวรฺทฺธยตฺฯ

< அப்போஸ்தலர் 2 >