< அப்போஸ்தலர் 2 >
1 பெந்தெகொஸ்தே நாள் வந்தபோது, அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள்.
ଜଃଡ୍ବଃଳ୍ ପେଣ୍ଟିକସ୍ଟ୍ ହଃର୍ବାର୍ ଦିନ୍ ଚଃମେ ଅୟ୍ଲି ସଃବୁ କ୍ରିସ୍ଟ ବିସ୍ୱାସିମଃନ୍ ଗଟ୍ ଟାଣେ ରୁଣ୍ଡି ରିଲାୟ୍,
2 அப்பொழுது திடீரென பலத்த காற்று வீசுவதுபோன்ற ஒரு முழக்கம் பரத்திலிருந்து வந்து, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
ଆର୍ ଗୁରାଗାଲିର୍ ସଃବଦ୍ ହର୍ ଗଟେକ୍ ସଃବଦ୍ ତଃତ୍କାଣ୍ ଅଃଗାସେ ହୁଣି ଆୟ୍ଲି ଆର୍ ଜୁୟ୍ ଗଃରେ ସେମଃନ୍ ବଃସି ରିଲାୟ୍ ସେ ଗଃରାର୍ ଚାରିହାକ୍ ମାଡିଗଃଲି ।
3 அவர்கள் நெருப்புப்போன்ற பிரிந்திருக்கும் நாவுகளைக் கண்டார்கள். அவை அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தன.
ଆର୍ ଜୟ୍ ହର୍ ଜିବ୍ମଃନ୍ ସେମଃନ୍କେ ଦଃକାୟ୍ ଅୟ୍ଲି, ଆର୍ ଗଟେକ୍ ଗଟେକ୍ ଲକେ ସେମଃନାର୍ ସଃବ୍କାର୍ ଉହ୍ରେ ଉତୁର୍ଲି ।
4 அவர்கள் அனைவரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டார்கள். ஆவியானவர் கொடுத்த ஆற்றலின்படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளிலே பேசத் தொடங்கினார்கள்.
ସେତାକ୍ ସଃବୁ ଲକ୍ ପବିତ୍ର ଆତ୍ମାୟ୍ ହୁର୍ନ୍ ଅୟ୍ଲାୟ୍ ଆରେକ୍ ଆତ୍ମା ସେମ୍ନଃକେ ଜଃନ୍କଃରି କଃଉଁକେ ଦିଲି, ସେନ୍କଃରି ସେମଃନ୍ ବିନ୍ ବିନ୍ ବାସାୟ୍ କଃତା କାଉଁକେ ଦଃର୍ଲାୟ୍ ।
5 அப்பொழுது இறைவனிடம் பயபக்தியாயிருந்த யூதர்கள் வானத்தின் கீழுள்ள ஒவ்வொரு நாடுகளிலிருந்தும் வந்து எருசலேமில் தங்கியிருந்தார்கள்.
ଅଃଡେବଃଳ୍ ଅଃଗାସ୍ ତଃଳେ ରିଲା ହୁର୍ତିବିର୍ ବିନ୍ବିନ୍ ଦେସେହୁଣି ଆସିରିଲା ଜିଉଦିମଃନ୍ ଜିରୁସାଲମେ ସେବାକାରି ସେତି ରିଲାୟ୍ ।
6 அவர்கள் இந்த சத்தத்தைக் கேட்டபோது, பெருங்கூட்டமாய் அங்கே வந்தார்கள். தங்களுடைய சொந்த மொழிகளில் அவர்கள் ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
ଆର୍ ସେ ଗଃର୍ଞ୍ଜାଣ୍ ଅୟ୍ଲାକ୍ ଗାଦାଲକ୍ ରୁଣ୍ଡ୍ଲାୟ୍ ଆର୍ କ୍ରିସ୍ଟବିସ୍ୱାସି ମଃନ୍ ନିଜାର୍ ନିଜାର୍ ବାସାୟ୍ କଃଉତାର୍ ସୁଣି ବଃଡେ କାବା ଅୟ୍ଲାୟ୍ ।
7 அவர்கள் முற்றுமாய் வியப்படைந்து, “இங்கு பேசிக்கொண்டிருக்கிற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா?
ଆରେକ୍ ସେମଃନ୍ ବଃଡେ କାବା ଅୟ୍ କୟ୍ଲାୟ୍, “ଇ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ କଃତା କଃଉଁଲାୟ୍ ସେମଃନ୍ କାୟ୍ ଗାଲିଲିର୍ ନଃଉତି?
8 அப்படியிருக்க, இவர்கள் நமது சொந்த மொழிகளில் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்கிறோமே, அது எப்படி?
ତଃବେ ଅଃମିମଃନ୍ କଃନ୍କଃରି ହଃତି ଲକ୍ ନିଜାର୍ ନିଜାର୍ ବାସାୟ୍ କଃତା କଃଉତାର୍ ସୁଣ୍ଲୁ ।
9 பார்த்தரும், மேதரும், எலாமீத்தரும், மெசொப்பொத்தாமியா, யூதேயா, கப்பத்தோக்கியா, பொந்து, ஆசியா,
ପାର୍ତିୟ, ମାଦିୟ ଆର୍ ଏଲାମିୟ, ଆରେକ୍ ମେସପଟାମିଆ, ଜିଉଦା ଆର୍ କାପାଦକିଆ, ପନ୍ତ ଆର୍ ଆସିଆ,
10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், சிரேனே அருகேயுள்ள லீபியாவின் சில பகுதிகளிலுள்ளவர்களும், ரோமிலிருந்து வந்தவர்களும் இங்கிருக்கிறார்களே.
ପ୍ରୁଗିଆ ଆର୍ ପପୁଲିଆ, ମିସର୍ ଆର୍ କୁରିଣି ଚଃମାର୍ ଲିବିଆ ହଲିର୍ ଆର୍ ରମ୍ ହୁଣି ଆୟ୍ଲା ଜିଉଦି ଆର୍ ଜିଉଦି ଦଃର୍ମେ ମିସିକଃରି ଆସିରିଲା ଲକ୍ମଃନ୍,
11 இன்னும் யூதரும், யூத விசுவாசத்திற்கு வந்தவர்களும் இருக்கிறார்களே! அத்துடன் கிரேத்தரும், அரபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே இறைவனின் அதிசயங்களை இவர்கள் அறிவிப்பதைக் கேட்கிறோமே!” என்றார்கள்.
ଆରେକ୍ କ୍ରିତିଅ ଆର୍ ଆରବ୍ ଦେସାର୍ ଜିଉଦି ଲକ୍ମଃନ୍ ଜେ ଅଃମିମଃନ୍, ଅଃମିମଃନାର୍ ଦଃର୍ମ୍ ଦାରାୟ୍ ଅଃମାର୍ ନିଜାର୍ ନିଜାର୍ ବାସାୟ୍ ଇସ୍ୱରାର୍ ମହାନ୍ କଃତା କଃଉତାର୍ ସୁଣ୍ଲୁ ।”
12 அவர்கள் வியப்பும் குழப்பமும் அடைந்தவர்களாய், ஒருவரையொருவர் பார்த்து, “இதன் அர்த்தம் என்ன?” என்றார்கள்.
ଆର୍ ସଃବୁ କାବା ଆର୍ ବୁଦି ବାଣା ଅୟ୍ ସେମଃନାର୍ ବିତ୍ରେ କଃଉଁକେ ଦଃର୍ଲାୟ୍, “ଇତାର୍ ବାବ୍ କାୟ୍ରି ।”
13 ஆனால் சிலர், அவர்களைக்குறித்து கேலிசெய்து, “இவர்கள் மதுபானத்தை நிறைய குடித்திருக்கிறார்கள்” என்றார்கள்.
ମଃତର୍ ବିନ୍ ଲକ୍ମଃନ୍ ବିସ୍ୱାସି ମଃନ୍କେ ଟାହ୍ରାକଃରି କଃଉଁକେ ଦଃର୍ଲାୟ୍, “ଇମଃନ୍ ମଃଦ୍ କାୟ୍ ମାତି ଆଚ୍ତି ।”
14 அப்பொழுது பேதுரு மற்ற பதினொரு பேருடனும் எழுந்து நின்று, உரத்த சத்தமாய் அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் பேசத் தொடங்கினான்: “யூதமக்களே, எருசலேமில் வாழுகிறவர்களே, உங்கள் எல்லோருக்கும் நான் இதை விளக்கிச் சொல்லுகிறேன்; நான் சொல்வதைக் கவனமாய் கேளுங்கள்.
ମଃତର୍ ପିତର୍ ଏଗାର୍ଗଟ୍ ସଃଙ୍ଗ୍ ଟିଆଅୟ୍ ବଃଡ୍ ଟଣ୍ଡ୍କଃରି ସେମଃନାର୍ ଚଃମେ କଃତା କଃଉଁକ୍ ଦଃର୍ଲା, “ଆର୍ ଏ ଜିଉଦି ଲକ୍ମଃନ୍ ଆର୍ ଜିରୁସାଲମାର୍ ସଃବୁ ଲକ୍ ତୁମିମଃନ୍ ଇରି ସୁଣା ଆର୍ ମର୍ କଃତାର୍ ଅଃର୍ତ୍ ବୁଜାୟ୍ କଃଉଁଲେ ଜାଣା ।
15 நீங்கள் நினைப்பதுபோல இவர்கள் குடிவெறி கொண்டவர்கள் அல்ல. நேரமோ இன்னும் காலை ஒன்பது மணிதானே!
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁମିମଃନ୍ ଜଃନ୍କଃରି ମଃନେ ବାବୁଲାସ୍ ଇମଃନ୍ ସେମଃନାର୍ ହର୍ ମାତୁଆଳି ନାୟ୍, ବଃଲେକ୍ ଅଃବେ ସଃକାଳ୍ ନଅଃ ଗଃଟା ଅୟ୍ଆଚେ ।
16 இறைவாக்கினன் யோவேலினால் கூறப்பட்டபடி இது நிறைவேறுகிறது:
ମଃତର୍ ଜୟେଲ୍ ବାବ୍ବାଦି ଜାୟ୍ରି କୟ୍ଆଚେ, ଇରି ସେ ଗଃଟ୍ଣା ।”
17 “‘இறைவன் சொல்லியபடி, கடைசி நாட்களில், நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும் மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள், உங்கள் இளைஞர் தரிசனங்களைக் காண்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.
“ଇସ୍ୱର୍ କୟ୍ଆଚେ ସେସ୍ କାଳେ ଅଃନ୍କାର୍ ଇରି ମୁୟ୍ଁ କଃରିନ୍ଦ୍ । ମୁୟ୍ଁ ସଃବୁ ଲକାର୍ ଉହ୍ରେ ନିଜାର୍ ଆତ୍ମା ବଃର୍ସାଇନ୍ଦ୍ ସେତାକ୍ ମର୍ କବୁର୍ କଃଉତି ହୟ୍ଦି ଜିଦିମଃନ୍ ବାବ୍ବାଣି କଃଉତି; ଆର୍ ତୁମିମଃନାର୍ ବେଣ୍ଡ୍ୟାମଃନ୍ ନିକ କଃତାମଃନ୍ ଦଃକ୍ତି, ଆରେକ୍ ତୁମାର୍ ପାରାଚିନ୍ମଃନ୍ ଚଃହୁନ୍ ଦଃକ୍ତି ।
18 மேலும் அந்நாட்களில் நான், எனது ஊழியக்காரர்கள்மேலும் ஊழியக்காரிகள்மேலும், என் ஆவியைப் பொழிவேன். அப்பொழுது அவர்கள் இறைவாக்கு உரைப்பார்கள்.
ହେଁ ସେ କାଳେ ମୁୟ୍ଁ ମର୍ ଗତିଦଃଙ୍ଗ୍ଳାମଃନାର୍ ଉହ୍ରେ ମର୍ ଆତ୍ମା ହଃଟାୟ୍ନ୍ଦ୍, ସେତାକ୍ ସେମଃନ୍ ବାବ୍ବାଣି କଃଉତି ।
19 உயரே வானத்தில் நான் அதிசயங்களைக் காண்பிப்பேன், கீழே பூமியில் அடையாளங்களாக இரத்தத்தையும், நெருப்பையும், புகை மண்டலங்களையும் காண்பிப்பேன்.
ମୁୟ୍ଁ ଅଃଗାସ୍ ଉହ୍ରେ କାବା ଅଃଉତା କାମ୍ ଆରେକ୍ ଅଃଗାସ୍ ତଃଳାର୍ ହୁର୍ତିବି ତଃୟ୍ ବିନ୍ ବିନ୍ ଚିନ୍, ବଃନି, ଜୟ୍, ଆର୍ କଃଳିଆ ଦୁଆଁ ଦଃକାୟ୍ନ୍ଦ୍ ।
20 பெரிதும் மகிமையானதுமான கர்த்தரின் நாள் வருமுன்பே, சூரியன் இருண்டுபோகும்; சந்திரன் இரத்தமாக மாறும்.
ମାପ୍ରୁର୍ ବଃଡ୍ ଆର୍ ଜଃଜ୍ମାନାର୍ ଦିନ୍ ଆସ୍ତା ଆଗ୍ତୁ ବେଳ୍ ଅଃନ୍ଦାର୍, ଆର୍ ଜଃନ୍ ବଃନି ହର୍ ଅୟ୍ଦ୍ ।
21 கர்த்தரின் பெயரைச் சொல்லி கூப்பிடுகிற யாவரும் இரட்சிக்கப்படுவார்கள்.’
ଆର୍ ଅଃନ୍କାର୍ ଗଃଟେଦ୍ ଜେ, ଜଃଡେବଃଳ୍ ମାପ୍ରୁର୍ ନାଉଁଏ ପାର୍ତ୍ନା କଃରେଦ୍, ସେ ମୁକ୍ତି ହାୟ୍ଦ୍ ।”
22 “இஸ்ரயேலரே, இதைக் கேளுங்கள்: நீங்கள் அறிந்திருக்கிறபடி, இறைவன் உங்கள் மத்தியில் நாசரேத்தைச் சேர்ந்த இயேசுவின் மூலமாக செய்த அற்புதங்கள், அதிசயங்கள், அடையாளங்களினால் அவர் இறைவனால் அங்கீகாரம் பெற்ற மனிதர் என்பதை நிரூபித்தார்.
“ଏ ଇସ୍ରାଏଲ୍ ଲକ୍ମଃନ୍ ଇ ସଃବୁ କଃତା ସୁଣା ନାଜରିତାର୍ ଜିସୁ କଃତେକ୍ ସଃକ୍ତିର୍ କାମ୍, କାବା ଅଃଉତା କାମ୍, ଆର୍ ଚିନ୍ ଦଃକାୟ୍ ତୁମିମଃନାର୍ ଚଃମେ ଇସ୍ୱରାର୍ ହଃଟାୟ୍ଲା ଲକ୍ ବଃଲି ଚିନାୟ୍ଅୟ୍ ଆଚେ, ତାର୍ ତଃୟ୍ ଇସ୍ୱର୍ ଜେ ତୁମିମଃନାର୍ ବିତ୍ରେ ଇତି ସଃବୁ କାମ୍ କଃରିଆଚେ, ଇରି ତୁମିମଃନ୍ ନିଜେ ନିଜେ ଜାଣାସ୍ ।
23 இறைவன் தாம் தீர்மானித்திருந்த நோக்கத்தின்படியும், தமது முன்னறிவின்படியும், அவர் அந்த இயேசுவை உங்களிடம் ஒப்படைத்தார். நீங்களோ கொடியவர்களின் உதவியோடு, அவரைச் சிலுவையில் ஆணி அடித்துக் கொலைசெய்தீர்கள்.
ଇସ୍ୱର୍ ତାର୍ ଜଃଜ୍ନା ହଃର୍କାରେ ଜିସୁକେ ତୁମାର୍ ଆତେ ସଃହ୍ରି ଦେଉଁକେ ତିର୍ କଃରିରିଲା । ଆରେକ୍ ତୁମି ତାକେ ବିଦିନୟ୍ଲା ହାହିମଃନାର୍ ସଃଙ୍ଗ୍ କ୍ରୁସେ ଚଗାୟ୍ ମାର୍ଲାସ୍ ।
24 ஆனால் இறைவனோ, மரணத்தின் வேதனையிலிருந்து இயேசுவை விடுவித்து, அவரை உயிரோடு எழுப்பினார். ஏனெனில், மரணத்தினால் அவரைப் பிடித்து வைத்திருக்க முடியவில்லை.
ମଃତର୍ ଇସ୍ୱର୍ ମଃର୍ନ୍ ବାନ୍ଦୁଣ୍ ଇଟାୟ୍ ତାକେ ଉଟାୟ୍ ଆଚେ, କାୟ୍ତାକ୍ ବଃଲେକ୍ ସେ ମଃରି କଃରି ସଃବୁଦିନ୍ ରେତା ହାବଳ୍ ।
25 தாவீது கிறிஸ்துவைக்குறித்துச் சொல்லியிருப்பதாவது: “‘நான் கர்த்தரை எப்பொழுதும் என் கண்முன் வைத்துக்கொண்டிருக்கிறேன். அவர் எனது வலதுபக்கத்தில் இருக்கிறபடியால், நான் அசைக்கப்படமாட்டேன்.
ଦାଉଦ୍ ତାର୍ କଃତା କୟ୍ଆଚେ, ‘ମୁୟ୍ଁ ସଃବୁବଃଳ୍ ମର୍ ମୁଏଁ ମାପ୍ରୁକ୍ ଦଃକି ଆଚି, କାୟ୍ତାକ୍ ବଃଲେକ୍ ମୁୟ୍ଁ ନଃଡିରି, ସେତାକ୍ ସେ ମର୍ କାତା ବାଟ୍ୟା ଆଚେ ।
26 ஆகையால், என் இருதயம் மகிழ்ந்து என் நாவு களிகூருகிறது; என் உடலும் எதிர்பார்ப்புடன் வாழும்.
ସେତାକ୍ ମର୍ ମଃନ୍ ସଃର୍ଦା, ଆର୍ ମର୍ ଜିବନ୍ ବଃଡେ ସଃର୍ଦା ଅୟ୍ଲି, ଆର୍ ମର୍ ମଃର୍ତା ଗଃଗାଳ୍ ହେଁ ଇସ୍ୱରାର୍ ବଃର୍ସାୟ୍ ବାଚେଦ୍ ।
27 ஏனெனில் நீர் என்னைப் பாதாளத்தில் கைவிடமாட்டீர், உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர். (Hadēs )
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ତୁୟ୍ ମର୍ ହଃରାଣ୍କେ ହଃତାଳେ ନଃଚାଡ୍ସି, ଆର୍ ଅଃହ୍ଣାର୍ ଦଃର୍ମି ଲକ୍କେ ମଃସୁଣ୍ କାଲେ ନଃସ୍ଟ୍ ଅଃଉଁକେ ନଃଦେସି । (Hadēs )
28 நீர் வாழ்வின் பாதைகளை எனக்குத் தெரியப்படுத்தியிருக்கிறீர். உமது சமுகத்தில் உமது மகிழ்ச்சியினால் என்னை நிரப்புவீர்’ என்பதே.
ତୁୟ୍ ମର୍ ଜିବନାର୍ ବାଟ୍ ଦଃକାୟ୍ ଆଚ୍ସି, ତୁୟ୍ ମର୍ ସଃଙ୍ଗ୍ ରିଲେକ୍ ମକ୍ ସଃର୍ଦାୟ୍ ହୁର୍ନ୍ କଃର୍ସି ।’
29 “சகோதரரே, இதை நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன். நமது முற்பிதாவான தாவீது இறந்து அடக்கம்பண்ணப்பட்டானே. அவனது கல்லறை இந்நாள்வரை இங்கே இருக்கிறதே.
ଏ ଇସ୍ରାଏଲାର୍ ବାୟ୍ବେଣିମଃନ୍, ଦାଦିବାବୁର୍ ମୁଳ୍ ବଃଉଁସ୍ ଦାଉଦାର୍ କଃତା ମୁୟ୍ଁ ତୁମିମଃନ୍କେ ଟଣ୍ଡ୍ ମେଲାକଃରି କଃଉତା ଅଃଦିକାର୍ ଜେ, ସେ ମଃଲା ଆର୍ ମଃସ୍ଣେ ତାକେ ତହ୍ଲାୟ୍, ଆର୍ ତାର୍ ମଃସୁଣ୍ ଆଜି ହଃତେକ୍ ଅଃମାର୍ ତଃୟ୍ ଆଚେ ।
30 ஆனால் தாவீது இறைவாக்கினனாய் இருந்ததால், தனது சந்ததியிலே ஒருவரை தனது அரியணையில் அமர்த்துவார் என்று இறைவன் தனக்கு ஆணையிட்டு வாக்குக் கொடுத்திருந்ததை அவன் அறிந்திருந்தான்.
ଅୟ୍ଲେକ୍ ହେଁ ସେ ବାବ୍ବାଦି ଅୟ୍ରିଲାକ୍ ଆର୍ ତାର୍ ବଃଉଁସାର୍ ଗଟେକ୍ ଲକ୍କେ ଇସ୍ୱର୍ ତାର୍ ସିଙ୍ଗାସଣେ ବଃସାଉଁକ୍ ତାର୍ ଚଃମେ ହଃର୍ମାଣ୍ କଃରି ସଃୟ୍ତ୍ କଃରିରିଲା ।
31 நிகழப்போவதை தாவீது முன்னமே கண்டு, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக்குறித்துப் பேசினான். அதனாலேயே அவர் பாதாளத்தில் கைவிடப்படுவதில்லை என்றும், அவரின் உடல் அழிவைக் காண்பதில்லை என்றும் சொன்னான். (Hadēs )
ଇସ୍ୱର୍ ଆସୁଲା ଦିନେ କାୟ୍ରି କଃରୁକେ ଜଃଉଁଲା, ଦାଉଦ୍ ସେରି ଜାଣୁହାରି କ୍ରିସ୍ଟ ଉଟ୍ତା କଃତା କୟ୍ ଆଚେ, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ସେ ହଃତାଳେ ଚାଡା ନୟ୍ଲା; ଆର୍ ତାର୍ ଗଃଗାଳ୍ ନଃସ୍ଟ୍ ନୟ୍ଲି ।” (Hadēs )
32 இறைவன் இந்த இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். அதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகளாய் இருக்கிறோம்.
ଇ ଜିସୁକେ ଇସ୍ୱର୍ ଉଟାୟ୍ ଆଚେ, ସେ କଃତା ଅଃମି ସଃବୁ ଜାଣୁ ।
33 கிறிஸ்து இறைவனுடைய வலதுபக்கத்திற்கு உயர்த்தப்பட்டு, பிதா வாக்குப்பண்ணிய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொண்டார். நீங்கள் இப்பொழுது காண்கிறபடியும் கேட்கிறபடியும் அவரே அந்த பரிசுத்த ஆவியானவரை ஊற்றியிருக்கிறார்.
ଜିସୁ, ତାର୍ ଉବାସି ଇସ୍ୱର୍ କାତା ବାଟ୍ୟା ସେ ଉଟାୟ୍ ଇସ୍ୱରାର୍ କାତା ଆତ୍ ତଃୟ୍ହୁଣି ଉଚ୍ ଆର୍ ଉବାର୍ ତଃୟ୍ହୁଣି ସଃୟ୍ତାର୍ ପବିତ୍ର ଆତ୍ମା ହାୟ୍କଃରି ଜାୟ୍ରି ତୁମିମଃନ୍ ଦଃକୁଲାସ୍ ଆର୍ ସୁଣୁଲାସ୍, ସେରି ସେ ଅଃମାର୍ ଉହ୍ରେ ଡାଳି ଦଃୟ୍ ଆଚେ ।
34 தாவீது பரலோகத்திற்கு எழுந்து போகவில்லையே, ஆனால் அவன், “‘கர்த்தர் என் கர்த்தரிடம், சொன்னதாவது: “நான் உமது பகைவரை
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଦାଉଦ୍ ସଃର୍ଗେ ଜାୟ୍ ନଃରିଲା, ମଃତର୍ ସେ ନିଜେ କୟ୍ଆଚେ, “ମାପ୍ରୁ ମର୍ ମାପ୍ରୁକ୍ କୟ୍ଲା,
35 உமது கால்களுக்குப் பாதபடி ஆக்கும்வரை, நீர் என் வலதுபக்கத்தில் அமர்ந்திரும்.”’ என்று சொன்னான்.
ମୁୟ୍ଁ ଜୁୟ୍ ହଃତେକ୍ ତୁମାର୍ ସଃତ୍ରୁମ୍ନଃକେ ତୁମାର୍ ହାଦ୍ ତଃଳେ ନଃକେରି, ସେ ହଃତେକ୍ ମର୍ କାତା ବାଟ୍ୟା ବଃସିରେ ।”
36 “ஆகவே இஸ்ரயேலராகிய நீங்கள் அனைவரும் நிச்சயமாய் அறிந்துகொள்ள வேண்டியது: நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே இறைவன், கர்த்தரும் கிறிஸ்துவும் ஆக்கியிருக்கிறார்” என்று பேதுரு சொன்னான்.
“ବଃଲେକ୍ ସଃର୍ନେ ଇସ୍ରାଏଲ୍ ବଃଉଁସ୍ ବାୟ୍ଦ୍ରେ ଜାଣତ୍ ଜୁୟ୍ ଜିସୁକେ ତୁମିମଃନ୍ କ୍ରୁସେ ମାର୍ଲାସ୍ ତାକେ ଇସ୍ୱର୍ ମାପ୍ରୁ ଆର୍ କ୍ରିସ୍ଟ ଜଳେକ୍ ହଃଦେ ବଃସାୟ୍ ଆଚେ ।”
37 அந்த மக்கள் இதைக் கேட்டபோது, இருதயத்தில் குத்தப்பட்டவர்களாய், பேதுருவையும் மற்ற அப்போஸ்தலரையும் பார்த்து, “சகோதரரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றார்கள்.
ଇ କଃତା ସୁଣି ସେମଃନାର୍ ମଃନ୍ ବାଙ୍ଗିଗଃଲି ଆରେକ୍ ସେମଃନ୍ ପିତର୍ ଆର୍ କବୁର୍କାରିଆ ମଃନ୍କେ କୟ୍ଲାୟ୍, “ବାୟ୍ମଃନ୍ ଆମିମଃନ୍ କାୟ୍ କଃରୁଆଁ?”
38 அதற்குப் பேதுரு, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவங்களுக்கு மன்னிப்புப் பெறும்படி மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் பெயரில் திருமுழுக்கு பெற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் பரிசுத்த ஆவியானவரை நன்கொடையாகப் பெறுவீர்கள்.
ସେତାକ୍ ପିତର୍ ସେମଃନ୍କେ କୟ୍ଲା, “ତୁମିମଃନ୍ ମଃନ୍ ବାଦ୍ଲାଉଆ ଆର୍ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ହାହ୍ କେମା ଗିନେ ହଃତି ଲକ୍ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍ ନାଉଁଏ ବାପ୍ତିସମ୍ ହାଉଆ, ସେନ୍ଅୟ୍ଲେକ୍ ତୁମିମଃନ୍ ପବିତ୍ର ଆତ୍ମାର୍ ଦାନ୍ ହାଉଆସ୍ ।
39 இந்த வாக்குத்தத்தம் உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், தொலைவிலுள்ள அனைவருக்கும் உரியது. நமது இறைவனாகிய கர்த்தர் அழைக்கப்போகிற அனைவருக்கும் இது உரியது” என்றான்.
କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ଇ ସଃୟ୍ତ୍ ତୁମାର୍ ଗିନେ ଅୟ୍ଆଚେ, ତୁମିମଃନାର୍ ହିଲାମଃନାର୍ ଗିନେ ଆରେକ୍ ଦୁରେ ରେତା ଜଃତେକ୍ ଲକ୍କେ ମାପ୍ରୁ ଅଃମାର୍ ଇସ୍ୱର୍ ଅଃହ୍ଣାର୍ ଚଃମେ କୁଦେଦ୍, ସେ ସଃବ୍କାର୍ ଗିନେ ।”
40 பேதுரு இன்னும் வேறு பல வார்த்தைகள் மூலமாயும் அவர்களை எச்சரித்தான்: “இந்தக் கறைபட்ட தலைமுறையிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்றும் அவர்களை எச்சரித்தான்.
ଆରେକ୍ ବିନ୍ ଲକ୍ମଃନ୍କେ କଃତେକ୍ କଃତାୟ୍ ପିତର୍ ସାକି ଦେଉଁକ୍ ଦଃର୍ଲା ଆର୍ ସେମଃନ୍କେ ଗଃଉଆରି କଃରି କୟ୍ଲା, “ଇ ହେଟ୍କୁଟ୍ୟା ବଃଉଁସ୍ ତଃୟ୍ହୁଣି ତୁମିମଃନ୍ ମୁକ୍ଳା ।”
41 பேதுருவினுடைய செய்தியை ஏற்றுக்கொண்ட அனைவரும் திருமுழுக்குப் பெற்றார்கள். திருச்சபையில் ஏறக்குறைய மூவாயிரம்பேர் அன்று சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
ସେତାକ୍ ଜୁୟ୍ମଃନ୍ ପିତରାର୍ କଃତା ମଃନେ ବିସ୍ୱାସ୍ କଃଲାୟ୍, ସେମଃନ୍ ବାପ୍ତିସମ୍ ହାୟ୍ଲାୟ୍, ଆର୍ ସେ ଦିନ୍ ହାକାହାକି ତିନି ଅଃଜାର୍ ଲକ୍ ବିସ୍ୱାସି ଦଃଳେ ମିସ୍ଲାୟ୍ ।
42 அவர்கள் அப்போஸ்தலருடைய போதித்தலுக்கும், ஐக்கியத்திற்கும், அப்பம் பிட்குதலுக்கும், மன்றாட்டுக்கும் தங்களை அர்ப்பணித்தார்கள்.
ସେମଃନ୍ ପେରିତ୍ମଃନାର୍ ସିକ୍ୟାୟ୍, ସଃଙ୍ଗେ ରେତାର୍, ରୁଟି ବାଙ୍ଗ୍ତା ତଃୟ୍, ପାର୍ତ୍ନା କଃର୍ତା ତଃୟ୍ ମଃନ୍ହଃରାଣ୍ ଦଃୟ୍ରିଲାୟ୍ ।
43 அனைவரும் பயபக்தியினால் நிறைந்திருந்தார்கள். அப்போஸ்தலர்களால் அநேக அதிசயங்களும் அற்புத அடையாளங்களும் செய்யப்பட்டன.
ଆର୍ ଲକ୍ମଃନ୍ କାବା ଅୟ୍ଲାୟ୍, କାୟ୍ତାକ୍ବଃଲେକ୍ ପେରିତ୍ମଃନ୍ ଗାଦେକ୍ କାବା ଅଃଉତା କାମ୍ ଆର୍ ଚିନ୍ମଃନ୍ ଦଃକାଉଁକ୍ ଦଃର୍ଲାୟ୍ ।
44 விசுவாசிகள் அனைவரும் ஒன்றுகூடியிருந்தார்கள். அவர்கள் எல்லாப் பொருட்களையும் பொதுவானதாக வைத்துக்கொண்டார்கள்.
ମଃତର୍ ଜୁୟ୍ ଲକ୍ମଃନ୍ ବିସ୍ୱାସ୍ କଃଲାୟ୍ ସେମଃନ୍ ସଃବୁ ଗଟେକ୍ ଟାଣେ ରୁଣ୍ଡି ସଃବୁ ରଃକମାର୍ ଦଃନ୍ବିତ୍ ସଃବାର୍ ବଃଲି ବାବ୍ତି ରିଲାୟ୍ ।
45 அவர்கள் தங்கள் சொத்துக்களையும், பொருட்களையும் விற்று, தேவையானவர்களுக்கு ஏற்றவிதமாய் பகிர்ந்துகொடுத்தார்கள்.
ଆରେକ୍ ସେମଃନ୍ ଅଃହ୍ଣା ଅଃହ୍ଣାର୍ ସଃବୁ ରଃକମାର୍ ଦଃନ୍ସଃପତି ବିକିକଃରି ଜାର୍ ଜଃତେକ୍ ଲଳା ସଃବ୍କେ ବାଟାକଃରୁକ୍ ଦଃର୍ଲାୟ୍ ।
46 ஒவ்வொரு நாளும், அவர்கள் ஆலயத்தின் முற்றத்தில் ஒன்றுகூடி சந்தித்தார்கள். அவர்கள் தங்களுடைய வீடுகள்தோறும் அப்பம் பிட்டார்கள். அவர்கள் எளிய இருதயத்துடனும், சந்தோஷத்துடனும் ஒன்றாய்ச் சாப்பிட்டார்கள்.
ଆର୍ ସେମଃନ୍ ଏକ୍ ମଃନ୍ ଅୟ୍ ସଃବୁ ବିନ୍ ମନ୍ଦିରେ ରୁଣ୍ଡିରେତି ରିଲାୟ୍ ଆର୍ ଗଃରେ ଗଃରେ ରୁଟି ବାଙ୍ଗି କଃରି ସଃର୍ଦାୟ୍ ଆର୍ ସୁସାର୍ ମଃନେ କାଉଆ ହିଉଆ କଃର୍ତି ରିଲାୟ୍ ।
47 அவர்கள் இறைவனைத் துதிக்கிறவர்களாயும், எல்லா மக்களுடைய தயவையும் பெற்றவர்களாயும் இருந்தார்கள். ஒவ்வொரு நாளும் இரட்சிக்கப்படுகிறவர்களை கர்த்தர் அவர்களின் எண்ணிக்கையுடனே சேர்த்துக்கொண்டு வந்தார்.
ଆର୍ ସେମଃନ୍ ଇସ୍ୱରାର୍ ଦଃୟାର୍ ଜଃଜ୍ମାନ୍ କଃର୍ତି ରିଲାୟ୍ ଆର୍ ସଃବୁ ଲକାର୍ ଗଃର୍ ମଃନ୍କେ ଜାତି ରିଲାୟ୍, ଆରେକ୍ ମାପ୍ରୁ ହାହେ ହୁଣି ମୁକ୍ତି ହାୟ୍ଲା ଲକ୍ମଃନ୍କେ ହଃତିଦିନ୍ ସେମଃନାର୍ ଦଃଳେ ମିସାଉତି ରିଲାୟ୍ ।