< அப்போஸ்தலர் 16 >

1 பவுல் தெர்பைக்கு வந்து, பின்பு லீஸ்திராவுக்குப் போனான். அங்கே தீமோத்தேயு என்னும் பெயருடைய ஒரு சீடன் இருந்தான். அவனுடைய தாய் விசுவாசியான ஒரு யூதப் பெண், ஆனால் அவனுடைய தகப்பனோ ஒரு கிரேக்கன்.
ପୌଲୋ ଦର୍ବ୍ବୀଲୁସ୍ତ୍ରାନଗରଯୋରୁପସ୍ଥିତୋଭୱତ୍ ତତ୍ର ତୀମଥିଯନାମା ଶିଷ୍ୟ ଏକ ଆସୀତ୍; ସ ୱିଶ୍ୱାସିନ୍ୟା ଯିହୂଦୀଯାଯା ଯୋଷିତୋ ଗର୍ବ୍ଭଜାତଃ କିନ୍ତୁ ତସ୍ୟ ପିତାନ୍ୟଦେଶୀଯଲୋକଃ|
2 தீமோத்தேயு லீஸ்திராவிலும் இக்கோனியாவிலும் இருந்த விசுவாசிகளாலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தான்.
ସ ଜନୋ ଲୁସ୍ତ୍ରା-ଇକନିଯନଗରସ୍ଥାନାଂ ଭ୍ରାତୃଣାଂ ସମୀପେପି ସୁଖ୍ୟାତିମାନ୍ ଆସୀତ୍|
3 பவுல் அந்தப் பயணத்திலே தீமோத்தேயுவையும் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோக விரும்பினான். ஆனால் அந்தப் பகுதியில் வாழ்ந்த யூதர்களின் நிமித்தம், அவனுக்கு விருத்தசேதனம் செய்வித்தான். ஏனெனில் அவர்கள் அனைவரும் அவனுடைய தகப்பன் கிரேக்கன் என்பதை அறிந்திருந்தார்கள்.
ପୌଲସ୍ତଂ ସ୍ୱସଙ୍ଗିନଂ କର୍ତ୍ତୁଂ ମତିଂ କୃତ୍ୱା ତଂ ଗୃହୀତ୍ୱା ତଦ୍ଦେଶନିୱାସିନାଂ ଯିହୂଦୀଯାନାମ୍ ଅନୁରୋଧାତ୍ ତସ୍ୟ ତ୍ୱକ୍ଛେଦଂ କୃତୱାନ୍ ଯତସ୍ତସ୍ୟ ପିତା ଭିନ୍ନଦେଶୀଯଲୋକ ଇତି ସର୍ୱ୍ୱୈରଜ୍ଞାଯତ|
4 அவர்கள் பட்டணங்கள்தோறும் பிரயாணம் செய்து, எருசலேமிலிருந்த அப்போஸ்தலரும் சபைத்தலைவர்களும் எடுத்த தீர்மானங்களை, அங்குள்ளவர்கள் கைக்கொள்ளுவதற்காக அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.
ତତଃ ପରଂ ତେ ନଗରେ ନଗରେ ଭ୍ରମିତ୍ୱା ଯିରୂଶାଲମସ୍ଥୈଃ ପ୍ରେରିତୈ ର୍ଲୋକପ୍ରାଚୀନୈଶ୍ଚ ନିରୂପିତଂ ଯଦ୍ ୱ୍ୟୱସ୍ଥାପତ୍ରଂ ତଦନୁସାରେଣାଚରିତୁଂ ଲୋକେଭ୍ୟସ୍ତଦ୍ ଦତ୍ତୱନ୍ତଃ|
5 இதனால் திருச்சபைகள் விசுவாசத்தில் பெலமடைந்து, நாள்தோறும் எண்ணிக்கையில் பெருகின.
ତେନୈୱ ସର୍ୱ୍ୱେ ଧର୍ମ୍ମସମାଜାଃ ଖ୍ରୀଷ୍ଟଧର୍ମ୍ମେ ସୁସ୍ଥିରାଃ ସନ୍ତଃ ପ୍ରତିଦିନଂ ୱର୍ଦ୍ଧିତା ଅଭୱନ୍|
6 பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் பிரிகியா, கலாத்தியா நாடுகள் கடந்து பயணம் செய்தார்கள்; ஏனெனில் ஆசியா பகுதியிலே வார்த்தையை அறிவிக்காதவாறு பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தடை பண்ணியிருந்தார்.
ତେଷୁ ଫ୍ରୁଗିଯାଗାଲାତିଯାଦେଶମଧ୍ୟେନ ଗତେଷୁ ସତ୍ସୁ ପୱିତ୍ର ଆତ୍ମା ତାନ୍ ଆଶିଯାଦେଶେ କଥାଂ ପ୍ରକାଶଯିତୁଂ ପ୍ରତିଷିଦ୍ଧୱାନ୍|
7 அவர்கள் மீசியாவின் எல்லைப் புறமாய் வந்தபோது, அவர்கள் பித்தினியாவுக்குப் போக முயற்சிசெய்தார்கள். ஆனால் இயேசுவின் ஆவியானவரோ அவர்களை அங்கேயும் செல்ல அனுமதிக்கவில்லை.
ତଥା ମୁସିଯାଦେଶ ଉପସ୍ଥାଯ ବିଥୁନିଯାଂ ଗନ୍ତୁଂ ତୈରୁଦ୍ୟୋଗେ କୃତେ ଆତ୍ମା ତାନ୍ ନାନ୍ୱମନ୍ୟତ|
8 எனவே அவர்கள் மீசியாவைக் கடந்து, துரோவா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
ତସ୍ମାତ୍ ତେ ମୁସିଯାଦେଶଂ ପରିତ୍ୟଜ୍ୟ ତ୍ରୋଯାନଗରଂ ଗତ୍ୱା ସମୁପସ୍ଥିତାଃ|
9 அந்த இரவிலே, பவுல் ஒரு தரிசனம் கண்டான். அதிலே மக்கெதோனியாவைச் சேர்ந்த ஒரு மனிதன் அவனைப் பார்த்து, “மக்கெதோனியாவுக்கு வந்து, எங்களுக்கு உதவிசெய்யும்” என்று கெஞ்சிக்கேட்டான்.
ରାତ୍ରୌ ପୌଲଃ ସ୍ୱପ୍ନେ ଦୃଷ୍ଟୱାନ୍ ଏକୋ ମାକିଦନିଯଲୋକସ୍ତିଷ୍ଠନ୍ ୱିନଯଂ କୃତ୍ୱା ତସ୍ମୈ କଥଯତି, ମାକିଦନିଯାଦେଶମ୍ ଆଗତ୍ୟାସ୍ମାନ୍ ଉପକୁର୍ୱ୍ୱିତି|
10 பவுல் இந்த தரிசனத்தைக் கண்டபின்பு, நாங்கள் உடனே மக்கெதோனியாவுக்குப் போக ஆயத்தமானோம். ஏனெனில், இறைவன் அவர்களுக்கு நற்செய்தியை அறிவிக்க, எங்களை அழைத்தார் என்று நாங்கள் தீர்மானித்தோம்.
ତସ୍ୟେତ୍ଥଂ ସ୍ୱପ୍ନଦର୍ଶନାତ୍ ପ୍ରଭୁସ୍ତଦ୍ଦେଶୀଯଲୋକାନ୍ ପ୍ରତି ସୁସଂୱାଦଂ ପ୍ରଚାରଯିତୁମ୍ ଅସ୍ମାନ୍ ଆହୂଯତୀତି ନିଶ୍ଚିତଂ ବୁଦ୍ଧ୍ୱା ୱଯଂ ତୂର୍ଣଂ ମାକିଦନିଯାଦେଶଂ ଗନ୍ତୁମ୍ ଉଦ୍ୟୋଗମ୍ ଅକୁର୍ମ୍ମ|
11 துரோவாவிலிருந்து நாங்கள் கப்பலில் புறப்பட்டு, நேரே சாமோத்திராக்கே தீவுக்கும், மறுநாள் நெயாப்போலிக்குப் போனோம்.
ତତଃ ପରଂ ୱଯଂ ତ୍ରୋଯାନଗରାଦ୍ ପ୍ରସ୍ଥାଯ ଋଜୁମାର୍ଗେଣ ସାମଥ୍ରାକିଯୋପଦ୍ୱୀପେନ ଗତ୍ୱା ପରେଽହନି ନିଯାପଲିନଗର ଉପସ୍ଥିତାଃ|
12 அங்கிருந்து ரோமருடைய குடியேற்ற இடமான பிலிப்பி பட்டணத்திற்குப் பயணமானோம். அது மக்கெதோனியா பகுதியின் தலைமைப் பட்டணமாக இருந்தது. நாங்கள் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தோம்.
ତସ୍ମାଦ୍ ଗତ୍ୱା ମାକିଦନିଯାନ୍ତର୍ୱ୍ୱର୍ତ୍ତି ରୋମୀଯୱସତିସ୍ଥାନଂ ଯତ୍ ଫିଲିପୀନାମପ୍ରଧାନନଗରଂ ତତ୍ରୋପସ୍ଥାଯ କତିପଯଦିନାନି ତତ୍ର ସ୍ଥିତୱନ୍ତଃ|
13 ஓய்வுநாளிலே, நாங்கள் பட்டணத்துக்கு வெளியே ஆற்றங்கரைக்குப் போனோம். அங்கே மன்றாடுவதற்கான ஒரு இடம் இருக்குமென்று எதிர்ப்பார்த்து நாங்கள் உட்கார்ந்து, அங்கே கூடியிருந்த பெண்களுடன் பேசத் தொடங்கினோம்.
ୱିଶ୍ରାମୱାରେ ନଗରାଦ୍ ବହି ର୍ଗତ୍ୱା ନଦୀତଟେ ଯତ୍ର ପ୍ରାର୍ଥନାଚାର ଆସୀତ୍ ତତ୍ରୋପୱିଶ୍ୟ ସମାଗତା ନାରୀଃ ପ୍ରତି କଥାଂ ପ୍ରାଚାରଯାମ|
14 நாங்கள் சொன்னதை லீதியாள் என்னும் பெயருடைய ஒரு பெண் கேட்டுக்கொண்டிருந்தாள். தியத்தீரா ஊரைச்சேர்ந்த அவள், செம்பட்டுத் துணி விற்கிறவள். அவள் இறைவனை வழிபட்டு வந்தாள். பவுலின் செய்தியை ஏற்றுக்கொள்வதற்கு கர்த்தர் அவளின் இருதயத்தைத் திறந்தார்.
ତତଃ ଥୁଯାତୀରାନଗରୀଯା ଧୂଷରାମ୍ବରୱିକ୍ରାଯିଣୀ ଲୁଦିଯାନାମିକା ଯା ଈଶ୍ୱରସେୱିକା ଯୋଷିତ୍ ଶ୍ରୋତ୍ରୀଣାଂ ମଧ୍ୟ ଆସୀତ୍ ତଯା ପୌଲୋକ୍ତୱାକ୍ୟାନି ଯଦ୍ ଗୃହ୍ୟନ୍ତେ ତଦର୍ଥଂ ପ୍ରଭୁସ୍ତସ୍ୟା ମନୋଦ୍ୱାରଂ ମୁକ୍ତୱାନ୍|
15 லிதியாளும் அவளுடைய குடும்பத்தார் அனைவரும் திருமுழுக்கு பெற்றபின், அவள் எங்களைத் தனது வீட்டுக்கு அழைத்தாள். “நான் கர்த்தரின் விசுவாசி என்று நீங்கள் எண்ணினால், நீங்கள் என்னுடைய வீட்டிற்கு வந்து தங்குங்கள்” என்று சொல்லி, எங்களை வற்புறுத்தினாள்.
ଅତଃ ସା ଯୋଷିତ୍ ସପରିୱାରା ମଜ୍ଜିତା ସତୀ ୱିନଯଂ କୃତ୍ୱା କଥିତୱତୀ, ଯୁଷ୍ମାକଂ ୱିଚାରାଦ୍ ଯଦି ପ୍ରଭୌ ୱିଶ୍ୱାସିନୀ ଜାତାହଂ ତର୍ହି ମମ ଗୃହମ୍ ଆଗତ୍ୟ ତିଷ୍ଠତ| ଇତ୍ଥଂ ସା ଯତ୍ନେନାସ୍ମାନ୍ ଅସ୍ଥାପଯତ୍|
16 ஒருமுறை, நாங்கள் மன்றாடும் இடத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது, நாங்கள் ஒரு அடிமைப் பெண்ணைச் சந்தித்தோம். அவளிலே ஒரு தீய ஆவி இருந்தது. அவள் அந்த ஆவியைக் கொண்டு, எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்னறிவித்தாள். அவள் இவ்வாறு குறிசொல்வதன் மூலம் தனது எஜமானர்களுக்குப் பெருந்தொகைப் பணத்தைச் சம்பாதித்துக் கொடுத்துக்கொண்டிருந்தாள்.
ଯସ୍ୟା ଗଣନଯା ତଦଧିପତୀନାଂ ବହୁଧନୋପାର୍ଜନଂ ଜାତଂ ତାଦୃଶୀ ଗଣକଭୂତଗ୍ରସ୍ତା କାଚନ ଦାସୀ ପ୍ରାର୍ଥନାସ୍ଥାନଗମନକାଲ ଆଗତ୍ୟାସ୍ମାନ୍ ସାକ୍ଷାତ୍ କୃତୱତୀ|
17 இந்தப் பெண் பவுலையும் எங்களையும் பின்தொடர்ந்து வந்து, “இந்த மனிதர் மகா உன்னதமான இறைவனின் ஊழியர்கள்; இவர்கள் உங்களுக்கு இரட்சிக்கப்படுவதற்கான வழியை அறிவிக்கிறார்கள்” என்று சத்தமிடுவாள்.
ସାସ୍ମାକଂ ପୌଲସ୍ୟ ଚ ପଶ୍ଚାଦ୍ ଏତ୍ୟ ପ୍ରୋଚ୍ଚୈଃ କଥାମିମାଂ କଥିତୱତୀ, ମନୁଷ୍ୟା ଏତେ ସର୍ୱ୍ୱୋପରିସ୍ଥସ୍ୟେଶ୍ୱରସ୍ୟ ସେୱକାଃ ସନ୍ତୋଽସ୍ମାନ୍ ପ୍ରତି ପରିତ୍ରାଣସ୍ୟ ମାର୍ଗଂ ପ୍ରକାଶଯନ୍ତି|
18 அவள் இப்படி பல நாட்களாய்ச் செய்துகொண்டிருந்தாள். கடைசியாக பவுல் மிகவும் சலிப்படைந்து, அந்த தீய ஆவியிடம், “இயேசுகிறிஸ்துவின் பெயரிலே நான் உனக்குக் கட்டளையிடுகிறேன், நீ இவளை விட்டு வெளியே வா!” என்றான். அந்த வினாடியே அந்தத் தீய ஆவி அவளைவிட்டு வெளியே வந்தது.
ସା କନ୍ୟା ବହୁଦିନାନି ତାଦୃଶମ୍ ଅକରୋତ୍ ତସ୍ମାତ୍ ପୌଲୋ ଦୁଃଖିତଃ ସନ୍ ମୁଖଂ ପରାୱର୍ତ୍ୟ ତଂ ଭୂତମୱଦଦ୍, ଅହଂ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ନାମ୍ନା ତ୍ୱାମାଜ୍ଞାପଯାମି ତ୍ୱମସ୍ୟା ବହିର୍ଗଚ୍ଛ; ତେନୈୱ ତତ୍କ୍ଷଣାତ୍ ସ ଭୂତସ୍ତସ୍ୟା ବହିର୍ଗତଃ|
19 அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
ତତଃ ସ୍ୱେଷାଂ ଲାଭସ୍ୟ ପ୍ରତ୍ୟାଶା ୱିଫଲା ଜାତେତି ୱିଲୋକ୍ୟ ତସ୍ୟାଃ ପ୍ରଭୱଃ ପୌଲଂ ସୀଲଞ୍ଚ ଧୃତ୍ୱାକୃଷ୍ୟ ୱିଚାରସ୍ଥାନେଽଧିପତୀନାଂ ସମୀପମ୍ ଆନଯନ୍|
20 அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள்,
ତତଃ ଶାସକାନାଂ ନିକଟଂ ନୀତ୍ୱା ରୋମିଲୋକା ୱଯମ୍ ଅସ୍ମାକଂ ଯଦ୍ ୱ୍ୟୱହରଣଂ ଗ୍ରହୀତୁମ୍ ଆଚରିତୁଞ୍ଚ ନିଷିଦ୍ଧଂ,
21 ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.
ଇମେ ଯିହୂଦୀଯଲୋକାଃ ସନ୍ତୋପି ତଦେୱ ଶିକ୍ଷଯିତ୍ୱା ନଗରେଽସ୍ମାକମ୍ ଅତୀୱ କଲହଂ କୁର୍ୱ୍ୱନ୍ତି,
22 அப்பொழுது கூடியிருந்தவர்கள், பவுலையும் சீலாவையும் தாக்கத் தொடங்கினார்கள். தலைமை நீதிபதிகள் இவர்களுடைய உடைகளைக் கழற்றி, இவர்களை அடிக்கும்படி உத்தரவிட்டார்கள்.
ଇତି କଥିତେ ସତି ଲୋକନିୱହସ୍ତଯୋଃ ପ୍ରାତିକୂଲ୍ୟେନୋଦତିଷ୍ଠତ୍ ତଥା ଶାସକାସ୍ତଯୋ ର୍ୱସ୍ତ୍ରାଣି ଛିତ୍ୱା ୱେତ୍ରାଘାତଂ କର୍ତ୍ତୁମ୍ ଆଜ୍ଞାପଯନ୍|
23 அவர்கள் சவுக்கினால் கடுமையாக அடித்தபின், சிறையில் போட்டார்கள். சிறைக்காவலனிடம், இவர்களைக் கவனமாய் காவல் செய்யும்படியும் உத்தரவிட்டார்கள்.
ଅପରଂ ତେ ତୌ ବହୁ ପ୍ରହାର୍ୟ୍ୟ ତ୍ୱମେତୌ କାରାଂ ନୀତ୍ୱା ସାୱଧାନଂ ରକ୍ଷଯେତି କାରାରକ୍ଷକମ୍ ଆଦିଶନ୍|
24 இக்கட்டளைகளைப் பெற்றபோது, அந்தச் சிறைக்காவலன் இவர்களை உட்சிறையில் போட்டு, இவர்களுடைய கால்களை மர சங்கிலியினால் மாட்டிவைத்தான்.
ଇତ୍ଥମ୍ ଆଜ୍ଞାଂ ପ୍ରାପ୍ୟ ସ ତାୱଭ୍ୟନ୍ତରସ୍ଥକାରାଂ ନୀତ୍ୱା ପାଦେଷୁ ପାଦପାଶୀଭି ର୍ବଦ୍ଧ୍ୱା ସ୍ଥାପିତାୱାନ୍|
25 கிட்டத்தட்ட நடு இரவில் பவுலும் சீலாவும் மன்றாடிக்கொண்டும், இறைவனுக்குப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருந்தார்கள். மற்ற சிறைக் கைதிகள் அதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.
ଅଥ ନିଶୀଥସମଯେ ପୌଲସୀଲାୱୀଶ୍ୱରମୁଦ୍ଦିଶ୍ୟ ପ୍ରାଥନାଂ ଗାନଞ୍ଚ କୃତୱନ୍ତୌ, କାରାସ୍ଥିତା ଲୋକାଶ୍ଚ ତଦଶୃଣ୍ୱନ୍
26 திடீரென ஒரு பெரிய பூமியதிர்ச்சி ஏற்பட்டது. அதனால் அந்தச் சிறைச்சாலையின் அஸ்திபாரங்கள் அசைந்தன. அப்பொழுது சிறைச்சாலைக் கதவுகள் எல்லாம் திறவுண்டன. சிறையிலிருந்த ஒவ்வொருவரையும் கட்டியிருந்த சங்கிலிகள் கழன்று விழுந்தன.
ତଦାକସ୍ମାତ୍ ମହାନ୍ ଭୂମିକମ୍ପୋଽଭୱତ୍ ତେନ ଭିତ୍ତିମୂଲେନ ସହ କାରା କମ୍ପିତାଭୂତ୍ ତତ୍କ୍ଷଣାତ୍ ସର୍ୱ୍ୱାଣି ଦ୍ୱାରାଣି ମୁକ୍ତାନି ଜାତାନି ସର୍ୱ୍ୱେଷାଂ ବନ୍ଧନାନି ଚ ମୁକ୍ତାନି|
27 சிறைக்காவலன் எழுந்திருந்து, சிறைச்சாலைக் கதவுகள் திறந்து கிடந்ததைக் கண்டபோது, அவன் தன் வாளை உருவித், தற்கொலைசெய்ய முயன்றான். ஏனெனில், சிறைக் கைதிகள் தப்பியோடிவிட்டார்கள் என்று அவன் நினைத்தான்.
ଅତଏୱ କାରାରକ୍ଷକୋ ନିଦ୍ରାତୋ ଜାଗରିତ୍ୱା କାରାଯା ଦ୍ୱାରାଣି ମୁକ୍ତାନି ଦୃଷ୍ଟ୍ୱା ବନ୍ଦିଲୋକାଃ ପଲାଯିତା ଇତ୍ୟନୁମାଯ କୋଷାତ୍ ଖଙ୍ଗଂ ବହିଃ କୃତ୍ୱାତ୍ମଘାତଂ କର୍ତ୍ତୁମ୍ ଉଦ୍ୟତଃ|
28 ஆனால் பவுல் சத்தமிட்டு அவனிடம், “நீ உனக்குத் தீங்கு செய்யாதே! நாங்கள் அனைவரும் இங்கேதான் இருக்கிறோம்” என்றான்.
କିନ୍ତୁ ପୌଲଃ ପ୍ରୋଚ୍ଚୈସ୍ତମାହୂଯ କଥିତୱାନ୍ ପଶ୍ୟ ୱଯଂ ସର୍ୱ୍ୱେଽତ୍ରାସ୍ମହେ, ତ୍ୱଂ ନିଜପ୍ରାଣହିଂସାଂ ମାକାର୍ଷୀଃ|
29 அந்தச் சிறைக்காவலன் விளக்கைக் கொண்டுவரச்செய்து, உள்ளே விரைந்து ஓடினான். அவன் நடுங்கிக்கொண்டு பவுலுக்கும், சீலாவுக்கும் முன்பாக விழுந்தான்.
ତଦା ପ୍ରଦୀପମ୍ ଆନେତୁମ୍ ଉକ୍ତ୍ୱା ସ କମ୍ପମାନଃ ସନ୍ ଉଲ୍ଲମ୍ପ୍ୟାଭ୍ୟନ୍ତରମ୍ ଆଗତ୍ୟ ପୌଲସୀଲଯୋଃ ପାଦେଷୁ ପତିତୱାନ୍|
30 அவன் அவர்களை வெளியே கொண்டுவந்து, “ஐயாமாரே, நான் இரட்சிக்கப்பட என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.
ପଶ୍ଚାତ୍ ସ ତୌ ବହିରାନୀଯ ପୃଷ୍ଟୱାନ୍ ହେ ମହେଚ୍ଛୌ ପରିତ୍ରାଣଂ ପ୍ରାପ୍ତୁଂ ମଯା କିଂ କର୍ତ୍ତୱ୍ୟଂ?
31 அதற்கு அவர்கள், “கர்த்தராகிய இயேசுவை விசுவாசி, நீ இரட்சிக்கப்படுவாய். நீயும், உனது குடும்பத்தாரும் இரட்சிக்கப்படுவீர்கள்” என்றார்கள்.
ପଶ୍ଚାତ୍ ତୌ ସ୍ୱଗୃହମାନୀଯ ତଯୋଃ ସମ୍ମୁଖେ ଖାଦ୍ୟଦ୍ରୱ୍ୟାଣି ସ୍ଥାପିତୱାନ୍ ତଥା ସ ସ୍ୱଯଂ ତଦୀଯାଃ ସର୍ୱ୍ୱେ ପରିୱାରାଶ୍ଚେଶ୍ୱରେ ୱିଶ୍ୱସନ୍ତଃ ସାନନ୍ଦିତା ଅଭୱନ୍|
32 பின்பு அவர்கள் அவனுக்கும், அவனுடைய வீட்டிலிருந்த எல்லோருக்கும் கர்த்தருடைய வார்த்தையைச் சொன்னார்கள்.
ତସ୍ମୈ ତସ୍ୟ ଗୃହସ୍ଥିତସର୍ୱ୍ୱଲୋକେଭ୍ୟଶ୍ଚ ପ୍ରଭୋଃ କଥାଂ କଥିତୱନ୍ତୌ|
33 அந்த இரவு வேளையிலேயே அந்தச் சிறைக்காவலன் அவர்களைக் கூட்டிக்கொண்டுபோய், அவர்களுடைய காயங்களைக் கழுவினான்; பின்பு உடனே, அவனும் அவனுடைய குடும்பத்தார் யாவரும் திருமுழுக்குப் பெற்றார்கள்.
ତଥା ରାତ୍ରେସ୍ତସ୍ମିନ୍ନେୱ ଦଣ୍ଡେ ସ ତୌ ଗୃହୀତ୍ୱା ତଯୋଃ ପ୍ରହାରାଣାଂ କ୍ଷତାନି ପ୍ରକ୍ଷାଲିତୱାନ୍ ତତଃ ସ ସ୍ୱଯଂ ତସ୍ୟ ସର୍ୱ୍ୱେ ପରିଜନାଶ୍ଚ ମଜ୍ଜିତା ଅଭୱନ୍|
34 அந்தச் சிறைக்காவலன் அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவர்களுக்கு உணவு கொடுத்தான்; அவன் தானும், தன்னுடைய குடும்பத்தார் அனைவரும், இறைவனில் விசுவாசம் வைத்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
ପଶ୍ଚାତ୍ ତୌ ସ୍ୱଗୃହମାନୀଯ ତଯୋଃ ସମ୍ମୁଖେ ଖାଦ୍ୟଦ୍ରୱ୍ୟାଣି ସ୍ଥାପିତୱାନ୍ ତଥା ସ ସ୍ୱଯଂ ତଦୀଯାଃ ସର୍ୱ୍ୱେ ପରିୱାରାଶ୍ଚେଶ୍ୱରେ ୱିଶ୍ୱସନ୍ତଃ ସାନନ୍ଦିତା ଅଭୱନ୍|
35 பொழுது விடிந்ததும், தலைமை நீதிபதிகள், “அவர்களை விட்டுவிடுங்கள்” என்ற உத்தரவுடன், அதிகாரிகளைச் சிறைக்காவலனிடம் அனுப்பினார்கள்.
ଦିନ ଉପସ୍ଥିତେ ତୌ ଲୋକୌ ମୋଚଯେତି କଥାଂ କଥଯିତୁଂ ଶାସକାଃ ପଦାତିଗଣଂ ପ୍ରେଷିତୱନ୍ତଃ|
36 சிறைக்காவலன் பவுலிடம், “தலைமை நீதிபதிகள் உங்களை விடுதலையாக்கும்படி உத்தரவிட்டிருக்கிறார்கள். நீயும் சீலாவும் வெளியே சமாதானத்துடன் போங்கள்” என்றான்.
ତତଃ କାରାରକ୍ଷକଃ ପୌଲାଯ ତାଂ ୱାର୍ତ୍ତାଂ କଥିତୱାନ୍ ଯୁୱାଂ ତ୍ୟାଜଯିତୁଂ ଶାସକା ଲୋକାନ ପ୍ରେଷିତୱନ୍ତ ଇଦାନୀଂ ଯୁୱାଂ ବହି ର୍ଭୂତ୍ୱା କୁଶଲେନ ପ୍ରତିଷ୍ଠେତାଂ|
37 ஆனால் பவுல் அந்த அதிகாரிகளிடம்: “நாங்கள் ரோம குடிமக்களாய் இருந்தபோதும், எவ்விதக் குற்ற விசாரணையும் இல்லாமல், எங்களை பொதுமக்கள் முன்பாக அடித்துச் சிறையில் போட்டார்கள். இப்பொழுது இரகசியமாய் அவர்கள் எங்களை விடுதலையாக்கப் போகிறார்களோ? இல்லை! அவர்களே வந்து எங்களை வெளியே கூட்டிக்கொண்டுபோய் விடட்டும்” என்றான்.
କିନ୍ତୁ ପୌଲସ୍ତାନ୍ ଅୱଦତ୍ ରୋମିଲୋକଯୋରାୱଯୋଃ କମପି ଦୋଷମ୍ ନ ନିଶ୍ଚିତ୍ୟ ସର୍ୱ୍ୱେଷାଂ ସମକ୍ଷମ୍ ଆୱାଂ କଶଯା ତାଡଯିତ୍ୱା କାରାଯାଂ ବଦ୍ଧୱନ୍ତ ଇଦାନୀଂ କିମାୱାଂ ଗୁପ୍ତଂ ୱିସ୍ତ୍ରକ୍ଷ୍ୟନ୍ତି? ତନ୍ନ ଭୱିଷ୍ୟତି, ସ୍ୱଯମାଗତ୍ୟାୱାଂ ବହିଃ କୃତ୍ୱା ନଯନ୍ତୁ|
38 அந்த அதிகாரிகள், இதைத் தலைமை நீதிபதிகளுக்கு அறிவித்தார்கள். பவுலும் சீலாவும் ரோம குடிமக்கள் எனக் கேள்விப்பட்டபோது, அவர்கள் மிகவும் பயந்தார்கள்.
ତଦା ପଦାତିଭିଃ ଶାସକେଭ୍ୟ ଏତଦ୍ୱାର୍ତ୍ତାଯାଂ କଥିତାଯାଂ ତୌ ରୋମିଲୋକାୱିତି କଥାଂ ଶ୍ରୁତ୍ୱା ତେ ଭୀତାଃ
39 எனவே தலைமை நீதிபதிகள் இவர்களை சமாளிப்பதற்காக வந்து, இவர்களைச் சிறையிலிருந்து வெளியே கூட்டிக்கொண்டுபோய், பட்டணத்தைவிட்டுப் போகும்படி கேட்டுக்கொண்டார்கள்.
ସନ୍ତସ୍ତଯୋଃ ସନ୍ନିଧିମାଗତ୍ୟ ୱିନଯମ୍ ଅକୁର୍ୱ୍ୱନ୍ ଅପରଂ ବହିଃ କୃତ୍ୱା ନଗରାତ୍ ପ୍ରସ୍ଥାତୁଂ ପ୍ରାର୍ଥିତୱନ୍ତଃ|
40 எனவே பவுலும் சீலாவும் சிறையைவிட்டு வெளியே வந்து, லீதியாளின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சகோதரர்களைச் சந்தித்து அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பின்பு அவ்விடத்தைவிட்டுச் சென்றார்கள்.
ତତସ୍ତୌ କାରାଯା ନିର୍ଗତ୍ୟ ଲୁଦିଯାଯା ଗୃହଂ ଗତୱନ୍ତୌ ତତ୍ର ଭ୍ରାତୃଗଣଂ ସାକ୍ଷାତ୍କୃତ୍ୟ ତାନ୍ ସାନ୍ତ୍ୱଯିତ୍ୱା ତସ୍ମାତ୍ ସ୍ଥାନାତ୍ ପ୍ରସ୍ଥିତୌ|

< அப்போஸ்தலர் 16 >