< அப்போஸ்தலர் 13 >
1 அந்தியோகியாவில் இருந்த திருச்சபையிலே இறைவாக்கினரும், ஆசிரியரும் இருந்தார்கள். பர்னபா, நீகர் எனப்பட்ட சிமியோன், சிரேனேயைச் சேர்ந்த லூசியஸ், அரசனான ஏரோதுவுடன் வளர்ந்த மனாயீன், சவுல் ஆகியோரே இவர்கள்.
ಅಪರಞ್ಚ ಬರ್ಣಬ್ಬಾಃ, ಶಿಮೋನ್ ಯಂ ನಿಗ್ರಂ ವದನ್ತಿ, ಕುರೀನೀಯಲೂಕಿಯೋ ಹೇರೋದಾ ರಾಜ್ಞಾ ಸಹ ಕೃತವಿದ್ಯಾಭ್ಯಾಸೋ ಮಿನಹೇಮ್, ಶೌಲಶ್ಚೈತೇ ಯೇ ಕಿಯನ್ತೋ ಜನಾ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನ ಉಪದೇಷ್ಟಾರಶ್ಚಾನ್ತಿಯಖಿಯಾನಗರಸ್ಥಮಣ್ಡಲ್ಯಾಮ್ ಆಸನ್,
2 அவர்கள் கர்த்தரை வழிபட்டு உபவாசித்துக்கொண்டிருக்கையில், பரிசுத்த ஆவியானவர் அவர்களிடம், “நான் அவர்களை அழைத்த ஊழியத்திற்காக பர்னபாவையும் சவுலையும் எனக்கென வேறுபிரித்துவிடுங்கள்” என்றார்.
ತೇ ಯದೋಪವಾಸಂ ಕೃತ್ವೇಶ್ವರಮ್ ಅಸೇವನ್ತ ತಸ್ಮಿನ್ ಸಮಯೇ ಪವಿತ್ರ ಆತ್ಮಾ ಕಥಿತವಾನ್ ಅಹಂ ಯಸ್ಮಿನ್ ಕರ್ಮ್ಮಣಿ ಬರ್ಣಬ್ಬಾಶೈಲೌ ನಿಯುಕ್ತವಾನ್ ತತ್ಕರ್ಮ್ಮ ಕರ್ತ್ತುಂ ತೌ ಪೃಥಕ್ ಕುರುತ|
3 எனவே அவர்கள் உபவாசித்து மன்றாடியபின், தங்கள் கைகளை அந்த இருவர்மேலும் வைத்து, அவர்களை அனுப்பிவிட்டார்கள்.
ತತಸ್ತೈರುಪವಾಸಪ್ರಾರ್ಥನಯೋಃ ಕೃತಯೋಃ ಸತೋಸ್ತೇ ತಯೋ ರ್ಗಾತ್ರಯೋ ರ್ಹಸ್ತಾರ್ಪಣಂ ಕೃತ್ವಾ ತೌ ವ್ಯಸೃಜನ್|
4 அவர்கள் இருவரும் பரிசுத்த ஆவியானவரால் வழியனுப்பப்பட்டு, செலூக்கியாவுக்குப்போய், அங்கிருந்து கப்பல் மூலமாய் சீப்புரு தீவுக்குச் சென்றார்கள்.
ತತಃ ಪರಂ ತೌ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪ್ರೇರಿತೌ ಸನ್ತೌ ಸಿಲೂಕಿಯಾನಗರಮ್ ಉಪಸ್ಥಾಯ ಸಮುದ್ರಪಥೇನ ಕುಪ್ರೋಪದ್ವೀಪಮ್ ಅಗಚ್ಛತಾಂ|
5 அவர்கள் சலாமி பட்டணத்திற்கு வந்து சேர்ந்தபோது, அங்குள்ள யூத ஜெப ஆலயங்களில் இறைவனுடைய வார்த்தையை அறிவித்தார்கள். மாற்கு எனப்பட்ட யோவான், அவர்களோடு அவர்களின் உதவியாளனாய் இருந்தான்.
ತತಃ ಸಾಲಾಮೀನಗರಮ್ ಉಪಸ್ಥಾಯ ತತ್ರ ಯಿಹೂದೀಯಾನಾಂ ಭಜನಭವನಾನಿ ಗತ್ವೇಶ್ವರಸ್ಯ ಕಥಾಂ ಪ್ರಾಚಾರಯತಾಂ; ಯೋಹನಪಿ ತತ್ಸಹಚರೋಽಭವತ್|
6 அவர்கள் அந்தத் தீவு முழுவதும் பிரயாணம் செய்து, பாப்போ பட்டணத்திற்கு வந்தார்கள். அங்கே அவர்கள் ஒரு யூத மந்திரவாதியும், பொய் தீர்க்கதரிசியுமான பர்யேசு என்னும் ஒருவனைச் சந்தித்தார்கள்.
ಇತ್ಥಂ ತೇ ತಸ್ಯೋಪದ್ವೀಪಸ್ಯ ಸರ್ವ್ವತ್ರ ಭ್ರಮನ್ತಃ ಪಾಫನಗರಮ್ ಉಪಸ್ಥಿತಾಃ; ತತ್ರ ಸುವಿವೇಚಕೇನ ಸರ್ಜಿಯಪೌಲನಾಮ್ನಾ ತದ್ದೇಶಾಧಿಪತಿನಾ ಸಹ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನೋ ವೇಶಧಾರೀ ಬರ್ಯೀಶುನಾಮಾ ಯೋ ಮಾಯಾವೀ ಯಿಹೂದೀ ಆಸೀತ್ ತಂ ಸಾಕ್ಷಾತ್ ಪ್ರಾಪ್ತವತಃ|
7 அவன் செர்கியுபவுல் என்னும் அதிபதியின் உதவியாளனாய் இருந்தான். அறிவாற்றல் உள்ளவனான அந்த அதிபதி, இறைவனுடைய வார்த்தையைக் கேட்க விரும்பியதால், பர்னபாவையும் சவுலையும் அழைத்துவர ஆளனுப்பினான்.
ತದ್ದೇಶಾಧಿಪ ಈಶ್ವರಸ್ಯ ಕಥಾಂ ಶ್ರೋತುಂ ವಾಞ್ಛನ್ ಪೌಲಬರ್ಣಬ್ಬೌ ನ್ಯಮನ್ತ್ರಯತ್|
8 ஆனால் மந்திரவாதி எலிமா அவர்களை எதிர்த்து நின்று, அந்த அதிபதி விசுவாசிக்காதபடி தடைசெய்ய முயற்சித்தான். எலிமா என்பது மந்திரவாதி என்ற அவனது பெயரின் அர்த்தமாகும்.
ಕಿನ್ತ್ವಿಲುಮಾ ಯಂ ಮಾಯಾವಿನಂ ವದನ್ತಿ ಸ ದೇಶಾಧಿಪತಿಂ ಧರ್ಮ್ಮಮಾರ್ಗಾದ್ ಬಹಿರ್ಭೂತಂ ಕರ್ತ್ತುಮ್ ಅಯತತ|
9 அப்பொழுது பவுல் என்று அழைக்கப்பட்ட சவுல் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டு, நேரே எலிமாவைப் பார்த்துச் சொன்னதாவது,
ತಸ್ಮಾತ್ ಶೋಲೋಽರ್ಥಾತ್ ಪೌಲಃ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಪರಿಪೂರ್ಣಃ ಸನ್ ತಂ ಮಾಯಾವಿನಂ ಪ್ರತ್ಯನನ್ಯದೃಷ್ಟಿಂ ಕೃತ್ವಾಕಥಯತ್,
10 “பிசாசின் பிள்ளையே, எல்லா நீதிக்கும் பகைவனே, நீ எல்லாவித ஏமாற்றுக்களினாலும் தந்திரங்களினாலும் நிறைந்திருக்கிறாய். கர்த்தருடைய நேர்வழிகளைப் புரட்டுவதை நீ ஒருபோதும் நிறுத்தமாட்டாயோ?
ಹೇ ನರಕಿನ್ ಧರ್ಮ್ಮದ್ವೇಷಿನ್ ಕೌಟಿಲ್ಯದುಷ್ಕರ್ಮ್ಮಪರಿಪೂರ್ಣ, ತ್ವಂ ಕಿಂ ಪ್ರಭೋಃ ಸತ್ಯಪಥಸ್ಯ ವಿಪರ್ಯ್ಯಯಕರಣಾತ್ ಕದಾಪಿ ನ ನಿವರ್ತ್ತಿಷ್ಯಸೇ?
11 இப்பொழுதே, கர்த்தருடைய கரம் உனக்கு எதிராய் இருக்கிறது. நீ இப்பொழுது குருடனாகி கொஞ்சக் காலத்திற்கு சூரிய வெளிச்சத்தைக் காணமாட்டாய்” என்றான். உடனே அவன் பார்வை மங்கியது, இருளும் சூழ்ந்தது. அவன் கைகளினால் தடவி, தன் கையைப் பிடித்து நடத்துவதற்கு ஒருவனைத் தேடினான்.
ಅಧುನಾ ಪರಮೇಶ್ವರಸ್ತವ ಸಮುಚಿತಂ ಕರಿಷ್ಯತಿ ತೇನ ಕತಿಪಯದಿನಾನಿ ತ್ವಮ್ ಅನ್ಧಃ ಸನ್ ಸೂರ್ಯ್ಯಮಪಿ ನ ದ್ರಕ್ಷ್ಯಸಿ| ತತ್ಕ್ಷಣಾದ್ ರಾತ್ರಿವದ್ ಅನ್ಧಕಾರಸ್ತಸ್ಯ ದೃಷ್ಟಿಮ್ ಆಚ್ಛಾದಿತವಾನ್; ತಸ್ಮಾತ್ ತಸ್ಯ ಹಸ್ತಂ ಧರ್ತ್ತುಂ ಸ ಲೋಕಮನ್ವಿಚ್ಛನ್ ಇತಸ್ತತೋ ಭ್ರಮಣಂ ಕೃತವಾನ್|
12 நடந்ததை அந்த அதிபதி கண்டபோது, அவன் கர்த்தருடைய போதனையைக்குறித்து வியப்படைந்து விசுவாசித்தான்.
ಏನಾಂ ಘಟನಾಂ ದೃಷ್ಟ್ವಾ ಸ ದೇಶಾಧಿಪತಿಃ ಪ್ರಭೂಪದೇಶಾದ್ ವಿಸ್ಮಿತ್ಯ ವಿಶ್ವಾಸಂ ಕೃತವಾನ್|
13 பாப்போ பட்டணத்திலிருந்து, பவுலும் அவனுடைய கூட்டாளிகளும் கப்பல் மூலமாய் பம்பிலியாவிலுள்ள பெர்கேவுக்குச் சென்றார்கள். யோவான் எருசலேமுக்குத் திரும்பிப் போவதற்காக அங்கிருந்து அவர்களைவிட்டுப் போனான்.
ತದನನ್ತರಂ ಪೌಲಸ್ತತ್ಸಙ್ಗಿನೌ ಚ ಪಾಫನಗರಾತ್ ಪ್ರೋತಂ ಚಾಲಯಿತ್ವಾ ಪಮ್ಫುಲಿಯಾದೇಶಸ್ಯ ಪರ್ಗೀನಗರಮ್ ಅಗಚ್ಛನ್ ಕಿನ್ತು ಯೋಹನ್ ತಯೋಃ ಸಮೀಪಾದ್ ಏತ್ಯ ಯಿರೂಶಾಲಮಂ ಪ್ರತ್ಯಾಗಚ್ಛತ್|
14 அவர்கள் பெர்கேவிலிருந்து பிசீதியாவைச் சேர்ந்த அந்தியோகியாவுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளிலே அவர்கள் ஜெப ஆலயத்திற்குள்ளே போய் உட்கார்ந்தார்கள்.
ಪಶ್ಚಾತ್ ತೌ ಪರ್ಗೀತೋ ಯಾತ್ರಾಂ ಕೃತ್ವಾ ಪಿಸಿದಿಯಾದೇಶಸ್ಯ ಆನ್ತಿಯಖಿಯಾನಗರಮ್ ಉಪಸ್ಥಾಯ ವಿಶ್ರಾಮವಾರೇ ಭಜನಭವನಂ ಪ್ರವಿಶ್ಯ ಸಮುಪಾವಿಶತಾಂ|
15 மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் வாசிக்கப்பட்ட பின்பு, ஜெப ஆலயத் தலைவர்கள் அவர்களுக்குச் செய்தி அனுப்பி, “சகோதரரே, மக்களை உற்சாகப்படுத்தக்கூடிய செய்தி உங்களிடம் இருந்தால், நீங்கள் பேசுங்கள்” என்றார்கள்.
ವ್ಯವಸ್ಥಾಭವಿಷ್ಯದ್ವಾಕ್ಯಯೋಃ ಪಠಿತಯೋಃ ಸತೋ ರ್ಹೇ ಭ್ರಾತರೌ ಲೋಕಾನ್ ಪ್ರತಿ ಯುವಯೋಃ ಕಾಚಿದ್ ಉಪದೇಶಕಥಾ ಯದ್ಯಸ್ತಿ ತರ್ಹಿ ತಾಂ ವದತಂ ತೌ ಪ್ರತಿ ತಸ್ಯ ಭಜನಭವನಸ್ಯಾಧಿಪತಯಃ ಕಥಾಮ್ ಏತಾಂ ಕಥಯಿತ್ವಾ ಪ್ರೈಷಯನ್|
16 பவுல் எழுந்து, தன் கையால் அவர்களுக்கு சைகை காட்டிச் சொன்னதாவது: “இஸ்ரயேல் மக்களே, இறைவனுக்குப் பயப்படுகிற மக்களே, எனக்குச் செவிகொடுங்கள்.
ಅತಃ ಪೌಲ ಉತ್ತಿಷ್ಠನ್ ಹಸ್ತೇನ ಸಙ್ಕೇತಂ ಕುರ್ವ್ವನ್ ಕಥಿತವಾನ್ ಹೇ ಇಸ್ರಾಯೇಲೀಯಮನುಷ್ಯಾ ಈಶ್ವರಪರಾಯಣಾಃ ಸರ್ವ್ವೇ ಲೋಕಾ ಯೂಯಮ್ ಅವಧದ್ಧಂ|
17 இஸ்ரயேல் மக்களின் இறைவன், நமது தந்தையரைத் தெரிந்துகொண்டார்; அவர் அந்த மக்களை, அவர்கள் எகிப்தில் தங்கியிருந்த காலத்தில் செழிப்படையச் செய்தார். பின்பு அவர் தம்முடைய மிகுந்த வல்லமையினால், அந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தார்.
ಏತೇಷಾಮಿಸ್ರಾಯೇಲ್ಲೋಕಾನಾಮ್ ಈಶ್ವರೋಽಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪರುಷಾನ್ ಮನೋನೀತಾನ್ ಕತ್ವಾ ಗೃಹೀತವಾನ್ ತತೋ ಮಿಸರಿ ದೇಶೇ ಪ್ರವಸನಕಾಲೇ ತೇಷಾಮುನ್ನತಿಂ ಕೃತ್ವಾ ತಸ್ಮಾತ್ ಸ್ವೀಯಬಾಹುಬಲೇನ ತಾನ್ ಬಹಿಃ ಕೃತ್ವಾ ಸಮಾನಯತ್|
18 ஏறக்குறைய நாற்பது வருடங்களாக பாலைவனத்திலே அவர்களின் நடத்தையைச் சகித்துக்கொண்டார்.
ಚತ್ವಾರಿಂಶದ್ವತ್ಸರಾನ್ ಯಾವಚ್ಚ ಮಹಾಪ್ರಾನ್ತರೇ ತೇಷಾಂ ಭರಣಂ ಕೃತ್ವಾ
19 கானானில் இருந்த ஏழு நாட்டு மக்களை மேற்கொண்டு, அவர்களுடைய நாட்டைத் தமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்தார்.
ಕಿನಾನ್ದೇಶಾನ್ತರ್ವ್ವರ್ತ್ತೀಣಿ ಸಪ್ತರಾಜ್ಯಾನಿ ನಾಶಯಿತ್ವಾ ಗುಟಿಕಾಪಾತೇನ ತೇಷು ಸರ್ವ್ವದೇಶೇಷು ತೇಭ್ಯೋಽಧಿಕಾರಂ ದತ್ತವಾನ್|
20 இவையெல்லாம் நடந்து முடிய நானூற்றைம்பது வருடங்கள் ஆயிற்று. “இதற்குப்பின், இறைவாக்கினன் சாமுயேலின் காலம்வரைக்கும், இறைவன் அவர்களுக்கு நீதிபதிகளைக் கொடுத்தார்.
ಪಞ್ಚಾಶದಧಿಕಚತುಃಶತೇಷು ವತ್ಸರೇಷು ಗತೇಷು ಚ ಶಿಮೂಯೇಲ್ಭವಿಷ್ಯದ್ವಾದಿಪರ್ಯ್ಯನ್ತಂ ತೇಷಾಮುಪರಿ ವಿಚಾರಯಿತೃನ್ ನಿಯುಕ್ತವಾನ್|
21 பின்பு மக்கள் தங்களுக்கு ஒரு அரசனைத் தரும்படி கேட்டார்கள். அப்பொழுது இறைவன் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த கீசுவின் மகனான சவுலை அவர்களுக்கு அரசனாகக் கொடுத்தார். அவன் நாற்பது ஆண்டுகள் ஆட்சிசெய்தான்.
ತೈಶ್ಚ ರಾಜ್ಞಿ ಪ್ರಾರ್ಥಿತೇ, ಈಶ್ವರೋ ಬಿನ್ಯಾಮೀನೋ ವಂಶಜಾತಸ್ಯ ಕೀಶಃ ಪುತ್ರಂ ಶೌಲಂ ಚತ್ವಾರಿಂಶದ್ವರ್ಷಪರ್ಯ್ಯನ್ತಂ ತೇಷಾಮುಪರಿ ರಾಜಾನಂ ಕೃತವಾನ್|
22 இறைவன் சவுலை நீக்கியபின், தாவீதை அவர்களுக்கு அரசனாக ஏற்படுத்தினார்.” இறைவன் தாவீதைக்குறித்து சாட்சியாக: “ஈசாயின் மகனான தாவீது என் இருதயத்திற்கு உகந்த மனிதனாய் இருப்பதை நான் கண்டேன்; அவன் செய்யவேண்டும் என்று நான் விரும்பின எல்லாவற்றையும் அவன் செய்வான்” என்று சொன்னார்.
ಪಶ್ಚಾತ್ ತಂ ಪದಚ್ಯುತಂ ಕೃತ್ವಾ ಯೋ ಮದಿಷ್ಟಕ್ರಿಯಾಃ ಸರ್ವ್ವಾಃ ಕರಿಷ್ಯತಿ ತಾದೃಶಂ ಮಮ ಮನೋಭಿಮತಮ್ ಏಕಂ ಜನಂ ಯಿಶಯಃ ಪುತ್ರಂ ದಾಯೂದಂ ಪ್ರಾಪ್ತವಾನ್ ಇದಂ ಪ್ರಮಾಣಂ ಯಸ್ಮಿನ್ ದಾಯೂದಿ ಸ ದತ್ತವಾನ್ ತಂ ದಾಯೂದಂ ತೇಷಾಮುಪರಿ ರಾಜತ್ವಂ ಕರ್ತ್ತುಮ್ ಉತ್ಪಾದಿತವಾನ|
23 “தாவீதினுடைய சந்ததியிலே, அவர் வாக்குப்பண்ணியபடி, இயேசு என்னும் இரட்சகரை, இஸ்ரயேலுக்கு இறைவன் கொண்டுவந்தார்.
ತಸ್ಯ ಸ್ವಪ್ರತಿಶ್ರುತಸ್ಯ ವಾಕ್ಯಸ್ಯಾನುಸಾರೇಣ ಇಸ್ರಾಯೇಲ್ಲೋಕಾನಾಂ ನಿಮಿತ್ತಂ ತೇಷಾಂ ಮನುಷ್ಯಾಣಾಂ ವಂಶಾದ್ ಈಶ್ವರ ಏಕಂ ಯೀಶುಂ (ತ್ರಾತಾರಮ್) ಉದಪಾದಯತ್|
24 இயேசுவின் வருகைக்கு முன்னதாக, எல்லா இஸ்ரயேல் மக்களுக்கும் மனந்திரும்புதலைக்குறித்தும் திருமுழுக்கைக்குறித்தும் யோவான் ஸ்நானகன் பிரசங்கித்தான்.
ತಸ್ಯ ಪ್ರಕಾಶನಾತ್ ಪೂರ್ವ್ವಂ ಯೋಹನ್ ಇಸ್ರಾಯೇಲ್ಲೋಕಾನಾಂ ಸನ್ನಿಧೌ ಮನಃಪರಾವರ್ತ್ತನರೂಪಂ ಮಜ್ಜನಂ ಪ್ರಾಚಾರಯತ್|
25 யோவான் தனது ஊழியத்தை நிறைவேற்றியபோது, அவன் சொன்னதாவது: ‘நான் யாரென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் அவர் அல்ல. அவர் எனக்குப்பின் வருகிறார். அவருடைய பாதரட்சையை அவிழ்ப்பதற்கும் நான் தகுதியற்றவன்.’
ಯಸ್ಯ ಚ ಕರ್ಮ್ಮಣೋ ಭಾರಂ ಪ್ರಪ್ತವಾನ್ ಯೋಹನ್ ತನ್ ನಿಷ್ಪಾದಯನ್ ಏತಾಂ ಕಥಾಂ ಕಥಿತವಾನ್, ಯೂಯಂ ಮಾಂ ಕಂ ಜನಂ ಜಾನೀಥ? ಅಹಮ್ ಅಭಿಷಿಕ್ತತ್ರಾತಾ ನಹಿ, ಕಿನ್ತು ಪಶ್ಯತ ಯಸ್ಯ ಪಾದಯೋಃ ಪಾದುಕಯೋ ರ್ಬನ್ಧನೇ ಮೋಚಯಿತುಮಪಿ ಯೋಗ್ಯೋ ನ ಭವಾಮಿ ತಾದೃಶ ಏಕೋ ಜನೋ ಮಮ ಪಶ್ಚಾದ್ ಉಪತಿಷ್ಠತಿ|
26 “சகோதரரே, ஆபிரகாமின் பிள்ளைகளே, இறைவனுக்குப் பயந்து நடக்கிற யூதரல்லாத மக்களே, இந்த இரட்சிப்பின் செய்தி நமக்கே அனுப்பப்பட்டிருக்கிறது.
ಹೇ ಇಬ್ರಾಹೀಮೋ ವಂಶಜಾತಾ ಭ್ರಾತರೋ ಹೇ ಈಶ್ವರಭೀತಾಃ ಸರ್ವ್ವಲೋಕಾ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪರಿತ್ರಾಣಸ್ಯ ಕಥೈಷಾ ಪ್ರೇರಿತಾ|
27 எருசலேமின் மக்களும், அவர்களுடைய ஆளுநர்களும், இயேசுவை யாரெனப் புரிந்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு மரணதண்டனையைக் கொடுத்ததின் மூலம், ஒவ்வொரு ஓய்வுநாளிலும் வாசிக்கப்படும் இறைவாக்கினரின் வார்த்தைகளை நிறைவேற்றிவிட்டார்கள்.
ಯಿರೂಶಾಲಮ್ನಿವಾಸಿನಸ್ತೇಷಾಮ್ ಅಧಿಪತಯಶ್ಚ ತಸ್ಯ ಯೀಶೋಃ ಪರಿಚಯಂ ನ ಪ್ರಾಪ್ಯ ಪ್ರತಿವಿಶ್ರಾಮವಾರಂ ಪಠ್ಯಮಾನಾನಾಂ ಭವಿಷ್ಯದ್ವಾದಿಕಥಾನಾಮ್ ಅಭಿಪ್ರಾಯಮ್ ಅಬುದ್ಧ್ವಾ ಚ ತಸ್ಯ ವಧೇನ ತಾಃ ಕಥಾಃ ಸಫಲಾ ಅಕುರ್ವ್ವನ್|
28 இயேசுவுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடிய தகுந்த ஆதாரம் எதுவும் கிடைக்காத போதுங்கூட, அவருக்கு மரணத்தீர்ப்பே கொடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் பிலாத்துவைக் கேட்டுக்கொண்டார்கள்.
ಪ್ರಾಣಹನನಸ್ಯ ಕಮಪಿ ಹೇತುಮ್ ಅಪ್ರಾಪ್ಯಾಪಿ ಪೀಲಾತಸ್ಯ ನಿಕಟೇ ತಸ್ಯ ವಧಂ ಪ್ರಾರ್ಥಯನ್ತ|
29 இயேசுவைக்குறித்து வேதத்தில் எழுதியிருப்பதையெல்லாம் அவர்கள் செய்துமுடித்த பின்பு, அவருடைய உடலை சிலுவையிலிருந்து கீழே இறக்கி, அதைக் கல்லறையில் வைத்தார்கள்.
ತಸ್ಮಿನ್ ಯಾಃ ಕಥಾ ಲಿಖಿತಾಃ ಸನ್ತಿ ತದನುಸಾರೇಣ ಕರ್ಮ್ಮ ಸಮ್ಪಾದ್ಯ ತಂ ಕ್ರುಶಾದ್ ಅವತಾರ್ಯ್ಯ ಶ್ಮಶಾನೇ ಶಾಯಿತವನ್ತಃ|
30 ஆனால் இறைவனோ இயேசுவை மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பினார்.
ಕಿನ್ತ್ವೀಶ್ವರಃ ಶ್ಮಶಾನಾತ್ ತಮುದಸ್ಥಾಪಯತ್,
31 இயேசுவோடுகூட கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு வந்திருந்தவர்களுக்கு பல நாட்கள் அவர் காணப்பட்டார். அவர்கள் இன்று நமது மக்களுக்கு சாட்சிகளாய் இருக்கிறார்கள்.
ಪುನಶ್ಚ ಗಾಲೀಲಪ್ರದೇಶಾದ್ ಯಿರೂಶಾಲಮನಗರಂ ತೇನ ಸಾರ್ದ್ಧಂ ಯೇ ಲೋಕಾ ಆಗಚ್ಛನ್ ಸ ಬಹುದಿನಾನಿ ತೇಭ್ಯೋ ದರ್ಶನಂ ದತ್ತವಾನ್, ಅತಸ್ತ ಇದಾನೀಂ ಲೋಕಾನ್ ಪ್ರತಿ ತಸ್ಯ ಸಾಕ್ಷಿಣಃ ಸನ್ತಿ|
32 “நாங்கள் உங்களுக்கு நற்செய்தியையே சொல்கிறோம்: இறைவன் நமது தந்தையருக்கு வாக்குப்பண்ணியதை
ಅಸ್ಮಾಕಂ ಪೂರ್ವ್ವಪುರುಷಾಣಾಂ ಸಮಕ್ಷಮ್ ಈಶ್ವರೋ ಯಸ್ಮಿನ್ ಪ್ರತಿಜ್ಞಾತವಾನ್ ಯಥಾ, ತ್ವಂ ಮೇ ಪುತ್ರೋಸಿ ಚಾದ್ಯ ತ್ವಾಂ ಸಮುತ್ಥಾಪಿತವಾನಹಮ್|
33 இயேசுவை உயிருடன் எழுப்பியதாலேயே அவருடைய பிள்ளைகளாகிய நமக்கென்று நிறைவேற்றியிருக்கிறார். இது இரண்டாம் சங்கீதத்தில் எழுதியிருக்கிறது: “‘நீர் என்னுடைய மகன்; இன்று நான் உமக்குத் தந்தையானேன்.’
ಇದಂ ಯದ್ವಚನಂ ದ್ವಿತೀಯಗೀತೇ ಲಿಖಿತಮಾಸ್ತೇ ತದ್ ಯೀಶೋರುತ್ಥಾನೇನ ತೇಷಾಂ ಸನ್ತಾನಾ ಯೇ ವಯಮ್ ಅಸ್ಮಾಕಂ ಸನ್ನಿಧೌ ತೇನ ಪ್ರತ್ಯಕ್ಷೀ ಕೃತಂ, ಯುಷ್ಮಾನ್ ಇಮಂ ಸುಸಂವಾದಂ ಜ್ಞಾಪಯಾಮಿ|
34 அவரை இனி ஒருபோதும் அழிவுக்குட்படுத்தாதபடி, இறைவன் அவரை இறந்தோரிலிருந்து எழுப்பினார் என்ற உண்மை, இந்த வேதவசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது: “‘தாவீதுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட பரிசுத்தமானதும் நிச்சயமானதுமான ஆசீர்வாதங்களை நான் உங்களுக்குத் தருவேன்.’
ಪರಮೇಶ್ವರೇಣ ಶ್ಮಶಾನಾದ್ ಉತ್ಥಾಪಿತಂ ತದೀಯಂ ಶರೀರಂ ಕದಾಪಿ ನ ಕ್ಷೇಷ್ಯತೇ, ಏತಸ್ಮಿನ್ ಸ ಸ್ವಯಂ ಕಥಿತವಾನ್ ಯಥಾ ದಾಯೂದಂ ಪ್ರತಿ ಪ್ರತಿಜ್ಞಾತೋ ಯೋ ವರಸ್ತಮಹಂ ತುಭ್ಯಂ ದಾಸ್ಯಾಮಿ|
35 அப்படியே இது இன்னுமொரு இடத்தில், “‘உமது பரிசுத்தர் அழிவைக் காணவும் நீர் விடமாட்டீர்,’ என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
ಏತದನ್ಯಸ್ಮಿನ್ ಗೀತೇಽಪಿ ಕಥಿತವಾನ್| ಸ್ವಕೀಯಂ ಪುಣ್ಯವನ್ತಂ ತ್ವಂ ಕ್ಷಯಿತುಂ ನ ಚ ದಾಸ್ಯಸಿ|
36 “தாவீது இறைவனுடைய நோக்கத்தைத் தன் தலைமுறையினரிடையே செய்து முடித்தபோது, அவன் நித்திரையடைந்தானே; அவன் தனது முற்பிதாக்களுடன் அடக்கம்பண்ணப்பட்டு, அவனது உடலும் அழிந்துபோனது.
ದಾಯೂದಾ ಈಶ್ವರಾಭಿಮತಸೇವಾಯೈ ನಿಜಾಯುಷಿ ವ್ಯಯಿತೇ ಸತಿ ಸ ಮಹಾನಿದ್ರಾಂ ಪ್ರಾಪ್ಯ ನಿಜೈಃ ಪೂರ್ವ್ವಪುರುಷೈಃ ಸಹ ಮಿಲಿತಃ ಸನ್ ಅಕ್ಷೀಯತ;
37 ஆனால் இறந்தோரிலிருந்து இறைவனால் உயிரோடு எழுப்பப்பட்டவரோ, அழிவைக் காணவில்லை.
ಕಿನ್ತು ಯಮೀಶ್ವರಃ ಶ್ಮಶಾನಾದ್ ಉದಸ್ಥಾಪಯತ್ ಸ ನಾಕ್ಷೀಯತ|
38 “ஆகையால் என் சகோதரரே, ‘இயேசுவின் மூலமே உங்கள் பாவங்களுக்கான மன்னிப்பு உண்டு என்று உங்களுக்கு அறிவிக்கப்படுகிறது’ என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவேண்டும் என நான் விரும்புகிறேன்.
ಅತೋ ಹೇ ಭ್ರಾತರಃ, ಅನೇನ ಜನೇನ ಪಾಪಮೋಚನಂ ಭವತೀತಿ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪ್ರಚಾರಿತಮ್ ಆಸ್ತೇ|
39 மோசேயினுடைய சட்டத்தின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட முடியாதிருந்த எல்லாப் பாவங்களிலுமிருந்தும் விடுதலையாகி, இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொருவரும், அவர் மூலமாய் நீதிமான்களாக்கப்படுகிறார்கள்.
ಫಲತೋ ಮೂಸಾವ್ಯವಸ್ಥಯಾ ಯೂಯಂ ಯೇಭ್ಯೋ ದೋಷೇಭ್ಯೋ ಮುಕ್ತಾ ಭವಿತುಂ ನ ಶಕ್ಷ್ಯಥ ತೇಭ್ಯಃ ಸರ್ವ್ವದೋಷೇಭ್ಯ ಏತಸ್ಮಿನ್ ಜನೇ ವಿಶ್ವಾಸಿನಃ ಸರ್ವ್ವೇ ಮುಕ್ತಾ ಭವಿಷ್ಯನ್ತೀತಿ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಜ್ಞಾಯತಾಂ|
40 ஆனால் இறைவாக்கினர் சொன்னது உங்களுக்கு நடக்காதபடி கவனமாயிருங்கள் என்று பவுல் சொன்னதாவது:
ಅಪರಞ್ಚ| ಅವಜ್ಞಾಕಾರಿಣೋ ಲೋಕಾಶ್ಚಕ್ಷುರುನ್ಮೀಲ್ಯ ಪಶ್ಯತ| ತಥೈವಾಸಮ್ಭವಂ ಜ್ಞಾತ್ವಾ ಸ್ಯಾತ ಯೂಯಂ ವಿಲಜ್ಜಿತಾಃ| ಯತೋ ಯುಷ್ಮಾಸು ತಿಷ್ಠತ್ಸು ಕರಿಷ್ಯೇ ಕರ್ಮ್ಮ ತಾದೃಶಂ| ಯೇನೈವ ತಸ್ಯ ವೃತ್ತಾನ್ತೇ ಯುಷ್ಮಭ್ಯಂ ಕಥಿತೇಽಪಿ ಹಿ| ಯೂಯಂ ನ ತನ್ತು ವೃತ್ತಾನ್ತಂ ಪ್ರತ್ಯೇಷ್ಯಥ ಕದಾಚನ||
41 “‘பாருங்கள், ஏளனம் செய்வோரே! அதிசயப்பட்டு சிதறிப்போங்கள். ஏனெனில் உங்கள் நாட்களிலே நான் ஒரு காரியத்தைச் செய்யப்போகிறேன். அதை யாராவது உங்களுக்குச் சொன்னாலும், நீங்கள் ஒருபோதும் நம்பமாட்டீர்கள்.’”
ಯೇಯಂ ಕಥಾ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಾಂ ಗ್ರನ್ಥೇಷು ಲಿಖಿತಾಸ್ತೇ ಸಾವಧಾನಾ ಭವತ ಸ ಕಥಾ ಯಥಾ ಯುಷ್ಮಾನ್ ಪ್ರತಿ ನ ಘಟತೇ|
42 பவுலும் பர்னபாவும் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டபோது, இந்தக் காரியங்களைக்குறித்து அடுத்த ஓய்வுநாளிலேயும் பேசும்படி மக்கள் அவர்களை அழைத்தார்கள்.
ಯಿಹೂದೀಯಭಜನಭವನಾನ್ ನಿರ್ಗತಯೋಸ್ತಯೋ ರ್ಭಿನ್ನದೇಶೀಯೈ ರ್ವಕ್ಷ್ಯಮಾಣಾ ಪ್ರಾರ್ಥನಾ ಕೃತಾ, ಆಗಾಮಿನಿ ವಿಶ್ರಾಮವಾರೇಽಪಿ ಕಥೇಯಮ್ ಅಸ್ಮಾನ್ ಪ್ರತಿ ಪ್ರಚಾರಿತಾ ಭವತ್ವಿತಿ|
43 கூடியிருந்த மக்கள் கலைந்துபோனபின், அநேக யூதரும், யூத விசுவாசத்தை பின்பற்றிய பக்தியுள்ளோரும், பவுலையும் பர்னபாவையும் பின்பற்றினார்கள். பவுலும் பர்னபாவும் தங்களோடு வந்தவர்களுடன் பேசி, அவர்களை இறைவனுடைய கிருபையில் தொடர்ந்து இருக்கும்படி உற்சாகப்படுத்தினார்கள்.
ಸಭಾಯಾ ಭಙ್ಗೇ ಸತಿ ಬಹವೋ ಯಿಹೂದೀಯಲೋಕಾ ಯಿಹೂದೀಯಮತಗ್ರಾಹಿಣೋ ಭಕ್ತಲೋಕಾಶ್ಚ ಬರ್ಣಬ್ಬಾಪೌಲಯೋಃ ಪಶ್ಚಾದ್ ಆಗಚ್ಛನ್, ತೇನ ತೌ ತೈಃ ಸಹ ನಾನಾಕಥಾಃ ಕಥಯಿತ್ವೇಶ್ವರಾನುಗ್ರಹಾಶ್ರಯೇ ಸ್ಥಾತುಂ ತಾನ್ ಪ್ರಾವರ್ತ್ತಯತಾಂ|
44 அடுத்த ஓய்வுநாளிலே ஏறக்குறைய பட்டணத்திலுள்ள அனைவரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேட்கும்படி கூடியிருந்தார்கள்.
ಪರವಿಶ್ರಾಮವಾರೇ ನಗರಸ್ಯ ಪ್ರಾಯೇಣ ಸರ್ವ್ವೇ ಲಾಕಾ ಈಶ್ವರೀಯಾಂ ಕಥಾಂ ಶ್ರೋತುಂ ಮಿಲಿತಾಃ,
45 மக்கள் பெருங்கூட்டமாய் கூடியிருப்பதை யூதர்கள் கண்டபோது, அவர்கள் பொறாமையினால் நிறைந்து, அவர்கள் பவுல் சொல்வதற்கு எதிரிடையாய் பேசி, விரோதித்து தூஷித்தார்கள்.
ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯಲೋಕಾ ಜನನಿವಹಂ ವಿಲೋಕ್ಯ ಈರ್ಷ್ಯಯಾ ಪರಿಪೂರ್ಣಾಃ ಸನ್ತೋ ವಿಪರೀತಕಥಾಕಥನೇನೇಶ್ವರನಿನ್ದಯಾ ಚ ಪೌಲೇನೋಕ್ತಾಂ ಕಥಾಂ ಖಣ್ಡಯಿತುಂ ಚೇಷ್ಟಿತವನ್ತಃ|
46 அப்பொழுது பவுலும், பர்னபாவும் துணிவுடன் அவர்களுக்குப் பதிலளித்துச் சொன்னதாவது: “இறைவனுடைய வார்த்தையை நாங்கள் உங்களுடனே முதலாவதாக பேசவேண்டியிருந்தது. ஆனால் நீங்கள் அதைப் புறக்கணித்து, நீங்கள் உங்களை நித்திய வாழ்வுக்குத் தகுதியுள்ளவர்கள் என்று எண்ணாமல் இருக்கிறதினால், நாங்கள் இப்போது யூதரல்லாத மக்களிடம் போகிறோம். (aiōnios )
ತತಃ ಪೌಲಬರ್ಣಬ್ಬಾವಕ್ಷೋಭೌ ಕಥಿತವನ್ತೌ ಪ್ರಥಮಂ ಯುಷ್ಮಾಕಂ ಸನ್ನಿಧಾವೀಶ್ವರೀಯಕಥಾಯಾಃ ಪ್ರಚಾರಣಮ್ ಉಚಿತಮಾಸೀತ್ ಕಿನ್ತುಂ ತದಗ್ರಾಹ್ಯತ್ವಕರಣೇನ ಯೂಯಂ ಸ್ವಾನ್ ಅನನ್ತಾಯುಷೋಽಯೋಗ್ಯಾನ್ ದರ್ಶಯಥ, ಏತತ್ಕಾರಣಾದ್ ವಯಮ್ ಅನ್ಯದೇಶೀಯಲೋಕಾನಾಂ ಸಮೀಪಂ ಗಚ್ಛಾಮಃ| (aiōnios )
47 ஏனெனில், கர்த்தர் எங்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது இதுவே: “‘பூமியின் கடைமுனை வரையிலுள்ள அனைவருக்கும் நீ என் இரட்சிப்பைக் கொண்டுசெல்லும்படி, நான் உன்னை யூதரல்லாத மக்களுக்கு ஒரு வெளிச்சமாக ஏற்படுத்தியிருக்கிறேன்.’”
ಪ್ರಭುರಸ್ಮಾನ್ ಇತ್ಥಮ್ ಆದಿಷ್ಟವಾನ್ ಯಥಾ, ಯಾವಚ್ಚ ಜಗತಃ ಸೀಮಾಂ ಲೋಕಾನಾಂ ತ್ರಾಣಕಾರಣಾತ್| ಮಯಾನ್ಯದೇಶಮಧ್ಯೇ ತ್ವಂ ಸ್ಥಾಪಿತೋ ಭೂಃ ಪ್ರದೀಪವತ್||
48 யூதரல்லாத மக்கள் இதைக் கேட்டபோது, மிகவும் மகிழ்ச்சியடைந்து, கர்த்தரின் வார்த்தையை மேன்மைப்படுத்தினார்கள்; நித்திய ஜீவனுக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் விசுவாசித்தார்கள். (aiōnios )
ತದಾ ಕಥಾಮೀದೃಶೀಂ ಶ್ರುತ್ವಾ ಭಿನ್ನದೇಶೀಯಾ ಆಹ್ಲಾದಿತಾಃ ಸನ್ತಃ ಪ್ರಭೋಃ ಕಥಾಂ ಧನ್ಯಾಂ ಧನ್ಯಾಮ್ ಅವದನ್, ಯಾವನ್ತೋ ಲೋಕಾಶ್ಚ ಪರಮಾಯುಃ ಪ್ರಾಪ್ತಿನಿಮಿತ್ತಂ ನಿರೂಪಿತಾ ಆಸನ್ ತೇ ವ್ಯಶ್ವಸನ್| (aiōnios )
49 அந்த நாடெங்கும், கர்த்தருடைய வார்த்தை பரவியது.
ಇತ್ಥಂ ಪ್ರಭೋಃ ಕಥಾ ಸರ್ವ್ವೇದೇಶಂ ವ್ಯಾಪ್ನೋತ್|
50 ஆனால் யூதர்கள் பக்தியும், உயர்ந்த மதிப்புக்குரிய பெண்களையும் அந்தப் பட்டணத்திலுள்ள முதன்மைவாய்ந்தவரையும் தூண்டிவிட்டார்கள். அவர்கள் துன்புறுத்தலை ஏற்படுத்தி, பவுலையும் பர்னபாவையும் அந்தப் பகுதியிலிருந்து துரத்திவிட்டார்கள்.
ಕಿನ್ತು ಯಿಹೂದೀಯಾ ನಗರಸ್ಯ ಪ್ರಧಾನಪುರುಷಾನ್ ಸಮ್ಮಾನ್ಯಾಃ ಕಥಿಪಯಾ ಭಕ್ತಾ ಯೋಷಿತಶ್ಚ ಕುಪ್ರವೃತ್ತಿಂ ಗ್ರಾಹಯಿತ್ವಾ ಪೌಲಬರ್ಣಬ್ಬೌ ತಾಡಯಿತ್ವಾ ತಸ್ಮಾತ್ ಪ್ರದೇಶಾದ್ ದೂರೀಕೃತವನ್ತಃ|
51 எனவே பவுலும் பர்னபாவும் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, தங்களுடைய காலிலிருந்த தூசியை உதறிவிட்டு, இக்கோனியா பட்டணத்திற்குச் சென்றார்கள்.
ಅತಃ ಕಾರಣಾತ್ ತೌ ನಿಜಪದಧೂಲೀಸ್ತೇಷಾಂ ಪ್ರಾತಿಕೂಲ್ಯೇನ ಪಾತಯಿತ್ವೇಕನಿಯಂ ನಗರಂ ಗತೌ|
52 சீடர்களோ மகிழ்ச்சியினாலும் பரிசுத்த ஆவியானவரினாலும் நிரப்பப்பட்டார்கள்.
ತತಃ ಶಿಷ್ಯಗಣ ಆನನ್ದೇನ ಪವಿತ್ರೇಣಾತ್ಮನಾ ಚ ಪರಿಪೂರ್ಣೋಭವತ್|