< அப்போஸ்தலர் 12 >

1 அந்நாட்களில், ஏரோது அரசன் திருச்சபையைத் துன்புறுத்த எண்ணிச், சிலரைக் கைது செய்தான்.
తస్మిన్ సమయే హేరోద్‌రాజో మణ్డల్యాః కియజ్జనేభ్యో దుఃఖం దాతుం ప్రారభత్|
2 அவன் யோவானின் சகோதரன் யாக்கோபை வாளால் கொலைசெய்தான்.
విశేషతో యోహనః సోదరం యాకూబం కరవాలాఘాతేన్ హతవాన్|
3 அது யூதருக்கு விருப்பமாய் இருந்தது என்று அவன் கண்டபோது, பேதுருவையும் பிடிப்பதற்கு நடவடிக்கை எடுத்தான். இது புளிப்பில்லாத அப்பப்பண்டிகை நாட்களில் நடந்தது.
తస్మాద్ యిహూదీయాః సన్తుష్టా అభవన్ ఇతి విజ్ఞాయ స పితరమపి ధర్త్తుం గతవాన్|
4 அவன் பேதுருவைக் கைதுசெய்து, சிறையில் போட்டான். நான்கு காவற்குழுக்களால் காவல் செய்யப்படும்படி அவன் பேதுருவை ஒப்படைத்தான். ஒவ்வொரு காவற்குழுவிலும் நான்கு படைவீரர்கள் இருந்தார்கள். ஏரோது பேதுருவைப் பஸ்கா என்ற பண்டிகை முடிந்தபின்பு வெளியே கொண்டுவந்து, பகிரங்கமாய் விசாரணை செய்வதற்கு எண்ணியிருந்தான்.
తదా కిణ్వశూన్యపూపోత్సవసమయ ఉపాతిష్టత్; అత ఉత్సవే గతే సతి లోకానాం సమక్షం తం బహిరానేయ్యామీతి మనసి స్థిరీకృత్య స తం ధారయిత్వా రక్ష్ణార్థమ్ యేషామ్ ఏకైకసంఘే చత్వారో జనాః సన్తి తేషాం చతుర్ణాం రక్షకసంఘానాం సమీపే తం సమర్ప్య కారాయాం స్థాపితవాన్|
5 எனவே, பேதுரு சிறையில் வைக்கப்பட்டிருந்தான். ஆனால் சபையார் அவனுக்காக ஊக்கமாய் இறைவனிடம் மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
కిన్తుం పితరస్య కారాస్థితికారణాత్ మణ్డల్యా లోకా అవిశ్రామమ్ ఈశ్వరస్య సమీపే ప్రార్థయన్త|
6 ஏரோது பேதுருவை விசாரணைக்குக் கொண்டுவர இருந்த நாளுக்கு முந்திய இரவிலே, பேதுரு இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டவனாய், இரண்டு படைவீரருக்கு இடையில் நித்திரை செய்துகொண்டிருந்தான். வாசல் காவலரும் சிறையைக் காவல் செய்துகொண்டிருந்தார்கள்.
అనన్తరం హేరోది తం బహిరానాయితుం ఉద్యతే సతి తస్యాం రాత్రౌ పితరో రక్షకద్వయమధ్యస్థానే శృఙ్ఖలద్వయేన బద్ధ్వః సన్ నిద్రిత ఆసీత్, దౌవారికాశ్చ కారాయాః సమ్ముఖే తిష్ఠనతో ద్వారమ్ అరక్షిషుః|
7 திடீரென, கர்த்தருடைய தூதன் ஒருவன் அங்கே தோன்றினான். அந்தக் காவல் அறையிலே ஒரு வெளிச்சம் பிரகாசித்தது. அவன் பேதுருவை விலாவிலே தட்டி எழுப்பினான். “விரைவாய் எழுந்திரு!” என்றான். உடனே, பேதுருவின் கைகளில் இருந்து சங்கிலிகள் கழன்று விழுந்தன.
ఏతస్మిన్ సమయే పరమేశ్వరస్య దూతే సముపస్థితే కారా దీప్తిమతీ జాతా; తతః స దూతః పితరస్య కుక్షావావాతం కృత్వా తం జాగరయిత్వా భాషితవాన్ తూర్ణముత్తిష్ఠ; తతస్తస్య హస్తస్థశృఙ్ఖలద్వయం గలత్ పతితం|
8 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அவனிடம், “உனது உடைகளை உடுத்தி, பாதரட்சையைப் போட்டுக்கொள்” என்றான். பேதுருவும் அப்படியே செய்தான். மேலும் தூதன் அவனிடம், “நீ உனது மேலுடையைப் போர்த்திக்கொண்டு, என்னைப் பின்தொடர்ந்து வா” என்றான்.
స దూతస్తమవదత్, బద్ధకటిః సన్ పాదయోః పాదుకే అర్పయ; తేన తథా కృతే సతి దూతస్తమ్ ఉక్తవాన్ గాత్రీయవస్త్రం గాత్రే నిధాయ మమ పశ్చాద్ ఏహి|
9 பேதுரு சிறையைவிட்டு அவனைப் பின்தொடர்ந்தான். ஆனால் அந்தத் தூதன் செய்வதெல்லாம் உண்மையாகவே நடக்கின்றன என்று அவன் அறியாதிருந்தான்; அவனோ, தான் ஒரு தரிசனம் காண்கிறதாக எண்ணிக்கொண்டிருந்தான்.
తతః పితరస్తస్య పశ్చాద్ వ్రజన బహిరగచ్ఛత్, కిన్తు దూతేన కర్మ్మైతత్ కృతమితి సత్యమజ్ఞాత్వా స్వప్నదర్శనం జ్ఞాతవాన్|
10 அவர்கள் முதலாம் காவலையும் இரண்டாம் காவலையும் கடந்து, பட்டணத்திற்குப் போகின்ற இரும்பு வாசற்கதவுவரை வந்தார்கள். அப்போது அது தானாகவே திறந்து, அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் அதின் வழியாகச் சென்றார்கள். அவர்கள் ஒரு வீதியின் முழுப் பகுதியையும் நடந்து சென்றபோது, திடீரென அந்தத் தூதன் பேதுருவைவிட்டுப் போனான்.
ఇత్థం తౌ ప్రథమాం ద్వితీయాఞ్చ కారాం లఙ్ఘిత్వా యేన లౌహనిర్మ్మితద్వారేణ నగరం గమ్యతే తత్సమీపం ప్రాప్నుతాం; తతస్తస్య కవాటం స్వయం ముక్తమభవత్ తతస్తౌ తత్స్థానాద్ బహి ర్భూత్వా మార్గైకస్య సీమాం యావద్ గతౌ; తతోఽకస్మాత్ స దూతః పితరం త్యక్తవాన్|
11 அப்பொழுது பேதுரு சுயநினைவடைந்து, “இப்போது கர்த்தர் தமது தூதனை அனுப்பி, ஏரோதுவின் பிடியிலிருந்தும் யூதர்கள் செய்ய நினைத்துக்கொண்டிருந்த எல்லாக் காரியங்களிலிருந்தும் என்னை விடுவித்திருக்கிறார், இதனை சந்தேகமின்றி அறிந்துகொண்டேன்” என்றான்.
తదా స చేతనాం ప్రాప్య కథితవాన్ నిజదూతం ప్రహిత్య పరమేశ్వరో హేరోదో హస్తాద్ యిహూదీయలోకానాం సర్వ్వాశాయాశ్చ మాం సముద్ధృతవాన్ ఇత్యహం నిశ్చయం జ్ఞాతవాన్|
12 அவன் இதை உணர்ந்தவுடனேயே, மாற்கு என்னும் பெயர்கொண்ட யோவானுடைய தாயான மரியாளின் வீட்டிற்குப் போனான். அங்கே அநேக மக்கள் ஒன்றுகூடி மன்றாடிக்கொண்டிருந்தார்கள்.
స వివిచ్య మార్కనామ్రా విఖ్యాతస్య యోహనో మాతు ర్మరియమో యస్మిన్ గృహే బహవః సమ్భూయ ప్రార్థయన్త తన్నివేశనం గతః|
13 பேதுரு வெளிவாசல் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருடைய வேலைக்காரப் பெண், யாரெனப் பார்ப்பதற்கு வாசற்கதவுக்கு வந்தாள்.
పితరేణ బహిర్ద్వార ఆహతే సతి రోదానామా బాలికా ద్రష్టుం గతా|
14 அது பேதுருவின் குரல் என அவள் அறிந்ததும், மிகவும் சந்தோஷமடைந்தவளாய், கதவையும் திறக்காமலே திரும்பி ஓடிப்போய், “பேதுரு வாசல் அருகே நிற்கிறார்!” என்று மற்றவர்களுக்கு பரபரப்புடன் சொன்னாள்.
తతః పితరస్య స్వరం శ్రువా సా హర్షయుక్తా సతీ ద్వారం న మోచయిత్వా పితరో ద్వారే తిష్ఠతీతి వార్త్తాం వక్తుమ్ అభ్యన్తరం ధావిత్వా గతవతీ|
15 அதற்கு அவர்கள் ரோதையிடம், “உனக்குப் பைத்தியமா?” என்றார்கள். ஆனால் அவளோ தொடர்ந்து, வாசலில் நிற்பது பேதுருவே என்று சொன்னபோது, “அப்படியானால், இது பேதுருவினுடைய தூதனாயிருக்கும்” என்றார்கள்.
తే ప్రావోచన్ త్వమున్మత్తా జాతాసి కిన్తు సా ముహుర్ముహురుక్తవతీ సత్యమేవైతత్|
16 ஆனால் பேதுருவோ தொடர்ந்து தட்டிக்கொண்டே நின்றான். அவர்கள் கதவைத் திறந்து அவனைக் கண்டபோது வியப்படைந்தார்கள்.
తదా తే కథితవన్తస్తర్హి తస్య దూతో భవేత్|
17 அவர்களை அமைதியாய் இருக்கும்படி பேதுரு தன் கையினால் சைகை காட்டி, எவ்விதமாய்த் தன்னைக் கர்த்தர் சிறையிலிருந்து வெளியே கொண்டுவந்தார் என்று விவரமாய்ச் சொன்னான். பின்பு அவன், “இதை யாக்கோபுக்கும் மற்றச் சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்று சொல்லி, வேறொரு இடத்திற்குப் புறப்பட்டுப் போனான்.
పితరో ద్వారమాహతవాన్ ఏతస్మిన్నన్తరే ద్వారం మోచయిత్వా పితరం దృష్ట్వా విస్మయం ప్రాప్తాః|
18 மறுநாள் காலையிலே, பேதுருவுக்கு என்ன நடந்தது என்று படைவீரர்கள் மத்தியில் பெரிய குழப்பம் உண்டாயிற்று.
తతః పితరో నిఃశబ్దం స్థాతుం తాన్ ప్రతి హస్తేన సఙ్కేతం కృత్వా పరమేశ్వరో యేన ప్రకారేణ తం కారాయా ఉద్ధృత్యానీతవాన్ తస్య వృత్తాన్తం తానజ్ఞాపయత్, యూయం గత్వా యాకుబం భ్రాతృగణఞ్చ వార్త్తామేతాం వదతేత్యుక్తా స్థానాన్తరం ప్రస్థితవాన్|
19 ஏரோது அவனை எல்லா இடங்களிலும் தேடிப்பார்த்தும் கண்டுபிடிக்காததினால், காவலரை குறுக்கு விசாரணை செய்து அவர்களுக்கு மரண தண்டனை விதித்தான். அப்பொழுது ஏரோது, யூதேயாவிலிருந்து செசரியாவுக்குப் போய், அங்கே சிறிதுகாலம் தங்கியிருந்தான்.
ప్రభాతే సతి పితరః క్వ గత ఇత్యత్ర రక్షకాణాం మధ్యే మహాన్ కలహో జాతః|
20 ஏரோதுக்கும் தீரு, சீதோன் பட்டணத்து மக்களுக்கும் இடையில் சச்சரவுகள் நடந்துகொண்டிருந்தன. அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி, அவனைச் சந்திக்க வந்தார்கள். அவர்கள் அரசனின் அந்தரங்க வேலைக்காரனான பிலாஸ்து என்பவனின் ஆதரவைப் பெற்றுக்கொண்டு, அரசனோடு சமாதானம் செய்ய விரும்பினார்கள். ஏனெனில் அவர்கள் தமது உணவு விநியோகத்துக்காக, அரசனின் நாட்டையே பெரிதும் சார்ந்திருந்தார்கள்.
హేరోద్ బహు మృగయిత్వా తస్యోద్దేశే న ప్రాప్తే సతి రక్షకాన్ సంపృచ్ఛ్య తేషాం ప్రాణాన్ హన్తుమ్ ఆదిష్టవాన్|
21 குறித்த நாளில் ஏரோது அரசருக்குரிய உடைகளை உடுத்தி, தனது அரியணையில் அமர்ந்து மக்களுக்கு ஒரு உரையாற்றினான்.
పశ్చాత్ స యిహూదీయప్రదేశాత్ కైసరియానగరం గత్వా తత్రావాతిష్ఠత్|
22 அப்பொழுது அவர்கள், “இது ஒரு தெய்வத்தின் குரல், மனிதனின் குரல் அல்ல” என்று சத்தமிட்டுச் சொன்னார்கள்.
సోరసీదోనదేశయో ర్లోకేభ్యో హేరోది యుయుత్సౌ సతి తే సర్వ్వ ఏకమన్త్రణాః సన్తస్తస్య సమీప ఉపస్థాయ ల్వాస్తనామానం తస్య వస్త్రగృహాధీశం సహాయం కృత్వా హేరోదా సార్ద్ధం సన్ధిం ప్రార్థయన్త యతస్తస్య రాజ్ఞో దేశేన తేషాం దేశీయానాం భరణమ్ అభవత్ం
23 உடனே கர்த்தருடைய தூதன் ஒருவன் ஏரோதை அடித்தான். ஏனெனில், ஏரோது இறைவனுக்குரிய மகிமையை அவருக்குக் கொடுக்கவில்லை. ஆகவே, அவன் புழுப்புழுத்துச் செத்தான்.
అతః కుత్రచిన్ నిరుపితదినే హేరోద్ రాజకీయం పరిచ్ఛదం పరిధాయ సింహాసనే సముపవిశ్య తాన్ ప్రతి కథామ్ ఉక్తవాన్|
24 ஆனால், இறைவனுடைய வார்த்தையோ மேன்மேலும் பரவியது.
తతో లోకా ఉచ్చైఃకారం ప్రత్యవదన్, ఏష మనుజరవో న హి, ఈశ్వరీయరవః|
25 பர்னபாவும், சவுலும் தங்களுடைய ஊழியத்தை முடித்துக்கொண்டு, மாற்கு என அழைக்கப்பட்ட யோவானையும் கூட்டிக்கொண்டு, எருசலேமிலிருந்து திரும்பிச் சென்றார்கள்.
తదా హేరోద్ ఈశ్వరస్య సమ్మానం నాకరోత్; తస్మాద్ధేతోః పరమేశ్వరస్య దూతో హఠాత్ తం ప్రాహరత్ తేనైవ స కీటైః క్షీణః సన్ ప్రాణాన్ అజహాత్| కిన్త్వీశ్వరస్య కథా దేశం వ్యాప్య ప్రబలాభవత్| తతః పరం బర్ణబ్బాశౌలౌ యస్య కర్మ్మణో భారం ప్రాప్నుతాం తాభ్యాం తస్మిన్ సమ్పాదితే సతి మార్కనామ్నా విఖ్యాతో యో యోహన్ తం సఙ్గినం కృత్వా యిరూశాలమ్నగరాత్ ప్రత్యాగతౌ|

< அப்போஸ்தலர் 12 >