< 3 யோவான் 1 >
1 சபைத்தலைவனாகிய நான், சத்தியத்தின்படி நான் நேசிக்கிற, என் அன்பான நண்பன் காயுவுக்கு எழுதுகிறதாவது:
ପ୍ରାଚୀନୋ ଽହଂ ସତ୍ୟମତାଦ୍ ଯସ୍ମିନ୍ ପ୍ରୀଯେ ତଂ ପ୍ରିଯତମଂ ଗାଯଂ ପ୍ରତି ପତ୍ରଂ ଲିଖାମି|
2 பிரியமானவனே, உன் ஆத்துமா இருப்பதுபோல், நீ உன் உடல் நலத்திலும் மற்றெல்லாவற்றிலும் நன்றாயிருக்கும்படி, நான் உனக்காக மன்றாடுகிறேன்.
ହେ ପ୍ରିଯ, ତୱାତ୍ମା ଯାଦୃକ୍ ଶୁଭାନ୍ୱିତସ୍ତାଦୃକ୍ ସର୍ୱ୍ୱୱିଷଯେ ତୱ ଶୁଭଂ ସ୍ୱାସ୍ଥ୍ୟଞ୍ଚ ଭୂଯାତ୍|
3 சில சகோதரர் வந்து, நீ எப்படி சத்தியத்தை உறுதியாய்க் கைக்கொள்கிறாய் என்றும், நீ தொடர்ந்து சத்தியத்தின்படி நடக்கிறாய் என்றும் எனக்குச் சொன்னபோது, நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
ଭ୍ରାତୃଭିରାଗତ୍ୟ ତୱ ସତ୍ୟମତସ୍ୟାର୍ଥତସ୍ତ୍ୱଂ କୀଦୃକ୍ ସତ୍ୟମତମାଚରସ୍ୟେତସ୍ୟ ସାକ୍ଷ୍ୟେ ଦତ୍ତେ ମମ ମହାନନ୍ଦୋ ଜାତଃ|
4 எனது பிள்ளைகள் சத்தியத்தில் நடக்கிறார்கள் என்று கேள்விப்படுவதைவிட வேறு பெரிதான சந்தோஷம் எனக்கு இல்லை.
ମମ ସନ୍ତାନାଃ ସତ୍ୟମତମାଚରନ୍ତୀତିୱାର୍ତ୍ତାତୋ ମମ ଯ ଆନନ୍ଦୋ ଜାଯତେ ତତୋ ମହତ୍ତରୋ ନାସ୍ତି|
5 அன்பான நண்பனே, உன்னிடம் வந்துபோகிற சகோதரர் உனக்கு அந்நியராய் இருந்துங்கூட, நீ அவர்களுக்கு உதவி செய்வதில் உண்மையுள்ளவனாய் இருந்தாய்.
ହେ ପ୍ରିଯ, ଭ୍ରାତୃନ୍ ପ୍ରତି ୱିଶେଷତସ୍ତାନ୍ ୱିଦେଶିନୋ ଭୃତୃନ୍ ପ୍ରତି ତ୍ୱଯା ଯଦ୍ୟତ୍ କୃତଂ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ୱିଶ୍ୱାସିନୋ ଯୋଗ୍ୟଂ|
6 அவர்கள் உன்னுடைய அன்பைக்குறித்து, இங்குள்ள திருச்சபைக்குச் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். நீ இறைவனுக்கு ஏற்றவிதத்தில் அப்படிப்பட்ட சகோதரர்களை வழியனுப்பி வைப்பது நல்லது.
ତେ ଚ ସମିତେଃ ସାକ୍ଷାତ୍ ତୱ ପ୍ରମ୍ନଃ ପ୍ରମାଣଂ ଦତ୍ତୱନ୍ତଃ, ଅପରମ୍ ଈଶ୍ୱରଯୋଗ୍ୟରୂପେଣ ତାନ୍ ପ୍ରସ୍ଥାପଯତା ତ୍ୱଯା ସତ୍କର୍ମ୍ମ କାରିଷ୍ୟତେ|
7 ஏனெனில், அவர்கள் கிறிஸ்துவின் பெயருக்காகவே அவிசுவாசிகளிடமிருந்து எவ்வித உதவியையும் பெற்றுக்கொள்ளாமல், பயணமாய் சென்றார்கள்.
ଯତସ୍ତେ ତସ୍ୟ ନାମ୍ନା ଯାତ୍ରାଂ ୱିଧାଯ ଭିନ୍ନଜାତୀଯେଭ୍ୟଃ କିମପି ନ ଗୃହୀତୱନ୍ତଃ|
8 எனவே அப்படிப்பட்டவர்களை நாம் உபசரிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். அவ்விதமாகத்தான் நாம் சத்தியத்துக்காக ஒத்துழைக்க முடியும்.
ତସ୍ମାଦ୍ ୱଯଂ ଯତ୍ ସତ୍ୟମତସ୍ୟ ସହାଯା ଭୱେମ ତଦର୍ଥମେତାଦୃଶା ଲୋକା ଅସ୍ମାଭିରନୁଗ୍ରହୀତୱ୍ୟାଃ|
9 இதை நான் திருச்சபைக்கு எழுதினேன். ஆனால் திருச்சபையில் தான் முதல்வனாயிருக்க விரும்பிய தியோத்திரேப்பு எங்கள் தலைமைத்துவத்தை ஏற்க விரும்பவில்லை.
ସମିତିଂ ପ୍ରତ୍ୟହଂ ପତ୍ରଂ ଲିଖିତୱାନ୍ କିନ୍ତୁ ତେଷାଂ ମଧ୍ୟେ ଯୋ ଦିଯତ୍ରିଫିଃ ପ୍ରଧାନାଯତେ ସୋ ଽସ୍ମାନ୍ ନ ଗୃହ୍ଲାତି|
10 எனவே நான் அங்கு வந்தால், அவன் செய்வதைக்குறித்து உங்கள் எல்லோருக்கும் எடுத்துச்சொல்வேன். அவன் தீய எண்ணத்துடன் எங்களைப்பற்றி அவதூறாய்ப் பேசுகிறான். அதிலும் திருப்தியடையாமல், அங்கு வருகின்ற சகோதரரையும் வரவேற்க மறுக்கின்றான். அவர்களை வரவேற்க விரும்புகிற மற்றவர்களையும் தடைசெய்து, அப்படிச் செய்கிறவர்களையும் திருச்சபையைவிட்டு விலக்குகிறான்.
ଅତୋ ଽହଂ ଯଦୋପସ୍ଥାସ୍ୟାମି ତଦା ତେନ ଯଦ୍ୟତ୍ କ୍ରିଯତେ ତତ୍ ସର୍ୱ୍ୱଂ ତଂ ସ୍ମାରଯିଷ୍ୟାମି, ଯତଃ ସ ଦୁର୍ୱ୍ୱାକ୍ୟୈରସ୍ମାନ୍ ଅପୱଦତି, ତେନାପି ତୃପ୍ତିଂ ନ ଗତ୍ୱା ସ୍ୱଯମପି ଭ୍ରାତୃନ୍ ନାନୁଗୃହ୍ଲାତି ଯେ ଚାନୁଗ୍ରହୀତୁମିଚ୍ଛନ୍ତି ତାନ୍ ସମିତିତୋ ଽପି ବହିଷ୍କରୋତି|
11 அன்பான நண்பனே, தீமையைப் பார்த்து, நீயும் தீமை செய்யாதே! நன்மையையே செய். நன்மை செய்கிறவன் யாரோ, அவன் இறைவனுக்குரியவனாகவே இருக்கிறான். தீமையைச் செய்கிறவன் யாரோ அவன் இறைவனைக் கண்டதேயில்லை.
ହେ ପ୍ରିଯ, ତ୍ୱଯା ଦୁଷ୍କର୍ମ୍ମ ନାନୁକ୍ରିଯତାଂ କିନ୍ତୁ ସତ୍କର୍ମ୍ମୈୱ| ଯଃ ସତ୍କର୍ମ୍ମାଚାରୀ ସ ଈଶ୍ୱରାତ୍ ଜାତଃ, ଯୋ ଦୁଷ୍କର୍ମ୍ମାଚାରୀ ସ ଈଶ୍ୱରଂ ନ ଦୃଷ୍ଟୱାନ୍|
12 தேமேத்திரியுவைக்குறித்து எல்லோரும் நன்றாக பேசுகிறார்கள்; அதுவுமல்லாமல் அவன் சத்தியத்தாலும் நற்சாட்சி பெற்றிருக்கிறான். நாங்களும் அவனைக்குறித்து நற்சாட்சி கொடுக்கிறோம், எங்கள் சாட்சி உண்மை என்பதை நீ அறிவாய்.
ଦୀମୀତ୍ରିଯସ୍ୟ ପକ୍ଷେ ସର୍ୱ୍ୱୈଃ ସାକ୍ଷ୍ୟମ୍ ଅଦାଯି ୱିଶେଷତଃ ସତ୍ୟମତେନାପି, ୱଯମପି ତତ୍ପକ୍ଷେ ସାକ୍ଷ୍ୟଂ ଦଦ୍ମଃ, ଅସ୍ମାକଞ୍ଚ ସାକ୍ଷ୍ୟଂ ସତ୍ୟମେୱେତି ଯୂଯଂ ଜାନୀଥ|
13 உனக்கு எழுதவேண்டிய காரியங்கள் அதிகம் உண்டு; ஆனால் நான் அவற்றை மையினால் காகிதங்களில் எழுத விரும்பவில்லை.
ତ୍ୱାଂ ପ୍ରତି ମଯା ବହୂନି ଲେଖିତୱ୍ୟାନି କିନ୍ତୁ ମସୀଲେଖନୀଭ୍ୟାଂ ଲେଖିତୁଂ ନେଚ୍ଛାମି|
14 உன்னை விரைவில் சந்திப்பேன் என எதிர்பார்க்கிறேன். அப்பொழுது, நாம் நேரடியாகவே பேசிக்கொள்ளலாம். உனக்கு சமாதானம் உண்டாவதாக. இங்குள்ள மற்ற நண்பர்களும் தங்கள் வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். அங்குள்ள ஒவ்வொருவருக்கும் பெயர்பெயராக வாழ்த்துதல் கூறு.
ଅଚିରେଣ ତ୍ୱାଂ ଦ୍ରକ୍ଷ୍ୟାମୀତି ମମ ପ୍ରତ୍ୟାଶାସ୍ତେ ତଦାୱାଂ ସମ୍ମୁଖୀଭୂଯ ପରସ୍ପରଂ ସମ୍ଭାଷିଷ୍ୟାୱହେ| ତୱ ଶାନ୍ତି ର୍ଭୂଯାତ୍| ଅସ୍ମାକଂ ମିତ୍ରାଣି ତ୍ୱାଂ ନମସ୍କାରଂ ଜ୍ଞାପଯନ୍ତି ତ୍ୱମପ୍ୟେକୈକସ୍ୟ ନାମ ପ୍ରୋଚ୍ୟ ମିତ୍ରେଭ୍ୟୋ ନମସ୍କୁରୁ| ଇତି|