< 2 தீமோத்தேயு 1 >

1 கிறிஸ்து இயேசுவில் இருக்கும் வாழ்வைக் குறித்த வாக்குறுதியின்படி, இறைவனுடைய சித்தத்தினால், கிறிஸ்து இயேசுவின் அப்போஸ்தலனாக நியமிக்கப்பட்ட பவுல்,
ଞେନ୍‌ ପାଓଲନ୍‌, କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ବୟନ୍‌ ମରାୟ୍‌ଲନାଞନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ସନିବ୍‌ଡେୟ୍‌ବର୍‌ ଅନ୍ତମ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଅଙ୍ଗା ଆନମେଙ୍‌ ଞାଙ୍‌ଲବୋ, ତିଆତେ ମନ୍‌ରାଞ୍ଜିଆଡଙ୍‌ ଅନବ୍‌ଜନାନ୍‌ ଆସନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ବାତ୍ତେ ଞେନ୍‌ ଅବୟ୍‌ ଆନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ ଡେଲିଁୟ୍‌ ।
2 எனது அன்பான மகன் தீமோத்தேயுவுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய இறைவனாலும், நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவினாலும் கிருபையும், இரக்கமும், சமாதானமும் உண்டாவதாக.
ଡନୁଙ୍‌ୟମ୍‌ ଡାଙ୍ଗଡ଼ାଅନ୍‌ଞେନ୍‌, ତିମତିନ୍‌ ଆମଙ୍‌ ଞେନ୍‌ କେନ୍‌ ଆ ସିଟି ଇଡ୍‌ଲେ ଆପ୍ପାୟ୍‌ତାୟ୍‌; ଆପେୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଡ ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ କନାର୍‌କାରମନ୍‌, ଆ ସନାୟୁମନ୍‌ ଡ ସନୟୁନ୍‌ ତିୟମ୍‌ତୋ ।
3 இரவும் பகலும் எனது மன்றாட்டில் உன்னை இடைவிடாமல் நினைக்கும் போதெல்லாம், நான் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன். இறைவனுக்கே என் முற்பிதாக்களைப்போல், சுத்த மனசாட்சியுடன் நான் பணிசெய்கிறேன்.
ପୁର୍ବା ଜୋଜୋଞେଞ୍ଜି ଅନ୍ତମ୍‌ ମଡ଼ିର୍‌ ବିବେକନ୍‌ ବାତ୍ତେ ଞେନ୍‌ ଅଙ୍ଗା ଆ ଇସ୍ୱରନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତାୟ୍‌, ତଗଲ୍‌ ତମ୍‌ବା ପାର୍ତନା ଇଙନ୍‌ ଡିତାନ୍‌ ଞେନ୍‌ ଅଞୁମ୍‌ନମ୍‌ ମନ୍ନେଲେ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ସେଙ୍କେତାୟ୍‌ ।
4 நாம் ஒருவரையொருவர் விட்டுப் பிரிந்தவேளையில் உனது கண்ணீர் என் நினைவில் இருக்கிறபடியால், நான் உன்னைக் கண்டு மகிழ்ச்சியடையும்படி வாஞ்சையாய் இருக்கிறேன்.
ଆମନ୍‌ ଞେନ୍‌ ଆସନ୍‌ ୟେୟେଡାଲନ୍‌ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ମନ୍ନେତାୟ୍‌, ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ତଙ୍‌ରାଡାତିଁୟ୍‌, ତିଆସନ୍‌ ଆମନ୍‌ ଗିୟ୍‌ଲମନ୍‌ ଡେନ୍‌ ମାଡ୍ଡ ସର୍ଡାତନାୟ୍‌ ।
5 உனது உண்மையான விசுவாசமும் என் நினைவில் வந்திருக்கிறது. இந்த விசுவாசம் முதலில் உனது பாட்டி லோவிசாளிடத்திலும், உனது தாய் ஐனிக்கேயாளிடத்திலும் இருந்தது. இப்பொழுது அந்த விசுவாசம் உன்னிடத்திலும் இருக்கிறது என நான் நம்புகிறேன்.
ୟାୟୋନମ୍‌ ଲୋଇନ୍‌ ଡ ଅୟୋଙ୍‌ନମ୍‌ ଇଉନିକିନ୍‌ ଆମଙ୍‌ ଏଙ୍ଗାଲେ ଡର୍ନେନ୍‌ ଡକୋଏନ୍‌, ଅମଙ୍‌ନମ୍‌ ନିୟ୍‌ ଏତ୍ତେଲେ ଡର୍ନେନ୍‌ ଡକୋ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଆସାତନାୟ୍‌; ତି ଡର୍ନେନମ୍‌ ଆ ବର୍ନେ ନିୟ୍‌ ଞେନ୍‌ ଅମ୍‌ଡଙ୍‌ଲାୟ୍‌ ।
6 இந்தக் காரணத்தினாலேயே நான் உன்மேல் எனது கைகளை வைத்தபோது, உனக்குக் கிடைத்த இறைவனின் வரத்தைத் தூண்டி, கொழுந்துவிட்டெரியும்படி, நான் உனக்கு நினைவூட்டுகிறேன்.
ଞେନ୍‌ ଅବବ୍‌ଲୋଙ୍‌ନମ୍‌ ଅସିଞେନ୍‌ ଡରକ୍କୋଲାଞନ୍‌ ଆଡିଡ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଅଙ୍ଗା ବୋର୍ସା ଞାଙେନ୍‌ ତିଆତେ ଅବ୍‌ମେଙ୍‌ଲେ ଡନକ୍କୋନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଏତ୍ତାୟ୍‌ତମ୍‌ ।
7 ஏனெனில், இறைவன் நமக்குப் பயமும், கோழைத்தனமுமுள்ள ஆவியைக் கொடுக்கவில்லை. இறைவன் வல்லமை, அன்பு, தன்னடக்கம் ஆகியவற்றைக் கொடுக்கும் பரிசுத்த ஆவியானவரையே கொடுத்திருக்கிறார்.
ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଅଙ୍ଗା ପୁରାଡ଼ା ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ତିଆତେ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ମନଙ୍‌ ତଡ୍‌ ଅଃନ୍ନମେଙ୍‌ଲଙ୍‌ନେ, ଆର୍ପାୟ୍‌ ତିଆତେ ଅମ୍ମେଲେ ଇନ୍‌ଲେନ୍‌ ବୋର୍ସାନ୍‌, ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଡ ମନଙ୍‌ ବୁଡ୍ଡିନ୍‌ ତିୟ୍‌ତିୟ୍‌ଲଙ୍‌ତନ୍‌ ।
8 எனவே நமது கர்த்தரைப்பற்றி சாட்சி சொல்லவும், அவரது கைதியாகிய என்னைக்குறித்து வெட்கப்படவும் வேண்டாம். நற்செய்திக்காக இறைவனின் வல்லமையினால் துன்பம் அனுபவிப்பதில் என்னுடன் சேர்ந்துகொள்.
ତିଆସନ୍‌, ପ୍ରବୁଲେନ୍‌ ଆ ବର୍ନେ ସାକିନ୍‌ ତନିୟନ୍‌ ଆସନ୍‌ ଗବ୍‌ରୟ୍‌ଡଙ୍‌ନେ, ଆନିନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆବଣ୍ଡି, ଞେନ୍‌ ନିୟ୍‌ ଆସନ୍‌ ଗରୟ୍‌ଡଙମ୍‌, ଆର୍ପାୟ୍‌ ଇସ୍ୱରନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଆତ୍ରିୟ୍‌ଲମନ୍‌ ଆ ବୋର୍ସା ବାତ୍ତେ ଆମନ୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଆ ମନଙ୍‌ବର୍‌ ଆସନ୍‌ ଡଣ୍ଡନ୍‌ ସଏଲେ ଡକୋନା ।
9 இறைவனே நம்மை இரட்சித்து நம்மை ஒரு பரிசுத்த வாழ்க்கைக்கு அழைத்திருக்கிறார். இறைவன் இதை நாம் ஏதாவது செய்ததற்காக நமக்குக் கொடுக்கவில்லை. தனது சொந்த நோக்கத்தின் நிமித்தமும், கிருபையின் நிமித்தமுமே, அதைக் கொடுத்திருக்கிறார். யுகங்கள் உண்டாகும் முன்பே கிறிஸ்து இயேசுவில் இந்தக் கிருபை நமக்குக் கொடுக்கப்பட்டது. (aiōnios g166)
ଇସ୍ୱରନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଉଜୁୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌ ଆରି ମନଡ଼ିରନ୍‌ ବାତ୍ତେ ଓଡ୍ଡେଲଙ୍‌ଲନ୍‌, କାବ୍ବାଡ଼ାଲେଞ୍ଜି ଆସନ୍‌ ତଡ୍‌, ବନ୍‌ଡ ଇସ୍ୱରନ୍‌ ଆ ଇସ୍ସୁମ୍‌ ଡ ଆ ସନାୟୁମନ୍‌ ଆସନ୍‌ ଆନିନ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜିଆଡଙ୍‌ ଉଜୁୟ୍‌ଲଙ୍‌ଲନ୍‌, ପୁର୍ତିନ୍‌ ଅଣ୍ଡ୍ରଙ୍‌ ଗଡେଲେନ୍‌ ଆମ୍ମୁଙ୍‌ ତି ଆ ସନାୟୁମ୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଆମଙ୍‌ ସିଲଡ୍‌ ଇନ୍‌ଲେଞ୍ଜି ଞାଙ୍‌ଲବୋ । (aiōnios g166)
10 ஆனால் இப்பொழுது நமது இரட்சகர் கிறிஸ்து இயேசு தோன்றியதன்மூலம், அந்த கிருபை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் மரணத்தை அழித்து, நற்செய்தியினால் வாழ்வையும் சாவாமையையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறார்.
ନମି ଅନୁର୍‌ମର୍‌ କ୍ରିସ୍ଟ ଜିସୁନ୍‌ ଅବ୍‌ରାଙ୍‌ଡାଲନ୍‌, ସିଲଡ୍‌ଲ୍ଲନ୍‌ ଆନିନ୍‌ ରନବୁନ୍‌ ଆ ବୋର୍ସା ସବ୍‌ଙାଜେନ୍‌, ଆରି ଆ ମନଙ୍‌ବରନ୍‌ ବାତ୍ତେ ଅଃନ୍ନଞିଡେନ୍‌ ଆନମେଙ୍‌ ଆ ତଙର୍‌ ଅବ୍‌ଗିୟ୍‌ତାଏନ୍‌ ।
11 இந்த நற்செய்திக்காக நான் அறிவிப்பவனாகவும், அப்போஸ்தலனாகவும், ஆசிரியனாகவும் நியமிக்கப்பட்டேன்.
ତି ଆ ମନଙ୍‌ବର୍‌ ଅନପ୍ପୁଙ୍‌ବରନ୍‌ ଆସନ୍‌ ଞେନ୍‌ ଆନାପ୍ପାୟ୍‌ ଞଙ୍‌ନେମର୍‌ ଆରି ଞନଙ୍‌ତିୟ୍‌ମର୍‌ ଅମ୍ମେଲେ ଇସ୍ୱରନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ତବ୍‌ନଙ୍‌ଲିଁୟ୍‌ ।
12 அதன் நிமித்தமே, நான் இப்படித் துன்பங்களை அனுபவிக்கிறேன். ஆனால் நான் வெட்கப்படவில்லை. ஏனெனில், நான் விசுவாசிக்கிற கிறிஸ்து இயேசுவை எனக்கு நன்றாகத் தெரியும். நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை, அவர் மீண்டும் வரும் நாள்வரைக்கும் காத்துக்கொள்ள அவரால் முடியும் என்றும் நான் நிச்சயமாக நம்புகிறேன்.
ତିଆସନ୍‌ ଞେନ୍‌ କେନ୍‌ ଅଡ଼୍‌କୋନ୍‌ ଡୁକ୍କନ୍‌ ଞାଙ୍‌ତାୟ୍‌, ଡେଲୋଜନଙ୍‌ଡେନ୍‌ ଞେନ୍‌ ଅଃଗରୟ୍‌ଡାଇଁୟ୍‌, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନା ଆମଙ୍‌ ଞେନ୍‌ ଡର୍ତନାୟ୍‌, ଞେନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ ଆଜନା, ଆରି ଞେନ୍‌ ଅଙ୍ଗାଆତେ ଆସିଲୋଙନ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଲାୟ୍‌, ତିଆତେ ପନ୍‌ସୁଆତି ଡିନ୍ନା ଇଙନ୍‌ ଜାୟ୍‌ ଆନିନ୍‌ ଜୁବାୟ୍‌ଲେ ଡକ୍କୋଲେ ରପ୍ତିତେ ଗାମ୍‌ଲେ ଞେନ୍‌ ଆସାତନାୟ୍‌ ।
13 நீ என்னிடத்திலிருந்து கேட்ட ஆரோக்கியமான போதனைகளை விசுவாசத்துடனும் அன்புடனும் கிறிஸ்து இயேசுவில் மாதிரியாகக் வைத்துக்கொள்.
ଞେନ୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ଇନିଜି ମନଙ୍‌ବରଞ୍ଜି ଞଙ୍‌ଲମ୍‌, ତିଆତେ ରଡୋ ଗାମ୍‌ଲେ ଞମ୍‌ଲେ ଡକ୍କୋଆ, ଆରି ପ୍ରବୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟନ୍‌ ବୟନ୍‌ ମାୟ୍‌ଲନ୍‌ ଆଜାଡ଼ି ଡନୁଙ୍‌ୟମନ୍‌ ଡ ଡର୍ନେଲୋଙନ୍‌ ଗବ୍‌ରିଲନ୍‌ ଡକୋନା ।
14 உன்னிடத்தில் ஒப்படைக்கப்பட்ட நல்ல பொக்கிஷத்தை நமக்குள் குடிகொண்டிருக்கும் பரிசுத்த ஆவியானவரின் உதவியுடன் காத்துக்கொள்.
ଅଙ୍ଗା ବିଡ଼ାର୍‌ ଆମନ୍‌ଆଡଙ୍‌ ସୋରୋପ୍ପାୟ୍‌ଲମ୍‌, ଇନ୍‌ଲେଞ୍ଜି ସରିନ୍‌ ଆଡ୍ରକୋତନ୍‌ ମଡ଼ିର୍‌ ପୁରାଡ଼ାନ୍‌ ଆ ବୋର୍ସା ବାତ୍ତେ ତିଆତେ ଜୁବାୟ୍‌ଲେ ଡକ୍କୋଆ ।
15 ஆசியா பகுதியிலுள்ளவர்கள் எல்லோரும் என்னைவிட்டு விலகிப்போனது உனக்குத் தெரியும். பிகெல்லுவும் எர்மொகெனேயும்கூட விலகிப் போய்விட்டார்கள்.
ଏସିଆ ଡେସାନ୍‌ ଆ ମନ୍‌ରାଜି ଅଡ଼୍‌କୋଞ୍ଜି ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଙ୍ଗତ୍ତାତିଁୟ୍‌ଜି, ତିଆତେ ଆମନ୍‌ ଜନା, ପୁଗେଲନ୍‌ ଡ ଅର୍ମଗନାନ୍‌ ନିୟ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସଙ୍ଗତ୍ତାତିଁୟ୍‌ଜି ।
16 ஒநேசிப்போருவின் குடும்பத்திற்குக் கர்த்தர் இரக்கம் காட்டுவாராக. ஏனெனில் அவன் அடிக்கடி என்னைத் தேற்றினான். நான் விலங்கிடப்பட்டிருப்பதைக் குறித்து அவன் வெட்கப்படவில்லை.
ଅନିସିପରନ୍‌ ଆସିଂମର୍‌ଜିଆଡଙ୍‌ ପ୍ରବୁନ୍‌ ସାୟୁମେତଜି, ଇନିଆସନ୍‌ଗାମେଣ୍ଡେନ୍‌ ଆନିନ୍‌ ନମିନ୍‌ ନମିନ୍‌ ଞେନ୍‌ଆଡଙ୍‌ ବବ୍‌ୟୋଲିଁୟ୍‌, ଆରି ଞେନ୍‌ ଆବଣ୍ଡି ଆଡ୍ରକୋଲିଞନ୍‌ ନିୟ୍‌ ଆନିନ୍‌ ଅଃଗରୟ୍‌ଲୋ ।
17 அத்துடன் அவன் ரோம் நகரத்தில் இருந்தபோது, என்னைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் கஷ்டப்பட்டுத் தேடினான்.
ଆର୍ପାୟ୍‌ ଆନିନ୍‌ ରୋମ୍‌ ଡେସାଲୋଙନ୍‌ ଆଡ୍ରକୋଲନ୍‌ ଆଡିଡ୍‌, ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାୟ୍‌ଲେ ସାୟ୍‌ଲେ ଅମଙ୍‌ଞେନ୍‌ ଇୟ୍‌ଲାୟ୍‌;
18 கிறிஸ்து மீண்டும் வரும் நாளிலே, அவன் கர்த்தரிடத்திலிருந்து இரக்கத்தைப் பெற்றுக்கொள்ள கர்த்தர் உதவுவாராக! அவன் எபேசுவிலே எனக்கு எவ்வளவாய் உதவி செய்தான் என்பது உனக்கு மிக நன்றாகத் தெரியும்.
ସୋଡ଼ା ପନ୍‌ସୁଆତି ଡିନ୍ନା ଇଙନ୍‌ ପ୍ରବୁନ୍‌ ଆନିନ୍‌ଆଡଙ୍‌ କାନକାରମ୍‌ ଗାମେତୋ, ଆରି ଏପିସି ଗଡ଼ାଲୋଙନ୍‌ ଆନିନ୍‌ ଡିଅଙ୍ଗା ଞେନ୍‌ଆଡଙ୍‌ ସାକ୍କେଲିଁୟ୍‌, ତି ଆ ବର୍ନେଜି ଆମନ୍‌ ମନଙ୍‌ଡମ୍‌ ଜନା ।

< 2 தீமோத்தேயு 1 >