< 2 தெசலோனிக்கேயர் 1 >

1 பவுல், சில்வான், தீமோத்தேயு, நம்முடைய பிதாவாகிய இறைவனிலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிலும் இருக்கிற தெசலோனிக்கேயரின் திருச்சபைக்கு எழுதுகிறதாவது:
ପାଉଲ୍‌, ସିଲା ଆର୍‌ ତିମତି ତଃୟ୍‌ହୁଣି ଉବା ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ତଃୟ୍‌ ରିଲା ତେସଲନିକି ବିସ୍ୱାସି ଦଃଳ୍‌କେ ଚିଟି ଲେକୁଲେ ।
2 பிதாவாகிய இறைவனாலும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
ଉବା ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟ ତଃୟ୍‌ହୁଣି ଦଃୟା ଆର୍‌ ସୁସ୍ତା ତୁମିମଃନାର୍‌ ଉହ୍ରେ ଅଃଉଅ ।
3 பிரியமானவர்களே, நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஆம் அது சரியானதே. ஏனெனில், உங்கள் விசுவாசம் மென்மேலும் வளர்ச்சியடைகிறது. அத்துடன், நீங்கள் ஒருவரிடத்தில் ஒருவர் பாராட்டுகிற அன்பும் பெருகுகிறது.
ଏ ବାୟ୍‌ବେଣିମଃନ୍, ତୁମିମଃନାର୍‌ ଗିନେ ଇସ୍ୱର୍‌କେ ସଃବୁବଃଳ୍‌ ଦନ୍ୟବାଦ୍‌ କଃର୍ତାର୍‌ ଅଃମିମଃନାର୍‌ ଲଳା, ଆର୍‌ ସେରି କଃର୍ତାର୍‌ ଟିକ୍‌, କାୟ୍‌ତାକ୍‌ବଃଲେକ୍‌ ତୁମିମଃନାର୍‌ ବିସ୍ୱାସ୍‌ ଦିନ୍‌କେ ଦିନ୍ ବାଡୁଲି, ଆରେକ୍‌ ନିଜାର୍‌ ନିଜାର୍‌ ବିତ୍ରେ ତୁମି ସଃବୁଲକାର୍‌ ଲାଡ୍‌ ବାଡୁଲି,
4 ஆகவே, உங்களுக்கு ஏற்பட்டிருக்கிற துன்புறுத்தல்கள் வேதனைகளின் மத்தியிலும், உங்களுடைய மன உறுதியையும், விசுவாசத்தையும்குறித்து, இறைவனுடைய திருச்சபைகள் மத்தியிலே, நாங்கள் பெருமிதமாய் பேசிக்கொள்கிறோம்.
ଇବାନ୍ୟା ତୁମିମଃନ୍‌ ଜୁୟ୍‌ ସଃବୁ କଃସ୍ଟ୍‌ ଆର୍‌ ଦୁକ୍‌ ବୟଃଗ୍ କଃରୁଲାସ୍‌, ସେତାର୍‌ ବିତ୍ରେ ତୁମିମଃନାର୍‌ ସଃମ୍ବାଳ୍‌ତାର୍‌ ଆର୍‌ ବିସ୍ୱାସ୍‌ ଗିନେ ଅଃମିମଃନ୍‌ ନିଜେ ଇସ୍ୱରାର୍‌ ବିସ୍ୱାସି ଦଃଳ୍‌ ତଃୟ୍‌ମଃନ୍ ତୁମିମଃନାର୍‌ ଗିନେ ଗଃର୍ବ୍‌ କଃରୁଲୁ ।
5 இறைவனுடைய நியாயத்தீர்ப்பு நீதியானது என்பதற்கு, இவையெல்லாம் சாட்சியாயிருக்கிறது. இதன் விளைவாக நீங்கள் இறைவனுடைய அரசுக்குத் தகுதிவுள்ளவர்களாக எண்ணப்படுவீர்கள்; அதற்காகவே இந்த வேதனையை அனுபவிக்கிறீர்கள்.
ଇସ୍ୱରାର୍‌ ରାଇଜ୍‌ ଗିନେ ତୁମିମଃନ୍‌ ଜୁୟ୍‌ ଦୁକ୍‌ ବୟଃଗ୍ କଃରୁଲାସ୍‌, ସେତାର୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ବଃଲି ଜାଣାଉଁକେ ଇରି ତ ଇସ୍ୱରାର୍‌ ଟିକ୍‌ ବିଚାର୍‌ ଆର୍‌ ହଃର୍ମାଣ୍‌ ।
6 இறைவன் நீதியுள்ளவர்: உங்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்துகிறவர்களுக்கு, அவர் துன்பத்தைக் கொடுப்பார்.
ଜୁୟ୍‌ରି ଟିକ୍‌ ସେରି ସେ ସାଦୁନ୍ କଃରେଦ୍‌ ଆର୍‌ ଜୁୟ୍‌ ମଃନ୍ ତୁମିମଃନ୍‌କେ ତାଳ୍‌ନା କଃରୁଲାୟ୍‌ ଇସ୍ୱର୍‌ ସେମଃନ୍‌କେ ଡଃଣ୍ଡ୍‌ ଦଃୟ୍‌ଦ୍‌ ।
7 துன்பமடைந்திருக்கும் உங்களுக்கோ, அவர் ஆறுதலைக் கொடுப்பார். அவ்வாறே அவர் எங்களுக்கும் ஆறுதலைக் கொடுப்பார். கர்த்தராகிய இயேசு தம்முடைய வல்லமையுள்ள தூதர்களோடு, பற்றியெரியும் நெருப்பில் பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது, இந்த நீதி நிகழும்.
ଇସ୍ୱର୍‌ ତୁମାର୍‌ ଦୁକ୍‌ବଗାର୍‌ ସେସ୍‌ କଃରି ଅଃମିକ୍‌ ହେଁ ବିସାଉଁଣି ଦଃୟ୍‌ଦ୍‌ ଇସ୍ୱର୍‌ ଇ କାମ୍‌ ସାଦୁନ୍ କଃରେଦ୍‌, ମାପ୍ରୁ ଜିସୁ ଜଃଡେବଃଳ୍‌ ଅଃହ୍‌ଣାର୍‌ ସଃକ୍ତିମାନ୍ ଦୁତ୍‌ମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ଲାଗ୍‌ତା ଜୟ୍‌ସଃଙ୍ଗ୍ ସଃର୍ଗେହୁଣି ଆସେଦ୍‌ ।
8 அப்பொழுது அவர் இறைவனை அறியாதவர்களையும், நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களையும் தண்டிப்பார்.
ଜୁୟ୍‌ ଲକ୍‌ମଃନ୍ ଇସ୍ୱର୍‌କେ ନଃଜାଣ୍‌ତି ଆର୍‌ ଅଃମିମଃନାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁର୍‌ ନିକ କବୁର୍‌ ନଃମାନ୍‌ତି, ସେମଃନ୍‌କେ ସେ ସଃଡେବଃଳ୍‌ ଟିକ୍‌ ଡଃଣ୍ଡ୍‌ ଦଃୟ୍‌ଦ୍‌ ।
9 நித்திய பேரழிவையே தண்டனையாக, அவர்கள் பெற்றுக்கொள்வார்கள். அவர்கள் கர்த்தரின் முன்னிலையிலிருந்தும், அவருடைய வல்லமையின் மகிமையிலிருந்தும் புறம்பாக்கப்படுவார்கள். (aiōnios g166)
ସେ ଦିନ୍ ସେମଃନ୍ ଡଃଣ୍ଡ୍‌ ହାଉତି, ବଃଲେକ୍‌ ମାପ୍ରୁର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ଆର୍‌ ତାର୍‌ ସଃକ୍ତିର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ତଃୟ୍‌ହୁଣି ବାର୍‌କଃରା ଅୟ୍‌ ସଃବୁ ଦିନାର୍‌ ନାସ୍‌ ବୟଃଗ୍ କଃର୍ତି, (aiōnios g166)
10 தம்முடைய பரிசுத்த மக்களில், அதாவது கர்த்தரை விசுவாசித்த எல்லோர் மத்தியிலும் அவர் மகிமைப்படும்படி, அவர் வரும் நாளிலே அவரைப் போற்றிப் புகழ்வார்கள். ஏனெனில், நாங்கள் உங்களுக்கு அறிவித்த சாட்சியை விசுவாசித்ததனால், நீங்களும் அந்த மக்களுக்குள் இடம்பெறுவீர்கள்.
ମଃତର୍‌ ସେଦିନ୍ ସେ ତାର୍‌ ଲକ୍‌ମଃନାର୍‌ ତଃୟ୍‌ ହୁଣି ଆର୍‌ ସଃବୁ ବିସ୍ୱାସି ମଃନାର୍‌ ତଃୟ୍‌ହୁଣି ମାନ୍‌ତି ଆର୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ହାୟ୍‌ଦ୍‌, ଇମଃନାର୍‌ ବିତ୍ରେ ତୁମିହେଁ ମିସାସ୍‌ । କାୟ୍‌ତାକ୍‌ ବଃଲେକ୍‌ ଅଃମି ତୁମିକେ ଜୁୟ୍‌ ସଃବୁ ଦଃୟ୍‌ ରିଲୁ ସେରି ତୁମି ସଃତ୍‌ କଃରି ଆଚାସ୍‌ ।
11 இதை மனதில்கொண்டு, நம்முடைய இறைவனின் அழைப்புக்கு நீங்கள் தகுதிவுள்ளவர்கள் என்று எண்ணவேண்டும் என, உங்களுக்காக நாங்கள் மன்றாடுகிறோம். அத்துடன், உங்களுடைய நல்ல நோக்கங்கள் எல்லாவற்றையும், உங்களுடைய விசுவாசத்தின் ஏவுதலினால் உண்டாகும். உங்களது ஒவ்வொரு செயலையும், இறைவன் தம்முடைய வல்லமையினால் நிறைவேற்றவேண்டும் என்றும் மன்றாடுகிறோம்.
ଇତାର୍‌ ଗିନେ ଅଃମାର୍‌ ଇସ୍ୱର୍‌ ନିଜେ ଜଃନ୍‌କଃରି ତୁମିମଃନ୍‌କେ କୁଦ୍‌ଲାର୍‌ ଜୟ୍‌ଗ୍‌ ବଃଲି ଗଃଣିତା କଃରେଦ୍‌, ଆରେକ୍‌ ତୁମିମଃନାର୍‌ ସଃବୁ ସଃତ୍‌ଇଚା ଆର୍‌ ବିସ୍ୱାସାର୍‌ କାମ୍‌ ତାର୍‌ ସଃକ୍ତିୟେ ହୁରୁଣ୍ କଃରେଦ୍‌, ସେତାର୍‌ଗିନେ ହେଁ ଅଃମିମଃନ୍‌ ସଃବୁବଃଳ୍‌ ତୁମିମଃନାର୍‌ ଗିନେ ପାର୍ତ୍‌ନା କଃରୁଲୁ ।
12 நமது இறைவனிடமும், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிடமிருந்து வரும் கிருபையினாலே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் பெயர் உங்களில் மகிமைப்படவேண்டும். நீங்களும் அவரிலே மகிமைப்படவேண்டும் என்று நாங்கள் மன்றாடுகிறோம்.
ସେବାନ୍ୟା ଅୟ୍‌ଲେକ୍‌ ଅଃମିମଃନାର୍‌ ଇସ୍ୱର୍‌ ଆର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁ କ୍ରିସ୍ଟର୍‌ ଦଃୟା ହଃର୍କାରେ ଅଃମିମଃନାର୍‌ ମାପ୍ରୁ ଜିସୁର୍‌ ନାଉଁ ତୁମିମଃନାର୍‌ ତଃୟ୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ହାୟ୍‌ଦ୍‌, ଆର୍‌ ତୁମିମଃନ୍‌ ତାର୍‌ ତଃୟ୍‌ ଜଃଜ୍‌ମାନ୍ ହାଉଆସ୍‌ ।

< 2 தெசலோனிக்கேயர் 1 >